Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

K.P சொன்னது உண்மையா? மனம் திறக்கிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்

Featured Replies

ரகசியத்தை பாதுகாக்கும் கஸ்பர் ஜனவரியில் இரகசியமாக மேற்கொண்ட முயற்சியை, தமிழக உணர்வாளர்கள் கெடுத்ததாக கூறுவது - என்னத்தை சொல்லுகிறது.

ஜெகத் கஸ்பர் வட இந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலியாக இயங்கும் அனுபவங்கள் பற்றியும் கூறியிருக்கலாம்.

இது ஒற்றனொ.. துரோகியோ அல்ல.. ஒரு சாதரண அட்டன்ஷன் சீக்கர்.

அருட்தந்தை மனம் திறக்கவில்லை.

திரைமறைவில் செயற்பட்டவர், மனம் திறப்பதற்குரிய கேள்விகளும் கேட்கப்பட வில்லை?

ஊடகக்கார் அருட்தந்தையிடம் ஒரு விடுகதை கூறும்படி கேட்டார்.

அருட்தந்தை விடுகதையை மிதக்கவிட்டுள்ளார்

http://www.yarl.com/files/100824_father_jegath_kasper.mp3

நன்றி: ATBC அவுஸ்திரேலியா

இவர் சொல்வதில் உண்மை இருக்கிறது இவரை துரோகியாக்கிய பெருமை இந்த காஸ்ட்ரோ குழுவினருக்கும் தமிழ் நாட்டிலுள்ள உணர்வாளர்களுக்கும் உண்டு

உண்மை கசக்கத்தான் செய்யும் தயவு செய்து இனியாவது ஒன்றுபட்டு செயற்பட வாருங்கள் ஆனாலும் உங்கள் துரோகத்தால் விலைமதிக்க முடியாத

எங்கள் செல்வங்களை பறிகொடுத்து இருக்கிறோம் காலத்தால் இந்த உண்மைகள் வெளிவரும் அப்போது நீங்கள் அழுது என்ன பயன்

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்தால் உண்மைகள் வெளிவரும்

பாதர் உண்மை பேசவில்லை. இந்த நேர்காணலின் நோக்கம் தமிழக உணர்வாளர்கள் மீது குற்றம் சாட்டுவதே.

புலிகளுடன் RAW வின் ஏஜன்களான KP யும் தானுன் இந்திய அரசும் பேசியது என்பதை ஒத்துக்கொள்கிறார் பாதர்... அதோடு இவர்கள் பேசியது எல்லாம் சரண் அடைவது ஆயுத களைவு பற்றி மட்டும் தான்... தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை...

தலைவர் புலிகளில் இருந்து விலக்கப்பட்டு இருந்த KP க்கு சர்வதேச இணைப்பாளராக செயற்பட கடிதம் குடுத்ததும் இந்தியாவுடன் பேசுவதுக்கு தான் எண்டதை இப்பவாவது விளங்கிக்கொள்ளுங்கள்...

கிளிநொச்சி இராணுவத்தின் கைகளில் விழுத போது இந்திய உதவி நேரடியாக இலங்கைக்கு கிடைத்து இருந்தது... ஆயுதம் நேரடியான ஆள் உதவி எண்று பலவகையான உதவியை இந்தியா இலங்கைக்கு குடுத்து இருந்தது... அந்த வேளையில் தான் KP தலைவருக்கு நெருக்கமான ஒருவரிடம் இந்தியாவில் இருந்து பேச அழைத்து இருக்கிறார்கள் இந்த இன்னல்களை தீர்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கித்தருமாறு கேட்க்க சம்பந்தப்பட்டவர் ஒத்துக்கொள்ளாத தலைவரை கிட்டத்தட்ட வற்புறுத்தி இருக்கும் பிரச்சினையை தீர்க்க இந்தியாவின் தலையீட்ட நிறுத்த இதைவிட்டார் சந்தர்ப்பம் கிடையாது எண்று சொல்லி கடித்தத்தை வாங்கிக்கொடுத்தார்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தலைமைத்துவம் இருந்தால்தான் அரசியல் தீர்வினையோ மற்றைய எதனையுமே பேச முடியும் என்பதனை முதலில் நினைவில் வைத்திருங்கள்.

