Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தீர்வுதிட்டம் என்ன? ஏன் இவ்வாறான பிளவு ஏற்பட்டது? – விளக்குகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தீர்வுதிட்டம் என்ன? ஏன் இவ்வாறான பிளவு ஏற்பட்டது? – விளக்குகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி முன்வைக்கின்ற இரு தேசங்கள் ஒரு நாடு என்ற தீர்வுதிட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பது பற்றியும் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்ககூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றியும் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு:

சமஸ்டி அடிப்படையிலான தீர்வை புறக்கணிப்பதுடன் இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கை அடிப்படையில் தீர்வு முன்வைக்கவேண்டும் என்பதே எமது தீர்வு யோசனையாகும். சமஸ்டி அடிப்படையிலான தீர்வென்பது தந்தை செல்வா காலத்திலேயே பொருத்தமற்றது என முடிவெடுக்கப்பட்டது

அதனை தொடர்ந்த முப்பது வருடகால ஆயுதபோராட்டத்தில் 150 000 இற்கும் மேற்பட்ட மக்களையும் போராளிகளையும் இழந்திருக்கிறோம். எனவே மீண்டும் பழைய இடத்திற்கே – 35 வருடங்களுக்கு முன்னே – செல்லமுடியாது. இந்தியா விரும்புகிறது என்பதற்காக நாம் எமது கொள்கைகளை மாற்றமுடியாது. ஆனால் இந்தியாவுடனும் மேற்குலகுடனும் இதனை விளக்ககூடிய பொருத்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிப்போம்.

எமது அடிப்படைக்கொள்கைகளை மாற்றாமல் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் ஊடாக தமிழர்களுக்கான தீர்வுக்காகவும் தமிழர்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் சிந்திக்கவேண்டும்.

அதிகாரபகிர்வு என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெவ்வேறானவை. அதிகாரபகிர்வு என்று கூறிக்கொண்டு சுயநிர்ணய உரிமையை கதைக்கமுடியாது. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசத்திற்கான உரிமை. கூட்டமைப்பானது சுயநிர்ணய உரிமை என்ற கோசத்தை பயன்படுத்திக்கொண்டு அதிகாரபகிர்வு பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது.

கூட்டமைப்பில் பிளவு வருவதை தடுப்பதற்காக இரண்டு முக்கிய முயற்சிகள் மேற்கொண்டோம். முதலாவதாக அரசியல் தீர்வு தொடர்பாக முன்வைக்கப்படும் தீர்வுதிட்டம் எதுவும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சி தலைவர்களின் ஏகமனதான ஆதரவுடன்தான் முன்வைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டோம். அதனை கூட்டமைப்பின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டாவது முயற்சியாக அரசியல் தீர்வு திட்டம் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறாமல் விடுவோம். தேர்தல் முடிந்தவுடன் தீர்வுதிட்டம் பற்றி ஆராய்வோம் என கேட்டோம். அதற்கும் அவர்கள் உடன்படவில்லை. வேண்டுமானால் தேர்தலின் பின்னர் தீர்வுதிட்டம் முன்வைக்கும் போது நீங்கள் விலகிக்கொள்ளலாம் என கூறப்பட்டது. தேர்தல் காலத்தில் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மௌனமாகவிருந்துவிட்டு அதன்பின்னர் அவர்கள் தவறாக நடக்கிறார்கள் என்று சொல்வது சரியானதாகவிருக்காது.

இவ்வாறு அடிப்படை கொள்கைகளிலிருந்து அவர்கள் விலகிபோகிறார்கள் என்பதை தெளிவாக அறிந்துதான் நாம் விலகி தேர்தலில் போட்டியிடுகின்றோம். இதன்மூலம் அவர்களை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டுவரமுடியும் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/6105/68/8211/d,view.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணைக்கு வெளியால எடுத்துவிட்ட முகாம் மக்கள் வோட்டு போடுவினம்தானே , சத்தியப்பிரமாணம் எடுக்கேக்க நீங்கள் இப்ப சொல்லுறதுகள மறக்க கூடாது. தலைவரைத்தான் கானேல்ல நீங்களாவது வழிகாட்டியா இருக்கவேணும். போர் நடக்கேக்க மக்கள போய் சந்திச்சு ஆறுதல் சொன்ன நீங்கள்தானே , தேர்தல் முடிய முந்தினமாதிரி மக்கள் சேவையை தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு வெளியால எடுத்துவிட்ட முகாம் மக்கள் வோட்டு போடுவினம்தானே , சத்தியப்பிரமாணம் எடுக்கேக்க நீங்கள் இப்ப சொல்லுறதுகள மறக்க கூடாது. தலைவரைத்தான் கானேல்ல நீங்களாவது வழிகாட்டியா இருக்கவேணும். போர் நடக்கேக்க மக்கள போய் சந்திச்சு ஆறுதல் சொன்ன நீங்கள்தானே , தேர்தல் முடிய முந்தினமாதிரி மக்கள் சேவையை தொடர வாழ்த்துக்கள்.

