Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூட்கேசில் பிணம்- கள்ள காதலி கொலை.

Featured Replies

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது 3 வயது மகன் ஆதித்யா. ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசியால் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை பாதக செயலை செய்த பூவரசியை கொலை காரியாக மாற்றியது ஜெயக்குமாரின் கள்ளத்தொடர்பு தான்.

ஜெயக்குமார் அதிகாரியாக பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஊழியராக பணி புரிந்தவர் பூவரசி. எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார். அந்த காதல் கை கூடவில்லை. இதனால் வீட்டில் சண்டை போட்டு கொண்டு பூவரசி சென்னைக்கு வந்து விட்டார். பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பூவரசி தனக்கு ஒரு துணையை தேட தொடங்கினார்.

அப்போதுதான் தனது உயர் அதிகாரியான ஜெயக்குமாரை தனது காதல் வலையில் வீழ்த்தினார். ஏற்கனவே திருமணமான ஜெயக்குமார் அதை மறைத்து பூவரசியுடன் உல்லாசமாக வாழத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஜெயக்குமார் திருமணம் ஆனவர் என்பதை அறிந்த பிறகும் 2-வது மனைவியாகி ஜெயக்குமாரை சொந்தமாக்கி கொள்ள பூவரசி துணிந்தார்.

ஜெயக்குமாருடன் ஏற்பட்ட தொடர்பால் 2 முறை கர்ப்பிணியான பூவரசி ஜெயக்குமார் கேட்டுக் கொண்டதால் கர்ப்பத்தையும் கலைத்தார்.

தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பூவரசிக்கு வேலை போட்டு கொடுத்து தனது இச்சைக்கு மட்டும் பயன்படுத்தி கொண்ட ஜெயக்குமாரை பழிவாங்க வேண்டும் என்ற குரூர எண்ணமே அவரை கொலைகாரியாக மாற்றி விட்டது.

தான் செய்த தவறு தானே தன் மகனை இழக்க காரணமாகி விட்டது என்று ஜெயக்குமார் புலம்புகிறார். போலீஸ் விசாரணையின் போது ஜெயக்குமார் கூறியதாவது:-

என்னோடு பல பெண்கள் வேலை பார்த்தார்கள். ஆனால் பூவரசி நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாக பேசுவாள். பேசி பேசியே என்னை கவர்ந்தாள். இதனால் அவளிடம் எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் என்னோடு நெருங்கியதால் நானும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவளோடு உறவு கொண்டேன்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததால் அவளிடம் இருந்து விலக முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. அவளை பிரிய முடியாதபடி அவள் என்னை வளைத்து கொண்டாள். அவளுடன் ஏற்பட்ட உறவை துண்டிக்க முடியாமல் பலமுறை தவித்தேன்.

என்னோடு ஏற்பட்ட உறவால் அவள் கர்ப்பம் தரித்தது உண்மை. அப்போதெல்லாம் நான்தான் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்தேன். அடிக்கடி கர்ப்பத்தடை மாத்திரையும் வாங்கி கேட்பாள். அப்போதும் வாங்கி கொடுத்தேன்.

என்னை பழிவாங்குவதற்காக எனது மகனை பழி வாங்கி விட்டாள் என்று கண்ணீர் விட்டார்.

போலீசார் விசாரணையின்போது பூவரசியையும் அருகில் வைத்து இருந்தனர். ஜெயக்குமார் கூறியதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த பூவரசி எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தார்.

திடீரென்று “என்னை பழி வாங்கிட்டியே பாவி என்று ஆவேசமாக கத்தியபடி ஜெயக்குமார் அவளை அடிக்க பாய்ந்தார். போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்கள். தவறான நடத்தையால் என் வாழ்க்கை தொலைந்து விட்டது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது” என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது.

ஒரு பொம்பிளை நெருங்கி வந்திட்டா போதுமே.. உடன சலனப்பட்டிருவாங்க.. இந்தக் குரங்குகள். நீங்க தெளிவா இருந்தா யாரும் எதையும் பண்ண முடியாது.

இவன் ஒரு பொம்பிளைப் பொறுக்கி. இவனால அநியாயம் ஒரு அப்பாவி ஜீவனை அவள் பலி எடுத்ததுதான் நடந்திருக்கு.

இருவருக்குமே ஒரே தண்டனையை வழங்கனும். தண்டனைக்குப் பயந்து இந்த சமூகம் திருந்தும் என்பது கற்பனை. ஏதோ திருந்திறது திருந்த மிச்சம் பிடிபடேக்க இப்படி சீரழியும் என்பதைச் சொல்லனும் சமூகத்துக்கு அவ்வளவும் தான்..!

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது.

ஒரு பொம்பிளை நெருங்கி வந்திட்டா போதுமே.. உடன சலனப்பட்டிருவாங்க.. இந்தக் குரங்குகள். நீங்க தெளிவா இருந்தா யாரும் எதையும் பண்ண முடியாது.

இவன் ஒரு பொம்பிளைப் பொறுக்கி. இவனால அநியாயம் ஒரு அப்பாவி ஜீவனை அவள் பலி எடுத்ததுதான் நடந்திருக்கு.

இருவருக்குமே ஒரே தண்டனையை வழங்கனும். தண்டனைக்குப் பயந்து இந்த சமூகம் திருந்தும் என்பது கற்பனை. ஏதோ திருந்திறது திருந்த மிச்சம் பிடிபடேக்க இப்படி சீரழியும் என்பதைச் சொல்லனும் சமூகத்துக்கு அவ்வளவும் தான்..!