இன்று அந்த தலைமைத்துவம் இல்லாததனால்தான் பலர் ஆட்டம் போடுகின்றனர் என்பதனையும் மறந்துவிடாதீர்கள்.

ஒரு அருட்தந்தையானவர் பொய் பேசவேண்டியது இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் சரியாகவே பேசுகின்றார்.

இதே ஜெகத் கஸ்பார் விடுதலைப் புலிகள் உச்சிநிலையில் இருந்தபோது தூக்கிப்பிடித்துப் பேசியபோது கொண்டாடிய உங்களால் இப்போது மட்டும் ஏன் அவரை கசக்குகின்றது?

ஜெகத் கஸ்பார் முன்னர் ஒருதடவை வானொலி ஒன்றில் கூறியது பலருக்கு நினைவில் இருக்கும் என நினைக்கின்றேன்.

அதாவது, அவர் கூறியது இதுதான்: "பொய்யின் பயணம் மிகக்குறுகியது; ஆனால் உண்மையின் பயணம் நீண்ட மிக நெடியது"

இன்று விடுதலைப் புலிகள் தவறே செய்யவில்லை அல்லது கடைசி நேரத்தில் அவர்கள் சரணடையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று தூக்கிப் பிடிப்பவர்களும் கே.பி.யை துரோகி என்று கூறுகின்றவர்களுக்கும் உண்மைகள் புரிவதற்கு இரண்டு வருடங்களோ இல்லை ஐந்து வருடங்களோ எடுக்கக்கலாம்; எடுக்காமலும் போகலாம்.

ஏனெனில் எமது தமிழ்ச் சமூகம் இலகுவில் எதனையும் நம்புகின்ற குணமுடைய சமூகம் அல்ல. மூடநம்பிக்கைகளையும் அதீத கற்பனைகளிலும் ஊறி, வாழ்ந்து வந்த சமூகம் ஆகும்.

ஆகவே, இவர்களுக்கு எப்படித்தான் உண்மைகளைக் கூறினாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தந்தை செல்வா கூறியதனை எல்லோரும் மீண்டும் ஒருகணம் சிந்தியுங்கள்.

Edited by nirmalan

தலைமைத்துவம் இருந்தால்தான் அரசியல் தீர்வினையோ மற்றைய எதனையுமே பேச முடியும் என்பதனை முதலில் நினைவில் வைத்திருங்கள்.

இன்று அந்த தலைமைத்துவம் இல்லாததனால்தான் பலர் ஆட்டம் போடுகின்றனர் என்பதனையும் மறந்துவிடாதீர்கள்.

ஒரு அருட்தந்தையானவர் பொய் பேசவேண்டியது இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் சரியாகவே பேசுகின்றார்.

இதே ஜெகத் கஸ்பார் விடுதலைப் புலிகள் உச்சிநிலையில் இருந்தபோது தூக்கிப்பிடித்துப் பேசியபோது கொண்டாடிய உங்களால் இப்போது மட்டும் ஏன் அவரை கசக்குகின்றது?

ஜெகத் கஸ்பார் முன்னர் ஒருதடவை வானொலி ஒன்றில் கூறியது பலருக்கு நினைவில் இருக்கும் என நினைக்கின்றேன்.

அதாவது, அவர் கூறியது இதுதான்: "பொய்யின் பயணம் மிகக்குறுகியது; ஆனால் உண்மையின் பயணம் நீண்ட மிக நெடியது"

இன்று விடுதலைப் புலிகள் தவறே செய்யவில்லை அல்லது கடைசி நேரத்தில் அவர்கள் சரணடையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று தூக்கிப் பிடிப்பவர்களும் கே.பி.யை துரோகி என்று கூறுகின்றவர்களுக்கும் உண்மைகள் புரிவதற்கு இரண்டு வருடங்களோ இல்லை ஐந்து வருடங்களோ எடுக்கக்கலாம்; எடுக்காமலும் போகலாம்.