இன்றைக்கு உங்களுக்கு டபுள் சிப்போ??

நேரத்தோடையே வந்திட்டீங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு உங்களுக்கு டபுள் சிப்போ??

நேரத்தோடையே வந்திட்டீங்கள்.....

தேர்த்தல் போனஸ் கொடுக்கினமாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தல் போனஸ் கொடுக்கினமாம். :lol:

அப்படிதான் நானும் நினைக்கிறேன்

பாவம் இங்கேயே சுத்துறார்..... என்ன இருந்தாலும் கடும் உழைப்பாளி பாராட்டத்தான் வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு உங்களுக்கு டபுள் சிப்போ??

நேரத்தோடையே வந்திட்டீங்கள்.....

தேர்த்தல் போனஸ் கொடுக்கினமாம். :lol:

அப்படிதான் நானும் நினைக்கிறேன்

பாவம் இங்கேயே சுத்துறார்..... என்ன இருந்தாலும் கடும் உழைப்பாளி பாராட்டத்தான் வேணும்.

யார் எதைக் கேக்கிறதெண்ட விவஸ்தையே இல்லாமல் போட்டுது.

நீங்களெல்லாம் 24 அவர் டியூட்டி செய்யலாம்....... :lol:^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் எதைக் கேக்கிறதெண்ட விவஸ்தையே இல்லாமல் போட்டுது.

நீங்களெல்லாம் 24 அவர் டியூட்டி செய்யலாம்....... :lol::lol:

நாங்கள் இங்கு எழுதுவதால் எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை. நீங்கள் எழுதும் அளவுக்கு அதாவது வசை பாடுவதற்கு இப்படி முக்க மாட்டீர்கள்.சிங்களவனே இவ்வளவு முக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே வசை பாடுறதின்ர பொருள சொல்லுங்கோ.....எனக்கு பதில் எழுதின ஆக்களில பெரும்பான்மையானாக்கள் எழுதினதுகள......

எனது கருத்து சரியோ பிழையோ எண்டு பாக்கிற அளவுமானி அதுதான்......நீங்கள் உப்புடி சொன்னா??????? :lol::lol:

கூட்டமைப்பின் தீர்வுதிட்டம் என்ன? ஏன் இவ்வாறான பிளவு ஏற்பட்டது? – விளக்குகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு:

சமஸ்டி அடிப்படையிலான தீர்வை புறக்கணிப்பதுடன் இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கை அடிப்படையில் தீர்வு முன்வைக்கவேண்டும் என்பதே எமது தீர்வு யோசனையாகும். சமஸ்டி அடிப்படையிலான தீர்வென்பது தந்தை செல்வா காலத்திலேயே பொருத்தமற்றது என முடிவெடுக்கப்பட்டது.

:rolleyes:எனக்குத் தெரிந்து தேசமென்றாலும் நாடென்றாலும் ஒன்றையே குறிப்பது. இப்ப புதிசாய் தேசம் என்றால் வேறு அர்த்தம் புத்திமான்கள் யாராவது கண்டு பிடித்து விட்டினமோ?? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:எனக்குத் தெரிந்து தேசமென்றாலும் நாடென்றாலும் ஒன்றையே குறிப்பது. இப்ப புதிசாய் தேசம் என்றால் வேறு அர்த்தம் புத்திமான்கள் யாராவது கண்டு பிடித்து விட்டினமோ?? :unsure:

என்ன மாமா....குழப்புறீங்கள் , ஆந்திர நாட்டுக்குள்ள தெலுங்கு தேசம் மாதிரி வடக்குதேசம் கிழக்குதேசம் இருக்கலாமெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தனியரசை விட வேறு எதுவும் தமிழர்களின் அரசியல் உரிமையை இலங்கைத் தீவில் நிலைநாட்டாது. இது இன்றைய சூழ்நிலையில் எழுந்த கருத்தல்ல. ஆயுதப் போராட்டம் முளைவிட முதலே எழுந்த எண்ணப்பாடு. அதை சொன்னவர் வேறு யாரும் அல்ல.. தந்தை செல்வா.