எதையும் பண்ணாம இப்படியே எவ்வளவு காலத்துக்கு இருக்கிறது நெடுக்கண்ணா?

எதையாச்சையும் பண்ணலாம் என்றால் இப்படி கொலை வெறியோட வாறாகளே???

ஆண்களின் விதியை என்செய்தானோ இறைவன்?

  • கருத்துக்கள உறவுகள்

.

கலியாணம் கட்ட கொஞ்ச மனப்படுகின்ற ஆண்களும், இந்த செய்தியை வாசிச்சு...... கலியாண ஆசையையே விட்டுவிடுவார்கள்.

.

சிறி அண்ண, கலியாணம் கட்ட ஆசைப் படுகிற ஆண்கள் ஏன் இதைப் பார்த்து யோசிக்க வேணும்? அளவுக்கு மீறி ஆசைப் படுத்தல், கட்டின மனைவிக்குத் துரோகம் விளைவித்தல், கிளி மாதிரி ஒரு பொண்டாட்டி இருக்கோ இல்லையோ... குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டிக்கு சில ஆம்பிளையள் நாக்கைத் தொங்கப் போடுறவையள் தான் யோசிக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண, கலியாணம் கட்ட ஆசைப் படுகிற ஆண்கள் ஏன் இதைப் பார்த்து யோசிக்க வேணும்? அளவுக்கு மீறி ஆசைப் படுத்தல், கட்டின மனைவிக்குத் துரோகம் விளைவித்தல், கிளி மாதிரி ஒரு பொண்டாட்டி இருக்கோ இல்லையோ... குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டிக்கு சில ஆம்பிளையள் நாக்கைத் தொங்கப் போடுறவையள் தான் யோசிக்கவேணும்.

கலியாணம் கட்டின ஆண்கள் பெண்களைப் பற்றி நன்கு புரிந்திருப்பார்கள். ( சில முட்டாள் ஆண்களைத் தவிர )

ஆனால் கலியாணம் கட்டாத ஆண்களுக்கு அந்த சந்தர்ப்பம் குறைவு.

ஆனபடியால்..... எல்லாப் பெண்களையுமே..... தப்பானவர்களாக நினைத்து, பயந்து போய் "கலியாணமே.... வேண்டாமப்பா..." என்று சும்மா இருந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பாடல் வசதிகளும்.. ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரிதல்களும்.. என்று ஆண் - பெண் நெருக்கங்கள் அதிகரித்து வருவதால்... பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களின் பாலியல் இச்சைகளை பலருடன் பல வகைகளில் தீர்த்துக் கொள்ள ஆசை வருகின்றது போலும். அதனால் தான் பாஸ்ட் பூட் உலகில்.. பாலுறவும் பாஸ்ட் பூட் ரேக்கவே போல ஆகிக்கிட்டு இருக்குது. முன்னர் ஒருவரோடு பகிர்ந்து கொண்டு வாழ்ந்த பாலுறவை.. இப்போ பலருடனும்.. தகுதி... வருவாய்.. அழகு.. சந்தர்ப்பம்.. பார்த்து வைத்துக் கொள்கின்றனர்.

இந்தியாவில் இது ஒரு பெரிய பிரச்சனையாக பல கொலைகளுக்கும் வழிவகுத்துள்ளதுடன்.. இதில் கொலையாபவர்களாக ஆண்கள்... குறிப்பாக கணவர்கள் இருக்கின்றனர்... என்பது தான் பரிதாபமாக இருக்கிறது.

------------------------------

கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு பாரபட்சமற்ற கடும் தண்டனை: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு பாரபட்சமற்ற கடும் தண்டனை: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

சென்னை: கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ஐ திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்ச்சித்தது. இது குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு சுற்றறிக்கைகள் அனுப்பியது.

ஆனால், இதற்கு சில பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் போனது. இன்று கள்ளத்தொடர்பு பற்றிய செய்திகள் இல்லாத செய்தித்தாள்களே இல்லை. கள்ளக்காதலன் அல்லது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.

இந்த கள்ளத்தொடர்பால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. உலக அரங்கில் மதிக்கப்படும் இந்திய கலாசாரத்திற்கே இழிவு உண்டாக்கி விடும் போல் இருக்கிறது.

எனவே முதல்வர் கருணாநிதி, வரும் 26-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ல் திருத்தம் கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். இதன் மூலம் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தட்ஸ்ரமிழ்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு பாரபட்சமற்ற கடும் தண்டனை: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

சென்னை: கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

----------

எனவே முதல்வர் கருணாநிதி, வரும் 26-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ல் திருத்தம் கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். இதன் மூலம் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தட்ஸ்ரமிழ்.கொம்

முதல்வர் கருணாநிதி இந்தக் கடிதத்தை குப்பை தொட்டியில் போட்டுவிடுவார்.

முதல்வரே மூன்று பெண்களுக்கு கணவராக இருக்கிறவர். அவர் இதில் உள்ள நெளிவு, சுளிவுகளை நன்கு அறிந்தவர்.

முட்டாள்தனமாக மாட்டுப்படும் ஆண்களுக்கு முதல்வரின் ஆலோசனைகளை தந்தால் நல்லது.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.