Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்யலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இதிலை என்ன ஒரு வருத்தம் என்றால் நல்ல பல கருத்தாளர்கள் கூட அதிமட்டமான சிந்தனையில் இருப்பது தான்.

இங்கு வயதை தவிர்த்து பார்த்தாலே தணிகாசலம் போன்றோர் ஒரு விதவை அல்ல திருமணம் செய்யாத பெண்ணையே தாரமாக்கி கொண்டால் கூட தவறில்லை காரணம் இருவர் ஒத்து திருமணம் செய்வது தப்பே இல்லை அது அவர்களுடைய தனிப்பட்ட விடையம். ஆனால் அவலத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிலர் வாழ்க்கை குடுக்கிறோம் என்ற பெயரில் தமது வக்கிரத்துக்கு பயன்படுத்துவதை நியாயம் என்று சொல்வது சொந்த இனத்தையே நாங்கள் விலை கூறி விற்கத்தயாராகி விட்டோம் என்ற கேவலமான நிலையைத்தான் உணர்த்துகிறது.

  • Replies 187
  • Views 14.5k
  • Created
  • Last Reply

ஒரு பெண்ணோடு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து உண்மையான அன்பை பெறவில்லை என்று நினைக்கும் ஒருவரால் எப்படி இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து உண்மையான அன்பைப் பெற முடியாது அல்லது உண்மையான அன்பை கொடுக்கமுடியாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

தணிகாசலம் அப்படி நினைச்சவரா?

அல்லது கிடைக்கும் என்று நீங்கள் எதை வைத்து சொல்லி இருக்கிறீர்கள்?

நீங்கள் மாத்திரம் என்ன தணிகாசலம் பற்றிய தகவல்களை கையில் வைத்துக்கொண்டு, அவர் பற்றி விரிவாக அறிந்து, அவர் வீட்டுக்கோடியில் இருந்தா எழுதுகின்றீர்கள்?

நீங்கள் மட்டும் என்ன பின்னணியை முழுமையாக அறிஞ்சனீங்கள்?

நான் எழுதியது தணிகாசலம் சாத்திரி அண்ணையிடம் முன்வைத்த கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து...

அதுகூட அர்த்தம் புரியவில்லை? முதுமை என்பது வயதில் தங்கி இல்லை. இதற்கு உதாரணமாக மேற்கண்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன.

ஓஓ .... Ever green!!

கெளதமிக்கும், லதாவுக்கும் 30 வயதா? :lol:

சரி அப்ப பேரப் பிள்ளையள் கண்டவர்கள் எல்லாரும் ஊருக்குப் போய் ஆளுக்கொரு 30வயது பிள்ளை இல்லாத விதவையை கூடிக் கொண்டு வரலாம்.

இதே தலைப்பை ஒரு வெள்ளைகளின் போறத்தில் போட்டு கருத்துக்கேட்டுப் பாருங்கோ.. அதுகள்.. தனிமனித விருப்பத்தை சட்டத்தின் அனுமதியை தான் பார்க்குங்களே தவிர.. தங்கள் தங்களின் சுய ஒழுக்கக்கோவைகளை.. அடுத்தவர்கள் மீது திணிக்காதுகள்.

சுய ஒழுக்க கோவை என்பதை சுய விருப்பு, வெறுப்பு என்று கூறினால் இன்னமும் பொருத்தமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதிலை என்ன ஒரு வருத்தம் என்றால் நல்ல பல கருத்தாளர்கள் கூட அதிமட்டமான சிந்தனையில் இருப்பது தான்.

இங்கு வயதை தவிர்த்து பார்த்தாலே தணிகாசலம் போன்றோர் ஒரு விதவை அல்ல திருமணம் செய்யாத பெண்ணையே தாரமாக்கி கொண்டால் கூட தவறில்லை காரணம் இருவர் ஒத்து திருமணம் செய்வது தப்பே இல்லை அது அவர்களுடைய தனிப்பட்ட விடையம். ஆனால் அவலத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிலர் வாழ்க்கை குடுக்கிறோம் என்ற பெயரில் தமது வக்கிரத்துக்கு பயன்படுத்துவதை நியாயம் என்று சொல்வது சொந்த இனத்தையே நாங்கள் விலை கூறி விற்கத்தயாராகி விட்டோம் என்ற கேவலமான நிலையைத்தான் உணர்த்துகிறது.

அபலைப் பெண்கள் என்பதை உணர்த்தி.. ஊரிடம் உதவி கேட்டது... தணிகாசலமா.. அல்லது அந்த வானொலியா..??!

தணிகாசலம்.. உதவி கேட்கிறாங்க.. ஏன் நான் ஒரு பெண்ணை கட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கத் தூண்டியது.. வானொலியா.. வக்கிரமா...???!

சரி.. உண்மையில் அவர் வக்கிர நோக்கோடு தான்.. அதைச் செய்ய வந்தார் என்பதற்கும்.. எந்த அதாரமும் இல்லை.

