Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்? தடை விதித்தால் விதிக்கட்டும்-ஆசின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்? தடை விதித்தால் விதிக்கட்டும்-ஆசின்

asin.jpg

ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் [^] சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்று படு தில்லாக பேசியுள்ளார் நடிகை ஆசின்.

இலங்கைக்கு படப்பிடிப்புக்காக சென்ற ஆசின் தற்போது அதுதொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சங்கத்துத் தரப்பிலிருந்து சிலர் கருத்து தெரிவித்தபோது இலங்கை [^]யில் இருநதபடி பதிலடியாக பேசி வந்தார் ஆசின்.

தமிழர்கள் மீது தனக்குள்ள அக்கறை கூட தமிழ் சினிமாக்காரர்களுக்கு இல்லையே என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ராதாரவியும், சத்யராஜும் ஆசினை கடுமையாக கண்டித்துப் பேசியிருந்தனர்.

இதற்கும் தற்போது ஆசின் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அதில் தடை விதித்தால் விதிக்கட்டும், நான் நடிக்க மாட்டேன் என்று படு கேஷுவலாக கூறியுள்ளார் ஆசின். அதேசமயம், மன்னிப்பெல்லாம் கேடக் முடியாது என்பதையும் சூசகமாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான ஆசினின் பேச்சு...

இலங்கையில் நடந்த படவிழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடிகர் சங்கம் கூறியதை நான் கடைபிடித்தேன். அந்தத் தகவலை எனக்கு நடிகர் சங்கத்தில் இருந்து கடிதம் மூலம் தெரிவிக்கவில்லை. பத்திரிகை, நெட் வாயிலாகத்தான் பார்த்தேன்.

இந்நிலையில் அங்கு நடந்த இந்தி படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்தார்கள். அப்போது பட நாயகன் சல்மான்கான் மற்றும் படத்தின் தயாரிப்பாளரிடம் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலக கூட்டமைப்பு தடை விதித்ததை எடுத்துக் கூறினேன்.

அதற்கு அவர்கள் அந்த தடை பட விழாவுக்கு மட்டும்தான். படப்பிடிப்புக்கு செல்லக் கூடாது என்று சொல்லவில்லையே என்று தெரிவித்தனர். அதன்பிறகுதான் இலங்கை சென்றேன். அங்கு சென்றபிறகு, கஷ்டப்படும் தமிழ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும் முடிவு செய்தேன்.

தமிழர்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், இலங்கை அரசின் அனுமதிபெற வேண்டும். இல்லாவிட்டால் செல்ல முடியாது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கூட, அந்நாட்டு அரசிடம் அனுமதி பெற வேண்டும். சமீபத்தில் அனுமதி இல்லாமல் வந்த ஐ.நா. சபை உறுப்பினர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அப்படியிருக்கும்போது, அந்த அரசின் அனுமதி இல்லாமல் நான் எப்படி பாதிக்கப்பட்ட தமிழர்கள் [^] பகுதிக்கு செல்ல முடியும்.

நானும் வர்றேன் என்றார் ஷிராந்தி

அந்த அடிப்படையில் நான் அரசிடம் அனுமதி கேட்டபோது, நானும் உங்களுடன் வருகிறேன் என்று ராஜபக்சே மனைவி கூறினார். அவரிடம் நீங்கள் வரக்கூடாது என்று நான் எப்படி கூறமுடியம். நீங்கள் வரக்கூடாது என்று என்னால் தடுக்கவும் முடியாது. அவரும் உடன் வந்தால் தமிழர்கள் படும் கஷ்டத்தை உணர முடியும் என்று நினைத்தேன்.

என்னை தமிழர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகுதான் 10 ஆயிரம் தமிழர்களுக்கு கண் சிகிச்சை போன்ற மருத்துவ உதவியை என்னால் செய்ய முடிந்தது.

