Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசுமாத்தம் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோட சம்மந்தப்பட்ட ரத்த உறவுகளோ அல்லது நெருங்கிப் பழகினர்வர்களோ இறந்தால் உங்களுக்கு ஓர் அசுமாத்தம் தெரியும் என்கிறார்களே அது உண்மையா...நாங்கள் அவர்களை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இறக்கும் போது வித்தியாசமான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்படும் இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா...எனது அப்பா,சித்தப்பா,பெரியம்மா இறக்கும் நேரங்களில் நான் தேவையில்லாமல் அழுது கொண்டிருந்தேன்,பொருட்களை கை தவறி உடைத்திருக்கேன்,சாப்பாட்டை தவறிக் கொட்டி இருக்கேன்....இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா?

ஏதாவது நடந்து விட்டாலோ அல்லது நடக்க இருந்தாலோ எனக்கு கெட்ட கனவுகள் வரும் அப்பிடியான கனவுகள் வந்தவுடன் ஒருவித பயம் கலந்த எதிர்பார்ப்புடன் இருப்பன் யாருக்கு என்ன நடந்ததோ என அனேகமாக அப்பிடியான கனவுகள் வந்தால் எனது உறவுகளோ நண்பர்களோ யாரோ ஒருவர் என்னை விட்டு போய் இருப்பர்......:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த அனுபவம் இருக்குது.எப்படி என்றால் அவர்களைப்பற்றிய எதாவது நினைவுகள் சப்ந்தம் இல்லாமல் வந்து போகும்.

நான் சிறுவயதில் ஒருநாள் மாலையில் பலகை கட்டிலில் படுத்திருந்து பரமேளம் போல் சத்தமாக நீண்டநேரம் அடித்துக்கொண்டு இருந்தேன். அன்று இரவு எனது வீட்டுக்கு சற்று தொலைவில் இருந்த பாட்டா ஒருவர் இறந்துவிட்டார். எனது அம்மா அடிக்கடி இதை எனக்கு கூறி ஞாபகமூட்டுவார், பேசுவார். கைதடுமாறி பரமேளம் பாணியில் தாளம் போடத்தொடங்கினால் உடனடியாக இந்தக்கதையை ஞாபகமூட்டுவார். இதனால் பின்னர் நான் பரமேளம் போல் பகிடிக்கும் அடிப்பது இல்லை. :lol:

எனது அம்மா எங்கள் உறவினர்கள் இறக்கும்போது அதற்கு முதல்நாள் அவர்களை கனவில் காண்பது வழமை.

எனக்கு பிடித்தமான மிகவும் புத்திசாலித்தனமான ஓர் நாய் ஒன்று வீட்டில் வளர்ந்து வந்தது. ஓர் நாள் இரவு நான் அந்த நாய் இறந்து கிணற்றில் மிதப்பதாக கனவு கண்டேன். மறுநாள் காலையில் தெருவில் சென்ற விசர்நாய் ஒன்று திடீரென எமது வீட்டு வளவுக்குள் புகுந்து எமது நாயை கடித்து பின்னர் எமது நாயும் இறந்துவிட்டது. :unsure:

சில விடயங்கள் அறிவுபூர்வமாக விளக்கம் கொடுப்பதற்கு கடினமானவை. ஆனாலும் இவற்றுக்கு இடையில் ஏதோ தொடர்பு உள்ளது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

.

இதை வாசிச்சு எனக்கு விருப்பம் இல்லாத ஆக்களை எல்லாம் நினைக்கிறன்.

அவையள்ளை ஆரும் மண்டையை போட்டால் சந்தோசம்,voodoodoll_2.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிச்சு எனக்கு விருப்பம் இல்லாத ஆக்களை எல்லாம் நினைக்கிறன்.

அவையள்ளை ஆரும் மண்டையை போட்டால் சந்தோசம்,voodoodoll_2.gif

அந்த ஆட்களின் பட்டியலை வெளியிட்டால் தெரிந்துகொல்லலாம்தானே? தமிழ்நாட்டில் யாராவது....உளரோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆட்களின் பட்டியலை வெளியிட்டால் தெரிந்துகொல்லலாம்தானே? தமிழ்நாட்டில் யாராவது....உளரோ? :lol:

