Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சே விருந்து... வற்புறுத்தி அழைத்தும் வராத தலைவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே விருந்து... வற்புறுத்தி அழைத்தும் வராத தலைவர்கள்!

30-rajapakshe1200.jpg

கொழும்பு: இலங்கை [^] அதிபர் ராஜபக்சேயின் ஐநா பயணம் மகா வெற்றி என்று அரசு சார்பு ஊடகங்கள் பெரிதாக கூறிவரும் வேளையில், அங்கு உண்மையில் நடந்தது என்னவென்பதை சிங்கள இணையதளம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது. இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் இது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டார் ராஜபக்சே. இந்த நிகழ்வின் போது இலங்கை அதிபரை, உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்க ஆர்வம் காட்டவில்லையாம்.

P3251369.JPG

இந்த மாநாட்டையொட்டி இலங்கை ஒரு பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. ஆனால் ஒரே நாட்டு தலைவர் மட்டுமே விருந்துக்கு வந்திருந்தார். அவர் ஈரானின் முகமது அகமத் நிஜாதீன். தேர்தலில் பெரும் மோசடி செய்து ஆட்சியைப் பிடித்தவர் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் இந்த முகமத் என்பது குறிப்பிடத்தக்கது. விருந்து வந்த அவரும் கூட மூன்றே நிமிடம் மட்டும்தான் இருந்தாராம். சாப்பிடாமல் வெளியேறியுள்ளார் அவர்.

இலங்கையைத் தாங்கிப் பிடித்து, அதன் போர்க்குற்றத்தை மறைக்க உதவும் இந்தியா [^], சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் [^] போன்ற நாடுகள் கூட இந்த விருந்தைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியில் இலங்கை அரசின் சிங்கள அதிகாரிகள்தான் கடைசியில் இந்த விருந்தைச் சாப்பிட்டு முடித்தார்களாம்.

இலங்கைக்கு இதுவரை இல்லாத பெரும் அவமதிப்பு இது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, ஐநா சபையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசிய போது தலைவர்கள் அனைவரும் வந்திருந்ததால் அரங்கம் நிரம்பி வழிந்தது. ராஜபக்சே பேசியபோது, அரங்கமே கிட்டத்தட்ட காலியாகிவிட்டிருந்தது. ராஜபக்சேயுடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூட யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்!

140 மில்லியன் டாலர் செலவு:

இந்தப் பயணத்தின்போது இலங்கை அதிபர் 130 பேரை உடன் அழைத்துச் சென்றாராம். அவர்களில் ராஜபக்சேக்கு மது பரிமாற மட்டுமே 5 காக்டெய்ல் 'நிபுணர்களும்' சென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்துக்கான மொத்த செலவு மட்டும் 140 மில்லியன் டாலர்கள் என்று ஸ்ரீலங்கா கார்டியன் தெரிவித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2010/09/30/world-leaders-not-responding-rajapaksa.html

----------------------------------------------------------------------------------------------------------------------

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

லங்கா கார்டியனைவிட்டு கார்டியனை வாசிக்க இனியாவது தொடங்குங்கள்.கொஞ்சம் வெளிஉலகை எட்டிபார்த்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:D சிலர் வெளியுலகைஅ எட்டிப்பார்க்கிறதில உள்ளுக்குள்ள நடக்கிறத மறந்து விடீனம் அல்லது மறைக்கப் பாக்கீனம் , என்ன நான் சொல்லுறது?? கேட்டால் நான் கருனாநிதியோட அரசியல் வியாக்கியானம் செய்தனான், காந்தியோட ஒரே மேடையில பேசினனான் எண்டெல்லாம் கதையள் வரும். ஆளை விடுங்கோ சாமி !!

அமெரிக்க ஐ நா பயணத்தில் அரசு சொன்னதும் உண்மையும்....

http://www.sundaytimes.lk/101003/News/nws_02.html

1. அரச அதிபர் தங்கியிருந்த 'வால்டூர்ப் அஸ்ரியோ' வில் அவர் விடுத்த அழைப்பை மூன்று அரச அதிபர்களே ஏற்றனர் - மாலைதீவு, பிஜி, சைபிரட்ஸ்.

2. முன்னைய செய்திகளுக்கு மாறாக ஈரானின் வெளிவிகார அமைச்சரே கலந்து கொண்டார் , அரச அதிபர் அல்ல.

3. அமெரிக்காவில் உள்ள சுமார் 300 மேலான முன்னை நாள் இலங்கையரை அவர் சந்தித்தார், ஆனால் பலரும் அண்மையில் இங்கு வந்தவர்கள். இது இங்கே 25-30 வருடமாக வாழ்பவர்கள் மத்தியில் விசனத்தை உருவாகியுள்ளது.

ராஜபக்சே விருந்து...

30-rajapakshe1200.jpg

....

P3251369.JPG

இந்த மாநாட்டையொட்டி இலங்கை ஒரு பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. ஆனால் ஒரே நாட்டு தலைவர் மட்டுமே விருந்துக்கு வந்திருந்தார். அவர் ஈரானின் முகமது அகமத் நிஜாதீன். தேர்தலில் பெரும் மோசடி செய்து ஆட்சியைப் பிடித்தவர் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் இந்த முகமத் என்பது குறிப்பிடத்தக்கது. விருந்து வந்த அவரும் கூட மூன்றே நிமிடம் மட்டும்தான் இருந்தாராம். சாப்பிடாமல் வெளியேறியுள்ளார் அவர்.

....

http://thatstamil.oneindia.in/news/2010/09/30/world-leaders-not-responding-rajapaksa.html

----------------------------------------------------------------------------------------------------------------------

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.