கட்டிப்பிடித்து அழுதனர்

அங்கிருந்து புறப்பட நினைத்தபோது ஒரு சிலர் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு, நீங்கள் இங்கேயே இருங்கள், போகாதீர்கள் என்று அழுதனர். அதேபோல் இன்னும் சிலர், எங்களுக்கு கண் ஆபரேஷன் முடிந்த பிறகு அசினை பார்க்க வேண்டும் என்றார்கள்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடும் சமயத்தில் என்னை அழைத்து நேரில் விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால், நிச்சயம் வந்திருப்பேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே முறைப்படி எந்தத் தகவலும் தரவில்லை.

ராதாரவி, சத்யராஜ் போன்றவர்கள் தங்கள் கருத்தை கூறி இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தைதான் பிரதிபலித்திருக்கிறார்கள். அதைத்தான் நானும் செய்தேன்.

மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்?

எனக்கு தடை விதிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தடை விதிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் நான் என்ன தவறு செய்தேன். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்தது தவறா?

இந்திய சட்டத்தின் சொல்படி...

இந்திய சட்டம் என்ன சொல்கிறதோ, நடிகர் சங்கம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன். அதை மீற மாட்டேன். இதுவரை மீறியதும் இல்லை.

இனிமேல் தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன். ஆனால் அப்படி எந்த கடிதமும் வரவில்லை. நடிப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். அதில் அரசியலை நுழைக்க கூடாது என்று கட் அன்ட் ரைட்டாக பேசியுள்ளார் ஆசின்.

ஆசினுக்கு எதிராக போஸ்டர்கள்

இதற்கிடையே, மே 17 இயக்கம் சார்பில் கோவையில் ஆசினைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை நகரின் முக்கிய பகுதிகளான காந்திபுரம் 100 அடி ரோடு, சிவானந்தா காலனி, ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்வது போல் நடித்து ராஜபக்சேயுடன் இணைந்து தமிழீன படுகொலையை மறைக்க உதவும் நடிகை அசினை கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/07/27-actress-asin-srilanka-nadigar-sangam-ban.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரும் அசைக்க முடியாது...தற்சமயம் என்னுடலில் ஓடுவது ப்க்ச குடும்ப இரத்தம்...அது ஓடும் வரை யாரும் என்னை அசைக்க முடியாது...இந் இரத்தம் வத்த க்ருனாய்னிதி குடும்ப இரத்தம் ஏற்பேன் ..என்னை யாராலும் அசைக்க முடியாது....அசின் பிசின் போல் ஒட்டுவாள்...இது விளங்கினால் சரி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரும் அசைக்க முடியாது...தற்சமயம் என்னுடலில் ஓடுவது ப்க்ச குடும்ப இரத்தம்...அது ஓடும் வரை யாரும் என்னை அசைக்க முடியாது...இந் இரத்தம் வத்த க்ருனாய்னிதி குடும்ப இரத்தம் ஏற்பேன் ..என்னை யாராலும் அசைக்க முடியாது....அசின் பிசின் போல் ஒட்டுவாள்...இது விளங்கினால் சரி...

ரொம்ப சூடான தோழர் போல் உள்ளது.. உள்குத்து பலமா தெரியுது தோழரே.. இவர் வரதராஜ பெருமாள் மகளும் சினிமாவில் பெண்டு நிமிர்த்த வருகிறாராம் ... அவரையும் புறக்கணிக்க வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை அசினின் படங்களை புறக்கணிப்போம்! புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஆவேசம்

செவ்வாய், 27 ஜூலை 2010 13:05 . .

நடிகை அசினின் படங்களைப் புறக்கணிப்பார்கள் என்று தெரிவித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்படும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இரண்டு கூட்டாக அறிக்கை விட்டுள்ளன.

உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் நாஞ்சில் பீட்டர், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையின் சார்பில் தலைவர் பழனிசுந்தரம் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

”ஈழத்தில் நமது தொப்புள் கொடி உறவான தமிழ் இனத்தை சிங்கள அரசு பூண்டோடு ஒழித்து வருகிறது. தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் உலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்படும் நாள் தொலைவில் இல்லை.