தமிழ் நாட்டில் இல்லை வன்னியன்,

இப்போ..... இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பூர்வீக சொத்துக்களை அள்ளுகிறார்கள். மிக வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடையத்தில் பறைமேளம் எண்டவுடன்தான் ஒரு விடையம் ஞாபகத்துக்கு வருகுது, அப்போ வன்னியில இனஅழிப்பின் உச்சம், புலம்பெயர் தேசங்களின்தெருவெங்கும் அனேகர் போராட்டங்களில் உச்சம் கண்டவேளை நான் வாழ்கின்ற நாட்டிலும் ஆர்ப்பாட்டம் ஒவ்வொருநாளும் நடைபெறும் ஆனால் தொடர்ந்து முழுநாளும் நிற்கமாட்டார்கள் ஓரிரு மணித்தியாலத்தால கலைந்துபோய்விடுவார்கள். தேசியக்கொடி, தேசியத்தலைவரது படங்கள், பதாதைகள் அனைத்தும் இடம்பெறும். சேருகிற கூட்டத்துக்குத்தக்கதாக கோசம் பொறிபறக்கும். இறுதியில் கொஞசம் கொஞசம் தொண்டை வத்தத்தொடங்கும். போராட்டத்தின் இறுதிநாட்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை ஆனால் அது தானாகவே எமக்குள் திணிக்கப்பட்டது. அவ்விறுதிநாட்களுக்கு அண்மித்தநாட்களில், புலம்பெயர்தமிழர் ஒருவரது பழைய சாமான்கள் போடுகிற அறையில் யாரோ இனாமாகக் கொடுத்தது என ஒரு ரம்செற்றினுடைய இரண்டு மூண்டு மேளங்களைக் கொண்டு வந்திருந்தார் தொண்டை நோந்தால் இதை அடியங்கோ சனங்கள் கவனிக்குங்கள் எண்டு. எல்லாம் சரியாகத்தான் நடந்தது, சனங்கள் கலைஞ்சுபோற நேரத்தில பொடியங்களும் ஒருசில பழைய நினைவுகளையுடைய பழசகள் எண்டு சொல்லமுடியாது மனிசங்கள் எண்டதான் சொல்லமுடியும் அவையெல்லாரும் சேர்ந்து ஊரில செத்தவீட்டுக்கு அடிக்கிறமாதிரி பறைமேளம் அடித்தார்கள் அதில என்னுடைய கைங்கரியமும் இருந்தது. அண்டுதான் நாங்கள் இறுதியாக கவனயீர்ப்புச்செய்தது என நினைவிருக்கு அதுக்குப்பிறகு.... எல்லாம் முடிந்துபோயிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவெண்டு தெரியாது எனது வயசுக்கோளாறோ அன்றேல் மறை களண்டுட்டுதோ தெரியோல்லை. அனைத்து விடையங்களையும் நான் தமிழிழப்பிரச்சனையைத் தொட்டே எழுதுகிறன் அந்தளவுக்கு சிலவேளை எமது தோல்வி என் மனதை அலைக்களிக்குது. தேடிநிதம் சோறுண்டு சின்னஞ்சிறுகதைகள் பேசும் வேடிக்கைமனிதரைப்போல் வாழாது. ஆகக் குறைந்தது நீபிறந்த ஊருக்காவது போ என என் மனது அடிக்கடி சொல்லுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி உங்கட எதிரிகள் யாராவது செத்துப் போக வேண்டும் என விரும்பினால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தலையில் முழுகுங்கோ தொடர்ந்து முழுகிக் கொண்டு வர யாராவது செத்துப் போவார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோட சம்மந்தப்பட்ட ரத்த உறவுகளோ அல்லது நெருங்கிப் பழகினர்வர்களோ இறந்தால் உங்களுக்கு ஓர் அசுமாத்தம் தெரியும் என்கிறார்களே அது உண்மையா...நாங்கள் அவர்களை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இறக்கும் போது வித்தியாசமான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்படும் இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா...எனது அப்பா,சித்தப்பா,பெரியம்மா இறக்கும் நேரங்களில் நான் தேவையில்லாமல் அழுது கொண்டிருந்தேன்,பொருட்களை கை தவறி உடைத்திருக்கேன்,சாப்பாட்டை தவறிக் கொட்டி இருக்கேன்....இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா?

தெரியும் தெரியும் கண்ணை முழிக்க டெலிபோன் மணி அடிக்கும்.

எல்லாம் முடிஞ்சு போயிருக்கும்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் தனியாக பயணிக்கும்போதோ, நடக்கும்போதோ சில அரசியல் தலைகள் கூடவே வருவதாக, இருப்பதாக சில சமயம் பிரமை/உணர்வு தோன்றும்...

எதற்கும் அரசவையில் ஒரு இடம் பார்த்து வைக்கலாமென தோன்றுகிறது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.