Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் சொல்லிக்கிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வருகிறேன், ஆனால் இப்பொழுது வசிக்கும் இடமும் (சென்னை) வேலையும் அதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிறது. விளக்குதூணில் இருந்து பிரேமா விலாஸ் போயிட்டு முனிச்சாலை வருவது சுத்தாச்சே.

தமிழ்ச் சங்கம் சாலையில், கோனார் கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு, நடனாவில் நர்த்தனம் பார்த்துவிட்டு, மீண்டும் நடுநிசியில் ஆரியபவன் பை-நைட்டில் மசாலா பால் சாப்பிட்டவுடன் தெம்பாக அய்யர் பங்களாவிற்கு நான் அடிக்கடி இரவில் செல்கிறேன்... நீங்கள் சொல்லும் சுத்து ஒரு சுத்தா..? மதுரைக்கே காதில் மல்லிகைப் பூவா? :lol:

தமிழ்நாட்டுத் தோழர்கள், சில பதிவுகள் செய்துவிட்டு நீர்க்குமிழியாய் மறைவதுண்டு...இக்களத்தை மறப்பதுண்டு... தாங்கள் அப்படி இல்லாமல் என்றும் இக்களத்தில் தொடர, வருக வருகவென வரவேற்கிறேன்...

மதுரை செந்தமிழும், யாழின்(வேதனையில்) வெந்தமிழும் சங்கமிக்க, இக்களமே மேடையாகட்டுமே!

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச் சங்கம் சாலையில், கோனார் கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு, நடனாவில் நர்த்தனம் பார்த்துவிட்டு, மீண்டும் நடுநிசியில் ஆரியபவன் பை-நைட்டில் மசாலா பால் சாப்பிட்டவுடன் தெம்பாக அய்யர் பங்களாவிற்கு நான் அடிக்கடி இரவில் செல்கிறேன்... நீங்கள் சொல்லும் சுத்து ஒரு சுத்தா..? மதுரைக்கே காதில் மல்லிகைப் பூவா? :lol:

தமிழ்நாட்டுத் தோழர்கள், சில பதிவுகள் செய்துவிட்டு நீர்க்குமிழியாய் மறைவதுண்டு...இக்களத்தை மறப்பதுண்டு... தாங்கள் அப்படி இல்லாமல் என்றும் இக்களத்தில் தொடர, வருக வருகவென வரவேற்கிறேன்...

மதுரை செந்தமிழும், யாழின்(வேதனையில்) வெந்தமிழும் சங்கமிக்க, இக்களமே மேடையாகட்டுமே!

இன்று சென்னையில் சுத்தி கொண்டு இருந்தாலும், மதுரையில் மிதிவண்டியில் மதுரை பல்கலை மாலைக்கல்லூரிக்கு எல்லிஸ் நகரில் இருந்து வந்தவன். ஏன் அழகர் கோவிலுக்கு சைக்களில் பயணித்த காலமும் உண்டு, உங்கள் அய்யர் பங்களா தாண்டி யாதவ கல்லூரிக்கு என் சகோதரியை பார்க்கப் போனதும் உண்டு. இன்று இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்னையை சுற்றி சோம்பேறி தனம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன திசையை கேட்டவுடன் எனக்கு தலை சுற்றி விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஆசான்........உங்கள் வரவேற்புக்கு

நன்றி ஆசான்........உங்கள் வரவேற்புக்கு

மதுரை மச்சானை வரவேற்க, அபிதாயினி நன்றி கூறுகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

-------

2904townhallroad.jpg

ராஜவன்னியன் இணைத்த படத்தை பார்த்துவிட்டு...... எனது மனத்தில் கவலை தான் ஏற்பட்டது.

தமிழரின் கலைச்சிற்பங்களுக்குப் பெயர் போனது கோவில்கள் மட்டும் தான். பல தமிழ் மன்னர்களால் கட்டப் பட்ட கோவில்களை சுத்தி ஏன் கடைகள் கட்ட உங்கள் அரசாங்கம் அனுமதிக்கின்றது.

நான் தமிழ்நாட்டுக்கு ஆவலுடன் சுற்றுலா வந்த போது, கோவில்களை சுற்றி இருக்கும் கடைகளும், கோவிலை காட்ட புறோக்கர் மாரும் வாழ்க்கையே.... வெறுக்கப் பண்ணிப் போட்டார்கள்.

அதுகும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்வீதிகளிலே கூட கடை வைத்து இருக்கின்றார்கள்.

பெரும்பாலான ஐரோப்பா மன்னர்கள் தாங்கள் வாழ்ந்த அரண்மனையை தான் கூடுதலாக மினைக்கெட்டு பெரிதாக கட்டியுள்ளார்கள்.

தமிழ் மன்னர்கள் சிலவேளை குடிசையில் இருந்து கொண்டு, இவ்வளவு கலைச்சிற்பத்தை கட்டினார்களோ.... என்று பிரமிப்பதுண்டு.

