Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவப்பு மழை - அதன் நோக்கம் என்ன????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

<_< சிவப்பு மழை - அதன் நோக்கம் என்ன????

பலரும் நல்ல படம், எடுத்துப் பாருங்கோ எண்டு கேட்டபடியால சரி ஒருக்காப் பாப்பம் எண்டு போன கிழமை சிவப்பு மழை வாங்கிக் கொண்டு வந்தன். அப்படி என்னதான் சொல்லுறாங்கள் எண்டு நினைத்துக்கொண்டே பார்க்கத் தொடங்கினேன்.

தொடக்கத்தில் படம் ஓரளவு விறு விறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது. பின்னர் பிளாஷ் பக்கில் சிங்கள ராணுவ அதிகாரியும் அவனது துணைப்படைக் குழு நண்பனும் செய்யும் அட்டகாசமும், அதில் தமிழ் வைத்தியரும், அவரது மனைவியும் படும் அவலங்களும் காட்டப்பட்டது.

பகிடி என்னவெண்டால், ஏதோ மருத்துவ மனை செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படுகிறதாம், அங்கே வந்த ராணுவத்தை வைத்தியரும், மனைவியும் திட்டிக் கலைக்க அவர்களும் வந்த வாகனத்தில்ல் பேசாமல் ஏறிப் போகிறார்களாம், இதை எங்கே போய்ச் சொல்லி அழ?? ஒரு நாயும் போய்ப் பார்க்கேலாதபடிதானே வன்னி படுகொலை அரங்கேற்றப்பட்டது?? இதில் செஞ்சிலுவைச் சங்கம் எங்கே ராணுவத்தை தடுத்து வைத்திருந்தது??

அதுக்குப்பிறகுதான் விஷயமே இருக்கு.நாம் எல்லோரும் தமிழ் வாழ்க என்று கோஷத்தில் மயங்கி நிற்க, கதாசிரியர் சைக்கிள் காப்பில ஏதோ வன்னியில நடந்த எல்லா அக்கிரமங்களுக்கும் காரணம் ஒரு சில ராணுவ அதிகாரிகள்தானே ஒழிய அரசாங்கத்துக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப்போடுகிறார்.சிங்கள ராணுவ அதிகாரி செய்த மனிதவுரிமை மீறல்கள் அரசாங்கத்துக்குத் தெரியவர, பொலிசார் அவனைத் தேடத் தொடங்குகிறார்களாம், அதனால் அவனும் அவனது தமிழ் ஒட்டுக்குழு நண்பனும் தமிழ்நாட்டிற்குத் தப்பி வருகிறார்களாம்.

ஒரு விடயம் படம் முழுவதும் திருப்பத் திருப்பச் சொல்லப்படுகிறது. அதாவது, தனியொரு ராணுவ அதிகாரிதான் வன்னிப் படுகொலைகளுக்குப் பொறுப்பு, அரசுக்கும் கொலைகளுக்கும் சம்பந்தமில்லை, செய்தவர்களை சிங்கள அரசு தேடி வருகிறது, அவர்களைக் கைது செய்யும்படி இந்தியாவையும் அது கேட்டுக்கொள்கிறது......எதற்காக??

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு, அங்கு திரையிடப்பட்ட இந்தப் படத்தின் நோக்கமென்ன?? சினிமாவை ஏறக்குறைய உண்மைதான் என்று நம்பி வாழும் தமிழ்நாட்டுச் சமூகத்திற்கு இப்படத்தின் மூலம் ஒரு செய்தி சொல்லப்படுகிறது, அதாவது, சிங்கள அரசு உண்மையாகவே ஒரு நல்ல அரசு, அது தமிழர்கள் இன்னல்ப்படும்போது தடுக்கிறது, குற்றவாளிகளை பிடிக்கத் தேடுகிறது, இந்தியாவுக்கும் உதவுகிறது....

இது எப்படியிருக்கு??

சிங்கள அரசுக்கெதிரான போர்க்குற்ற மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அழைப்பு பரவலாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதற்கு நற்சான்றிதழ் கொடுக்கும் விதமாகவும், குற்றத்தை அதனிடமிருந்து திசை திருப்பி ஏதோ தனிப்பட்ட ஆட்களினால் நடத்தப்பட்ட ஒன்றாகவும் காட்டப்படுகிறது.

நாங்கள் இதை உணராது, வன்னி அவலம் காட்டுறாங்களாம், உண்மையைச் சொல்லுறாங்களாம் எண்டு கற்பனையில் மிதக்கிறம்.....

தகவலுக்கு நண்றி... நல்ல வேளை படத்தை பாத்து இரத்த அழுத்தம் வராமல் என்னை காத்தீர்கள்... <_<

  • கருத்துக்கள உறவுகள்

சிஙளவன் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களை முறியடிக்க மிக வேகமாகச் செயல்படுகின்றான்

வாத்தியார்

...............

நாங்கள் இதை உணராது, வன்னி அவலம் காட்டுறாங்களாம், உண்மையைச் சொல்லுறாங்களாம் எண்டு கற்பனையில் மிதக்கிறம்..
...

பலர் நேரிடையாக அரசுக்கு உதவுகிறார்கள்

சிலர் மறைமுகமாக உதவிசெய்கிறார்கள்

யார் யார் என்னென்ன செய்கிறார்கள்

எந்தவகையில் உதவிசெய்கிறார்கள் என்பதை

நாம்தான் பகுத்து அறிந்துகொள்ளவேண்டும்

Edited by vvsiva

ஈழப்போராட்டம் பற்றிய ஒரு சிறந்த படம் என்று சேர்டிவிகட் கொடுக்காமல் விட்டதற்கு நன்றிகள் :unsure:

நானும் இந்தப் படம் பார்த்தேன்.ஜோக்கிம் கனடாவில் தான் இருக்கின்றார்.இவர் தொடர்ந்து கின்னஸ் ரெக்கோட்டுக்களுக்காக பல விடயங்களை செய்து வருபவர்.அதில் ஒன்றுதான் இந்த சிவப்பு மழையும்.அவர் இந்த படத்தை உண்மையாக சீரியசாக எடுத்திருந்தால் வெளியிடமுடியாத நிலை வந்திருக்கும்.

பத்தோடு பதினென்றாக பார்த்து விட்டு போகவேண்டியது சீரியசாக எடுக்க வேண்டியதில்லை.இதனால் பெரியளவு பாதிப்பு ஏற்படும் என்றும் நான் நம்மவில்லை.

படத்தில் விவேக்கின் பகிடிகளும் கொஞ்சம் ஓவர். மீரா ஜாஸ்மின் ஒரு ஆறுதல்.

Edited by arjun

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜோக்கிம் முன்பு அவுஸ்திரெலியாவில் இருந்தவர். இங்கும் பல உலக சாதனைகளைச் செய்தவர். இப்பொழுது கனடாவில் வசிக்கிறார். ஈழத்தில் பிறந்த இவரின் இத்திரைப்படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்தபின்பு கருத்தைச் சொல்லுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.