Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயாவின் ஏடு தொடக்கல்...

Featured Replies

இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி

இனிப்பும் கசப்புமாய் என் காதல்

காதலுக்கு பல எதிரிகள்

இங்குண்டு மற்றவர்களுக்கு?

ஏனோ எனக்கு என்

காதலே எதிரியாய் போனதேன்?

அன்பாய் தான் இருக்கிறான்

அழகாய் தான் எனை ரசிக்கிறான்

நிறைவாய் தான் தருகிறான்

நிறைமதியாய் எனை தாங்குறான்

இருந்தும் எனக்கேனோ

நிம்மதியாய் ஒருநாளும்

உறங்கமுடியவில்லை..

என்னவனின் அன்பு

முகம் இதுவெனில்

அவன் அடுத்த முகம்...

நண்பர்கள் உனக்கெதுக்கு

வேண்டாம் என விட்டுவிட்டேன்

நானிருக்க சுற்றம் ஏன்

அதை கூட விட்டு விட்டேன்

படிப்பெதற்கு, வேலை எதற்கு

நான் உன்னை பார்த்துக்கொள்வேன்

அவன் மேல் உள்ள அன்பில்

அத்தனையும் துறந்துவிட்டேன்

கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள்

நானா? அவர்களா?

என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?

எப்படி தான் சுவாசிக்க முடியும்?

கல்லானானுல் கணவன்

புல்லானாலும் புருஸன்

என வாழவா??

அல்ல

என்க்கென ஒரு மனம்

இருக்கென நான் முதலில்

உணர்ந்து

வேறு பாதை செல்லவா?

இனிக்கும் காதல்

எனக்கு மட்டும்

இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!

  • Replies 60
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

து}ய் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் தொடக்கம் இப்படி கசப்பில போயிட்டுது சரி சரி.... கதையின் நாயகன். என்ன உங்கள முற்காலத்திற்கு கொண்டு போக நிக்கிறார் போல. இது ஆபத்து மணியாக்கிடக்கு.. பெற்றோர்களை தவிர்க்க வேண்டிய நிலை என்ன ஆஆஆஆஆ.... படிப்பு வேலை எல்லாம் இன்றைய காலத்திற்கு ஒரு பெண்ணிற்கு அவசியம். (கணவன் காதலன் அப்புறம் தான்) கண்டபடி தலையாட்டாமல் படிச்சு சமத்தா நல்லா வழணும் ஓகேயா..?? இதைப்பாத்தால் காதல் மாதிரியில்லை உங்கட சிறகுகளை ஆதரவுகளை வெட்டி அநாதையாக்கிறமாதிரிக்கிடக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்... தமிழினி அக்காவின் கருத்துக்கள் என்றும் பெண் புரட்சி போலத்தான் அமையும். :wink: இருப்பினும் அந்த கருத்துத்தான் என்னுடையதும்... எல்லாவறையும் இழக்க வேண்டியதில்லை

அப்புறம் தூயா... எல்லொருக்கும் இனிக்கும் காதல் என்று சொல்லுறது பிழை.. எல்லொருக்கும் கசக்கும் காதல் உங்களுக்கு மட்டும் கூடவே கொஞ்சம் இனிப்பையும் தருது என்று சந்தோசப்படுங்கள்.

தூயா கவிதை நல்லாயிருக்கு

இது கவிதையா மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.எப்பவுமே எம்மை காதலிப்பவர்கள்எண்டா எங்களுக்கான சுதந்திரத்தை உணர்வுகளை உறவுகளை நண்பர்களை கட்டுப்படுத்துபவர்களாக இருக்காயினம் என்பது எனது ஊகம் மட்டுமல்ல அனுபவமும்அது தான்.

தொடர்ந்து எழுதுங்க வாசித்து விமர்சிக்க நாங்களிருக்கிறம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்... தமிழினி அக்காவின் கருத்துக்கள் என்றும் பெண் புரட்சி போலத்தான் அமையும். இருப்பினும் அந்த கருத்துத்தான் என்னுடையதும்... எல்லாவறையும் இழக்க வேண்டியதில்லை

கிளம்பீட்டாங்கையா யாரிட்டையோ முறையா வாங்கித்தாறதிற்கு பாவம் அந்தக்குழந்தை வருத்தப்பட்டு எழுதுதே என்று ஆறுதல் சொன்னா.. :P

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லா இருக்கு தூய்ஸ்....காதல்னா கொன்ஞ்ஞம் கசக்கும்ப்பா...பட் அதுல தான் கிக்கே இருக்கு தெரியுமா...வார தடைகளை உடைத்து வெற்றிகானனும்..போராடி ஜெயிக்கிற காதல் அனுபவம் ஒரு இனிமையானது... :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் 10000 கருத்த இதோட எழுதிட்டிங்க வாழ்த்துக்கள்...தமிழ்.........

