Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நமைடபெறும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு

Featured Replies

மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நமைடபெறும்

அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு

நாடு கடங்த தமிழீழ அரசுக்கான முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் மே 18ம் திகதி அமெரிக்கமாநிலமான வென் சுவேனியாவிலுள்ள

டுசில்டொப்பியா சகரத்தில் நடைபெற உள்ளது

கடந்த மே 2ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்கநாடு சுதந்திரத்துக்கான போராட்டத்தை நடத்தியபோது அதன் பிரகடனம் இந்த டுசில் டொப்பியா மாநிலத்திலேயே நடைபெற்றது

அத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மாநகரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் பிரதிநிதிகள்புதிய வரலாறு ஒன்றினைப்படைக்கப் போகிறார்கள்

கடந்த மே 18:2009 முள்ளிவாய்க்காலுடன்ஈpத்தமிழினத்தின் போராட்டத்தை அழித்துவிட்டோமென மார்தட்டிய சிங்களப் பேரினவாத அரசு

இன்று புலம்பெயர் தமிழ் மக்களது ஆக்ரோசமான வளர்ச்சி கண்டு கதி கலங்கியுள்ளது

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுபோல நாம் உன்றுபட்டு எழுந்தால் சிங்களப் பேரினவாத அரசிடமிருந்து எம் மக்களை முpட்டெடுக்க முடியும் என்பதும்ட்டும் உறுதி

நன்றி ஈழ நாடு (கனடா)

Edited by vvsiva

கலந்துகொள்ள முடியாதவர்கள் இருந்தாலும் நாடுகடந்த அரசாங்கத்தின் அமர்வு கூட்டப்பட வேண்டும். சோதனைகள் வரும் அதனைக் கருத்திலெடுத்து நாடுகடந்த அரசு தனது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு புலம் பெயர் தமிழர்களாகிய நாம் முன்னின்று உதவவேண்டும்.

முதலாவது கூட்டத்துக்கு வாழ்த்துக்கள்,

சிங்கள பயங்கரவாதிகளின் இந்திய பயங்கரவாதிகளின் ஜனநாயக முகத்திரைகளை கலைப்பதில் எதிர்கால நடவடிக்கைகள் பெரிதும் தங்கியுள்ளது.

இந்த பயங்கரவாதிகளின் அக்கிரமங்களை, படுபாதக செயல்களை, படுகொலைகளை ஆதாரங்களுடன் நன்றாக தொகுக்கப்பட்ட கையேடுகள், வரலாற்று புத்தகங்கள், கண்காட்சிகள் போன்றனவற்றின் உதவியுடன் நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், புத்தி ஜீவிகள், அந்தநாட்டு பிரபல பத்திரிகையாளர்கள், பொது மக்கள், மத்தியில் அம்பலப் படுத்தி உறுதியான உண்மையான கருத்தை கட்டி எளுப்பவேண்டும். இதை தொடர்ச்சியாக புலம் பெயர் உறவுகள் செய்யவேண்டும். இதற்கான உதவிகளை வழிகாட்டல்களை நா. க. த. ஈ. அ. உறுப்பினர்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.

சிங்கள இந்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை, விழாக்கள், அறிக்கைகள், நச்சத்திர விடுதி சந்திப்புக்கள், உயர்மட்ட சந்திப்புக்கள்... போன்றன முன்னுரிமை பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுதுளி பேரு வெள்ளம் என்பார்கள். எமக்கு கிடைக்கும் சிறு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி உண்மையான பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழிக்க ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் மனப்பூர்வமாக செய்ய முன்வர வேண்டும்.

உண்மைகள், தர்மங்கள் சில வேளைகளில் தோற்பதற்கு காரணம் உண்மைகளை உரியவர்கள் தொடர்ந்து வெளிக் கொண்டுவராமையே.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத் தடங்கலும் இல்லாமல் நாடுகடந்த அரசின் முதல் அமர்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தமிழின படுகொலையாளர்களுக்கு சாவுமணி அடிக்கும் நிகழ்வாக முதல்நிகழ்வு அமையட்டும்.

