Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'

Featured Replies

'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'-அதிர்ச்சி தரும் ஆப்பிள்

இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்று குறிப்பிடும் வகையில் தனது ஐபோனில் புதிய வரைபடத்தைக் காட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

வட பகுதியான இமயமலையில் அமைந்துள்ள அருணாசலப் பிரதேசத்தை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்டுகொள்ளாத சீனா, அருணாசலப் பிரதேச எல்லையில் ஏராளமான ராணுவ படைகளை குவித்துள்ளது. அடிக்கடி சீன ராணுவம் இந்த எல்லைக்குள் ஊடுருவி அங்குலம் அங்குலமாக நிலத்தை அபகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

இந் நிலையில் சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் 'ஆப்பிள் ஐ-போன் 4' என்ற பெயரில் புதிய ரக செல்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சீன போன்களில் உள்ள உலக வரைப்படத்தில் அருணாசலப் பிரதேசம் சீனாவில் இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இது இந்தியாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரிய மார்க்கெட்டான சீனாவில் விற்பனையை அதிகரிப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் தங்களது செல்போன்களில் உள்ள உலக வரைப்படத்தில் அருணாசலப் பிரதேசம் முழுவதும் சீனாவில் இருப்பது போன்று வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த போன்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சீன தலை நகர் பீஜிங்கில் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. 4 நாட்களில் இதன் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் 1 லட்சம் போன்களுக்கு ஆர்டர் குவிந்துள்ளது.

செல்போன் உலக வரை படத்தில் அருணாசல பிரதேசத்தை இந்தியாவுடன் இருப்பது போல் வரைந்தால் சீனர்கள் வாங்க மாட்டார்கள் என்று அந்நிறுவனம் கருதி இருக்கலாம். இதனால் தான் இது போன்ற வரைபடத்தை அந்நிறுவன நிர்வாகிகள் வரைந்திருப்பதாக சீன இணைய தளம் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலக வரைபடத்தில் அருணாசல பிரதேசம் இந்தியப் பகுதிக்குள் இருப்பது போன்ற வரைபடங்களை சீன அரசு ஏற்பதில்லை. அங்கு வரைபடங்கள் உருவாக்கும் நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடக்கிலும் தெற்கிலும்...

இந்தியாவின் வடபகுதியை ஒரு புறம் குறி வைத்த சீனா தற்போது தென் பகுதியையும் ஆக்ரமிக்க துடிக்கிறது. இதற்காக இலங்கையின் வன்னி பகுதியில் சீன ராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்படுகிறது. அங்கு விமான தளம் மற்றும் கப்பல் தளங்களும் தனது சொந்த செலவில் அமைத்து வருகிறது.

ஈழ தமிழர்களை கம்பி வேலி முகாம்களுக்குள் அடைக்க உத்தரவிட்ட சீனா, தமிழர்கள் வசித்த பகுதிகளில் ரகசியமாக ராணுவ தளம் அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

இதனால் தென்னிந்தியாவின் பாதுகாப்பு க்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------

அண்மையில் வெளியான பயனியர் என்ற ஏட்டில் முன்னாள் அசோக் மேத்தா என்ற இராணுவ தளபதி இந்தியா சதியில் தோற்றுவிட்டது என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். அதில் சிறிலங்கா சீனா பக்கம் இருந்து கொண்டு இந்தியாவை அலட்சியம் செய்து வருகிறது என்றும் இந்தியாவுக்கு தென்பகுதியில் இருந்த ஒரே நேச சக்தியான வி.புலிகள் ஒழிக்கப்பட்டது அதன் பேரம் பேசும் ஆற்றலை இழக்க வைத்துள்ளது எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

October 02, 2010

=================================================================

இந்தியாவின் உணர்வுகளை சீனா மதிக்க வேண்டும் எஸ்.எம். கிருஷ்ணா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76469&pid=615443&st=0&#entry615443

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

முயூசிக் குறூப் எங்கே....?

அடிங்கடா மேளத்தை.....

123.gif123.gif123.gif

முயூசிக் குறூப் எங்கே....?

அடிங்கடா மேளத்தை.....

123.gif123.gif123.gif

போடுங்கடா தாளத்தை....ஊதுங்கடா பி...பி''''

  • கருத்துக்கள உறவுகள்

போடுங்கடா தாளத்தை....ஊதுங்கடா பி...பி''''

பி...பீய் ஆக்களும் வந்திட்டினம். Bananeyessss.gifBanane21.gifBananezorro.gif

இந்தியாவுக்கு இன்னும் நிறைய இருக்குது "ஆப்ஸ்" !!! :lol:

நண்பர்களே....! மியூசிக் குறூப்பை அவசரப்பட்டு அனுப்பிப் போடாதையுங்கோ!

இன்னும் தொடர்ந்து அடிக்கோணும்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

.

கச்சை தீவு இல்லாத, இந்தியாவுக்கு காஷ்மீர் தேவை இல்லை.

காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும்.