  • தொடங்கியவர்

அடப்பாவிகளா இது என் காதல் என்றே முடிவு பண்ணீட்டிங்களா? நானாக இருந்தால் நடக்கிறதே வேறு...

இது என் கதை அல்ல, ஒரு கதை புத்தகத்தின் சுருக்கம்...

என்னை மிகவும் பாதித்ததால் எழுதினேன்..

அனைவருக்கும் நன்றி. தவறுகளை சுட்டி காட்டினால் திருந்தலாம் ;)

தூயா உங்கள் கன்னிக்கவிதை நன்றாக உள்ளது. உண்மையான காதலன் ஒரு நாளும் நீங்கள் கூறியது போல் செய்யச்சொல்லிக் கேட்கமாட்டார். ம்ம் மேலும் தொடர்ந்து எழுதுக

தூயா உங்கள் கன்னிக்கவிதை நன்றாக உள்ளது. உண்மையான காதலன் ஒரு நாளும் நீங்கள் கூறியது போல் செய்யச்சொல்லிக் கேட்கமாட்டார். ம்ம் மேலும் தொடர்ந்து எழுதுக

எப்படி தெரியும் ரசிகை?

ம்ம் தூயா வாழ்த்துக்கள். கவி அருமையாய் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,

தொடக்கமே சிந்தனைக்கான விடயங்களாகத் தெரியுதே...வாழ்த்துக்கள்...

இன்னும் நிறையத் தாருங்கள்...

அதென்ன "உண்மைக்" காதலன் & "பொய்க்" காதலன்..???

காதலன் என்றால் காதலன் தானே..

உண்மையாகத்தானே இருப்பான்...

அப்படி இல்லாவிட்டால் அது வேறு ஏதோ...

இது என்னுடய சிந்தனை...

ஏனையோர் கருத்துகளையும் மதிக்கிறேன்...

கல்லானாலும் கணவன்

(F)புல்லானாலும் புருஸன்

என வாழனும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

டுயா பபா பாராட்டுகள் நான் ஏதோ அ ஆ இ எழுதியிருப்பீராக்கும் திருத்தலாம் வந்து பாத்தன் காதல் கவிதை எனக்கு உதெல்லாம் திருத்த தெரியாது :P :P :wink:

  • தொடங்கியவர்

அனைவருக்கும் மிக்க நன்றி.

சி*5 என்ன உங்கள பற்றி கதைக்கிற போல இருக்கு!!!!! :P

சாஸ்த், இதுவும் அ ஆ தானே.. ;)

அடப்பாவிகளா இது என் காதல் என்றே முடிவு பண்ணீட்டிங்களா? நானாக இருந்தால் நடக்கிறதே வேறு...

அதுதானே .... :) :wink:

வாழ்த்துக்கள் தூயா ... கவி நன்றாக இருக்கு .. தொடர்ந்து எழுதுங்க... :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா கவிதை நல்லாயிருக்கு

இது கவிதையா மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.எப்பவுமே எம்மை காதலிப்பவர்கள்எண்டா எங்களுக்கான சுதந்திரத்தை உணர்வுகளை உறவுகளை நண்பர்களை கட்டுப்படுத்துபவர்களாக இருக்காயினம் என்பது எனது ஊகம் மட்டுமல்ல அனுபவமும்அது தான்.

தொடர்ந்து எழுதுங்க வாசித்து விமர்சிக்க நாங்களிருக்கிறம்

ஆம் சரியாகச்சொன்னீர்கள் உங்கள் கருத்துக்களை நானும் என்னுடைய அனுபவபூர்வமாக ஆமோதிக்கிறேன்

எப்படி தெரியும் ரசிகை?quote]

எல்லாம் அனுபவம்தான்.. :P

  • கருத்துக்கள உறவுகள்

அடடே தூயா கவிதையும் தொடங்கியாச்சோ.வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளம்பீட்டாங்கையா யாரிட்டையோ முறையா வாங்கித்தாறதிற்கு பாவம் அந்தக்குழந்தை வருத்தப்பட்டு எழுதுதே என்று ஆறுதல் சொன்னா.. :P

குறிப்பால கதைச்சால் எனக்கு எப்படி புரியும்?? :roll: :roll:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :) :) :D:lol:

அக்கி, எதுக்கு நீங்க விஸ்ணுஅண்ணாவ குழப்புறிங்க :P

ம்ம்ம்... தமிழினி அக்காவின் கருத்துக்கள் என்றும் பெண் புரட்சி போலத்தான் அமையும். :wink: இருப்பினும் அந்த கருத்துத்தான் என்னுடையதும்... எல்லாவறையும் இழக்க வேண்டியதில்லை

அப்புறம் தூயா... எல்லொருக்கும் இனிக்கும் காதல் என்று சொல்லுறது பிழை.. எல்லொருக்கும் கசக்கும் காதல் உங்களுக்கு மட்டும் கூடவே கொஞ்சம் இனிப்பையும் தருது என்று சந்தோசப்படுங்கள்.

