Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணத்தக்காளி வத்தக் குழம்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணத்தக்காளி வத்தக் குழம்பு :)

IMG_2064.JPG

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு

தேங்காய் – அரை மூடி

நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்

மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் *

உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு

வெல்லம் – சிறிது (விரும்பினால்)

தாளிக்க:

நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6,7

துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

உளுந்து அப்பளம் – 1

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* புளியை 2,3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.

* தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், சீரகத்தைத் தாளித்துக் கொள்ளவும்.

* இதில் ஒரு உளுந்து அப்பளத்தை 4,5 ஆக உடைத்துப் போட்டு, பொரிந்ததும் மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

* மற்றொரு வாணலியில் மீதி இருக்கும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையில் மணத்தக்காளி வற்றலைச் சிவக்க வறுத்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வதக்கிய கலவையை கொதிக்கத் தொடங்கியிருக்கும் புளித் தண்ணீரில் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான வத்தல் குழம்பு தயார்.........

மருத்துவ குணங்கள்..

* மணத்தக்காளிக் குழம்பை இரவு வேளைகளில் சாப்பிடுவதால், அதீத வேலையால் ஏற்படும் உடல் வலியைப் போக்கி, களைப்பை விரட்டி, நல்ல தூக்கத்தையும், மறுநாள் உற்சாகத்தையும் கொடுக்கும்.

* மணத்தக்காளி பெண்களுக்கு வரப்பிரசாதம். கருப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது. தாய்ப்பால் ஊற மணத்தக்காளி அருமருந்து. பிரசவ காலங்களில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்தக் காயுடன் கீரையையும் பச்சைப் பருப்பையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும். மூலச் சூட்டைத் தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

* சித்த மருத்துவத்தில் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்துச் சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலேயே காமாலை நோய் சரியாகிவிடும்.

*மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒருமுறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது

* பொதுவாகவே வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு வற்றல் குழம்பு செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

http://mykitchenpitch.wordpress.com/2007/04/18/vatral-kuzambu-2-manaththakkaali-vaththak-kuzambu/

------------------------------------------------------------------------------------------------

462387741_4f63d9c254.jpg

ஈழத்தோழர்கள் செய்து பார்க்குக .....செய்துபார்த்து சுவைக்குக.... :unsure:

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif.

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

மணத்தக்காளி இலைகூட கறி வைப்பதற்கு ஏற்றது.

மணத்தக்காளி செடி, தூதுவளை கொடி ஆகியற்றின் இலைகள் கிட்டத்தட்ட குழம்பு வைக்கும் பாங்கு ஒரேமாதிரியானது. இவை கிராமிய உணவாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை. பொதுவாக இவற்றையும், இவற்றைப் போன்று முருங்கையிலை, முசுட்டையிலை, முல்லையிலை, கருவேப்பிலை போன்றவற்றை உட்கொண்டு வந்தவர்கள் வைத்தியர்களிடம் சென்றதை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை

மணத்தக்காளி, புளிச்ச கீரை ஆகியவற்றை ஈழத்தில் என்னவென அழைப்பர்?

  • 7 years later...

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

சுண்டக்காய் வற்றல் குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் அதை விட மணத்தக்காளி வற்றல் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.

201709301241553232_1_manathakkalivathalk

செய்முறை :

புளியை சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும்.

பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும்.

அடுத்து அதில் மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

http://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.