Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது இப்போதைய தேவை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செங்கதிர்

வணக்கம்

தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை?

காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

செங்கதிர்

வணக்கம்

தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை?

காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

உங்களால் இவற்றில் எதை உறுதியாகவும் முழுமையாகவும் செய்ய முடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை மட்டும் பார்த்து மிகவும் அலட்சியமாக இதை நீங்கள் கேட்டுள்ளதாகவே எனக்குப் படுகிறது. எந்த கட்சியும் தூண்டாமல் உயிர்கள் துடித்துத்துடித்துச் செத்துக்கொண்டு இருந்தபோது தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்கள் மன உளைச்சலில் பைத்தியம் பிடித்தததைப் போல அலைந்தார்கள் என்பதை கண்கூடாகக் கண்டவன் நான்.

இதுகாறும்வரை இருந்துவந்த தகவல்தொடர்புப் பிரச்னைகள், இயக்கம் சார்ந்த மிகைச் செய்திகள், இயக்கத்துக்கு எதிரான இனத்துக்கு எதிரான அவதூறுகள் என்றே தகவல்களை அறிந்துவந்தவர்களுக்கு இப்போது அதைவிட மோசமாக எதிரியின் கருத்துகள் தகவல்களாக வருகின்றன.

இதில் தெளிவாவதற்காகக் கேட்டால் நீங்கள் போகிறபோக்கில் கிண்டல் செய்வது சரியாகுமா?

மன்னிக்கவேண்டும் கிண்டலாக எழுதவில்லை உண்மையாகத்தான் கேட்டேன். தமிழகத்தில் பலர் ஈழத்தமிழினத்திற்காக இன்றுவரை வேதனையோடு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள் என்பது தெரியும். இருப்பினும் அதீத பலங்கொண்டவர்களாக அவர்கள் மாற வாய்ப்புகள் இல்லை. ஊழல் ஆட்சியும், யதார்த்தத்திற்குப் புறம்பான சினிமா மாயைகளும் அங்குள்ள தமிழர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க வைத்திருக்கும் நிலையில் உங்களைப் போன்றவர்கள் எடுககும் முயற்சிக்குத் தலைவணங்குகின்றேன். மற்றப்படி இரண்டு கண்களிலும் பார்வையைப் பறிகொடுத்த ஒருவரிடம் உனக்கு வலது கண்ணில் பார்வை வேண்டுமா? அல்லது இடது கண்ணில் பார்வை வேண்டுமா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

செங்கதிர்

வணக்கம்

தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை?

காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

வணக்கம் செங்கதிர். எமக்கு இரண்டுமே அத்தியாவசியமானவை தான். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை தான் மிக மிக முக்கியமானது.பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக கடந்து செல்கிறார்கள்.

அதற்கு அடுத்தாற் போல போரினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று அவர்களை சுதந்திரமான மக்களாக வாழ வழி சமைக்க வேண்டும்.

இதில் முதாலாவதாக கூறப்பட்டதை யாரும் செய்யமுடியும்.இது அரசியல் சம்பந்தப்பட்டது அல்லாமல் மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது.

செங்கதிர்

வணக்கம்

தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை?

காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

வணக்கம்,

முதலில் உங்கள் கேள்விக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

சுருக்கமாக சொன்னால், நீங்கள் கேட்ட எல்லாமே தேவை. அதிலும் அடிப்படித்தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை முதல் இடம்பெறுகின்றது. மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு தேவை. சுதந்திரமாக வெளியில் நடமாடும் உரிமை வேண்டும். தனது சொந்த வீட்டில் பயமில்லாமல் நித்திரை கொள்ளும் சுவாசம் வேண்டும். தொழில் செய்யும், பாடசாலைக்கு செல்லும் வசதி இவை வேண்டும். இவற்றுக்கு முதல் உணவும் மருத்துவ வசதியும் வேண்டும்.

சர்வதேசம் விடுதலைப்புலிகள் இடமிருந்து மக்களை "விடுவித்து" சொரிலங்காவிடம் வாழவிட்டதாக எண்ணியது, இல்லை எண்ணியது போல காட்டியது. எதுவானாலும் எமது தொப்புள் கோடி உறவான தாய்த்தமிழகம் மற்றைய நாடுகளை விட தமிழருக்கு என்ன இன்று நடக்கின்றது என்பதில் தொடர்ந்தும் அக்கறையாக இருந்து ஆவன செய்யவேண்டிய கடமை உள்ளது.

இத்துடன் தமிழரின் அரசியல் உரிமைகள் தீர்க்கப்படல் வேண்டும். இதுவே நிரந்தர சமாதனத்தை தரும், தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும். விடுதலைப்புலிகளை முன்னின்று அழித்த இந்தியா போட்ட அரசியல் தொலைநோக்கு (?) மீண்டும் ஒரு தோல்வியை அடைந்துள்ளது. சீனாவின் ஆதரவு நாடு என்பதற்கு மேலாக ஒரு இராணுவ உறவாக அது சிங்களத்துடன் செய்யும் உறவு, வளருமுன்னே கிள்ள வேண்டியது ஒன்று.

மொத்தத்தில் தமிழகம், இந்தியா தமிழரை ஒரு மனிதாபிமான எண்ணத்தில் இல்லாது விடினும், ஒரு அரசியல் - பொருளாதார நோக்குடன் என்றாலும் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இதை இன்று செய்யாவிட்டால் கேள்வி இப்படியாகிவிடும்: " இந்தியாவில், தமிழ்‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை?"