தமிழினி அக்கா புரட்சி செய்யச் சொல்லேல்ல...யதார்த்தமா காலத்துக்கு ஏற்றதா வாழ வேண்டிய கட்டாயத்தைச் சொல்லுறா..! ஏற்கனவே ஆண்களும் பெண்களும் உதுகளைக் அறிஞ்சோ அறியாமலோ கடைப்பிடிச்சுத்தான் வாழினம்..! அப்படி வாழதாவர்களுக்கு தமிழினி அக்கா சொல்லிக்கொடுக்கிறா போல...! :wink: :)

தூயா பாப்பாவின் ஏடு தொடக்கல் அசத்தல்...தொடருங்கோ...! அண்ணாவின் வாழ்த்துக்கள்..! :P :idea:

து}ய் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் தொடக்கம் இப்படி கசப்பில போயிட்டுது சரி சரி.... கதையின் நாயகன். என்ன உங்கள முற்காலத்திற்கு கொண்டு போக நிக்கிறார் போல. இது ஆபத்து மணியாக்கிடக்கு.. பெற்றோர்களை தவிர்க்க வேண்டிய நிலை என்ன ஆஆஆஆஆ.... படிப்பு வேலை எல்லாம் இன்றைய காலத்திற்கு ஒரு பெண்ணிற்கு அவசியம். (கணவன் காதலன் அப்புறம் தான்) கண்டபடி தலையாட்டாமல் படிச்சு சமத்தா நல்லா வழணும் ஓகேயா..?? இதைப்பாத்தால் காதல் மாதிரியில்லை உங்கட சிறகுகளை ஆதரவுகளை வெட்டி அநாதையாக்கிறமாதிரிக்கிடக்க
  • தொடங்கியவர்

அய்ய்ய்ய் குருவி பபா :):):D

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :oops:

தங்கள் பதிலை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி...வெறும் வீடும் படிப்பும் பட்டமும் வேலையும் வாழ்வல்ல...! வாழ்வில் நிறையப்படிநிலைகள் இருக்கு....! அவற்றையும் எதிர்கொள்ள வழிசொல்லுங்கோ..! வெறுமனவே ஆண்கள் எதிர்ப்புணர்வை மட்டும் எதிலும் முதன்மைப்படுத்தாதேங்கோ..! ஆணுக்குள்ளும் ஒரு மனம் இருக்கு என்பதை அறிய கற்க வழிசொல்லிக் கொடுங்கோ பெண்களுக்கு...! அப்படி நீங்களும் கனக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு..! எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி எடைபோடாதேங்கோ...!

ம் எங்கை கீச்சிடக்காணல்ல என்று நினைச்சன். வீடும் படிப்பும் வாழ்வென்று சொல்லேல்ல.. பெண்களுக்கு சுயசிந்தனை ஆளுமை இதுகள் அவசியம். அதை வளர்க்கத்தான் படிக்கணும். என்றன். மற்றவையிட்ட கையேந்தி நிக்காமல் வேலை செய்தால் அவளால் மற்றவையில சாராமல் நிக்கமுடியும். எல்லாத்திற்கும் யாருடைய கையை ஆவது பாத்திட்டு நிண்டால் சரிப்படுமோ..?? வாழ்க்கையில வாற எல்லாப்படிகளையும் எதிர்கொள்ள முக்கியமாய் தேவையானதுகளைத்தான் சொல்லிக்கிடக்கு. பின்ன உந்த கதாநாயகனிற்கு மனசு கிடக்கிறதாய் தெரியல.. அடிமையா வைச்சிருக்க நினைக்கிறபோல தான் கிடக்குது. இதை ஆண்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு என்று எடுக்கிறீங்களா..?? இல்லை.. பெண்களுக்கு உரிய விழிப்புணர்வே இது மாறி எடுத்தா என்ன பண்ண நான்.

:roll: :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் மற்றும் தமிழினி,

இருவரினதும் கருத்துக்கள் அவரவர் கருத்து நிலையில் எனக்கு சரியாகவே படுகிறது...

நல்ல கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்...

இப்படிப் பயனுடைய நிறையக் கருத்துகளைத் தாங்கோ.....

தூயா,

உங்கட "ஏடு தொடக்கலே" இப்படி நல்ல கருத்தாடல்களுக்கு வழியமைப்பதையிட்டு மகிழலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.