தனது இறுதிக்காலத்தில் தனக்கும் தனது காலத்தில் அவர்களுக்கு தானும்.. உதவியாக இருக்கலாம் என்ற கோணத்தில் கூட அவர் ஒரு இளம்பெண்னிற்கு அந்த வாய்ப்பை அளிக்க முன்வந்திருக்கலாம்...

நாங்கள் தவறாக அர்த்தப்படுத்திறமா.. அல்லது தணிகாசலம் தவறானவர் என்று காட்ட விரும்பிறமா.. அல்லது தணிகாசலம் கெட்டவர் தானா.. என்பதுதான் இங்குள்ள வினா..??!

இங்கு பதியப்பட்ட தகவலின் படி தணிகாசலம் யாரையும் வற்புறுத்தி அதைச் செய்து வை என்று கட்டாயப்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர் ஒரு சமிக்ஞையை தான்.. அதுவும் அந்த வானொலி.. விதவைப் பெண்களை முன்னுறுத்தி உதவி கேட்டு வந்ததன் பேரில் தான் செய்ய முனைந்துள்ளார். இதில்.. தவறு ஏற்பட்டிருப்பின்.. அதில் அந்த வானொலிக்கும் பங்கிருக்கிறது..! அதைப் பற்றியும் நாம் சிந்திகலாம் இல்லையோ..??! :lol::unsure:

Edited by nedukkalapoovan

கருணாநிதி 3 பொண்டாட்டியை வைச்சுக்கிட்டு வாழுறார்.. அவரைப் போய் கேள்வி கேட்க முடியுமா.. தண்டிக்க முடியுமா...??! ஆனால் ஒரு அப்பாவி 56 வயது ஆண் தனது விருப்பை சுயமாக வெளியிட உரிமை கிடையாது.. நீங்கள் எல்லாம் சிங்களவனிடம் உரிமை கேட்பதுதான் வேடிக்கையாக உள்ளது. :unsure::lol:

நெடுக்கு நீங்கள் உங்களின் 30 வயது பிள்ளைகள் இல்லாத சகோதரியை விதவை எண்ட காரணத்துக்காக ஒரு 56 வயது முதியவருக்கு கல்யாணம் கட்டிக்கொடுக்க முன் வருவீர்களா....???

சரி அதை விடுங்கோ... புருசனை இழந்த பெண்கள் எல்லாம் எங்களுக்கு வாழ்க்கை தாங்கோ எண்டே உங்களிட்டை கையை ஏந்துகினம்....?? உதவி செய்யுங்கோ எண்டு கேட்டால் அதுக்கு அவர்களுக்கு கல்யாணக் கட்டி வைக்கிறதுதான் உங்களின் உதவியா...??

அதையும் விடுங்கோ.... புருசன் செத்து போனால் கஸ்ரம் தாங்காமல் அங்கை இருக்கிற பொம்பிளையள் எல்லாம் தற்கொலை செய்ய திரியுதுகள் அதுகளை காப்பாத்த கிழவன் எண்டு பாக்காமல் கட்டி வைக்கிறது தான் சரி எண்டுறார் ஒருத்தர்... நீங்களும் அது சரி எண்டுறீயளோ...??

அதையும் விடுங்கோ.... 30 வயசு பிள்ளை ஒண்டு வந்து உங்களை யாரையும் கேட்டதோ எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு தாங்கோ எண்டு....?? இல்லை 2 பிள்ளையோடை இருக்கும் பெண்கள்...?? அப்படி யாரும் கேட்க்காத போது இங்கை நிண்டு கொண்டு அப்படி பல பேர் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அவர்களுக்கு கட்டிக்குடுத்தால் என்ன எண்டு கதை சொல்லுறது மட்டும் எந்த சட்டத்துக்கை அடங்கும்...

சரி அதையும் விடுங்கோ.... ஒரு பழசு தனக்கு தெரிஞ்ச புறோக்கரிடம் ஒருத்தரிடம் போய் எனக்கு ஒரு 30 வயசிலை ஒருத்தியை கட்டிக்கொண்டு வாழ விரும்புறன் ஒழுங்கு செய்யுங்கோ எண்டு கேக்குது எண்டு நீங்கள் ஆங்கில போறத்திலையோ இல்லை ஆங்கில நண்பர்களிடமோ சொல்லிப்பாருங்கள்... அவர்கள் தரும் மரியாதையை பிறகு பாருங்கள்...

ஆங்கிலேயரின் கலாச்சாரத்தை முதலிலை விளங்கிக்கொள்ளுங்கள்... ஒரு இளம் பெண் வயதானவரை காதலிப்பதை வேறாகவும், ஒரு வயது முதிர்ந்தவர் இளம் பெண்ணை கல்யாணம் கட்ட அலைவதையும் இந்த சமூகம் வேறு வேறாக பார்க்கிறது... சட்டம் கூட பெண்களுக்கு சார்ப்பாக தான் இருக்கிறது...

