Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளி முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்

Featured Replies

நன்றி சாத்திரி

பொறுத்திருத்தல் நல்லம்.

செயற்கைகால் அவருக்கு உதவியாய் இருக்கும். அத்தோட இயந்திரநாற்காலியும் மிகவும் உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறன். இஞ்ச வெளிநாடுகளில கால் முடியாத ஆக்கள் அசைகின்ற இயந்திர நாற்காலிதானே பாவிக்கிறது. வாகனம்போல தெருவிலை போய் வரலாம். கடைக்கு போய் சாமான்கள் வாங்கிறது தொடக்கம் இலகுவாய் இருக்கும். விலைதான் அதிகமாய் இருக்கும் என்று நினைக்கிறன்.

electricwheelchair.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் நீங்கள் செல்வது போல இயந்திர சக்கர நாற்காலி திட்டம் ஒன்றினை செய்வதற்கு வெளிநாட்டு உதவி நிறுவனங்களை முன்னர் அணுகியிருந்தோம் ஆனால் வெளிநாட்டு சக்கர நாற்காலிகளை எங்கள் ஊர் வீதிகளில் இயக்கமுடியாது காரணம் எங்கள் நாட்டில் வெளிநாட்டு வீதிகளை போல சீரான வீதிகள் இல்லை அதுமட்டுமல்ல சக்கர நாற்காலிகள் ஏறி இறக்கும் வசதிகளுடன் சாய்வாக பாதை ஓரங்களும் அமைக்கப்பட்டிருக்கவில்லை..எனவே வெளிநாட்டு நாற்காலிகளிற்கு ஊரில் பாவிக்கக்கூடியமாதிரியான பெரிய சில்லுகள் பூட்டலாமா என்றும் முயற்சிகள் செய்தோம் செலவு அதிகமாகின்றது..அதைவிட ஊரில் கையால் இயக்க மற்றும் இயந்திரம் பூட்டப்பட்டு இயக்க வசதியாக இந்திய தயாரிப்பு வண்டிகள்தான் பாவிக்கலாம். அவற்றை வாங்கும் திட்டம் விலைகளுடன் ஆரம்பத் திட்டத்திற்கு எத்தனை தேவை விரைவில் வெளியிடுவோம்.

நானும் அதைத்தான் பிறகு யோசிச்சன். அங்க குன்று, குழிகள், கட்டட, வீட்டு அமைப்புக்கள் இயந்திர நாற்காலிக்கு உகந்தது இல்லைத்தான். என்றாலும் நகரப்புறமாய் வாழ்கிற ஆக்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறன்.

திரு சாத்திரி அவர்களே சத்தமில்லாமல் இருந்துகொண்டு மிகவும் அற்புதமான செயல்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்.

எதுவித தடைகள் வந்தாலும் தொடரட்டும் உங்க்கள் பணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு சாத்திரி அவர்களே சத்தமில்லாமல் இருந்துகொண்டு மிகவும் அற்புதமான செயல்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்.

எதுவித தடைகள் வந்தாலும் தொடரட்டும் உங்க்கள் பணி.

அனைவரும் கைகோர்த்தால் எங்கள் பணிகளை இன்னமும் சிறப்பாகவும் அந்த மக்களின் தேவைகளை ஓரளவிற்காகவேனும் நிறைவேற்றலாம்..நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி சாத்திரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாத்திரி...

இந்தகைய கதைகளை/ இழப்புகளை கேட்கும் போது, அங்கே உள்ள தேவைகளை...100 வருடங்கள் கழிந்தாலும் செய்யமுடியுமா என வியப்புதான் வருகிறது... எனக்கு தெரியவில்லை எந்தளவு தூரம் நாங்கள் பயணிக்க முடியுமென...இங்கே புலம் பெயந்த நாடுகளில் வந்த/வாழும் முதல் சந்ததி பெற்றோர், விழி பிதுங்க நிற்கும் மேலை நாட்டு தேவைகள்...இங்குள்ள ஒருவரில் அங்கே தங்கியிருக்கும் கூட்டுக்குடும்பங்கள்..அதற்கு மேலே எம்மை சூழவுள்ள வருடக்கணக்காக போரரையும் அழிவுகளையும் சந்தித்த சமூகம்...எதாவது மாற்றம் வருமா? நாங்கள் வாழும் காலத்தில்? எனது உறவினர் ஒருவர் சொல்லுவர், என்ன மிச்சம் யாருக்கு தம்பி? நாங்கள் இங்கே உழைத்து அனுப்பிறதுகள் அதுகளுக்கு( தாயகத்தில் உள்ளவர்களுக்கு ) சாப்பிடதான் காணும் என்று...ஒரு வீட்டைக்கட்டி, ஒரு மதிலை கட்டி எதேன் நடந்ததோ என்று பார்த்தால் ஏதும் இல்லை..அனுப்புகிற பணத்தை, அவனுக்கும் இவனுக்கும் கொடுத்துப்போட்டு, சாப்பிட்டத்துதான் மிச்சம் என்று சொல்லுவார்..இந்த நிலையில் இப்படியானவர்களை எவ்வாறுத்தான் இந்த சமூகம், பேணப்போகுதோ தெரியவில்லை. இங்கே பெரிய நாடுகளே போரில் ஈடுபட்டோரை பராமரிக்க திணறுகிற போது, எம்மவர்களை...எவ்வாறுதான் நாங்கள் பேணபோகிறோம் ...

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருட மே 17க்குப்பிறகு, புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழ்போரில் பலர் இப்பொழுது வேவ்வேறு நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள். ஆனால் தயாகத்துக்காக தொடர்ந்து சாந்தி, சாத்திரி போன்றோர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் உங்களால் முடிந்த உதவிகளை நேசக்கரத்தின் மூலம் உதவுங்கள். தாயகத்திற்கு உதவுவதற்கு வேறு அமைப்புகள் மூலமும் சில உறவுகள் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள். அவுஸ்திரெலியா யாழ்கள உறவுகள் பச்வேக் அமைப்பினூடாக உதவி செய்து வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தவர்களுக்கு நீங்கள் இணைத்த இணைப்பை அனுப்பினேன். ஆனால் தற்பொழுது வேலை செய்யவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.