ஏனெனில் எமது தமிழ்ச் சமூகம் இலகுவில் எதனையும் நம்புகின்ற குணமுடைய சமூகம் அல்ல. மூடநம்பிக்கைகளையும் அதீத கற்பனைகளிலும் ஊறி, வாழ்ந்து வந்த சமூகம் ஆகும்.

ஆகவே, இவர்களுக்கு எப்படித்தான் உண்மைகளைக் கூறினாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தந்தை செல்வா கூறியதனை எல்லோரும் மீண்டும் ஒருகணம் சிந்தியுங்கள்.

அருட் தந்தை பொய் சொல்ல மாட்டாரோ...?? உண்மைகள் தெரிந்தவர்கள் உயிரோடை இருக்கும் போது உண்மைகள் வெளி வர காலம் தேவை இல்லை... அவர்கள் சொன்னாலே போதும்...

KP உண்மை சொல்கிறார் எண்டால் பதிலே சொல்லாமல் எதுக்கு ஓடி ஒளிகிறீர்கள்...??

கீழை இருக்கும் இடத்திலை விபரமாக எழுதி இருக்கு அங்க போய் உங்கட பொய்யளை அவிளுங்கோ பாக்கலாம்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74589

http://www.channel4.com/news/articles/world/asia_pacific/exclusive+tamil+tiger+interview+/3151162

17 ம் திகதி KP C4 தொலைக்காட்ச்சிக்கு முதல் முதலில் ஒரு சர்வதேச ஊடகத்துக்கு நேரடியாக பேட்டி அளிக்கிறார் ... எப்படி எண்றால் நான் நான்கு மணிநேரத்தின் முன் தலைவருடன் பேசினேன் அவர் ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறார் எண்று... ஆனால் சரண் அடைய மாட்டோம் எண்று சொல்கிறார்...

ஆனால் அதே நாள் அதே நேரம் நடேசன் அண்ணா உட்பட அரசியல் போராளிகள் சரண் அடைய முற்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்... அதை பற்றி KP மூச்சுக்கூட விடவில்லை... மறைத்து விடுகிறார்...

இவை இப்படி இருக்க DBSJ க்கு பேட்டி குடுக்கிறார் இப்படி...

Reconnaissance missions done earlier showed that the soldiers were in three layers around the encircled area. Soosai with whom I was interacting was informed that Praba and Pottu had broken through all three layers. After that there was no communication. We both assumed that the leader had reached a safe place and predictably cut off communication to avoid being monitored.

It was after this that I issued the statement about silencing our arms. I did this in consultation with Soosai. I was using this statement as a basis to accelerate peace initiatives and come to an arrangement where the remaining people could be saved. Nadesan and Pulidevan from another location were also engaged in negotiations.

It was the earlier information received by me that Prabhakaran had broken through the military layers that gave me the belief that he had reached safety.
It was this confidence that made me dismiss reports of Prabhakaran’s death and state that he was safe. Also the first media report about Prabakharan being dead was in relation to the ambulance escape. That report was false. Prabhakaran was not in an ambulance

But shortly before I lost contact with Soosai the sea tiger chief surprised me by saying that Prabhakaran could not break through and had returned. Soosai said that he was only a few hundred yards away from the place he was in. Soosai said that the break out attempt had failed and Prabhakaran had returned without Pottu Amman. He could not give me any more information other than that, except to say the fighting was really fierce. A little later I lost contact with Soosai

16ம் திகதி இரவு தலைவர் ஊடறுத்து நுளைந்து இருக்க வேண்டும்... 17 ம் திகதி அதிகாலையில் தலைவரின் பாதுகாப்பை உறுதி எண்று நம்பி நடேசன் அண்ணா சரண் அடைகிறார் ...

