Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதில் அளிக்கப்படாத கேள்விகள்‐ கேள்விக்கு என்ன பதில்‐

Featured Replies

நடைபெறவுள்ள நாடாளமன்றத் தேர்தலை முன்னிட்டு குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக பல தரப்பினர்களையும் நேர்காணல் செய்து வநதோம். அந்த வகையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை நேர்காணல் செய்ய முற்பட்ட வேளை அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திட்டனர். அதில் எமக்கு நேர்காணல் தருவதாக கூறிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் குறித்த கேள்விகளை பார்த்துவிட்டு அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்திருக்கிறார். அதேவேளை குறித்த சம்பவத்தின் பின்னர் கேள்விகளை பார்க்காமலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நேர்ககாணல் செய்ய மறுப்பு தெரிவித்திருந்தார். குறித்த கேள்விகளை வாகசர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தீபச்செல்வன்

முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக நடத்தப்பட இருந்த நேர்காணல்.

01. தமிழ் அரசியல் சூழலில் ஒற்றுமைப்பட பெரும் அவசியம் இருக்கும் சூழலில் நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஏன் பிரிந்தீர்கள்?

02. கஜேந்திரன் பத்மினி முதலியோருக்கு ஆசனங்களை கொடுக்கவில்லை என்பதினால்தான் நீங்கள் பிரிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞானபம் தமிழீழக் கோட்பாட்டின் பிரதிபலிப்பு என்று தென்பகுதியிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள சூழலில் அவர்கள் கொள்கையை விட்டுள்ளார்கள் என்பதை எப்படி கூற முடியும்?

03. உங்களுடைய பாட்டனாரின் அரசியலுக்கும் உங்கள் தந்தையுடைய அரசியலுக்கும் இப்பொழுது நீங்கள் கூறும் தமிழ் தேசிய அரசியலுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்த மாற்றம் எப்படி உருவானது?

04. பொன்னம்பலங்களின் குடும்பங்களது வெளியேற்றம் என்றும் அது வரலாற்றில் முக்கிய கட்டங்களில் தமிழ் அரசியலை பாதித்தது என்றும் குற்றஞ் சாட்டப்படுகிறது. எனவே உங்கள் பாட்டன், தந்தை, உங்களது வெளியேற்றங்கள் இவைகளில் வௌ;வேறான பின்னணிகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

05. கொள்கையில் பிழை அல்லது அடிப்படைக் கொள்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகியுள்ளது என்றால் மே 17 இற்கு பிறகு இந்த தேர்தலின் முன்பே நீங்கள் அவற்றை எடுத்துக்காட்டி வெளியேறியிருக்கலாம். இப்படி தேர்தல் காலத்தில் வெளியேறுவது குற்றங்களை சுமத்துவது தேர்தல் கால அரசியலாக தெரிய வாய்ப்பிருக்கிறதல்லவா?

06. வாக்குகள் சிதறடிக்குகும் சூழ்ச்சிகளுக்கு எல்லா வகையான தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளாகியுள்ள சூழலில் கடந்த காலத் தேர்தலில் தமிழ் மக்களின் முக்கிய பலமாக வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை நீங்கள் உடைக்க நினைப்பது? தோற்கடிப்போம் என்று கூறுவது மக்களுக்கு எவ்வகையில் நியாத்தை பெறுகிறது?

07. இதன் மூலம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு நீங்கள் ஒத்துழைப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?

08. தமிழ் தேசியக் கூட்டமைப்புமீதான குற்றச்சாட்டுக்களை உங்கள் தேர்தல்கால சுலோகங்களாகவும் அறிக்கைகளாகவும் வெளியிட்டு வருகிறீர்கள். இது போராடும் தமிழ் மக்களை அழிவில் ஆபத்தில் தள்ளி விட்ட அதே அரசியலாக இருக்கிறதே?

09. நீங்கள் வெளிநாட்டில்தான் எப்பொழுதும் தங்கியிருக்கிறீர்கள். இங்கிருந்து வேலைகளை செய்வதில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுகிறதே?

10. கூட்டமைப்பிலிருந்து விலகியதானல் உங்களால் எதை சாதிக்க முடிகிறது? எப்படி மாறுபட்ட கோட்பாட்டை நீங்கள் முன் வைக்கிறீர்கள். அதற்கான சாத்தியங்கள் எந்தளவு இருக்கின்றன?

