Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன்

Featured Replies

இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன்

சென்னை: பிரபாகரன் [^] தாயார் பார்வதி அம்மாளின் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ள முதல்வர் [^] கருணாநிதிக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் இந்தியாவில் நுழைவதற்கு உள்ள தடையை நீக்கி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமிழகம் [^] வர அவரை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதன் மூலம், சட்டமன்றத்தில் தான் கூறிய உறுதிமொழியை நம் முதல்வர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.

அத்தோடு நிற்காமல் அவருடைய சிகிச்சைக்கான முழு ஏற்பாடுகளையும் அரசே செய்யும் எனவும், செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பார்வதி அம்மையார் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் முன்வந்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதியையும் துணை முதல்வர் ஸ்டாலினையும் தமிழக அரசையும் திராவிட இயக்க தமிழர் பேரவை நெஞ்சாரப் பாராட்டித் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரபாகரனின் பெற்றோர் இந்திய மண்ணில் கால் வைக்கவே அனுமதிக்கக் கூடாது, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், அவர் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு, அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ள இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை தமிழின உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோர் இப்போதேனும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2010/05/07/parvathi-ammal-treatment-suba-karunanidhi-jaya.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்படிச் சொல்லுவீங்க. பிறகு கருணாநிதி கூட ஒரு பிரச்சனை என்றால் மாத்தியும் சொல்லுவீங்க.

போய்கையா நீங்களும் உங்கட ஒப்பீடுகளும்..! :D :D :lol:

  • தொடங்கியவர்

இப்ப இப்படிச் சொல்லுவீங்க. பிறகு கருணாநிதி கூட ஒரு பிரச்சனை என்றால் மாத்தியும் சொல்லுவீங்க.

போய்கையா நீங்களும் உங்கட ஒப்பீடுகளும்..! :D :D :D

அந்தம்மாவை தனிமை சிறையிலை அடைச்சு வைக்க போறதை, கருணாநிதியின் எவ்வளவு பெருந்தன்மை எண்டு சொல்லுறார் எண்டதை கவனிச்சியளோ...? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு விழா எடுப்பதற்கு இது போதுமே. 'கடிதம் எழுதிய தமிழன்' கருணாநிதி என்று பட்டமும் கொடுக்கலாம்.

இது பார்வதி அம்மாவை தங்களுடைய கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு திட்டமேதவிர இது வேறு ஒன்றும் இல்லை.

அந்தம்மாவை தனிமை சிறையிலை அடைச்சு வைக்க போறதை, கருணாநிதியின் எவ்வளவு பெருந்தன்மை எண்டு சொல்லுறார் எண்டதை கவனிச்சியளோ...? :D

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன்

சென்னை: பிரபாகரன் [^] தாயார் பார்வதி அம்மாளின் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ள முதல்வர் [^] கருணாநிதிக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

-----

அத்தோடு நிற்காமல் அவருடைய சிகிச்சைக்கான முழு ஏற்பாடுகளையும் அரசே செய்யும் எனவும், செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பார்வதி அம்மையார் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் முன்வந்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதியையும் துணை முதல்வர் ஸ்டாலினையும் தமிழக அரசையும் திராவிட இயக்க தமிழர் பேரவை நெஞ்சாரப் பாராட்டித் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடர் கழகத்து தொண்டர்களை நம்பினாலும்..... அந்தக் கட்சியின் தலைவர்களை நம்பக்கூடாது.

அவர்கள் திடீர், திடீரென்று கட்சி மாறி...... சேர்ந்த கட்சியின் தலைவர்களுக்கு ஜால்ரா அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22280494.jpg
  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர் கழகத்து தொண்டர்களை நம்பினாலும்..... அந்தக் கட்சியின் தலைவர்களை நம்பக்கூடாது.

அவர்கள் திடீர், திடீரென்று கட்சி மாறி...... சேர்ந்த கட்சியின் தலைவர்களுக்கு ஜால்ரா அடிப்பார்கள்.

யாழ் களத்திலும் சில நண்பர்கள் முன்னர் திராவிட கழகம் எமது விடுதலைக்காக உண்மையில் உழைக்கிறது என்று இனங்காட்ட இந்தத் தலைவர்களை உதாரணம் காட்டி ஆக்கிரோசமாக கருத்துக்களை வைத்திருந்தனர்.

அவர்களிடம் மாற்றுக் கருத்தாக திராவிடம் என்பது ஒரு மாயை தமிழ் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையில் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் மக்களிற்கும் தமிழ் தேசிய, தமிழுணர்வு ஊட்டப்பட வேண்டும் என்றும் திராவிட கழகமும் அரசியல் செய்யவே ஈழத்தமிழர்களை உச்சரிக்கிறது என்றும் கூறி இருந்தோம்.

திராவிட கழகத்தின் மீது பற்று வைத்திருந்த சீமான்.. மற்றும் நெடுமாறன் ஐயா போன்றவர்கள் கூட இன்று தமிழர்களிடம் திராவிட உணர்வை விட தமிழ் தேசிய தமிழுணர்வே அவசியம் என்ற முடிவுக்கு வந்து அதற்கேற்ற வகையில் கட்சிகளை அமைப்புக்களை உருவாக்கி இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வை ஊட்டியும் வருகின்றனர். அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய அம்சம் ஆகும்.

