Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் தாயை பார்க்க இலங்கை வரக் கூடும்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ltte_piraba_parvathi-ammal.jpgதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உடைய உடன் பிறப்புக்கள் இலங்கை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தாய் பார்வதி அம்மாள் உடல் நலக் குறைவால் யாழ்.வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆயினும் அவரின் உடல் நிலை மிகவும் மோசம் என்று கூறா விட்டாலும் நம்பிக்கை ஊட்டக் கூடிய விதத்தில் இல்லை. அவர் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்கிற பேரவாவை வெளிப்படுத்தி வருகின்றார். இது அவரின் இறுதி ஆசை என்று நம்பப்படுகின்றது.

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியுமான கே.சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை வைத்தியசாலையில் பார்வதி அம்மாளை நேரில் போய் சுகம் பார்த்தார்.

பிரபாகரன் குடும்பத்துக்கு சிவாஜிலிங்கம் உறவினர் மட்டும் அல்லர், மிகவும் நெருக்கமானவரும் கூட. பார்வதி அம்மாள் இறுதி ஆசையை சிவாஜிலிங்கத்துக்கு தெரிவித்து உள்ளார். பிரபாகரனின் உடன்பிறப்புக்களுக்கு சிவாஜிலிங்கம் தாயின் இறுதி ஆசையை தெரிவித்து நாட்டுக்கு வரக் கோரி உள்ளார். பிரபாகரனின் ஒரு சகோதரி விநோதினி இராஜேந்திரன் கனடாவில் வாழ்கின்றார்.

இன்னொரு சகோதரியான ஜெகதீஸ்வரி மதியாபரணம் சென்னையில் வாழ்கின்றார். சகோதரன் மனோகரன் டென்மார்க்கில் வாழ்கின்றார். பார்வதி அம்மாள் முன்பு பல தடவைகள் கனடாவுக்கு சென்று மகள் விநோதினியுடன் வாழ விரும்பியபோதிலும் கனேடிய அரசு விசா அனுமதி வழங்க மறுத்து விட்டது.

பிள்ளைகளை பார்க்க விட்டாலும் பேரப் பிள்ளைகளையாவது பார்க்க வேண்டும் என்கிற பேராவலில் அவர் உள்ளார். அம்மையாரின் பிள்ளைகள் ஆயினும் சரி, பேரப் பிள்ளைகள் ஆயினும் சரி இலங்கை வர விரும்பும்பட்சத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.http://www.tharavu.com/2010/10/blog-post_7512.html

  • கருத்துக்கள உறவுகள்

(துயரம்) ஏங்கித் தவிக்கும் பிரபாகரனின் தாய்

என் பிள்ளைகள் வருவார்களா?

'பிரபாகரன் வருவாரா..?' என தமிழ் இன உணர்வாளர்களே எதிர்பார்த்துக் கிடக்க,

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளோ, இறுதிக் காலத்தில் தன்னைக் காணப் பிள்ளைகள் வருவார்களா என புத்திர பாசத்தில் ஏங்குகிறார்!

பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கடந்த ஜனவரியில் இறந்ததில் இருந்தே, தனியாகக் கிடந்து அவதிப்படுகிறார் பார்வதி அம் மாள். கணவன் இறந்ததை உணர்ந்தும் உணராமலும் அவரை நினைத்தே அழுது கொண்டு இருந்தவரை, ஒருவாறு தேற்றி மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2-ம் தேதி மலேசியாவுக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கு இருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்து, திருச்சியில் சிகிச்சை அளிக்கவும் அவர் குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஏப்ரல் 16-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தவரை, கீழே இறங்கவிடாமல் திருப்பி அனுப்பிவிட்டது இந்திய அரசாங்கம். பிறகு மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பார்வதி அம்மாள், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறைமாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பார்வதி அம்மாளுடன் மயிலேறும் பெருமாள்

'' பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர், 'என்னைப் பார்க்க என் பிள்ளைகள் வரமாட்டார்களா? எனக் கேட்டு, 82 வயதில் சிறு குழந்தை போல கண்ணீர் விடுகிறார். கடந்த ஒரு மாத காலமாக அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது...'' என்று யாழ்ப்பாணத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

கடந்த 10 மாதங்களாகஅவருக்கு சிகிச்சை அளித்துவரும் வல்வெட்டித் துறை மாவட்டமருத்துவமனை அதிகாரி டாக்டர் மயிலேறும் பெரு மாளிடம் பேசினோம். தன் ஆதங்கத் தைக் கொட்டினார்.