இந்தக் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டால் அவற்றை நாம் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22872&cat=1

ரொம்ப முக்கியம்......

  • கருத்துக்கள உறவுகள்

"எலக்சனில் நிற்க சீட்டுக் கிடைக்கும் என்றிருந்தோம்..ஆனால் தரவில்லையே...அதான் தமிழ் தேசியம், கொள்கை அது இது என்று சொல்லி வெளிக்கிட்டுட்டம் (அப்படி கொள்கை என்று ஒன்றிருந்தால் சரத்துக்கு ஆதரவு கொடுக்கும் போதே விலகியல்லவா இருப்பம்)" என்றெல்லாம் எப்படி உண்மையான பதில்களைத் தரமுடியும்...அதான் பேட்டி வேண்டாம் என்று சொல்லிட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் நக்கலடிக்கின்றார்

மற்றவர் எள்ளி நகையாடுகிறார்

பதில்தான் இல்லை தமிழர்களுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சார்பில் எனது பதில்கள்..

01. தமிழ் அரசியல் சூழலில் ஒற்றுமைப்பட பெரும் அவசியம் இருக்கும் சூழலில் நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஏன் பிரிந்தீர்கள்?

ஒற்றுமையைவிடக் கொள்கைதான் முக்கியம்

02. கஜேந்திரன் பத்மினி முதலியோருக்கு ஆசனங்களை கொடுக்கவில்லை என்பதினால்தான் நீங்கள் பிரிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞானபம் தமிழீழக் கோட்பாட்டின் பிரதிபலிப்பு என்று தென்பகுதியிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள சூழலில் அவர்கள் கொள்கையை விட்டுள்ளார்கள் என்பதை எப்படி கூற முடியும்?

பிரிவுக்குக் கொண்ட கொள்கைதான் காரணம்.

எங்கள் கொள்கை அவர்களுடையதைவிட வேறானது என்பதில் இருந்தே அவர்களின் கொள்கை தமிழீழக் கோட்பாட்டின் பிரதிபலிப்பு இல்லையென்றாகின்றது.

03. உங்களுடைய பாட்டனாரின் அரசியலுக்கும் உங்கள் தந்தையுடைய அரசியலுக்கும் இப்பொழுது நீங்கள் கூறும் தமிழ் தேசிய அரசியலுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்த மாற்றம் எப்படி உருவானது?

காலம் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பதால் கொள்கைகளும் இயங்கியல் தத்துவ விதிப்படி மாற்றங்களைச் சந்திக்கவேண்டும்

04. பொன்னம்பலங்களின் குடும்பங்களது வெளியேற்றம் என்றும் அது வரலாற்றில் முக்கிய கட்டங்களில் தமிழ் அரசியலை பாதித்தது என்றும் குற்றஞ் சாட்டப்படுகிறது. எனவே உங்கள் பாட்டன், தந்தை, உங்களது வெளியேற்றங்கள் இவைகளில் வௌ;வேறான பின்னணிகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

வெளியேற்றங்கள் கொள்கை அடிப்படையிலானவை. தனிநபர் நலன் சார்ந்ததல்ல.

05. கொள்கையில் பிழை அல்லது அடிப்படைக் கொள்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகியுள்ளது என்றால் மே 17 இற்கு பிறகு இந்த தேர்தலின் முன்பே நீங்கள் அவற்றை எடுத்துக்காட்டி வெளியேறியிருக்கலாம். இப்படி தேர்தல் காலத்தில் வெளியேறுவது குற்றங்களை சுமத்துவது தேர்தல் கால அரசியலாக தெரிய வாய்ப்பிருக்கிறதல்லவா?

தேர்தலில் வென்றபின்னர் வெளியேறுவதை விட முன்னரே வெளியேறித் தோற்றால் கூட நாம் கொள்கையில் இருந்து வழுவவில்லை என்று மக்கள் புரிந்துகொள்வார்கள்.

06. வாக்குகள் சிதறடிக்குகும் சூழ்ச்சிகளுக்கு எல்லா வகையான தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளாகியுள்ள சூழலில் கடந்த காலத் தேர்தலில் தமிழ் மக்களின் முக்கிய பலமாக வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை நீங்கள் உடைக்க நினைப்பது? தோற்கடிப்போம் என்று கூறுவது மக்களுக்கு எவ்வகையில் நியாத்தை பெறுகிறது?