இவ்வளவு அழகாக கட்டிய இடங்களை பிஸினஸ் கொம்ளக்ஸ் ஆக்காமல், ஒரு புனிதப் பிரதேசமாக்கி அந்த இடத்தை ஒரு அமைதியான இடாமாக்க ஏன் ஒரு அரசியல் வாதிகளும் நினைப்பதில்லை.

சும்மா..... திராவிடம், திராவிடம் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா?:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மதுரை மச்சான் வாருங்கள்.................இங்கு இன்னொருஉறுப்பினர் ..... மச்சான் எனும் பெயரில் இருக்கிறார். எனவே மதுரை .....(உங்கள் பெயர்) என அழைக்கலாமா?

என்ன நிலாமதியக்க பிந்திவிட்டீர்கள்?

வணக்கம் மதுரை மச்சான்! வாருங்கள் தமிழில் நாலு வார்த்தை கூறுங்கள்!

ராஜவன்னியன் இணைத்த படத்தை பார்த்துவிட்டு...... எனது மனத்தில் கவலை தான் ஏற்பட்டது.

தமிழரின் கலைச்சிற்பங்களுக்குப் பெயர் போனது கோவில்கள் மட்டும் தான். பல தமிழ் மன்னர்களால் கட்டப் பட்ட கோவில்களை சுத்தி ஏன் கடைகள் கட்ட உங்கள் அரசாங்கம் அனுமதிக்கின்றது.

நான் தமிழ்நாட்டுக்கு ஆவலுடன் சுற்றுலா வந்த போது, கோவில்களை சுற்றி இருக்கும் கடைகளும், கோவிலை காட்ட புறோக்கர் மாரும் வாழ்க்கையே.... வெறுக்கப் பண்ணிப் போட்டார்கள்.

அதுகும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்வீதிகளிலே கூட கடை வைத்து இருக்கின்றார்கள்.

பெரும்பாலான ஐரோப்பா மன்னர்கள் தாங்கள் வாழ்ந்த அரண்மனையை தான் கூடுதலாக மினைக்கெட்டு பெரிதாக கட்டியுள்ளார்கள்.

தமிழ் மன்னர்கள் சிலவேளை குடிசையில் இருந்து கொண்டு, இவ்வளவு கலைச்சிற்பத்தை கட்டினார்களோ.... என்று பிரமிப்பதுண்டு.

இவ்வளவு அழகாக கட்டிய இடங்களை பிஸினஸ் கொம்ளக்ஸ் ஆக்காமல், ஒரு புனிதப் பிரதேசமாக்கி அந்த இடத்தை ஒரு அமைதியான இடாமாக்க ஏன் ஒரு அரசியல் வாதிகளும் நினைப்பதில்லை.

சும்மா..... திராவிடம், திராவிடம் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா?

:lol:

அவர்களது கடின உழைப்பை பாதுகாப்பதன் மூலம் எமது பாரம்பரியங்களையும் பாதுகாக்கிறோம்!

ஆனால் இதெல்லாம் யார் காதில் விழபோகின்றது?

அவர்களது கடின உழைப்புக்குள்ளும் எதையாவத சொருகி நாலு காசு பார்க்கலாமா என்று அலைபவர்களே அதிகம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜவன்னியன் இணைத்த படத்தை பார்த்துவிட்டு...... எனது மனத்தில் கவலை தான் ஏற்பட்டது.

தமிழரின் கலைச்சிற்பங்களுக்குப் பெயர் போனது கோவில்கள் மட்டும் தான். பல தமிழ் மன்னர்களால் கட்டப் பட்ட கோவில்களை சுத்தி ஏன் கடைகள் கட்ட உங்கள் அரசாங்கம் அனுமதிக்கின்றது.

நான் தமிழ்நாட்டுக்கு ஆவலுடன் சுற்றுலா வந்த போது, கோவில்களை சுற்றி இருக்கும் கடைகளும், கோவிலை காட்ட புறோக்கர் மாரும் வாழ்க்கையே.... வெறுக்கப் பண்ணிப் போட்டார்கள்.

அதுகும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்வீதிகளிலே கூட கடை வைத்து இருக்கின்றார்கள்.

பெரும்பாலான ஐரோப்பா மன்னர்கள் தாங்கள் வாழ்ந்த அரண்மனையை தான் கூடுதலாக மினைக்கெட்டு பெரிதாக கட்டியுள்ளார்கள்.

தமிழ் மன்னர்கள் சிலவேளை குடிசையில் இருந்து கொண்டு, இவ்வளவு கலைச்சிற்பத்தை கட்டினார்களோ.... என்று பிரமிப்பதுண்டு.

இவ்வளவு அழகாக கட்டிய இடங்களை பிஸினஸ் கொம்ளக்ஸ் ஆக்காமல், ஒரு புனிதப் பிரதேசமாக்கி அந்த இடத்தை ஒரு அமைதியான இடாமாக்க ஏன் ஒரு அரசியல் வாதிகளும் நினைப்பதில்லை.

சும்மா..... திராவிடம், திராவிடம் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா?

