Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணமானவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருக்காங்க பொம்மனாட்டிகள் (பெண்கள்.)...

ஜோதிடருடன் கள்ளக்காதல்: கணவனை கொன்ற மனைவி.

நெல்லை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி.

கடந்த 2004ம் சங்கரலிங்கம் திடீரென இறந்தார். வாயில் விஷம் ஊற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சங்கரலிங்கம் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி கோமதி கூறினார்.

ஆனால், சங்கரலிங்கம் தற்கொலை செய்து இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜோதிடர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கோமதி தனது கணவனை தானே கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து கோமதி, ஜோதிடர் முப்புடாதி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு குறித்து போலீசார் கூறுகையில்,

'கடந்த 2003ம் ஆண்டு, நடத்துனர் சங்கரலிங்கம் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சங்கரலிங்கம், தன் மனைவி கோமதியை அழைத்துக் கொண்டு ஜோதிடரை பார்க்க வீரவநல்லூர் சென்றுள்ளார்.

அங்கு ஜோதிடர் முப்புடாதியை இருவரும் சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளனர். சங்கரலிங்கத்தின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்த ஜோதிடர் கடனை அடைக்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

பரிகார வேலை தொடர்பாக கோமதி அடிக்கடி முப்புடாதியை சந்தித்து வந்தார். இதில் முப்புடாதிக்கும், கோமதிக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது.

இதனையறிந்த சங்கரலிங்கம் கோமதியை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கோமதி தன்னுடைய கள்ளத் காதலன் முப்புடாதியிடம் சங்கரலிங்கத்தை கொலை செய்து விடுமாறு கூறினார்.

கொலை செய்து விட்டு கோமதியும் முப்புடாதியும் சேர்ந்து வாழ திட்டமிட்டனர். இதையடுத்து, வீரவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் என்ற மணிக்கண்டன் மூலம், சங்கரலிங்கத்தை கொலை செய்வதற்கு 2 லட்ச ரூபாய் அளித்தார்.

ஐயப்பன் தனது கூட்டாளிகள் 5 பேரை அழைத்துச் சென்று கடந்த 2004ம் ஆண்டு சங்கரலிங்கத்தின் கழுத்தை நெறித்தும், அவரது வாயில் விஷத்தை ஊற்றியும் கொலை செய்தனர்.

பின்னர் கோமதி தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினரை நம்ப வைத்தார். பின்னர் கோமதியும், ஜோதிடர் முப்புடாதியும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்' என்றனர்.

தட்ஸ்தமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

அதுதானே பார்த்தேன் நடந்தது இந்தியாவில் ....கிந்திகாரனங்கள் ஒழிக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தேன் நடந்தது இந்தியாவில் ....கிந்திகாரனங்கள் ஒழிக

அப்படி என்று சொல்லி நிம்மதி அடைய முடியாது. ஏனென்றால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இளைய சமூகத்தினரில் ஆண்கள் பலர் இந்திய பெண்களையும் பெண்கள் இந்திய ஆண்களையும் இணையத்தின் வழி தேடி அலைவதை அவதானித்திருக்கிறேன். சினிமாவின் தாக்கம் அவர்களை இந்தியர்கள் தொடர்பில் ஒரு கற்பனை உலகில் வாழத் தூண்டியுள்ளது. அதனை இந்திய இளைஞர்களும் யுவதிகளும் நன்கே பாவித்து வருகின்றனர்.

கனடா நாட்டிற்கு போய் குடியேறிய ஈழத்தமிழர் ஒருவர் தான் அண்மையில் ரம்பாவை கைபிடித்திருக்கிறார். இப்படிப் பல. அதுமட்டுமன்றி இந்தியாவில் நிலம் புலம் வாங்குவதை உல்லாசப் பயணம் மேற்கொள்வதை பெரும் கெளவரமாக வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று வாழும் ஈழத்தமிழர்கள் கருதுகின்றனர். தமது வாரிசுகளுக்கும் இந்தியா காட்டுவதை ஏதோ உலகத்தின் சொர்க்கத்தை காட்டுவதாக எண்ணிக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர்.

நானறிய படிப்பைக் கூட சரியாகத் தொடர முடியாத இந்திய இளைஞர்கள் சிலர் வீதியில் நிற்கும் கார்களின் முன்னாலும் வீடுகளின் முன்னாலும் படங்கள் எடுத்து குறிப்பாக சுவிஸ் நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களின் வாரிசுகளை பேஸ் புக்.. மற்றும் எம் எஸ் என் வழி பிடிக்க முயல்வதும் இன்றி மகா மட்டமான சிந்தனைகளோடு அவர்களோடு உரையாடுவதை பெருமையாக தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.

எமது இளைய சமூகம் இந்திய குறிப்பாக தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தால் இந்தியா தொடர்பில் ஒரு கற்பனையில் வாழ்ந்து கொள்ளச் செய்யப்பட்டுள்ளது. மேடைகள் ஏறினும்.. இந்திய சினிமா டான்ஸ். நிகழ்ச்சிகள் நடத்தினும் இந்திய சினிமா நடிகைகள் நடிகர்கள் கலை நிகழ்சிகள்.. இப்படி.. இந்திய ஆதிக்கத்தை எம்மை அறியாமலே உள்வாங்கிக் கொண்டு.. அரசியல் என்றதும்.. இந்தியா எதிரி என்று காட்ட முனைவது.. எவ்வளவு தூரம்.. இந்தியா மீது எம்மவர்கள் கொண்டுள்ள ஒருவித மாயை மயக்கத்தை தகர்க்க உதவும் என்று தெரியவில்லை.

