Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வது சீர்திருத்தம் அர்த்தமற்றது பெருமாள் அறிக்கை விடுகின்றார்.

Featured Replies

13 வது சீர்திருத்தம் அர்த்தமற்றது பெருமாள் அறிக்கை விடுகின்றார்.

வவுனியா நிருபர்

புதன்கிழமை, மார்ச் 31, 2010

varathar

அரசமைப்புச் சட்டத்துக்கான பதின் மூன்றாவது திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றக் கோருவதோ அதனை ஒரு தீர்வாகக் கொள்ள முயற்சிப்பதோ அர்த்தமற்றவை என பெருமாள் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எந்த வகையான அரசியல் தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள். நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருந்த இந்திய ஆதரவு ஒட்டுக்குழு மன்னனான பெருமாள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய போது ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் அதனை மீண்டும் கோருவது அர்த்தமற்ற செயல்.

மக்களுக்கு எந்தவகையான அரசியல் தீர்வு அவசியம் என்பதை தற்போதைய கள நிலை மாற்றங்களுக்கு ஏற்ப மக்களே தீர்மானிக்க வேண்டும் இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்களும் கலந்து பேசியே புதிய தீர்வுத் திட்டத்தைஉருவாக்க வேண்டும் என்றும் பெருமாள் கூறியுள்ளார்.

http://www.eelanatham.net/story/13-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

அப்பாடா!

ஒருவீரன் மீண்டு(ம்) வந்திருக்கிறான். :lol:

அண்ணை மணியை ஆட்டி கொண்டு முன்னாலை வாறார் பின்னாலை சப்பாத்தியும், புல்லெண்ணை மணமும் வருகிற மாதிரி கிடக்கு. அப்ப கூட்டமைப்புக்கு அல்வா போல கிடக்கு.?

கூட்டமைப்புக்கு என்ன? மொத்தத் தமிழருக்கும் அல்வாதான்.

கூட்டமைப்புக்கு என்ன? மொத்தத் தமிழருக்கும் அல்வாதான்.

மொத்த தமிழரும் இந்தியாக்கு பின்னாலையே நிக்கினம்.? இல்லை இந்தியா அரிசி கொண்டு கப்பலிலை வரும் எண்டு பாத்து கொண்டு நிக்கினமோ.?

மொத்த தமிழரும் இந்தியாக்கு பின்னாலையே நிக்கினம்.? இல்லை இந்தியா அரிசி கொண்டு கப்பலிலை வரும் எண்டு பாத்து கொண்டு நிக்கினமோ.?

கொண்டுவந்து கொடுத்தால் வாங்காமல் விடப் போகினமே?

கொண்டுவந்து கொடுத்தால் வாங்காமல் விடப் போகினமே?

ஒரு வேளை கொண்டு வந்து குடுத்துட போறாங்கள் கவனம் . ஏற்கனவே சனம் பிச்சை எடுக்காத குறையாய் வைச்சு இருக்கிறதை பறிக்காமல் விட்டாலே பெரிய விசயம்.

அனியாயத்துக்கு உங்களுக்கு நப்பாசை.

Edited by பொய்கை

எது கிடைக்கிறதோ அதைப் பெற்றுக் கொள்ளத்தான் இன்று மக்கள் தயார்.

எது கிடைக்கிறதோ அதைப் பெற்றுக் கொள்ளத்தான் இன்று மக்கள் தயார்.

பசி வயித்தை கிள்ளும் போது மாங்காய் கூட சாப்பிட்டு பசியாறலாம். ஆனால் அதையே வாழ் நாள் பூரா சாப்பிட வேண்டும் எண்டால் எப்பிடி. ?

இதைத்தான் மக்கள் விரும்புகினம் எனும் சப்பு கட்டு அப்படித்தான் இருக்கிறது.

Edited by பொய்கை

பசி வயித்தை கிள்ளும் போது மாங்காய் கூட சாப்பிட்டு பசியாறலாம். ஆனால் அதையே வாழ் நாள் பூரா சாப்பிட வேண்டும் எண்டால் எப்பிடி. ?

இதைத்தான் மக்கள் விரும்புகினம் எனும் சப்பு கட்டு அப்படித்தான் இருக்கிறது.

நல்ல உதாரணம். தேடி, கேட்டுப் பெறுவதற்குப் பலமில்லாத நிலையில் இதுதான் வேண்டும் என்பது பலிக்காமல் போனால், கிடைப்பதில் இலாபமடைதல்தான் சிறந்தது. எரிகிற வீட்டில் பிடுங்கிறது இலாபம். கிடைப்பதிலிருந்து அபிவிருத்தி செய்ய வேண்டும். அடித்தளம் இல்லாமல் எப்படி?

