Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சின்ன வயதில் படித்த பாடல்கள் வேண்டும்..

Featured Replies

எனக்கு சின்ன வயதில் நாம் படித்த, தமிழ் பாட நூலில் வாசித்த பின்வரும் சில பாடல்கள் வேண்டும்

1. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்...

2. கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா...

3. இந்தப் பாடலின் வரிகள் சரியாக நினைவில் இல்லை...ஆனால் மீன்வர்கள் படிக்கும் பாடல் "போய் வருவோமே மச்சான் போய் வருவோமே கட்டு வலை எடுத்துக் கொண்டு போய் வருவோமே.." என்று செல்லும் இந்தப்பாடல்

(கடுமையாக மூளையைப் போட்டு கசக்கினாலும், இந்த திரியை எந்தப் பகுதியில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. :wub: .)

  • கருத்துக்கள உறவுகள்

ம், நானும் முயற்சி பண்ணிப்பார்க்கிறேனே.

பவளக்கொடி

பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்

பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்

அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்

சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது

பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்

முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி

கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே

புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு

குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து

விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே

முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை

வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி

வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து

கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே

அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்

பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்

பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று

சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்

பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு

மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது

கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்

ஆக்கம் : கல்லடி வேலுப்பிள்ளை

thanks: http://iruthayam.blogspot.com/2009/09/blog-post_1197.html


கத்தரி வெருளி

ஆக்கம்: நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

காவல் புரிகின்ற சேவகா! - நின்று

காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

வேலை புரிபவன் வேறுயார்?

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்

ஏவல் புரிபவன் வேறுயார்?

வட்டமான பெரும் பூசினிக்காய் போல

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ?

வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

கத்திக் கத்திக் கரைந்தோடுமே

நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு

நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

நடுநடுங்கி மனம் வாடுமே

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

ஆவதறிந்தன னுண்மையே - போலி

ஆவதறிந்தன னுண்மையே

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

தெரிய வந்ததுன் வஞ்சகம்

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

அறிவு படைத்தனன் இன்றுநான்.

thanks: http://paadal.blogspot.com/

Edited by kssson

  • தொடங்கியவர்

மிக மிக நன்றி kssson... இவ்வளவு கெதியில் இரு பாடல்கள் கிடைக்குமென நினைக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே

கட்டு வலை எடுத்துக் கொண்டு புறப்படுவோமே

கடல் கடந்து செல்வதற்கு தோணியும் உண்டு-மச்சான் தோணியும் உண்டு

கட்டை சுறா உழுவ மீன் கடலில உண்டு-மச்சான்

கடலிலே உண்டு....

குறிப்பு: இந்தப் பாடலை நான் முன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை. எனது ஒர் அக்காவிடம் கேட்டு இணையத்தில் தேடி முதல் ஒரு சில வரிகளை இணைக்கிறேன். பாடல் சரியானதோ தெரியவில்லை. தவறாயின் மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே

கட்டு வலை எடுத்துக் கொண்டு புறப்படுவோமே

கடல் கடந்து செல்வதற்கு தோணியும் உண்டு-மச்சான் தோணியும் உண்டு

கட்டை சுறா உழுவ மீன் கடலில உண்டு-மச்சான்

கடலிலே உண்டு....

குறிப்பு: இந்தப் பாடலை நான் முன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை. எனது ஒர் அக்காவிடம் கேட்டு இணையத்தில் தேடி முதல் ஒரு சில வரிகளை இணைக்கிறேன். பாடல் சரியானதோ தெரியவில்லை. தவறாயின் மன்னிக்கவும்.

நன்றி காவாலி, இதுதான் நான் தேடிய மூன்றாவது பாடல்.. முழுதும் இருந்தால் இணைத்து விடவும்..

தாடியறுந்த வேடன் - சிறுவர் பாடல்

ஆக்கம்: நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

வீமா! வீமா! ஓடி வாவா - அணில்

வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா

தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்

தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி

மரத்தில் இருந்து குதித்தே - அடடா

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்

துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு

சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?

பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்

புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்

அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த

அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.

thanks: http://vasanthanin.blogspot.com/2005/12/blog-post_27.html


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

thanks: http://kanaga_sritharan.tripod.com/aadippirappu.htm

Edited by kssson

தைத்திருநாள்

தைத்திருநாள் இல்லமெல்லாம்

தளிர்த்திடும் தைப்பொங்கல்

இத்தனை நாள் காத்திருந்தோம்

இனிய தமிழ்ப்பொங்கல்

கூவி அழைத்திடும் சேவல்

குதித்தெழுவோம் குளிப்போம்

பூவெடுப்போம் புதிதணிவோம்

பொங்கலன்று நாங்கள்

கோலமிட்டு விளக்கேற்றிக்

கும்பிடுவாள் அம்மா

பாலெடுத்துப் பொங்கலுக்குப்

பானை வைப்பார் அப்பா

விரும்பிய மா வாழை பலா

விதவிதமாய்க் கனிகள்

கரும்பிளனீர் படைத்து மனம்

களித்திடுவோம் நாங்கள்

வெண்ணிறப்பால் பொங்கி வர

வெடி சுடுவோம் நாங்கள்

இன்னமுதப் பொங்கலுண்ண

இணைந்து நிற்போம் நாங்கள்

நாலாம் வகுப்பில் படித்த ஞாபகம்... :rolleyes: மேலும் சிறுவர் பாடல்கள் கீழே உள்ள இணைப்பில் தொடுத்து இருக்கிறார்கள்.

http://66.102.9.132/search?q=cache:80djX2kciIAJ:magespathy.com/

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி காவாலி, இதுதான் நான் தேடிய மூன்றாவது பாடல்.. முழுதும் இருந்தால் இணைத்து விடவும்..

