Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் மேல் பனிமழை பொழிந்து இனவாத தாக்குதல்

Featured Replies

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவுஸ்திரேலிய இனவாத காலநிலை பனிமழை பொழிந்து கடுந்தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால் பல இந்திய மாணவர்கள் படுகாயமடைந்து டைகர் பாம் தடவி தமது வலியினை குறைக்க போராடிக்கொண்டு இருகின்றார்கள்.அவுஸ்திரேலியாவின் மோசமான இனவாத கால நிலையால் பல இந்தியர்களின் வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் பல ஆயிரக்கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் பல கார்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த இனவாத தாக்குதலை தொடுத்த காலநிலை அடையாளம் தெரியாமல் கண்மூடித்தனமாக தாக்குதலை தொடுத்ததால் அவுஸ்திரேலியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக எமது மெல்பேர்ன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த இனவாத தாக்குதலை பாரத பிரதமரும் சோனியாவின் பாவாடையை தலைப்பாகையுமாகவும் கோவணமாகவும் கட்டி இருக்கும் மன்மோகன் சிங் அவுஸ்திரேலிய பிரதமரை தொடர்பு கொண்டு தனது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

இதுமட்டுமல்ல இந்த பனிமழை இனவாத தாக்குதலை கண்டிக்கு முகமாக இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது கண்டனத்தை மிக காட்டமாக தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோனி இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்காக இந்திய பாதுகாப்பு அமைச்சு பல நூற்றாண்டுகளான ஆய்வின் பயனாக கிடைத்த பிருத்வி என்னும் பனி மழை தற்பாதுகாப்பு பொறி முறையை அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நிறுவப்போவதாக அறிவித்துள்ளார்.இதனை கண்டிக்கும் வகையில் வல்லரசுகளான அமெரிக்க்கா சீனா மற்றும் ரஸ்ஸியா தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு.அவுஸ்திரேலியாவில் இந்தியா அறிவித்திருக்கும் பாதுகாப்பு பொறிமுறை இன்னொரு உலகப்போருக்கு வழிசமைத்து விடும் எனவும் பிராந்தியத்தில் கடும் ஆயுதப்போட்டி ஏற்பட்டு விடுமெனவும் எச்சரித்துள்ளார்கள்.

இதற்கிடையில் உள்துறை அமைச்சர் பா சிதம்பரம் அவுஸ்திரேலியா மீது இந்தியா பொருளாதார தடையினை விதிக்க ஆய்வு நடத்திவருவதாக எச்சரித்துள்ளார்.இதனால் அவுஸ்திரேலிய அரசாங்கம் கடும் அழுத்ததுக்கு உள்ளாகியுள்ளது.மேலும் சிதம்பரம் தெரிவிக்கையில் இந்திய அரசு பனிமழை தாக்குதலுக்கு இலக்கான இந்தியர்களுக்கு டைகர் பாம் இலவசமாக வழங்கும் எனவும் ஒரு தொகுதி டைகர் பாம் இந்திய விமானப்படை விமானத்தில் அனுப்பி வைக்கபட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் மெல்பேர்ன் நகரை நேற்று புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் சென்றடையும் என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பெற்றோர் சங்கம்.ஊர்வலம் ஒன்றினை டெல்லியில் நடத்தியுள்ளனர்.ஆர்பாட்டத்தில் இந்திய காலநிலையின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

இதற்கிடையில் அவுஸ்திரேலிய எதிர்கட்சி தலைவர் ரொனி இந்த இனவாத பனிமழை தாக்குதலுக்கு பொறுப்பேற்று காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பதவிவிலக வேண்டும் என சைக்கிள் கப்பில் ஏரோபிளேன் ஓட்டியுள்ளார்

நன்றி

அப்பாவி கோவிந்தன்

பின்குறிப்பு-

இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட ஒரு செய்தி.நகைச்சுவைகாக மட்டுமல்ல அவுஸ்திரேலியாவில் இனவெறிதாக்குதல் என கூச்சலிடும் இந்திய ஊடகங்கள் மேல் இருக்கும் கடுப்பில் எழுதப்பட்டதாகவும் கருதி கொள்ளலாம்.

மெல்பேர்ன் நகரில் உணவுவிடுதியில் நடந்த இந்தியரின் கொலை,கார் எரிப்பு,கடைசியாக நடந்த இந்திய சிறுவன் கொலை,மில்டூராவில் நடந்த இந்தியரின் கொலை,சிட்னியில் நடந்த இந்தியரின் கொலை மற்றும் பேர்த்தில் நடந்த இந்தியரின் கொலை சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டுளவர்கள் இந்தியர்களே.

முறையான விசாரணை இன்றி குற்றம் சுமத்திவிட்டு பொலிஸார் துப்பு துலக்கி குற்றவாளியினை கண்டு பிடித்த பின் அமைதியாக இருப்பது தான் இந்திய ஊடக தர்மமா?

இந்த செய்தியால் யாரின் மனம் புண்பட்டிருப்பின் அதற்கு நமது வருத்ததை தெரிவித்து கொள்கின்றோம்

மெல்பேர்ன் நகரில் உணவுவிடுதியில் நடந்த இந்தியரின் கொலை,கார் எரிப்பு,கடைசியாக நடந்த இந்திய சிறுவன் கொலை,மில்டூராவில் நடந்த இந்தியரின் கொலை,சிட்னியில் நடந்த இந்தியரின் கொலை மற்றும் பேர்த்தில் நடந்த இந்தியரின் கொலை சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டுளவர்கள் இந்தியர்களே

இந்த இந்தியர்கள் அவுஸ்ரேலியாவுக்கு வந்த பின்பு கொலையாளியாக வந்தவர்கள் ஆனபடியால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறினாலும் கூறுவார்கள்

ஈழவன், பல நாட்களின் பின்னர் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த ஆக்கம் பெறப்பட்ட மூலத்தையும் குறிப்பிட்டு விடுங்கள்.

  • தொடங்கியவர்

ஈழவன், பல நாட்களின் பின்னர் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த ஆக்கம் பெறப்பட்ட மூலத்தையும் குறிப்பிட்டு விடுங்கள்.

நன்றி இணையவன்.இது என் சொந்த ஆக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈழவன். யாழில் மீண்டும் வருகை மகிழ்ச்சி தருகிறது.இத்தாக்குதல்களில் எம்மவரும் இந்தியர் என்று கருதி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

  • தொடங்கியவர்

நுணாவிலான்

அவுஸ்திரேலியாவில் இனவெறி இல்லை என நான் சொல்லவில்லை.இனவெறி எங்கும் இருக்குது.ஆனால் இந்திய ஊடகங்கள் கங்கணம் கட்டி கொண்டு பிரச்சாரம் செய்வது போல இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈழவன் நீன்ட இடைவெளிக்கு பின் கன்டதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட இடைவெளிக்கு பின் ஈழவனை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஈழவனை யாழ் களத்தில் காண்பதில் சந்தோசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.