ஆனால் இந்த சுப வீரபாண்டியன் போன்றவர்கள் இன்னும் திராவிட மாயையை விட்டு வெளிவரத் தயங்குவதோடு திராவிடக் கட்சி தலைமை விசுவாசத்திற்கு அடிபணிந்து அரசியல் செய்யும் நிலையையும் கைவிடத் தயங்குவது இவர்களின் ஈழத்தமிழர் மீதான தமிழ் மீதான உண்மையான பற்றுதலையும் சந்தேகிக்க வைக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எயாப்போட் போனவையின்ட மௌனத்த பாக்க பார்வதியம்மா வர விருப்பப்பட்டாலும் வர விடமாட்டினம் பொல கிடக்கு!! :D

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

எயாப்போட் போனவையின்ட மௌனத்த பாக்க பார்வதியம்மா வர விருப்பப்பட்டாலும் வர விடமாட்டினம் பொல கிடக்கு!! :D

ஒட்டுக்குழுக்கள் காட்டிக் குடுத்து பிச்சை எடுக்க அங்கையும் இருக்கும் தானே......

யாழ் களத்திலும் சில நண்பர்கள் முன்னர் திராவிட கழகம் எமது விடுதலைக்காக உண்மையில் உழைக்கிறது என்று இனங்காட்ட இந்தத் தலைவர்களை உதாரணம் காட்டி ஆக்கிரோசமாக கருத்துக்களை வைத்திருந்தனர்.

நான் சொல்லுறேன் ஆக்களை. குறுக்கால போனவர், நாரதர்,சபேசன், மோகன்,( கருத்து எழுத அனுமதி கொடுத்த படியால மோகன் அண்ணா, வலைஞன், இளைஞன்)

கருநா கடைசியில ஈழ ஆதரவாளர்களுக்கிடையிலயும் பிரிவை உண்டாக்கிட்டான் :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலும் சில நண்பர்கள் முன்னர் திராவிட கழகம் எமது விடுதலைக்காக உண்மையில் உழைக்கிறது என்று இனங்காட்ட இந்தத் தலைவர்களை உதாரணம் காட்டி ஆக்கிரோசமாக கருத்துக்களை வைத்திருந்தனர்.

அவர்களிடம் மாற்றுக் கருத்தாக திராவிடம் என்பது ஒரு மாயை தமிழ் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையில் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் மக்களிற்கும் தமிழ் தேசிய, தமிழுணர்வு ஊட்டப்பட வேண்டும் என்றும் திராவிட கழகமும் அரசியல் செய்யவே ஈழத்தமிழர்களை உச்சரிக்கிறது என்றும் கூறி இருந்தோம்.

திராவிட கழகத்தின் மீது பற்று வைத்திருந்த சீமான்.. மற்றும் நெடுமாறன் ஐயா போன்றவர்கள் கூட இன்று தமிழர்களிடம் திராவிட உணர்வை விட தமிழ் தேசிய தமிழுணர்வே அவசியம் என்ற முடிவுக்கு வந்து அதற்கேற்ற வகையில் கட்சிகளை அமைப்புக்களை உருவாக்கி இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வை ஊட்டியும் வருகின்றனர். அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய அம்சம் ஆகும்.

ஆனால் இந்த சுப வீரபாண்டியன் போன்றவர்கள் இன்னும் திராவிட மாயையை விட்டு வெளிவரத் தயங்குவதோடு திராவிடக் கட்சி தலைமை விசுவாசத்திற்கு அடிபணிந்து அரசியல் செய்யும் நிலையையும் கைவிடத் தயங்குவது இவர்களின் ஈழத்தமிழர் மீதான தமிழ் மீதான உண்மையான பற்றுதலையும் சந்தேகிக்க வைக்கிறது.

இவர்களின் திராவிட மண்ணாங்கட்டி பற்றால், ஒரு சாம்புராணி முஸ்லிமா மாறீ.....

தன்ரை கறுப்புச் சட்டையை கழட்டிப்போட்டு பச்சைச் சட்டை போட்டுக் கொண்டு ....... ஓதுது.

கேள்விப்பட்டியளோ......

.

  • கருத்துக்கள உறவுகள்

கருநா கடைசியில ஈழ ஆதரவாளர்களுக்கிடையிலயும் பிரிவை உண்டாக்கிட்டான் :lol:

இதைத்தான் நானும் நினைச்சன்..! ஆனானப்பட்ட சுப.வீரபாண்டியனே துதிபாடுறாரே..! :lol: அல்லது இதுக்குள்ள ஏதாவது உள்குத்து இருக்குமோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

சுபவீயில் பெரு மதிப்பு வைத்திருந்தோம் ஆனால் அவர் குரணாநிதியைக் காப்பாற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார்.பார்வதியம்மாளை வைத்து தான் மட்டும் அரசியல் செய்யவே கலைஞர் விரும்புகிறார்.கலைஞர் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்.

இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன்

ஜெயலலிதா சொல்ல மாட்டார், செய்து காட்டுவார் - கொலைஞர் செய்யமாட்டார் சொல்லிக்கொண்டே இருப்பார் என்கிறாரோ சு. பா.

போலித் திராவிடர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.