கொள்கைக்கு முன்னர் எதுவுமில்லை.

07. இதன் மூலம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு நீங்கள் ஒத்துழைப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?

கொள்கையைக் கைவிட்டவர்கள் அரசாங்கத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானவர்களோ?

08. தமிழ் தேசியக் கூட்டமைப்புமீதான குற்றச்சாட்டுக்களை உங்கள் தேர்தல்கால சுலோகங்களாகவும் அறிக்கைகளாகவும் வெளியிட்டு வருகிறீர்கள். இது போராடும் தமிழ் மக்களை அழிவில் ஆபத்தில் தள்ளி விட்ட அதே அரசியலாக இருக்கிறதே?

எமது கொள்கைதான் அறிக்கைகளாகவும் சுலோகங்களாகவும் வருகின்றன. கொள்கை புனிதமானது என்பது புரியவேண்டும்.

09. நீங்கள் வெளிநாட்டில்தான் எப்பொழுதும் தங்கியிருக்கிறீர்கள். இங்கிருந்து வேலைகளை செய்வதில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுகிறதே?

கொள்கைகளை வலுப்படுத்த வெளிநாட்டுப் பயணங்களும் தேவை.

10. கூட்டமைப்பிலிருந்து விலகியதானல் உங்களால் எதை சாதிக்க முடிகிறது? எப்படி மாறுபட்ட கோட்பாட்டை நீங்கள் முன் வைக்கிறீர்கள். அதற்கான சாத்தியங்கள் எந்தளவு இருக்கின்றன?

கொள்கையும் கோட்பாடும் மாறுபடவேயில்லை. அவற்றை விட்டுக் கொடுக்காமல் இருப்பதே எமது சாதனை. கொண்ட கொள்கையில் நம்பிக்கை இருந்தால் அதனை அடைய ஆயிரம் வழிகளைப் பயன்படுத்தலாம். கொள்கையைத் தாரைவார்த்து மாயமான் காட்டாமல் இருப்பதே தமிழர்களுக்கு நாம் செய்யும் சேவை.

அது சரி.. நமது கொள்கை என்ன??

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பொய்யான தகவல். குளோபல் செய்திகள் பக்கசார்பான இணையத்தளம் என்றே நினைக்கிறன்.

ஏனென்றால் இதே கேள்விகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீ டி ஆர் வானொலிக்கு வழங்கிய இவர்கள் நேர்காணலில் பதில்கள் மிக தெளிவாகவே வழங்கியிருந்தார்கள், இந்த நேர்காணலை சீ டி ஆர் வானொலியின் இணையத்தளத்தில் தரவிறக்கம்செய்து கேட்க்கலாம்.

இந்தியா எமக்கு நியாயமான அரசியல் தீர்வை தரும் என்று சம்பந்தன், மாவை, சுரேஷ் குழு சரணாகதி அரசியல் செய்ய பார்கிறார்கள். புலம் பெயர் தமிழர் எடுத்து வரும் போராட்டங்கள், மேலும் தமிழர் அந்தந்த நாட்டு அரசுடன் பேணி வரும் லாபி முறைகளினால், ஸ்ரீ லங்கா அரசுக்கு மேற்குலகினால் அழுத்தம் கொடுக்க படுகிறது. இதனை முறியடிக்கவே சம்பந்தன் மும்மூர்த்திகளை இந்தியா பாவித்து தனிநாட்டு கோரிக்கையை தாம் விட்டு விட்டதாகவும் ஒருநாட்டி ஒருதேசம் என்ற கொள்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையும் புலம் பெயர் மக்களின் அரசியல் நடவடிக்கையும் ஒருங்கிணைத்து செயல் படும்படியான கொள்கைகளை வரைந்துலார்கள்

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது பிரச்னை தங்களுக்குப் பேட்டி தரவில்லை என்பதே.

மற்றது குறுகிய மனப்பான்மை.

எத்தனை தடவைகள் பதில் கூறினாலும் இவர்கள் போன்றவர்கள் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள்.

வாத்தியார்

...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.