இவர் சிங்கள அரசுகளோடு பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டு அவை அனைத்தும் சிங்களத்தரப்புகளால் கிழித்தெறியப்பட்ட நிலையில் தெரிவித்த நிதர்சனத்தின் வெளிப்பாடே இது ஆகும்.

ஐக்கிய இலங்கை என்ற பதத்தை எனியும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. உலகம் பிரிந்து போகும் தன்மையையே இன்று விரும்புகிறது. சிங்களம் மட்டும் இன்னும் பழைய சித்தாந்தம் பேசிக் கொண்டிருக்கிறது. அதன் உப்புச்சப்பற்ற சித்தாந்ததிற்கு உயிர்ப்புக் கொடுக்க பிராந்தியத்தில் எழுந்துள்ள சீன இந்திய மேற்குலக போட்டிக் களத்தை தனக்கு சாதகமாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் எவ்வளவு காலத்திற்கு என்று பார்க்கலாம். சீன ஆதரவோடு வடக்குக் கிழக்கு இராணுவ மயமாவது தமிழர்களுக்கு மட்டுமல்ல.. தென்கோடியில் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் தொடங்கி அணு உலைகள் வரை கட்டி வைத்திருக்கும் இந்தியப் பேரரசிற்கு இதுவே மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். புலிகளின் குரும்பட்டி விமானத்தை கண்டு பயந்தவர்கள்.. சீனாவின் ஆயுதங்கள் இந்திய தென்முனை நோக்கி நீண்டு கொண்டிருப்பதை இட்டு அச்சமுறுவதாக இல்லை. அதற்கான பலாபலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.

நாம்.. ஆகக் குறைந்தது சீன - கொங்கொங் (one country, two systems) நடைமுறையின் கீழ் ஒரு தற்காலிக தீர்வை எமதாக்கி.. சீனாவோடு எமது உறவுகளை சிங்களத்தை விட மிக நெருக்கமாக்கிக் கொள்வதே இன்றைய சூழலில் சிறந்தது. சீனாவின் ஏவுகணைகளை நிலைநிறுத்த தமிழர்கள் ஒரு நிலைப்பரப்பை வழங்கிக் கூட இதனை சாதிக்கலாம். இந்தியா என்ற தேசம் எமக்கருகில் இருந்து கொண்டு எனி வாலாட்டக் கூடாது. அதன் சரிவில் தான் சிங்கள ஆதிக்கத்தின் வெறியை அடக்க முடியும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும் போது தமிழர் தேசம் தானாகப் பிறக்கும். அதை உடைப்பதற்கான சாத்தியமான வழிகளில் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

திருகு தாளம் போட்டு வரும் சம்பந்தன், மாவை, சுரேஷ் முதலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பில் உள்ள ஏனைய நல்லவர்களை இணைத்து பலமான அணி உருவாக்கப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:எனக்குத் தெரிந்து தேசமென்றாலும் நாடென்றாலும் ஒன்றையே குறிப்பது. இப்ப புதிசாய் தேசம் என்றால் வேறு அர்த்தம் புத்திமான்கள் யாராவது கண்டு பிடித்து விட்டினமோ?? :unsure:

நாடு (State) என்பது அரசு, இறைமை இவற்றுடன் ‘ஒரு மக்கள்’ வரையறுக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியில் வாழ்வதைக் குறிக்கும். நாடு என்பதில் நான்கு கூறுகள் அடங்கி இருக்கின்றன. அவை : ஒரு மக்கள் (a People), நிலப்பகுதி (Territory), ஓர் அரசு (Government), மற்றும் இறைமை அல்லது இறையாண்மை(Sovereignty). ஒரு நாடு ஒரு மக்களால் உருவாக்கப்படுகிறது என்றால் அது ஒரு தேசிய இனத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். ஆனால் ஒரு நாடு எவ்வளவு பெரியதாகவும், எத்தனை மொழியினங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

தேசம் அல்லது தேசிய இனம் என்பது ஒரு மொழியைத் தம் அடையாளமாக, பொதுமொழியாகக் கொண்ட, தமக்கான நலன்களை அல்லது பாதிப்புகளை பொதுவில் கொண்ட, மரபுவழி உறவு உடைய வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு மக்கள் சமூகமாகும். ‘nation’ என்ற ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ ஆகிய இரண்டையும் குறிக்கும். ஜே.வி.ஸ்டாலின், ஒரு தேசம் என்பது நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகம் என்று வரையறுத்தார் : 1. ஒரு பொது மொழி. 2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி 3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு 4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘நாம் ஓரினம்’ என்ற உளவியல், இவற்றைக் கொண்டு வரலாற்று வழி நிலைத்துவிட்ட மக்கள் சமுதாயமே தேசம் ஆகும்.

