Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது மௌனம் காக்க முடியாது: பாலஸ்தீனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது மௌனம் காக்க முடியாது: பாலஸ்தீனம்

தமது நண்பர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம், மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகள் என்பன தற்போது இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன. இந்த நிலை, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை அடுத்தே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களால் இலாபம் காண முடியாது போன நாடுகளே இந்த முனைப்புகளை காட்டி வருவதாக பாலஸ்தீனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்தமையை அடுத்து இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் குண்டு வீசிய போது, ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

ஆனால் அது தொடர்பில் இதுவரையில் ஐக்கிய நாடுகள் சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனினும் தற்போது இலங்கை பயங்கரவாத்தில் இருந்து விடுதலை பெற்று அபிவிருத்தி கண்டு வரும் வேளையில் மேற்குலகம் இவ்வாறான தடைவிதிப்புகளை மேற்கொள்வதாக பாலஸ்தீன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - பதிவு இணையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரவேல்மாதிரி தமிழர் வரவேணுமெண்டு அறிக்க விட்டத படிச்சிருக்கிறாங்கள். எங்கட போராட்டம் பலஸ்தீன போராட்டம் மாதிரி எண்டு சொன்ன காலம் போய் இஸ்ரவேல் மாதிரி வரவேணுமெண்டு சொன்னது பலஸ்தீனத்தில எதிரொலிக்குது. :lol:

Edited by Mathivathanang

இஸ்ரவேல்மாதிரி தமிழர் வரவேணுமெண்டு அறிக்க விட்டத படிச்சிருக்கிறாங்கள். எங்கட போராட்டம் பலஸ்தீன போராட்டம் மாதிரி எண்டு சொன்ன காலம் போய் இஸ்ரவேல் மாதிரி வரவேணுமெண்டு சொன்னது பலஸ்தீனத்தில எதிரொலிக்குது. :lol:

அவர்கள் தமிழர்களை யூதர்கள்தான் எண்டு ஒத்துக்கொள்ளுகினம்... :lol:

இஸ்லாமிய நாடுகளோடை ஒட்டி நிக்கும் இலங்கையை பலஸ்தீனம் வரவேற்க தானே செய்யும்...

அவசரபட்டு பதில் எழுதாதையுங்கோ.....

எதாவது தமிசாக் ஈஸ்கம் காறரின் பொறி கிறியோ தெரியா கண்டியளோ.....

அவசரபட்டு பதில் எழுதாதையுங்கோ.....

எதாவது தமிசாக் ஈஸ்கம் காறரின் பொறி கிறியோ தெரியா கண்டியளோ.....

அதுகளே நாடு இல்லாமல் 50 வருசமாக அலையுதுகள்

பிறகு ஒரு நினப்பு.

இஸ்ரேல் காரன் தான் சரி போடு கும்ம.

இரண்டு பலஸ்ஹீனத்தில எந்த பலஸ்தீனம் சொன்னது.

தங்க்டை சூத்தையை காணைல்லை பிறகு சிரிலங்காவோ. அல்லாவின்ர கோவனம்

  • கருத்துக்கள உறவுகள்
:lol: அப்ப எங்களுக்கு அடிமையும் எதிரி ஆக்கிரமிப்பாளனும் எதிரி.
  • கருத்துக்கள உறவுகள்

:lol:அப்ப எங்களுக்கு அடிமையும் எதிரி ஆக்கிரமிப்பாளனும் எதிரி.

இதைத்தான் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை

ஆனால் இனியாவது இதற்கு மருந்து செய்யவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை

ஆனால் இனியாவது இதற்கு மருந்து செய்யவேணும்

எனக்கு தெரிந்த வழி யாராவது ஒரு நல்ல ஆக்கிரமிப்பாளனுக்கு அடியாவது தான் இப்போதைக்கு தீர்வு.இங்கிலாந்திடம் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்காமல் விட்டிருந்தால் எமது நிலை இந்தளவுக்கு போய் இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

அதுசரி அமைதியாக இருக்க முடியாதென்றால், இப்ப என்னதான் பண்ணுவதாக முடிவு ?

Edited by பெரியமாமி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வழி யாராவது ஒரு நல்ல ஆக்கிரமிப்பாளனுக்கு அடியாவது தான் இப்போதைக்கு தீர்வு.இங்கிலாந்திடம் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்காமல் விட்டிருந்தால் எமது நிலை இந்தளவுக்கு போய் இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

அடிமையாவது

Edited by விசுகு

... நிரந்தர நண்பனும் இல்லை!!! நிரந்தர எதிரியும் இல்லை!!! ....

உலக ஓட்டங்கள்/மாற்றங்கள் .... நண்பர்கள், எதிரிகளை அடிக்கடி மாற்றுகின்றன!! ... அதை புரியாமல் பயணித்து விட்டோம்!! இனியாவது .............!!!!!!!!!!!!!???????????????????

இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது மௌனம் காக்க முடியாது: பாலஸ்தீனம்

அப்ப, இஸ்ரேலும் மௌனம் காக்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணையத்துக்குச் சென்று இதனுடைய செய்தி மூலம் உள்ளது. உங்கள் கருத்துகளை எழுதினால் பயனுடையதாக இருக்கும். சுவீடனில் இருந்தவாறு கட்டுரை எழுதும் Nihad Issa நிகாட் இசாவினது கட்டுரை கண்டனத்துக்குரியது என்பதைத் தெரிவிப்போம்.

எம்மோடு தொடர்புடைய செய்திகளும்....

http://www.asiantribune.com/news/2010/03/10/mr-ban-ki-moon-%E2%80%93-why-sri-lanka-why-not-gaza

http://www.asiantribune.com/news/2010/02/07/sri-lanka-independence-day-palestine

http://www.asiantribune.com/news/2010/03/07/sri-lankan-conflict-reconciliation-rehabilitation-and-reconstruction-%E2%80%93-reconciliatio#comment-54839

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனத்தவர்களது சில ஊர்வலங்களுக்கு சென்று நான் ஆதரவு தெரிவித்து சென்றிருந்தேன்

இப்போ அதற்காக வெட்கப்படுகின்றேன்

-

உதை பதிவுக்கு யார் சொன்னார்கள் எண்டு கேட்டபதை விட்டுட்டு சும்மா இப்படி மோளம் அடிக்கிறீங்களே ...

அது சரியோ பிழையோ ... இங்க வீரகேசரி சொல்லுது பாருங்கோ ...

இலங்கையுடன் இஸ்ரேல் பொருளாதார ஒப்பந்தம் - வீரகேசரி இணையம் - 3/11/2010 11:30:49 PM

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதுடில்லி மற்றும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சோபருக்கும் இடையில் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. .

-

Edited by ஜெகுமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.