தலைவர் சாவடைந்ததாக சொல்லப்பட்டது 19 ம் திகதி ... எண்றால் இடையில் இரண்டு நாள் உள்ளே இருந்த தலைவர் நம்பிக்கை மிக்க KPயுடன் தொடர்பு எடுக்கவில்லை... அப்படியா...???

ஆக ஒண்றுக்கு ஒண்று முரண்பாடு... !

ஆக KP நான்கு மணிநேரத்தின் முன் தலைவருடன் பேசியது உண்மை என்கிறீர்களா....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பகத்பாஸ்பர் சொல்லுவதை நம்பவேண்டாம்..

பகத்பாஸ்பர் சொல்லுவதை நம்பவேண்டாம்..

இந்தியாவால் வலை வீசி தேடப்பட்டவர் எண்டு சொல்லப்பட்டவர் KP, கட்டுமையான தலைமறைவில் இருந்த KP யை நெடியவன் குறூப் காட்டிக்குடுத்துதான் பிடிக்கும் அளவுக்கு அவர் எங்கே இருக்கிறார் எண்டதை இரகசியமாக வைத்து இருந்தவர் KP எண்று எல்லாம் பில்டப் குடுத்து வைத்து இருந்தார்கள்... அதை கஸ்பரும் போட்டு உடைத்து இருக்கிறார்...

இந்தியாவுடன் KP பேச்சுவார்த்தையில் இருந்தார் எண்று...! அப்படி எண்றால் இந்தியாவால் KP எங்கே இருக்கிறார் எண்று தெரியவே தெரியாது... இந்தியாவால் KP வலை வீசி தேடப்பட்டவர் எண்டவை எல்லாம் உண்மையாகவா இருக்க போகிறது... ???

ஆக வைகோவை சிக்க வைப்பதாக எண்ணி தங்களின் முகத்திரையை கிளித்து கொண்டு இருக்கிறார்கள்...

Edited by தயா

உன்னைப்போன்ற ஒரு வீரமகனை, இனி ஆயிரம் ஆண்டுகளானாலும், தமிழ் இனம் பெறப்போவது இல்லை. உனக்கு மரணம் இல்லை. உன் சொல்லுக்கும், செயலுக்கும், உன் வீரத்துக்கும் மரணம் இல்லை. என்றுமே தமிழ் ஈழத்துக்கும், தமிழ் இனத்துக்கும் வழிகாட்டும் பேரொளிதான் நீ.

நீ உயிரோடு இருப்பதாகவே எண்ணிக்கொண்டு, தமிழ் ஈழ மக்களும், தாய்த் தமிழகத்துத் தன்மானத் தமிழரும், பயணத்தைத் தொடர்வோம். உன் நினைவு ஒன்றுமட்டுமே போதும், எங்களை இயக்கிக்கொண்டே இருக்கும். அந்த உள்ளொளியாய் என்றுமே நீ எங்களை வழிநடத்துவாய். மரணவேதனை நம் மனதைப் பற்றி எரிக்கும் இந்த நிலையிலும், இந்தக் கடிதத்தை நான் எழுதி முடிக்கிற இந்த நிமிடம் வரை, மாவீரர் திலகம் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக விடுதலைப்புலிகளின் தரப்பில் சொல்லப்படுவதால், நாமும் அந்த நம்பிக்கையோடு இயற்கைத்தாயை இறைஞ்சுவோம். தரணியில் தமிழ்க்குலம் தலைநிமிர, தமிழ் ஈழம் மலர, அவர் வாழ வேண்டும். பல்லாண்டு வாழ வேண்டும்.

இதயத்தில் கவலைகளைச் சுமந்துகொண்டே, முன்னிலும் உறுதியான வேகத்துடன் பணிகளை ஆற்றுவோம்; கடமையைச் செய்வோம். காலம் ஒருநாள் நிச்சயம் கருணை காட்டும் என்ற நம்பிக்கையுடன்.

சங்கொலியில் வைகோ கடிதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.