 

வெருளியைத் தேடியபோது தடக்குப்பட்டதால் இந்தப் பாட்டை இணைக்கின்றேன் :)

 

 

மீன்பிடிகாரர் பாட்டு

 

புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே

கட்டுவலை எடுத்துக் கிட்டுப் புறப்படுவோமே

கடல் கடந்து செல்வதற்குத் தோணியும் உண்டு

கட்டை சுறா உழுவைமீன் கடலிலே உண்டு

கடவுள் தந்த கைகளே முழுப்பட உண்டு

                            மச்சான் முழுப்பட உண்டு

கடல் கடந்து மீன்பிடிப்போமே - வீண்

கவலையற்று வாழ்ந்திடுவோமே

முப்பது நாள் உழைத்துழைத்து

                          நிறையப் பணம் வாங்கி

அதை மூன்று நாளிற்திண்டு விட்டுக் கடனையும்

                            வாங்கி

பாக்கி நாளிற் பெரும் பகுதியைப் பட்டினியாக்கி

மனப் பதறலோடு மாரடிக்கும் சென்மமும் வேண்டாம்

                            - மாரடிக்கும் சென்மமும் வேண்டாம்

புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே

கட்டுவலை எடுத்துக் கிட்டுப் புறப்படுவோமே

 

  • கருத்துக்கள உறவுகள்

என் பங்குக்கு இந்த பாடல்.

 

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..
காணாத இடமெல்லாம் காணப்போனேன்..
 
கண்டு வந்த புதுமைகள்சொல்லக் கேழும்...
செட்டியார் வீட்டில் கல்யாணம்..
சிவனார் கோவிலில் விழாக்கோலம்..
மீன் பிடி துறையில் சனக்க்கூட்டம்...
கண்டிப்பக்கம் குளிரோ கடுமை..
காங்கேசந்துறையில் வெயிலோ கொடுமை
 
அப்பா மாமா அத்தான் கொழும்பில்
அவர்கள் சுகத்தை அறிவீரோ....
 
பொங்கல் அன்று வருவாராம்
புத்தகம் கொண்டு வருவாராம்
பந்தும் கொண்டு வருவாராம்
பாவை உனக்கு தருவாராம்...
 
காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..
காணாத இடமெல்லாம் காணப்போனேன்..

என் பங்குக்கு இந்த பாடல்.

 

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..
காணாத இடமெல்லாம் காணப்போனேன்..
 
கண்டு வந்த புதுமைகள்சொல்லக் கேழும்...
செட்டியார் வீட்டில் கல்யாணம்..
சிவனார் கோவிலில் விழாக்கோலம்..
மீன் பிடி துறையில் சனக்க்கூட்டம்...
கண்டிப்பக்கம் குளிரோ கடுமை..
காங்கேசந்துறையில் வெயிலோ கொடுமை
 
அப்பா மாமா அத்தான் கொழும்பில்
அவர்கள் சுகத்தை அறிவீரோ....
 
பொங்கல் அன்று வருவாராம்
புத்தகம் கொண்டு வருவாராம்
பந்தும் கொண்டு வருவாராம்
பாவை உனக்கு தருவாராம்...
 
காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..
காணாத இடமெல்லாம் காணப்போனேன்..

 

மேரியின் வீட்டில் கொண்டாட்டம் என்ற ஒரு வரிய மீன்பிடித்துறையில் சனக்கூட்டம் என்பதற்கு அடுத்து வரும் என நினைக்கின்றேன். நான் படித்தபோது அப்படிப் படித்ததாக ஞாபகம்.

 

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி



அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி



நாவால் நக்குது  வெள்ளைப்பசு - பாலை

நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி



முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி

முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி




- கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

மேரியின் வீட்டில் கொண்டாட்டம் என்ற ஒரு வரிய மீன்பிடித்துறையில் சனக்கூட்டம் என்பதற்கு அடுத்து வரும் என நினைக்கின்றேன். நான் படித்தபோது அப்படிப் படித்ததாக ஞாபகம்.

 

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் எல்லாம் வருகுது.

Edited by sagevan

  • 3 weeks later...

பவளக்கொடி

பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்

பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்

அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்

சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது

பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்

முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி

கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே

புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு

குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து

விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே

முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை

வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி

வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து

கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே

அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்

பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்

பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று

சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்

பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு

மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது

கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்

ஆக்கம் : கல்லடி வேலுப்பிள்ளை

 

இந்த பாட்டில "பாற்குடமும் சுமந்து பைய பைய நடந்து" என்று ஒரு வரியும் வரும் என்று நினைக்கிறேன். அதை இங்கே காணவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.