இந்தியா ஒரு தேசமா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே விடை. இந்தியா ஒரு நாடு; பல்தேசிய இன நாடு. பல தேசிய இனங்கள் தங்கள் தாயகப்பகுதிகளில் தனி அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு. இந்தியாவை ஒரு தேசம் என்று அழைப்பவர்கள் அரசியல் அறிவியல் அறியாதவர்கள்; அல்லது அறிந்திருந்தும் பொய் பேசும் நேர்மையற்றவர்கள்.

http://www.keetru.com/kannottam/dec08/jayaraman.php

கூட்டமைப்பில் உள்ள ஏனைய நல்லவர்களை இணைத்து பலமான அணி உருவாக்கப்பட வேண்டும்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு (State) என்பது அரசு, இறைமை இவற்றுடன் ‘ஒரு மக்கள்’ வரையறுக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியில் வாழ்வதைக் குறிக்கும். நாடு என்பதில் நான்கு கூறுகள் அடங்கி இருக்கின்றன. அவை : ஒரு மக்கள் (a People), நிலப்பகுதி (Territory), ஓர் அரசு (Government), மற்றும் இறைமை அல்லது இறையாண்மை(Sovereignty). ஒரு நாடு ஒரு மக்களால் உருவாக்கப்படுகிறது என்றால் அது ஒரு தேசிய இனத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். ஆனால் ஒரு நாடு எவ்வளவு பெரியதாகவும், எத்தனை மொழியினங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

தேசம் அல்லது தேசிய இனம் என்பது ஒரு மொழியைத் தம் அடையாளமாக, பொதுமொழியாகக் கொண்ட, தமக்கான நலன்களை அல்லது பாதிப்புகளை பொதுவில் கொண்ட, மரபுவழி உறவு உடைய வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு மக்கள் சமூகமாகும். ‘nation’ என்ற ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ ஆகிய இரண்டையும் குறிக்கும். ஜே.வி.ஸ்டாலின், ஒரு தேசம் என்பது நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகம் என்று வரையறுத்தார் : 1. ஒரு பொது மொழி. 2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி 3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு 4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘நாம் ஓரினம்’ என்ற உளவியல், இவற்றைக் கொண்டு வரலாற்று வழி நிலைத்துவிட்ட மக்கள் சமுதாயமே தேசம் ஆகும்.

இந்தியா ஒரு தேசமா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே விடை. இந்தியா ஒரு நாடு; பல்தேசிய இன நாடு. பல தேசிய இனங்கள் தங்கள் தாயகப்பகுதிகளில் தனி அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு. இந்தியாவை ஒரு தேசம் என்று அழைப்பவர்கள் அரசியல் அறிவியல் அறியாதவர்கள்; அல்லது அறிந்திருந்தும் பொய் பேசும் நேர்மையற்றவர்கள்.

http://www.keetru.com/kannottam/dec08/jayaraman.php

அறிவாளிகள் சுவிசிலையாம் வாழுகினம்.......

சுவிஸ் நாட்டிலேயே லெங்கெஸ்ரெயின் என்ற தேசம் உண்டு. நீங்கள் ஏன் இப்ப இதெல்லாம் முக்கி முக்கி எழுதுறீங்கள்??

அறிவாளிகள் இனி கொழுக்கட்டையை எடுத்து வாய்க்க வச்சுடுவினம் இனி இஞ்ச வராயினம்.

பிறகு வேற தலபை;பிலதான் வருவினம். இது நேற்று இன்றல்ல இங்கே வந்ததில் இருந்தே இப்படிதான்.

இதிலே நாங்கள் நாகரீகமாக கருத்தெழுத வேண்டும். ( இப்பிடியே பூச்சத்தலாம் என்றுதான் வெளிக்கிட்டவை போல)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.