Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனம்+தன்னம்பிக்கை

Featured Replies

ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிரச்சினையை மற்றவரால் நிச்சயமாக முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தலைவலியும் திருகுவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்! பிரச்சினையில் ஒருவர் இருக்கும்போது, மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! ஆனால் அதிலிருந்து மீண்டு வருதல் என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. வாய்ப்புகள் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லையென்றால் யாராலும் பிரச்சினையிலிருந்து மீள்வது கடினம்தான்.

ஒரு உண்மைக் கதை. ஒரு இளைஞன். அவன் விருப்பப்பட்ட படிப்பு சில காரணங்களால் தடைபட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அவனை வீட்டில் யாரும் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை, விரக்தி அதிகமானது. தற்கொலை எண்ணம் கூட வந்தது. ஆனால் அதற்கும் அவனிடத்தில் தைரியம் இல்லை. அவன் நிலை பார்த்து அவன் பெற்றோர் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள், ஊக்க்மளித்தார்கள். நாளடைவில் அவன் மனதில் இருந்த துளி தன்னம்பிக்கை விதை மரமாக வளர்ந்தது. தன் இலட்சியங்களை அடைந்து விடுவோம் என்று விடா நம்பிக்கையோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தன்னம்பிக்கை என்பது தன் மீது வைக்கும் நம்பிக்கை. தன் மீதும் தன்னை சுற்றியுள்ளவர் மீது நம்பிக்கையின்றி காட்வுள் நிறைவேற்றுவார் என சிலர் நம்புவார். அதுவும் தவறில்லை. நம்பிக்கை என்பது எரிபொருள் போன்றது அது இருக்கும் வரை நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்.

தன்னம்பிக்கை என்பது இரண்டு விஷயங்களை கொண்டுள்ளது. 1. சுய ஆற்றல் 2. சுய மதிப்பீடு. சுய ஆற்றல் என்பது நம்மிடமும் நம்மை போன்றவர்களிடமும் உள்ள திறமைகளை உணரும்போது, இலக்குகளை அடையும்போது பெறும் உணர்வு. இது பெறப்படும் வெற்றிகளை சார்ந்தது. ஒரு செயலில் வெற்றிகளை பெற்றால் அதை செய்ய முடியும், தோல்வியடைந்தால் செய்ய முடியாது என முடிவுக்கு வருகிறோம். சுய மதிப்பீடு என்பது உங்களை பற்றி நீங்கள் உணரும் உணர்வு. இது மற்றவர்களின் கருத்தையும் சார்ந்தது மற்றவர்களின் கருத்திலிருந்தும் நாம் நம்மை பற்றிய மதிப்பீட்டை செய்கிறோம். தன்னம்பிக்கையின்மை உங்கள் முழுமையான மதிப்பை நீங்கள் புரிந்து கொள்ளாததால் உருவாகிறது.

தன்னம்பிக்கையை வளர்த்தல்-சில வழிகள்:

1. உடைகள் ஒருவர் தன்னைப் பற்றி உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் வெளித்தோற்றம் குறித்து உங்களை விட வேறு யாரும் அதிகம் கவலைப்பட போவதில்லை. நீங்கள் நன்றாக உடையணியாவிட்டால், அது உங்களை மற்றவரிடத்தில் நீங்கள் வெளிப்படுத்துவதில் மாற்றத்தை உண்டாக்கும். குளியல், முகச்சவரம், சுத்தமான உடை, நவீன நாகரீகத் தோற்றம் போன்றவை கூட காரணிகளாக இருக்கலாம். இதற்காக நீங்கள் உடையணிவதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் உடை உங்கள் மனநிலையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. உடல் வெளித்தோற்றம் போன்றே உடல் உள்தோற்றமும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனது. குண்டான/ஒல்லியான சிலர் தன்னம்பிக்கையின்றி காணப்படுவதை கண்டிருக்கலாம். முடிந்தவரை உடலமைப்பை பேண முயற்சியுங்கள். மேலும் உங்கள் உடலமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் மற்றவர்களும் சமம் என எண்ணுங்கள்.