இலங்கைக்கு தென்னிந்திய நடிகர்கள் யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழ் இனம் நன்றி தெரிவிக்கிறது.

தமிழர்கள் உணர்வுகளை துச்சமென நினைத்து இலங்கை சென்ற மலையாள நடிகை அசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகிறது.

அசின் நடித்த அனைத்து திரைப்படங்களையும் புறக்கணிக்க உலக தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழ் உணர்வுடன் செயற்பட்டு வரும் ராதாரவி, சத்யராஜ் ஆகியோரையும் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவு நல்கும் நடிகர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.

தமிழர்களுக்காக உழைக்கும் திரைத்துறையினர் யாவர்? எதிராக உள்ளவர்கள் எவர்?என்பதை ஆராய்கின்றமையுடன் யாருடைய படங்களை புறக்கணிக்கலாம்? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.

தமிழ் நாட்டில் இருந்து வரும் திரைப்படங்களின் கணிசமான வருவாய் எங்களை போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவால் ஈட்டப்படுகிறது.

கடந்த காலத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக திரைத் துறையினர் நடத்திய போராட்டங்களை அலட்சியப்படுத்திய நடிகர்களின் படங்கள் புலம் பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டன.

இதன் விளைவாக அத்திரைப்படங்கள் படுதோல்வியை தழுவின. இதுபோல் தொடர்ந்து தமிழர் உரிமைக் குரலுக்கு எதிராக செயல்படுவோரின் படங்களை புறக்கணித்து போராட்டங்களை மேற்கொள்வோம்’’

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=7162:2010-07-27-13-07-11&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

அசின்தானாம் மன்மோகன் சிங் சிறிலங்காவிற்கு அனுப்பும் சிறப்புத் தூதுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படத்தில உறுண்டு பிரண்டு இரண்டு ஆடைகளை களட்டி காட்டி வேண்டும் சல்லியை விட..................

சிங்களவரின் மெத்தையில் உருண்டு இரண்டு ஆடைகளை களையும் போதே......... பல மடங்கு அதிகாமாக கிடைக்கும்போது.....

நான் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்?

நியாயமான கேள்வி!

அசினோடு குறைபட இதில் ஏதுமில்லை. ஆனால் இந்த நியாயமான கேள்வி எத்தனை தமிழனுக்கு விளங்கும் என்பதுதான். இன்றைய கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படத்தில உறுண்டு பிரண்டு இரண்டு ஆடைகளை களட்டி காட்டி வேண்டும் சல்லியை விட..................

சிங்களவரின் மெத்தையில் உருண்டு இரண்டு ஆடைகளை களையும் போதே......... பல மடங்கு அதிகாமாக கிடைக்கும்போது.....

நான் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்?

நியாயமான கேள்வி!

அசினோடு குறைபட இதில் ஏதுமில்லை. ஆனால் இந்த நியாயமான கேள்வி எத்தனை தமிழனுக்கு விளங்கும் என்பதுதான். இன்றைய கேள்வி.

என்னமோ சொல்லுங்கோ

குறைந்திருந்திருந்த செல்வாக்கு அதிகரித்துவிட்ட மாதிரித்தான் எனக்கு தெரியுது

மலையாளத் திமிர் அடக்கப்படல் வேண்டும்.

தமிழ் படத்தில உறுண்டு பிரண்டு இரண்டு ஆடைகளை களட்டி காட்டி வேண்டும் சல்லியை விட..................

சிங்களவரின் மெத்தையில் உருண்டு இரண்டு ஆடைகளை களையும் போதே......... பல மடங்கு அதிகாமாக கிடைக்கும்போது.....

நான் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்?

இது அசின் உங்களுக்கு தனிமடலில் அனுப்பிய பதிலா|!?

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.