''பார்வதி அம்மாவுக்கு தண்ணீர் உணவுதான் கொடுக்கிறோம். பால், திராட்சைப் பழச்சாறு, நெல்லிக்காய் சூப், இடையிடையே ஆப்பிள், பிஸ்கெட்டுகளைக் கொடுக்கிறோம். அய்யா வேலுப்பிள்ளையை நினைச்சு நினைச்சு, 'என்ட அய்யா என்ட அய்யா'ன்னு அடிக்கடி அழறாங்க. இந்த மருத்துவமனையில என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செய்து தருகிறோம். சிகிச்சைகளைக் கொடுக்கிறோம். ஆனால், அவருடைய மனப் பிரச்னைக்குத்தான் எங்களால் எதுவும் செய்ய முடியலை. புத்திர பாசத்தால்துடிக்கிறாங்க. ஒரு மாதமா ரொம்ப அடம் பிடிக்கிறாங்க... செவிலிமார் உள்ளூர்க்காரர்களா இருக்கிறதால், சமாளிச்சுப் பார்க்கிறோம்.

கனடாவில் இருக்கிற மகள் வினோதினியும், டென்மார்க்கில் உள்ள மற்றொரு மகன் மனோகரனும் இரண்டொரு நாளுக்கு ஒரு முறை பேசிக்கொண்டுதான் இருந்தாங்க. தினம் தினம் பேசினாலும் என்ன பிரயோசனம்? 'பெத்த பிள்ளைகள் இருந்தும் தன்னை வந்து பார்க்கலையே'ன்னு மனுஷிக்கு வெறுத்துப்போச்சு. உறவினர்கள் அவ்வப்போது வந்துபோகும்போது, அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். இதுதான் இப்போ அவருக்கு அருமருந்து. ஆனா, பிள்ளைகள் ரெண்டு பேருக்கும் இங்க வந்தா எவனாவது சுட்டுப்போடுவான்னு பயம். இவ்வளவு நடந்தபிறகும் இனியும் ஏதாவது நடந்துவிடுமா என்ன..!

வினோதினியோ, மனோகரனோ வெளிநாட்டு பிரஜைகள். கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டவர், பாதுகாப்புத் துறை அனுமதி பெற்றுத்தான் இங்க வரமுடியும். அப்படி அவர்கள் வரும்போது கொழும்பில் இருந்து பலாலிக்கு விமான நிலையம் வழியாக பாதுகாப்பாக இங்கு வரமுடியும். இவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் வராமல் பார்க்கவும் முடியும். 10 மாதங்களாக நான்தான் அம்மாவின் சிகிச்சைக்குப் பொறுப்பு என்ற முறையில், இதை என்னால் செய்யமுடியும்.

வினோதினி, 'அம்மாவை கனடாவுக்கு அழைத்துக்கொள் கிறோம்...' என்று சொல்கிறார். எத்தனை மாதமா முயற்சி செய்துகொண்டே இருப்பது? அதனால், 'நீங்க வராவிட்டாலும் உங்கள் பிள்ளைகளையாவது அனுப்புங்க. அவங்களைப் பார்த்து அந்த அம்மா சந்தோஷமா இருப்பாங்க'ன்னு சொல்றேன். அதுக்கு ரெண்டு பிள்ளைகளும் உறுதியான பதில் சொல்லலை. அந்த அம்மாவுக்கு நாளுக்கு நாள் வேகம் குறைஞ்சுகிட்டுஇருக் கிறது. எத்தனை நாளைக்குத்தான் செவிலிமாரும் மருத்துவர்களும் வெற்று சமாதானம் சொல்லமுடியும்?'' என்றார் அவர்.

தற்போது, பார்வதி அம்மாளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் யாழ்ப்பாண எம்.பி-யும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சிவாஜிலிங்கத்திடம் பேசினோம். ''அம்மா சிகிச்சை பெறுகிற வல்வெட்டித்துறை வைத்தியசாலையில், 94-ம் ஆண்டு, தரைக்குக் கீழே விடுதலைப் புலிகள் அறுவைச் சிகிச்சை கூடத்தை உருவாக்கினாங்க. அதை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கும்முன்பே ராணுவம், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. அந்தக் கூடத்தைப் பார்க்க சுற்றுலாவாசிகளாக வரும் முகமறியாத சிங்கள மக்கள்கூட, அம்மாவையும் பார்த்துட்டுப் போறாங்க. சிலர் தொலைவா நின்று பார்த்துட்டுப் போறாங்க. சிலர் காலில் விழுந்து கும்பிட்டும் போறாங்க. அந்த அம்மாவோட ஒரே ஏக்கம், தன் பிள்ளைகளைப் பார்ப்பதுதான். எப்படியோ, நம் தாயை கடைசிக் காலத்தில் நாம்தானே கண்கலங்காமல் வைத்திருக்க வேணும்...'' என்றார் சிவாஜிலிங்கம்!

