Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அற்புதம் அம்மாவின் பேரறிவாளனுக்காகக் காத்திருக்கிறோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலையின் மேல் தொங்கும்

தூக்குக் கயிற்றின் கீழிருக்கும்

துயரம் அவன்…..

பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய

தமிழின உணர்வின் ஊற்று அவன்….

சாவின் நிணம்

அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க

சாவுமின்றி வாழ்வுமின்றி

சந்தேகத்தின் பெயரால்

இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்…..

வசந்தம் துளிர்த்த வயதில்

வாழும் ஆசைகளுடன் போனவன்

மரணம் கொல் இருளில் மன உழைச்சலும்

மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன்

பாழும் உயிரும் பாரமாய் பழியுடன்

நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில்

இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை……

19வருடச் சிலுவையின் பாரம்

குருதியழுத்த நோயாளியாய்

வாழ்வின் காலங்கள்

நோயின் கோரங்களோடு கழிய

காற்றணைத்த ஒளியில்

கருகிக் கொண்டிருக்கிற

திரியின் துணியாய் காத்திருக்கிறான்…..

இதயத்தை அவனுக்காகவே இயக்கிக் கொண்டிருக்கும்

அற்புதம் அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவேனும்

அவன் வர வேண்டும்…..

இரும்புகளின் காவல் உடைந்து அவன்

நரம்புகளின் இயக்கம் நிற்க முன்னம்

விடுதலையென்ற ஒற்றைச் சொல்லைக் கேட்கவேனும்

பேரறிவாளன் பொதுமன்னிப்போடு வர வேண்டும்.

தோழனே,

உனக்காக நீ நம்பாத கடவுள்களை மட்டுமே இறைஞ்சுகிறோம்

வேறெந்த முயற்சியும் முடியாது நண்பனே !

மன்னித்துக் கொள் உனக்காய்

எதையுமே செய்ய எம்மால் இயலாது.

எனினும் நீ வருவாயென்ற நம்பிக்கையோடு

நாங்களும் அற்புதம் அம்மாவின்

கனவின் குழந்தைக்காக காத்திருக்கிறோம்.

22.10.10(இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, தனது 19 வயது முதல், கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் பேரறிவாளன் பற்றிய செய்தியொன்று படித்த போது அவனுக்காக எழுதிய வரிகள் இவை)

  • 10 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் அம்மாவின் பேரறிவாளனும் , முருகனும் , சாந்தனும் மரணக்கயிற்றிலிருந்து தற்காலிகமாக மீண்டாலும் அவர்கள் நிரந்தரமான விடுதலையைப் பெற வேண்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் அம்மாவின் பேரறிவாளனும் , முருகனும் , சாந்தனும் மரணக்கயிற்றிலிருந்து தற்காலிகமாக மீண்டாலும் அவர்கள் நிரந்தரமான விடுதலையைப் பெற வேண்டுவோம்.

இதுதான் அக்கா இன்றைக்கு ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் இருக்கும் பிரார்த்தனை...

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தை அவனுக்காகவே இயக்கிக் கொண்டிருக்கும்

அற்புதம் அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவேனும்

அவன் வர வேண்டும்…..

இரும்புகளின் காவல் உடைந்து அவன்

நரம்புகளின் இயக்கம் நிற்க முன்னம்

விடுதலையென்ற ஒற்றைச் சொல்லைக் கேட்கவேனும்

பேரறிவாளன் பொதுமன்னிப்போடு வர வேண்டும்.

2010 ல் சாந்தி எழுதிய கவிதை இன்றும் பொருந்தக் கூடியதாய் உள்ளது.

மத்திய அரசில் எள்ளளவு மாற்றமும் இல்லை.

Edited by தமிழ் சிறி

இதேவரிகள் சாந்தனின் முருகனின் தாயார்களுக்கும் கூடவே பொருந்தும்.

ஆனால் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட எனக்குத்தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதேவரிகள் சாந்தனின் முருகனின் தாயார்களுக்கும் கூடவே பொருந்தும்.

ஆனால் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட எனக்குத்தெரியாது.

முருகன் அவர்களின் தாயார்.

பேரறிவாளன்  அவர்களின் தாயார்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவருடம் பேரறிவாளன் பற்றிய செய்தியொன்று வந்தது அதுபற்றி பேரறிவாளனுடன் சிறையிருந்த ஒரு நண்பருடன் பேசிய போது அவர் பேரறிவாளனின் நிலமையைச் சொன்ன போது அந்தத் தோழனுக்காக எழுதிய வரிகள் தான் மேலே உள்ளவை.

சாந்தன் , முருகன் , பேரறிவாளன் ஆகிய மூவருக்காகவும் பிரார்த்திப்போம். அவர்கள் நிரந்தர விடுதலை பெற.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா கட்டாயம் அவர்கள் விடுதலை அடைவார்கள், எல்லோரின் பிரர்த்தனையும் வீண் போக, எத்தனை ஆக்கிரமங்களை செய்தவர்கள் சுதந்திரமாக திரியும் போது, கடவுள் கட்டாயம் இவர்களை விடுதலை செய்வார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்புவோம் உடையார் அவர்களுக்கு நன்மை நிழக வேணும்.

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணக்கயிற்றின் முன் நின்ற நிரபராதிகள் மூவரின் மரணதண்டனை ரத்தானது உலகத்தமிழர்கள் மனசில் தந்த நிம்மதி இன்று. விரைவில் எங்கள் அண்ணன்கள் விடுதலைபெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் விடுதலையாவது மாத்திரமன்றி, உண்மையான குற்றவாளிகள் உள்ளே போகும் நாள் வர வேண்டும், சாந்தி!

 

நரிகள் சிம்மாசனத்தில் அமர்ந்து, அரசோச்சும் காலம் கூட முடிவுக்கு வரவேண்டும்!

 

கவிதைக்கு நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1743454_1450363401861033_1871654527_n_zp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் விடுதலையாவது மாத்திரமன்றி, உண்மையான குற்றவாளிகள் உள்ளே போகும் நாள் வர வேண்டும், சாந்தி!

 

நரிகள் சிம்மாசனத்தில் அமர்ந்து, அரசோச்சும் காலம் கூட முடிவுக்கு வரவேண்டும்!

 

கவிதைக்கு நன்றிகள்!

7பேருக்குமான விரைவான விடுதலைச் செய்தி நம்பிக்கை தருகிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும். தர்மம் கொடுத்த விலை அதிகம் ஆனால் அதர்மத்தை அழித்தொழிக்கும் நம்புவோம் புங்கையூரான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூக்கைத் தூக்கித் தூர எறிந்தவர்கள்
நாளை வருவார்கள் நாயகர்களாய்...

 

மாலைகள் சூட மலர் சேர்ப்போம்..
மங்களம் பாடக் கரம் கோர்ப்போம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.