Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர்கள் படையெடுப்பு: ஒக்டோபர் 11 இல் போராட்டத்துக்கு ஏற்பாடு!

Featured Replies

கச்சதீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர்கள் படையெடுப்பு: ஒக்டோபர் 11 இல் போராட்டத்துக்கு ஏற்பாடு!

இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகிவிட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், தாக்கப்படுவதும், சேதங்களை சந்திப்பதும் மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம், மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைத் தமக்கு நிலைநாட்டித் தர வேண்டும் - எல்லை தாண்டிச் சென்ற 110 படகுகளுக்கு 'நோட்டிஸ்' வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் - இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, எதிர்வரும் 11ஆந் திகதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு எமக்கு தான் சொந்தம் அதை நாம் விட்டுக் கொடுக்க கூடாது

படையெடுப்பு நடத்த வேண்டியது சிங்களப் படைகளை நோக்கியல்ல. கருணாநிதியையும் டெல்லியையும் நோக்கித்தான் போராட்டம் அமைய வேண்டும். சும்மா போய் சிங்கள இராணுவத்திடம் சூடு வாங்கிச் செத்தாலும் இந்தியா உட்பட யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆசிய வல்லரசின் செல்லப் பிள்ளையான இலங்கையிடம் யாரும் வாலாட்ட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

படையெடுப்பு நடத்த வேண்டியது சிங்களப் படைகளை நோக்கியல்ல. கருணாநிதியையும் டெல்லியையும் நோக்கித்தான் போராட்டம் அமைய வேண்டும். சும்மா போய் சிங்கள இராணுவத்திடம் சூடு வாங்கிச் செத்தாலும் இந்தியா உட்பட யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

உண்மைதான்.. சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டால், ஒரே கடிதத்தில் அமைதியை கொணரும் தொண்டுக்காரர் இருக்க பயமேன்?

கச்சதீவு எமக்கு தான் சொந்தம் அதை நாம் விட்டுக் கொடுக்க கூடாது

முதலில் ஈழத்தை மீட்டால் கச்சமென்ன மிச்சமுள்ள அத்தனையும் உங்களுக்குத் தான். :lol:

'சக்தி' வாய்ந்தவற்றையே இக்கட்டில் கரம் கொடுக்காமல் கைவிட்டுவிட்டு விழிகளில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதோடு துவண்டுவிடாமல் சிங்களவன் காரியத்தை திட்டமிட்டு முடிக்குமுன் அடுத்த நகர்வுக்காவது ஒற்றுமையை தேடுங்கள்.. இது போன்ற சில்லரை விடயங்களில் கவனம் தற்பொழுது தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் உயிரை, தங்களால் பாதுகாக்க முடியாது என்று அண்மையில் ஒரு மத்திய அமைச்சர் அறிக்கை விட்டு....

ஏன்? எல்லையை தாண்டி மீன் பிடிக்கப் போகின்றீர்கள் என்றும், மீனவர்களை குற்றம் சாட்டியிருந்தார்.

இராமநாதபுரத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹாசன் அலி என்ன்னும் காங்கிரஸ் உறுப்பினரை இவர்களே தேர்ந்தெடுத்தார்கள்.

அவர் மகிந்தவின் நெருங்கிய நண்பர். நிலைமை இப்படி இருக்க யாரை நோவது. அடுத்த கடிதம் மத்திய அரசுக்கு எழுத வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்.. சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டால், ஒரே கடிதத்தில் அமைதியை கொணரும் தொண்டுக்காரர் இருக்க பயமேன்?

முதலில் ஈழத்தை மீட்டால் கச்சமென்ன மிச்சமுள்ள அத்தனையும் உங்களுக்குத் தான். :lol:

'சக்தி' வாய்ந்தவற்றையே இக்கட்டில் கரம் கொடுக்காமல் கைவிட்டுவிட்டு விழிகளில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதோடு துவண்டுவிடாமல் சிங்களவன் காரியத்தை திட்டமிட்டு முடிக்குமுன் அடுத்த நகர்வுக்காவது ஒற்றுமையை தேடுங்கள்.. இது போன்ற சில்லரை விடயங்களில் கவனம் தற்பொழுது தேவையா?

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கரையோரக் காவல்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களைக் கலைத்துவிடுவார்கள்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Apr07_2cartoo.jpgஇந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் (ஒக்டோபர்) 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகி விட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், தாக்கப்படுவதும், சேதங்களை சந்திப்பதும் மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம், மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைத் தமக்கு நிலைநாட்டித் தர வேண்டும் – எல்லை தாண்டிச் சென்ற 110 படகுகளுக்கு ‘நோட்டிஸ்’ வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் – இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, எதிர்வரும் 11ஆந் திகதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.http://www.tharavu.com/2010/09/10.html
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டால், ஒரே கடிதத்தில் அமைதியை கொணரும் தொண்டுக்காரர் இருக்க பயமேன்?

முதலில் ஈழத்தை மீட்டால் கச்சமென்ன மிச்சமுள்ள அத்தனையும் உங்களுக்குத் தான். :lol:

'சக்தி' வாய்ந்தவற்றையே இக்கட்டில் கரம் கொடுக்காமல் கைவிட்டுவிட்டு விழிகளில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதோடு துவண்டுவிடாமல் சிங்களவன் காரியத்தை திட்டமிட்டு முடிக்குமுன் அடுத்த நகர்வுக்காவது ஒற்றுமையை தேடுங்கள்.. இது போன்ற சில்லரை விடயங்களில் கவனம் தற்பொழுது தேவையா?

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா ஆனாலும் இந்தியாவின் கையில் கச்சதீவு போனால் திருப்பி மீட்பது கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா ஆனாலும் இந்தியாவின் கையில் கச்சதீவு போனால் திருப்பி மீட்பது கஸ்டம்.

ராஜவன்னியன் சொன்னது கோமணத்தை......

கோமணம் இல்லாமல்.... ஒரு மனிதன் இருந்தால்...., அதற்க்குப் பெயர் நிர்வாணம்.

சுத்த தமிழில் சொல்லப் போனால்... உரிஞ்சாங்குண்டி, அம்மணம், ஏதுமற்றவன், பிச்சைக்காரன் என்று அர்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.