- இரா.தமிழ்க்கனல்

விகடன்.

இசைக்கலைஞன் மேடைக்கு வரவும்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்தப் பிள்ளைகள் போய் தாயை பார்க்காமல் இருக்கிறார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் மேடைக்கு வரவும்! :D

எதுக்கு நெல்லை? :lol:

எதுக்கு நெல்லை? :lol:

இசை ... முன்பு சிலர், தம்மை தூக்கி வளர்த்தவர்கள் படுக்கையில் வீழ்ந்த போது, அவர்கள் அவர்களை பார்க்க இலங்கை சென்றதை ... உங்கள் மொழியில், உங்களோடு இன்னும் சிலர் ... இங்கு ... "கடைந்தெடுத்த அயோக்கியதனம்" ... என்று விளித்தீர்கள்!!!!!!! ... இத்தலைப்பிற்கு என்ன எழுத/சொல்லப்போகிறீர்கள் என்பதை பார்க்கத்தான்!!!!?????

.... குருக்கள், குசு விட்டால் .....!!!!!!????????

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் செல்வது புத்திசாலித்தனமானதும் பாதுகாப்பானதுமல்ல. சிறிலங்கா அரசு எந்த வித உத்தரவாதத்தையும் தந்ததுமில்லை. காப்பாற்றியதுமில்லை.

2வது, அவர்கள் செல்வதை வைத்து சிங்கள அரசு என்னுமொரு பிரச்சாரத்தையும் செய்யக் கூடும். தலைவரது சகோதரர்களை இலங்கைக்கு அனுமதித்தன் மூலம், சிறிலங்கா பாதுகாப்பானது என்ற வகையில். ஏற்கனவே பெரும் கஸ்டத்தின் உச்சமாக அகதிக் கோரிக்கைகள் மீதான சட்டங்கள் இறுக்கப்படும் அவ் நாட்டு அரசாங்கள் மேலும் கடுமையான சிந்தைனையை உருவாக்கவும் இது வழி செய்து விடும்.

பார்வதியம்மாள் பிள்ளைகளைப் பார்க்க ஆசைப்படுகின்றார் என்பது கூட ஒரு வகைச் சதியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். அதையே தொடர்ச்சியாகக் கூறுவது என்பது பின்ணனியில் ஒரு சதித்திட்டத்தை மையப்படுத்தியே ஆகும். பாசத்தை முக்கியப்படுத்துவதன் நோக்கமும் அதுவாகவே இருக்கலாம்.

ஏன் அந்தப் பிள்ளைகள் போய் தாயை பார்க்காமல் இருக்கிறார்கள் :lol:

பரவாயில்லையே.. எவ்வளவு கரிசனையான கேள்வி!!

பார்வதியம்மாள் பிள்ளைகளைப் பார்க்க ஆசைப்படுகின்றார் என்பது கூட ஒரு வகைச் சதியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். அதையே தொடர்ச்சியாகக் கூறுவது என்பது பின்ணனியில் ஒரு சதித்திட்டத்தை மையப்படுத்தியே ஆகும். பாசத்தை முக்கியப்படுத்துவதன் நோக்கமும் அதுவாகவே இருக்கலாம்.

இந்த சிங்கள சதியின் பின்னணியில் ... அரசியல்வாதி சிவாஜிலிங்கமும், புலத்து பூசாரிகளின் ஊடகங்கள் பதிவு, ஈழமுரசு போன்றன உள்ளன!! ... தொடர்ந்து பார்வதி அம்மாளுக்காக அழும் கூட்டம் இவைதான்!! பின்னணி என்ன????????

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் செல்வது புத்திசாலித்தனமானதும் பாதுகாப்பானதுமல்ல. சிறிலங்கா அரசு எந்த வித உத்தரவாதத்தையும் தந்ததுமில்லை. காப்பாற்றியதுமில்லை.