2. ஒருவரின் நடையை வைத்தே அவரின் மனநிலையை கண்டறியலாம். தன்னம்பிக்கை உடைய நபர்கள் விரைவாக நடப்பார்கள். அவசரமில்லை என்றாலும் அவர்களின் நடையில் ஒரு துள்ளல், வேகம் இருக்கும். தளர்வாக நடத்தல்/உட்காருதல், மந்தமான அசைவுகள் தன்னம்பிக்கை இல்லாமையை வெளிப்படுத்துகிறது. எப்போது நேராக நின்று/உட்கார்ந்து முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்ணுக்கு கண் பார்த்து பேச/கவனிக்க வேண்டும். இது நேர்மறை விளைவுகளை உண்டாக்கும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது உடங்களில் சிலர் முன் வரிசையில் உட்கார தயங்குவார்கள், இது தன்னம்பிக்கை குறைபாட்டை காண்பிக்கிறது. முடிந்தவரை முன்னால் உட்காருங்கள். பல விவாதங்கள், பேச்சுக்கள், ஏன் சாதாரணமாக பொதுமக்கள் கூடி பேசுமிடத்தில் கூட சிலர் பேசாமல் அமைதியாக கேட்க மட்டும் செய்வார்கள். தான் ஏதாவது பேசினால் தன்னை குறைவாக மதிப்பிடலாம் என பயந்து பேசாமல் இருப்பார்கள். உங்கள் கருத்துக்கள் தவறோ சரியோ தைரியமாக பேசுங்கள். மேற்கண்ட அனைத்தும் நம் மனநிலையின் பெரும்காரணிகளாகும் இவற்றை பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

3. ஊக்கப்படுத்தும் கட்டுரைகளை படியுங்கள், பேச்சுக்களை கேளுங்கள். இது தன்னம்பிக்கை உண்டாக்கும் முக்கிய வழியாகும். உங்கள் பலங்கள் மற்றும் குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தும், ஒரு 30-60 நிமிட பேச்சை எழுதுங்கள். பிறகு இதை தன்னம்பிக்கை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கும்போது, கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள். உங்கள் தேவைகளை பற்றி அதிகமாக யோசிக்கும்போது, அவை உங்களிடம் இல்லாததற்கான காரணங்களை மனம் உருவாக்கும். இது உங்களுக்குள் பலவீனங்களை உண்டாக்கும். இதனால் கடந்தகால வெற்றிகள், உங்கள் தனிப்பட்ட திறமைகள், அன்பான உறவுகள், நேர்மறையான நல்ல தருணங்களை நினைத்து பாருங்கள். இவை உங்கள் பலவீனங்களை நீக்கி வெற்றியை நோநோக்கி செல்ல உதவும்.

4. உங்களைப் பற்றி எதிர்மறையாக சிந்திப்பதற்கு பதிலாக, மற்றவர்களை பாராட்டும் பழக்கத்தை உண்டாக்குங்கள். மற்றவர்களை நீங்கள் பாராட்டும்போது, மறைமுகமாக உங்களையும் ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் பாராட்டு முழுமனதோடு வெளிப்பட வேண்டும். நாம் நம் சொந்த ஆசைகளைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறோம். மற்றவர்களின் தேவையை பற்றி போதுமான அளவு சிந்திப்பதில்லை. நம்மை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு உலகிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திக்க ஆர்ம்பித்தால், நம் ஆசைகள் நிறைவேறவில்லையே என்ற கவலை மனதில் தோன்றாது. இது தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் அதிகப்படுத்தும்.

தன்னம்பிக்கையை வளர்த்தல் என்பது உடனடியாக செய்யக்கூடியது கிடையாது. நாளடைவில் வளர்ப்பதாகும். தன்னம்பிக்கை எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் அது எப்போதும் ஆணவமாக மாறக் கூடாது. உங்கள் தன்னம்பிக்கை மனதில் மட்டும் இருக்க வேண்டும். அது அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்பட்டால் ஆணவமாக மாறலாம்

கடைசியாக என்னைப் பற்றி:

என்னால் சிறு வயதிலிருந்தே நடக்க முடியாது குழந்தைகள் போலத்தான் தவழ்ந்து செல்வேன். இந்நிலையில்தான் பள்ளி, கல்லூரிக்கு சென்று படித்தேன். நான்கு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தவழ்ந்து செல்வதும் தடைப்பட்டது. எப்போதும் இடுப்பில் வலி உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் அது அதிகமாகி படுத்த படுக்கையாகி விட்டேன். இந்த ஒரு வருடத்தில் நான் உட்கார்ந்திருந்த நிமிடங்கள் முழுதாக இரண்டு நாட்கள் கூட இருக்காது. ஆனால் இந்நிலையில்தான் வயிற்றின் மேல் லேப்டாப் வைத்துக் கொண்டு படுத்துக்கொண்டே என் குடும்பத்திற்கு வருமானமும் ஈட்டி தருகிறேன்; மூன்று மாதங்கள் முன் வலைப்பூ தொடங்கி இன்று இந்த நூறாவது பதிவையும் போட்டுள்ளேன். ஆரம்பத்தில் சொன்ன உண்மைக் கதையும் என்னைப்பற்றியதுதான். இதற்கு காரணம் என் பெற்றோர்கள் தந்த ஊக்கமும் என் தன்னம்பிக்கையும்தான். எதை இழந்தாலும் அதை மட்டும் இழக்கக் கூடாது.

இந்த வலைப்பூவை நாமும் ஒன்று ஆரம்பிப்போம் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் இன்று எனக்கு கிடைத்த நண்பர்கள், அவர்களின் ஊக்கங்கள்/பாராட்டுக்கள், அதன் மூலம் கிடைத்த தன்னம்பிக்கை அளவில்லாதது. என் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு கடமைபட்டுள்ளேன். நான் இறக்கும் தருவாயில் என்னால் இயன்றதை இந்த உலகிற்கு செய்தேன் என்ற மகிழ்ச்சியுடன் இறப்பேன். எனக்கு நம்பிக்கை அளித்த நல் உள்ளங்கள் அனைத்துக்கும் கோடானுகோடி நன்றிகள்!!!

http://manamplus.blogspot.com/2010/10/blog-post.html

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தோழர் வீணா ... :)

  • தொடங்கியவர்

நல்ல பதிவு தோழர் வீணா ... :)

நன்றி.....................:)

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தன்னம்பிக்கையை இழக்கும் போது........ தோல்வியை சந்திக்க ஆரம்பமாகின்றார்.

இது ஆபத்தான ஆரம்பம். மனம் என்றுமே தன்னை யாருக்கும் சளைத்தவன் இல்லை என்பதை ஆணவமில்லாது மீண்டும்.... மீண்டும் (Replay) சிந்தித்த படியே... இருக்க வேண்டும். இணைப்பிற்கு நன்றி வீணா. :)

  • தொடங்கியவர்

நன்றி...சிறி அண்ணா......... :)

நன்றி sagevan .... :)

  • கருத்துக்கள உறவுகள்

உடை உடுத்தும் விதம் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் ஆனால் எம்மவர்கள் அப்படி உடுத்தினால் சமுதாயம் என்ன சொல்லுமோ என்ட பயத்திலேயே வடிவாக உடுத்த விருப்பம் இருந்தாலும் உடுத்துவதில்லை...நாம் உடுத்தும் உடை அழகாகவும்,எம்மை கவர்ச்சியாகவும் காட்ட வேண்டும் அதே நேரத்தில் ஆபாசம் இல்லாமல் இருத்தல் வேண்டும்...நன்றி வீணா கட்டுரைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வீணா...............அவர் தளத்துக்கு சென்று கருத்துபோட்டேன்.

அவரது தன்னம்பிக்கை அவரை உயர்நிலையில் வைக்கும்.

  • தொடங்கியவர்

உடை உடுத்தும் விதம் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் ஆனால் எம்மவர்கள் அப்படி உடுத்தினால் சமுதாயம் என்ன சொல்லுமோ என்ட பயத்திலேயே வடிவாக உடுத்த விருப்பம் இருந்தாலும் உடுத்துவதில்லை...நாம் உடுத்தும் உடை அழகாகவும்,எம்மை கவர்ச்சியாகவும் காட்ட வேண்டும் அதே நேரத்தில் ஆபாசம் இல்லாமல் இருத்தல் வேண்டும்...நன்றி வீணா கட்டுரைக்கு.

நன்றி அக்கா

பகிர்வுக்கு நன்றி வீணா...............அவர் தளத்துக்கு சென்று கருத்துபோட்டேன்.

அவரது தன்னம்பிக்கை அவரை உயர்நிலையில் வைக்கும்.

நன்றி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது தன்னம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன் சகோதரி, வாழ்த்துக்கள்! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.