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

செங்கதிர்

வணக்கம்

தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை?

காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

:D:lol: :lol:

செங்கதிர்

வணக்கம்

தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை?

காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

... "எங்கேயோ கேட்டுக் கொண்டிருக்கும் குரல்" .!!!!!! :rolleyes:

அடே சிங்களவா, உனக்கு தலை வணங்குகிறேன், நீயோ பெரும் அழிவைத்தந்து, அந்த அழிவைக் கதைத்தே எம்மை சரணாகதி அடையச்சோல்லி, எம்மவர்களயே விட்டிருக்கிறாய்!!! ... என்ன விட்டவர்கள் சிலசமயம் நெஞ்சு வலிக்க வலிக்க சோக்கதைகளை சொல்லி விட்டு உணர்ச்சியின் உச்சத்தில் நாமிருந்து அழ, .... எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், சிங்களவன் தாறானோ??? இல்லையோ??? தயவு செய்து அதனை கேளாதீர்கள்!!! கதையாதீர்கள்????, நாம் நாயிலும் கேவலமாக சிங்களவனோடு சேர்ந்து வாழலாம், ... எனப்பல கதைகள் சொல்லி எம் கண்ணில் இருந்து விழும் நீரை துடைத்து விடுகிறார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!! :wub: :wub: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தானம்கொடுத்து தமிழில் பிரித்தோதி தகனம் செய்யப் பழகுவோம் - வலம்புரி

Posted by: on Nov 3, 2010 “உன்னையே நீ அறிவாய்” என்ற சோக்கிரட் டீஸின் வார்த்தை மிகப் பெரும் ஆழமான அர்த்த முடையது. உன்னையே நீ அறிவாய் என்பது ஒரு சுயமதிப்பீடாகும்.

தன்னைப்பற்றி தானே அறிந்துகொள்ளும் போதுதான் பலம் எது? பலவீனம் எது? என்பது தெரியவரும். என் பற்றிய சுயமதிப்பீடு என்னிடமில்லையென்றால் அது பேராபத்தாகிவிடும். இந்தநிலை தமிழர்களாகிய எம்மிடம் தாராளமாக உண்டு.எல்லாம் எமக்குத் தெரியும். எம்மைவிட திறமை யானவர்கள் எவரும் கிடையாது.

இந்த நினைப்புத்தான் தமிழினத்தை இந்நி லைக்கு கொண்டுவந்தது. இதற்கு மேலாக, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளத்தெரியாத பலவீனமும் தமிழினத்தின் குருதியோடு கலந்து கொண்டதென்பதைச் சொல்லித்தானாக வேண் டும். இதைவிட ஏதேனுமுண்டா என்று கேட்டால், ஆம், நாம் எதையும் சிறிது காலத்துக்கு மட்டுமே தூக்கி துலாம்பரப்படுத்துவோம். காலம் கடந்ததும் அதைக் கைவிட்டுவிடுவோம்.

இந்தப் பலவீனம்தான் எங்களினத்தை சின்னா பின்னப்படுத்தியுள்ளது. எதற்கும் ஒரு முடிபு காணும்வரை எங்கள் சிந்தனையும் முயற்சியும் இருக்குமாயின் நிச்சயம் நாம் வெற்றி பெறமுடியும். பொதுத் தேர்தல் நடந்தபோது தேர்தலில் குதித்த தமிழ் வேட்பாளர்கள் எப்படியயல்லாம் பேசினார்கள். ஆனால் அவர்கள் மிகச் சொற்ப காலத்தில் அதையயல்லாம் மறந்துவிட்டார்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படுவது தொடர்பில் இப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது அல்லது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு இலங்கையரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைதனிலும் நடக்கின்றதா? எதுவுமேயில்லை.

தேர்தலில் வெற்றிபெற்ற வர்கள் தங்கள் பாடு. ஒருசிலர் மட்டுமே களத்தில் நின்று மக்கள்பணி செய்கின்றனர். அப்படியானால் இனப்பிரச்சி னைக்கான தீர்வு எங்ஙனம் சாத்தியமாகும்! கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப் படும், தேடுங்கள் கிடைக்குமென்ற யேசுபிரா னின் வார்த்தைகளில் தங்கள் பிரதிநிதிகளைத் தேடும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருக் கின்றனர். என்னசெய்வது? இனப்பிரச்சினை பற்றி நாங்கள் மறந்துவிட்டோம். இனி அதற்கு முன்னுரிமை கொடுக்கமாட்டோம். அட! இப்போ தெல்லாம் யாழ்ப்பாணத்தில் பாதீனியச் செடி தாராளமாக வளர்ந்து நிறைந்து நிற்கின்றன.

எவரும் கவனிப்பதேயில்லை. பாதீனியம் முளைத்த ஆரம்பத்தில் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது பாதீனியத்துடன் பழகி உறவுமாகிவிட்டனர். அதனால் அவர்களுக்கு பாதீனியம் இப்போது பிரச்சினையேயில்லை. இதுபோலத்தான் நாங்களும் இன்னும் சிலகாலம் போக இனப்பிரச்சினையை மறந்து பிரித்தோதப் பழகிவிடுவோம். அதற்கும் சில காலம் போக தானம் கொடுத்து தமிழில் பிரித் ஓதி தகனம் செய்யவேண்டியதுதான்.

http://www.tamilkathir.com/news/4040/58//d,full_article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.