.

அப்ப காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்கிறது!

சில வருடத்திற்கு முன்னர் google map இல் காஷ்மீர் இந்திய எல்லையைத் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்கிறது!

Kashmir_protest.jpg

http://www.fnbworld.com/8/146/articles/Editorials/Editorial.-John-Dayal.-August--3-.-2010/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இன்னும் நிறைய இருக்குது "ஆப்ஸ்" !!!

நண்பர்களே....! மியூசிக் குறூப்பை அவசரப்பட்டு அனுப்பிப் போடாதையுங்கோ!

இன்னும் தொடர்ந்து அடிக்கோணும்...

அது தானே உலை இன்னும் கொதிக்கவில்லை. அதற்குள் அரிசியைப் போடு என்று அடம்பிடிக்கின்றீர்கள்.இன்னும் நல்லாகக் கொதிக்கட்டும். :lol:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இன்னும் நிறைய இருக்குது "ஆப்ஸ்" !!! :lol:

நண்பர்களே....! மியூசிக் குறூப்பை அவசரப்பட்டு அனுப்பிப் போடாதையுங்கோ!

இன்னும் தொடர்ந்து அடிக்கோணும்... :lol:

:lol::D
  • தொடங்கியவர்

சீனா இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்கார நாடு.

ஜம்மு காஷ்மீர் வாழ் மக்கள் சீனாவுக்குச் செல்ல விசா கேட்டால் அந்த விசா ஸ்டாம்பை இந்திய பாஸ்போர்ட்டில் போடாமல் தனியாக ஒரு தாளில் போடுவது. அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அதிகாரிகளுக்கு சீனா செல்ல விசா விஷயத்தில் குழப்புவது. மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றால் சும்மா ஒரு பிட்டைப் போட்டுவைப்பது.

உடனே இந்தியா பதறும். எல்லைப் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறோமே, இப்படி எங்களை டார்ச்சர் செய்கிறீர்களே என்று புலம்பும்.

இந்தியாவைப் பதற்றத்தில் ஆழ்த்தும் உளவியல் டெக்னிக் இது. இந்தியா இதில் சிக்குகிறது. மாற்றாக இந்தியா என்ன செய்யவேண்டும்?

( கொஞ்சம் நகைச்சுவையாக :-) )

1. பதற்றத்துடன் பதில் சொல்லவேண்டாம். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இதற்கு பதில் சொல்லவேண்டாம். சீனா பக்கத்திலிருந்து கண்டனம் சொல்லியிருப்பது யார் என்று பாருங்கள். கடைமட்ட ஊழியர் ஒருவராக இருப்பார். அதைப்போல இந்தியாவில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கடைமட்ட கிளர்க்கைக் கொண்டு மட்டமான தாளில் டைப்ரைட்டர் கொண்டு அச்சடித்த கண்டனக் கடிதத்தை இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்துக்கு அனுப்பிவைத்தால் போதும்.

2. ஒவ்வொரு மாதமும் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் போய் ஒரு சிலையைத் திறந்துவைக்கலாம். அவரது ‘சொந்த மாநிலமான’ அசோமுக்குப் போவதற்கு அருணாசலப் பிரதேசம் வழியாக சுற்றிவளைத்துச் செல்லலாம். இன்னும் சொல்லப்போனால் அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் அருணாசலப் பிரதேசம் சார்பில் மன்மோகன் சிங் நிற்பது நலம். (யோசித்துப் பார்க்கும்போது, இது பிரமாதமான ஐடியாவாகத் தோன்றுகிறது!)

3. சீனாவின் ஹு ஜிண்டா, சீனாவின் எந்தப் பிரதேசத்துக்குச் செல்லும்போதும், இந்திய உள்துறை அமைச்சகத்தின் கடைமட்ட கிளர்க் ஒருவர் அதைக் கண்டித்து ஒரு கடிதத்தை (இந்திய போஸ்டல் சர்வீஸ் மூலம்) அனுப்பி வைக்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் திபெத் பற்றி யாராவது ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு கருத்தை வெளியிடலாம். “திபெத் புத்தமதம் இந்தியாவுக்கே வழிகாட்டும்” என்று ஒரு அமைச்சர். “திபெத் உணவகங்கள் இந்தியா முழுதும் திறக்கப்படும்” என்று சுற்றுலாத் துறை அமைச்சர். “தலாய் லாமா முகம் போட்ட ஸ்டாம்ப் - பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுகிறார்” என்று ஒரு அமைச்சர்.

5. இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை வழங்கவேண்டும். இந்தியர்கள் மாண்டரின் மொழியில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க இந்திய அரசு மானியம் வழங்கவேண்டும்! அப்போது நாம் எல்லாம் இந்தக் கருத்துகளை மாண்டரினில் எழுதி சீனர்களைக் கடுப்பில் ஆழ்த்தலாம். அவற்றை சென்சார் செய்வதிலேயே சீன அரசு செத்துவிடும்!

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.