2வது, அவர்கள் செல்வதை வைத்து சிங்கள அரசு என்னுமொரு பிரச்சாரத்தையும் செய்யக் கூடும். தலைவரது சகோதரர்களை இலங்கைக்கு அனுமதித்தன் மூலம், சிறிலங்கா பாதுகாப்பானது என்ற வகையில். ஏற்கனவே பெரும் கஸ்டத்தின் உச்சமாக அகதிக் கோரிக்கைகள் மீதான சட்டங்கள் இறுக்கப்படும் அவ் நாட்டு அரசாங்கள் மேலும் கடுமையான சிந்தைனையை உருவாக்கவும் இது வழி செய்து விடும்.

பார்வதியம்மாள் பிள்ளைகளைப் பார்க்க ஆசைப்படுகின்றார் என்பது கூட ஒரு வகைச் சதியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். அதையே தொடர்ச்சியாகக் கூறுவது என்பது பின்ணனியில் ஒரு சதித்திட்டத்தை மையப்படுத்தியே ஆகும். பாசத்தை முக்கியப்படுத்துவதன் நோக்கமும் அதுவாகவே இருக்கலாம்.

பரவாயில்லையே.. எவ்வளவு கரிசனையான கேள்வி!!

சில வேளைகளில் அவர்கள் போக வெளிக்கிட்டால் அதற்கு என்ன சொல்வீர்கள் தூயவன்?...அவர்கள் போவதை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை அரசு பாதுகாப்பானது என சொல்லத் தேவையில்லை ஏற்கனவே பெரும் தொகையானோர் நாள் தோறும் அங்கே போய்க் கொண்டு தான் இருக்கினம்.

அவர்கள் போய் பார்ப்பதை விரும்புகின்றேன். ஒரு பெரும் தலைவனை பெற்றெடுத்த அன்னையின் இறுதி ஆசையாவது நிறைவேறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் போய் பார்ப்பதை விரும்புகின்றேன். ஒரு பெரும் தலைவனை பெற்றெடுத்த அன்னையின் இறுதி ஆசையாவது நிறைவேறட்டும்.

அதுதான் எனது விருப்பமும்.

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில் அவர்கள் போக வெளிக்கிட்டால் அதற்கு என்ன சொல்வீர்கள் தூயவன்?...அவர்கள் போவதை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை அரசு பாதுகாப்பானது என சொல்லத் தேவையில்லை ஏற்கனவே பெரும் தொகையானோர் நாள் தோறும் அங்கே போய்க் கொண்டு தான் இருக்கினம்.

சாதாரணமாகப் போகின்றவர்களுக்கும், இவர்கள் போவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்களின் செயற்பாடு என்பது ஊடகங்கள் மட்டுமல்லாமல், அரசியலிலும் இடம்பெறக்கூடியது என்பதால் தான் பத்திரிகைச் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் எந்த நிலையில் லண்டனில் அகதியாகவா, அல்லது கணவர், சகோதரங்கள் ஸ்பொன்சர் பண்ணியா என்று தெரியாது. ஆனால் அகதிகள் தொடர்பாக கனடா கொண்டு வருகின்ற சட்டங்களில் இதுவும் ஒரு வகை இடத்தைப் பிடிக்கப் போகின்றது.

சமீபத்தில் கனடா அமைச்சர் சொன்ன ஒரு வாக்கியம் "சிலர் பொருளாதார குடியேற்றவாசிகள், சிலர் நியாயமான புகலிடக் கோரிக் கையாளர்கள் எனினும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களைத் தடுக்க குடிவரவுச் சட்டம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும்.

இலங்கையிலிருந்து வெளியேறி கனடாவில் புகலிடம் கோரியவர்களில் அனேகமானோர் ஏதாவது ஒரு காரணத்துக்காகவாவது தமது நாட்டுக்குச் சென்று திரும்புகின்றனர். அச்சமான நாடு எனக் குற்றஞ்சாட் டியவர்கள் நாட்டுக்குச் செல்கின்றனர்"

நான் குடியுரிமை பெற்று விட்டேன் என்பதற்காக பின்னால் வருகின்றவர்கள் தொடர்பாக கவலைப்படாமல் இருக்க முடியாது.

இந்த சிங்கள சதியின் பின்னணியில் ... அரசியல்வாதி சிவாஜிலிங்கமும், புலத்து பூசாரிகளின் ஊடகங்கள் பதிவு, ஈழமுரசு போன்றன உள்ளன!! ... தொடர்ந்து பார்வதி அம்மாளுக்காக அழும் கூட்டம் இவைதான்!! பின்னணி என்ன????????