நல்ல உதாரணம். தேடி, கேட்டுப் பெறுவதற்குப் பலமில்லாத நிலையில் இதுதான் வேண்டும் என்பது பலிக்காமல் போனால், கிடைப்பதில் இலாபமடைதல்தான் சிறந்தது. எரிகிற வீட்டில் பிடுங்கிறது இலாபம். கிடைப்பதிலிருந்து அபிவிருத்தி செய்ய வேண்டும். அடித்தளம் இல்லாமல் எப்படி?

இதை விட இன்னும் ஒண்டை சொல்ல முடியும். வானத்திலை பறக்க ஆசைப்பட்டால் தான் குறைஞ்சது சைக்கிளிலை தன்னும் போகலாம். மகிந்த கூட தானாக எதையும் தரப்போவதும் இல்லை. மந்திரத்திலை மாங்காயும் விளாது. எது கிடைக்க பெறலாமோ அது பலப்பிரயோகத்தின் மூலம் தான். அதுக்கு சர்வதேச அழுத்தமும் தேவை.

இதுதான் தீர்வு எண்டு வாங்கி போட்டால் அதுதான் வாழ் நாள் பூரா.? இதுக்கு பிறகு தீர்வு சரி இல்லை இன்னும் வேணும் எண்டு எங்கை போய் நிக்கிறதாய் உத்தேசம்.? சிங்களவனிட்டையா.?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

1989 களில் வரதராஜப் பெருமாளோடு புலிகள் இணைங்கி செயற்பட்டிருந்தால் தமிழீழத்தை இந்தியா பெற்றுத் தந்திருக்கும் என்று தத்துவம் பேசுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பியது போல் இன்று இந்திய விசுவாச வரதராஜப் பெருமாளும் இருக்கிறார்.. மிதவாத இந்திய சார்பு தமிழ் கட்சிகளும் இருக்கின்றன.. தமிழ் தேசியக் கட்சிகளும் இருக்கின்றன.. சிங்கள அரச எடுபிடி தமிழ் கூலிக் கும்பல்களும் இருக்கின்றன.. இவர்கள் தங்களின் பொது எதிரியாக இனங்கண்ட.. தீவிரவாதிகள்.. பயங்கரவாதிகள்..புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இப்போ.. சேர வேண்டியவை எல்லாரும் ஒன்றாச் சேர்ந்து அந்த தமிழீழத்தை இந்தியா மூலம் மீட்கட்டும் பார்க்கலாம். அதுதான் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையாகும். :lol: :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1989 களில் வரதராஜப் பெருமாளோடு புலிகள் இணைங்கி செயற்பட்டிருந்தால் தமிழீழத்தை இந்தியா பெற்றுத் தந்திருக்கும் என்று தத்துவம் பேசுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பியது போல் இன்று இந்திய விசுவாச வரதராஜப் பெருமாளும் இருக்கிறார்.. மிதவாத இந்திய சார்பு தமிழ் கட்சிகளும் இருக்கின்றன.. தமிழ் தேசியக் கட்சிகளும் இருக்கின்றன.. சிங்கள அரச எடுபிடி தமிழ் கூலிக் கும்பல்களும் இருக்கின்றன.. இவர்கள் தங்களின் பொது எதிரியாக இனங்கண்ட.. தீவிரவாதிகள்.. பயங்கரவாதிகள்..புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இப்போ.. சேர வேண்டியவை எல்லாரும் ஒன்றாச் சேர்ந்து அந்த தமிழீழத்தை இந்தியா மூலம் மீட்கட்டும் பார்க்கலாம். அதுதான் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையாகும். :lol: :lol: :lol:

நல்ல கனவு.

நனவானால்...... முருகண்டிப்பிள்ளையாருக்கு ஒரு தேங்காயை.., சீ தவறி எழுதிப்போட்டன்.... முருகண்டிப் புத்தருக்கு ஒரு பூவரசம்பூவை...... காணிக்கையா வைப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க எல்லாம் கயித்து நீளம்வரைதான் போகலாம். 13 17 க்கு அர்த்தம் தெரியவேண்டிய தேவையே இல்லயே!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்க எல்லாம் கயித்து நீளம்வரைதான் போகலாம். 13 17 க்கு அர்த்தம் தெரியவேண்டிய தேவையே இல்லயே!! :lol:

என்ன கயிறு என்று சொல்லி கொண்டு. பேசாமல் கோவணத்தை கழட்டி கழுத்தில் போட்டு சாவதற்கு. :lol::lol:

இங்கே எல்லோரும் புலம்புவதை பார்த்தால் பெருமாளால் மிகவும் பாதிக்கபட்டவர்கள் போல் தெரிகின்றது? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கப் போகின்றார்கள்.இந்தியா சம்பந்தர் கோஸ்டிக்கு இவ்வளவு கெதியில் நாமம் போடும் என்று எதிர்பார்க்கவில்லை.இனிப் பெருமாள் தான் எல்லாம்.இந்தியாவை நம்பி கூட்டமைப்பை உடைச்ச சம்பந்தருக்கு இது தேவைதான். உருப்பட்ட மாதிரிதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.