இந்திய தேசத்தின் அநாகரிகத்தை வெளிக்காட்டாத வரை அதனை நோக்கி ஓடும் எம்மவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் இந்திய மாயைக்குள் இருக்குது என்பது கசப்பான உண்மை :D

  • கருத்துக்கள உறவுகள்

-----

கனடா நாட்டிற்கு போய் குடியேறிய ஈழத்தமிழர் ஒருவர் தான் அண்மையில் ரம்பாவை கைபிடித்திருக்கிறார். இப்படிப் பல. அதுமட்டுமன்றி இந்தியாவில் நிலம் புலம் வாங்குவதை உல்லாசப் பயணம் மேற்கொள்வதை பெரும் கெளவரமாக வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று வாழும் ஈழத்தமிழர்கள் கருதுகின்றனர். தமது வாரிசுகளுக்கும் இந்தியா காட்டுவதை ஏதோ உலகத்தின் சொர்க்கத்தை காட்டுவதாக எண்ணிக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர்.

-----

எங்கட சனம் இந்திய மாயைக்குள் இருக்குது என்பது கசப்பான உண்மை :D

ஊரில் உக்கிரமான போர்ச்சூழல் நடந்து கொண்டிருந்த போது கூட ,

சபரி மலைக்கு மாலை போட்டு தனி விமானத்தையே வாடகைக்கு அமர்த்தி சென்று வந்தவர்களும் எம் இனத்தில் இருக்கின்றார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருக்கிறார்கள் ஆம்படையானுகள் ( ஆண்கள் ) ......என்றும். :D ...... தலைப்பு வராலாம். உலகத்தில் ஆண்களும் பெண்களும் இருபாலாரும் தவறுகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருக்கிறார்கள் ஆம்படையானுகள் ( ஆண்கள் ) ......என்றும். :lol: ...... தலைப்பு வராலாம். உலகத்தில் ஆண்களும் பெண்களும் இருபாலாரும் தவறுகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி எங்களோட சரிக்கு சமனா எழுதிக் கொண்டு இருக்கிறதிலும்.. இந்த மார்ச் 8 மகளிர் தினத்திலாவது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் பெண்களை ஒருங்கிணைத்து ஒரு பொதுப் போராட்டம் ஒன்றை ஈழத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளை சிறைப்பட்டுள்ள பெண்களின் விடுதலையை வேண்டி சர்வதேசத்தின் முன் ஒரு கவன ஈர்ப்பாகக் கொண்டு வர பாடுபடலாமே.

யாழ் களம் மகளிர் தினத்தை மறந்திட்டுதா..??! இன்னும் சில தினங்கள் தானே இருக்குது..??! சர்வதேச அளவில் எமது தமிழ் பெண்கள் சிங்கள இந்திய ஆளும் சக்திகளால் அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையை உலகிற்கு சொல்ல ஒரு அமைப்பை உருவாக்கி காத்திரமாகச் செயற்படலாமே...??!

அதற்கும் ஆண்கள் தானா வரணும். பிரபாகரன் வந்து உணர்ச்சி ஊட்டினால் தானா சுதந்திரப் பறவைகளாகப் பறப்பீர்கள்..??! சுயமா சிந்திக்கவும் செயற்படவும் போராடவும் ஏன் தயங்குறீங்க. இப்படி வீம்பு பேசிற நேரத்திற்கு.. தாயகத்தில் ஆண்களை விட பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வெளி உலகிற்கு உணர்த்தி அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட பாடுபடலாமே..??!

தப்பா நினைக்காதீங்க..ஏன் இதைச் செய்யக் கூடாது பெண்கள்..???! நீங்கள் இப்படியான விடயங்களில் முன்னேறிச் சிந்தித்து செயற்படுவதோடு ஆண்களையும் ஒருங்கிணைத்து செயற்பட வேண்டும். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கால போனவரே உங்களுக்கும் பெண்களுக்கும் ஏதாச்சும் பிரச்சனையோ?

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமானவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.

எச்சரிக்கை கொடுப்பவர் திருமணமானவர்களுக்குப் பிறக்கவில்லையோ? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை கொடுப்பவர் திருமணமானவர்களுக்குப் பிறக்கவில்லையோ? :)

அவர் ஏலியனா இருக்கலாம்..! :D

நெடுக்கால போனவரே உங்களுக்கும் பெண்களுக்கும் ஏதாச்சும் பிரச்சனையோ?

பொண்ணுங்க செய்யுற தப்பைச் சொல்ல பொண்ணுங்க கூட பிரச்சனை தான் வரணும் என்றில்லை. ஒரு சமூக அவதானிப்பிருந்தா போதும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எங்களோட சரிக்கு சமனா எழுதிக் கொண்டு இருக்கிறதிலும்..

நாங்கள் அதாவது ஆண்கள் இன்னும் நீண்டதூரம் போகணும் நெடுக்.....

இந்த வசனமே போதும் எம்மை அளக்க.......

கோவிக்கக்கூடாது

ஆனால் உண்மை சுடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.