யாரையும் துரோகி என்று சொல்லும் நிலையில் இல்லை. தெரிந்தோ, தெரியாமலோ நடக்கின்ற செயற்பாடுகள் இவை. திரும்பவும் மலேசியாவிற்கோ, அல்லது வேறு ஒரு நாட்டிற்கோ கொண்டு செல்ல சிவாஜிலிங்கத்தால் முடியாதா?? முதுமை, உடல்நிலை என்று ஏதாவது சொல்லிக் கொள்ளலாம்...

ஆனால் கட்டாயம் யாழ்பாணத்துக்கே பிள்ளைகளை வரவைக்க வேண்டும் என்று முயற்சிப்பதன் பின்ணனியில் ஏதோ இருக்கின்றது? அவதானமாக செயற்படுங்கள் என்பது தான் என் தனிப்பட்ட கருத்து..

அவர்கள் போய் பார்ப்பதை விரும்புகின்றேன். ஒரு பெரும் தலைவனை பெற்றெடுத்த அன்னையின் இறுதி ஆசையாவது நிறைவேறட்டும்.

அவருடைய இறுதி ஆசை மட்டும் என்ற கருத்தோட்டத்தோடா எழுதுகின்றீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாவிற்காக இலங்கை செல்வது வேறு.

தன் நோய்வாய்ப்பட்ட பெற்றோரைப் பார்க்கச் செல்வது வேறு.

பிள்ளைகளின் கடமைகளில் இதுவும் ஒன்று

கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு தாயைச் சென்று பார்க்கும் பிள்ளைகளை உலகம் என்றும் போற்றுமே தவிர தூற்றாது.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் மீறி போய்ப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள் என்றால் ஒவ்வொருவராக போய்ச் சென்று பாருங்கள். குறித்தவர் போய் வந்தவுடன் மற்றவர் போவது போல... கூட்டமாகப் போவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் கூட்டமாக வலையில் மட்டுப்படுவதே எங்களின் வேலையாகப் போய்ப் விட்டது..

சுற்றுலாவிற்காக இலங்கை செல்வது வேறு.

தன் நோய்வாய்ப்பட்ட பெற்றோரைப் பார்க்கச் செல்வது வேறு.

பிள்ளைகளின் கடமைகளில் இதுவும் ஒன்று

கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு தாயைச் சென்று பார்க்கும் பிள்ளைகளை உலகம் என்றும் போற்றுமே தவிர தூற்றாது.

வாத்தியார்

*********

ஆமாம். இத்தனை அழிவுகள் சிங்கள தேசம் தந்த பிறகு அழிவு கண்ட தமிழன் என்று உலகம் போற்றிக் கொண்டு தானே இருக்கின்றது. அவர்களுக்கான பாதுகாப்பு உத்தவாதத்தை நீங்கள் கொடுப்பீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

இசை ... முன்பு சிலர், தம்மை தூக்கி வளர்த்தவர்கள் படுக்கையில் வீழ்ந்த போது, அவர்கள் அவர்களை பார்க்க இலங்கை சென்றதை ... உங்கள் மொழியில், உங்களோடு இன்னும் சிலர் ... இங்கு ... "கடைந்தெடுத்த அயோக்கியதனம்" ... என்று விளித்தீர்கள்!!!!!!! ... இத்தலைப்பிற்கு என்ன எழுத/சொல்லப்போகிறீர்கள் என்பதை பார்க்கத்தான்!!!!?????

நெல்லை.. உங்களுக்கான பதிலை வாத்தியார் தந்திட்டார்..! அதையேதான் நாங்களும் சொல்லி வந்திருக்கிறம்..! :D

சுற்றுலாவிற்காக இலங்கை செல்வது வேறு.

தன் நோய்வாய்ப்பட்ட பெற்றோரைப் பார்க்கச் செல்வது வேறு.

ஏன் அந்தப் பிள்ளைகள் போய் தாயை பார்க்காமல் இருக்கிறார்கள் :D

அதுவா சில நேரம் இலங்கை சென்றால் தலைவர் மகிந்தாவை சந்திக்க வேண்டிவரலாம் பூகொடுத்து ஆசிர்வாதமும் வாங்க வேண்டி வரும் அதன் பின்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.