தமிழரை மறுபடி தழிர வைக்கும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நாம் எல்லோரிடமும் கேட்பது.எதிரியை எம்மால் விரைவில் அடையாளம் காண முடியும்,காக்கைவன்னியனை போன்ற சதிகாரரை கண்டு பிடிப்பது சுலபமல்ல.அவர்களை கண்டு பிடித்து எதிரிக்கு காட்டுவதும் அழகல்ல,ஆகவே உங்களுக்கு தெரிந்தவர்கள் இடையூறு விளைவிப்பவர்களாக இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு புத்தியை புகட்டி அவர்கள் செய்வது சரியா என்று சிந்திக்க சொல்லுங்கள்.முள்ளிவாய்காலில் புலிகளைத்தான் அழிக்கிறார்கள் என்று துரோகம் பண்ணிய கயவர்களே இப்போ நாம் இழந்தது எல்லாமே? சிங்கள அரசை பொறுத்தவரை தமிழன் ஒரே இனம் தான் அது உண்மை அது அவன் புரிந்துள்ள அளவுக்கு சிங்களரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழனுக்கு ஏன் தான் புரியவில்லை இன்று ஈபிடிபியின் நிலை என்ன நாளை உங்கள் நிலை என்ன ஆகவே தப்பு செய்யாதவனும் மனிதன் அல்ல திருந்தி நடக்காதவனும் மனிதன் அல்ல.இன்று நாடு கடந்த அரசுக்கு சிங்கள அரசு மட்டுமல்ல பிராந்திய அரசும் தான் கதிகலங்கி நிக்கிறது.இந்தியாவின் முதல் பின்வாங்கல் தான் நாராயணன்,முகர்யின் பதவி மாற்றங்கள்.ஆகவே இந்த நாடு கடந்த அரசின் பின்விளைவுகள் அதிகம் ஆகவே அனைவரின் ஆதரவும் பெருகட்டும்.

இந்த நாடு கடந்த அரசு, நிறவனம் தொடர்பாக கதைத்தே ஒரு வருடம் கரைத்தாகிவிட்டது.

இந்தியா பயப்படுகின்றது, சிங்களம் பயப்படுகின்றது என்று தொடர்ந்து கதை விடுவதை நிறுத்துவம்.

அரசை அமைத்து, அடுத்து என்ன செய்கினம், என்னத்தை எம்மைச் செய்யச்சொல்லுகினம் என்பதைப் பார்ப்பம்.

குழுக்களின் இருப்புக்கு, கோசம் போடுவதை நிறுத்துவோம்.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

இந்த நாடு கடந்த அரசின் பின்விளைவுகள் அதிகம் ஆகவே அனைவரின் ஆதரவும் பெருகட்டும்.

தேர்தலில் போட்டி போட்டு வென்றவர்கள், தோற்றவர்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிய இனத்தினது ஆண்ம இருப்பான விடுதலை வேட்கையை அழித்து அடக்கிவிட முடியாது என்பதை கிழக்குத்தீமோர் முதல் கொசொவோவரை உலகில் நிரூபிக்கப்பட்ட வரலாறு. அதேபோல் நாமும் எமது வேற்றுமைகளை மறந்து மன்னித்து ஓரணியாகத் திரண்டு நாடுகடந்த அரசினைப் பலப்படுத்துவதோடு அவர்களது செயற்பாடுகளையும் கண்காணிப்பதும் அவசியமானது. வாக்களித்தோம். தாலத்தில் வைத்துத் தமிழீழத்தைத் தருவார்கள் என்றிராது அடுத்து என்ன செய்கிறார்கள். நாமென்ன செய்ய வேண்டும், என்றெல்லாம் சிந்தித்துச் செயற்படவேண்டியதும் தமிழினத்தினது கடமையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.