:lol:

மதுரைக்கு வந்தீர்கள் என்று கூறியுள்ளீர்கள், வந்தத்ற்கு நன்றி. மதுரை என்னும் ஊரே கோவிலும் கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட ஊர். அந்த காலத்தில் ஊர் வடிவமைப்பு என்பதை கொண்டு அழகாக அமைக்கப்பட்ட ஊர். கோவிலின் மதில் சுவற்றுக்குள் உள்ள கடைகள் காலகாலமாக சில குடும்பத்தினரால் நடத்திவரப்படும் கடைகள் அவைகளில் கோவில் சம்பந்தமான பொருள்களும் சில அலங்காரப் பொருள்களும் மட்டுமே விற்க படுகின்றன. கோவில் மதில் சுவருக்கு வெளியே சுற்றி இருக்கும் வீதி (ஆடி வீதி) இருக்கும் இதில் இருக்கும் இடங்கள் பல் தனியாருக்கு சொந்தமானவை. ஆடி வீதி நான்கு திசைகளையும் குறித்து இருக்கும், கீழ ஆடிவீதி, மேல ஆடிவீதி என்று. அதுபோல் அதற்கு அடுத்த சுற்றாக ஆவணி மூலவீதி என்று அழைக்கப்படும் வீதியும், அதற்கு அடுத்து மாசிவீதி, அதற்கு பிறாகு வெளிவிதி என்று சதுரவடிவாக அமைக்கப்பட்ட நகரம் மதுரை.

மதுரை மக்களுக்கு உழைத்து சம்பாதிக்க அதாவது உற்பத்தி செய்து சம்பாதிக்க அத்தனை தொழிலகங்கள் இல்லை. முழுமுதல் வருமானம் வியாபரத்தில் தான். இதனாலேயே கோவிலை சுற்றி உங்களால் வியபார தளங்கள் அதிகமாக பார்க்க முடிந்தது. வேறு என்ன செய்வார்கள் மக்கள்.

கோவில் விற்கப்படவில்லையே என்பதை எண்ணி சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

என்ன நிலாமதியக்க பிந்திவிட்டீர்கள்?

வணக்கம் மதுரை மச்சான்! வாருங்கள் தமிழில் நாலு வார்த்தை கூறுங்கள்!

நன்றி மருதன்கெர்னி, "மதுரைக்கு வாருங்கள் மனமகிழ்ந்து செல்லுங்கள்" போதுமா நாலுவார்த்தை.

ராஜவன்னியன்! ஈழத் தமிழரை கொன்று குவிக்கும் இந்தியாபற்றி என்ன நினைக்கிறீர்கள்? (கேள்விக்கு உரிய பதிலைமட்டும் சொல்லுங்கள். )

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்! ஈழத் தமிழரை கொன்று குவிக்கும் இந்தியாபற்றி என்ன நினைக்கிறீர்கள்? (கேள்விக்கு உரிய பதிலைமட்டும் சொல்லுங்கள்.)

சமமாக கருதப்படும் வலியோனை எதிர்க்க திராணியற்ற, நயவஞ்சகத்தின் இருப்பிடமான போலி சனநாயக நாடு.

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மச்சானுக்கு வணக்கம்..! வாங்க..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரை மச்சானுக்கு வணக்கம்..! வாங்க..! :D

நன்றி

அனைவருக்கும் வணக்கம். மதுரைக்கு அப்பாலிருக்கும் விருதுநகரில் பிறந்தவன். இன்று சென்னையில் இயந்திரமாக உயிரோடு இருக்கின்றேன். அரிதாகத்தான் இணையத்தில் உலவுவதுண்டு. கூகிளில் தமிழ் நிரலென்று தேட இக்குழுமத்தில் அது தொடர்பாக கேள்வி கேட்ட தமிழச்சியின் பக்கத்திற்கு இணைப்பு வந்தது. ஆவலாய் இத்தளத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இவன்,

ந.ர.செ.ராஜ்குமார்

tamilcpu.blogspot.com

அனைவருக்கும் வணக்கம். மதுரைக்கு அப்பாலிருக்கும் விருதுநகரில் பிறந்தவன். இன்று சென்னையில் இயந்திரமாக உயிரோடு இருக்கின்றேன். அரிதாகத்தான் இணையத்தில் உலவுவதுண்டு. கூகிளில் தமிழ் நிரலென்று தேட இக்குழுமத்தில் அது தொடர்பாக கேள்வி கேட்ட தமிழச்சியின் பக்கத்திற்கு இணைப்பு வந்தது. ஆவலாய் இத்தளத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இவன்,

ந.ர.செ.ராஜ்குமார்

tamilcpu.blogspot.com

வணக்கம்! யாழ் களத்துக்கு வாருங்கள்!!

புதிதாக வருபவர்கள், இப்பகுதியில் ஒரு புதிய தலைப்பை தொடங்குவது வழமை.

நீங்களும் "Start New Topic" இல் ஒரு புதிய தலைப்பை தொடங்குங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.