அபலை பெண்கள் தானே அப்பு முன் வரும் போது அவரை கட்டினால் என்ன எனும் ஆணாதிக்க சிந்தனைதான் இங்கை கனபேரிட்டை இருந்து கிழம்புது... அதை உங்களிட்டை இருந்தும் நான் எதிர் பார்க்க இல்லை...

அப்பு தனக்கு உண்மையிலை கட்ட விரும்பினால் நேரடியாக் ஒரு பெண்ணிடம் போய் தன் விருப்பத்தை சொல்லி கேக்கிறது தான் ஆண்மை... அதை விட்டுப்போட்டு பிறர் மூலம் ஒரு பெண்ணுக்கு அழுத்தம் கொடுத்து வலை வீசுறது கேடு கெட்ட தனம்... இதை உங்களுக்கு வெள்ளைக்காறனை கேட்டியள் எண்டால் தெளிவாய் சொல்லுவான்...

English people never married a stanger இப்படி ஒரு பதில் தான் எனக்கு ஒழுங்கு செய்யப்படும் திருமணங்கள் பற்றி பேசும் போது எனக்கு கிடைக்க பெற்றது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தணிகாசலம் என்ற மனிதன்.. தனது இனம் சார்ந்து ஒரு பெண்ணை தானே அதுவும் அவர்கள் விரும்பினால் செய்வன் என்று தானே சொல்லி இருக்கிறார். அவர் ஒன்றும் இராணுவத்தை கொண்டு வந்து வைச்சுக் கொண்டு தமிழ் பொம்பிளைகளை கலியாணம் கட்டப் போறன் என்று சவால் விடல்லையே..??!

56 வயது மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய 30 வயதுள்ள ஒரு விதவைப் பெண் விரும்பினால்.. அல்லது அவரின் துணையோடு வாழ விரும்பினால் அதை தடுக்கும் உரிமை எமக்கு யாருக்கும் இல்லை. அது சட்டப்படி செல்லுபடியாகும். தணிகாசலம்.. இந்த ரேடியோவுக்கு சொல்லாமல்.. தான் போய் செய்து கொண்டு வந்திருந்தா.. நாங்க என்ன ஊர்வலமா நடத்தி இருக்கப் போறம்.

என்னுடைய நிலைப்பாடு 90 வயது தாத்தாவை 20 வயதுப் பெண் திருமணம் செய்ய விரும்பினால் கூட அதைத் தடுக்கும் உரிமை நம்மிடம் இல்லை. அது அவளின் விருப்பம். அவளுக்கு அந்த முடிவை எடுக்க சட்டப்படி உரிமை இருக்கிறது. அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. அதேபோல் 20 வயதுப் பையன் 50 வயது பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் கூட அதைத்தடுக்கும் உரிமை சட்டத்துக்கோ எமக்கோ கிடையாது. அது அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பின் பாற்பட்ட அவர்களின் சொந்த விடயம்.

இதே தலைப்பை ஒரு வெள்ளைகளின் போறத்தில் போட்டு கருத்துக்கேட்டுப் பாருங்கோ.. அதுகள்.. தனிமனித விருப்பத்தை சட்டத்தின் அனுமதியை தான் பார்க்குங்களே தவிர.. தங்கள் தங்களின் சுய ஒழுக்கக்கோவைகளை.. அடுத்தவர்கள் மீது திணிக்காதுகள். பலர் எழுத்தில் சுத்தமா இருந்தாலும்... உண்மையில் அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி 3 பொண்டாட்டியை வைச்சுக்கிட்டு வாழுறார்.. அவரைப் போய் கேள்வி கேட்க முடியுமா.. தண்டிக்க முடியுமா...??! ஆனால் ஒரு அப்பாவி 56 வயது ஆண் தனது விருப்பை சுயமாக வெளியிட உரிமை கிடையாது.. நீங்கள் எல்லாம் சிங்களவனிடம் உரிமை கேட்பதுதான் வேடிக்கையாக உள்ளது. :unsure::lol:

நெடுக்ஸ் அண்ணா :blink:

நான் ஒரு ஜேர்மன்காரியை கட்டுறது தப்பா?

எனக்கும் விருப்பம் அவளுக்கும் விருப்பம் இது எங்கள் தனிப்பட்ட விடையம். இதையே ஒரு ஆங்கில போறத்திலை கருத்துக்கேட்டால் அவர்களும் தனிமனித சுதந்திரத்துக்கு முன்னுரிமை கொடுத்து சரி என்பார்கள் அப்படியாயின் கலப்புத்திருமணம் சரி தானே?

இதையே ஏன் சிங்களவன் செய்யக்கூடாது??(சிங்கள அமைச்சரை தவிர்த்து சாதாரண சிங்கள பொதுமகன்) சம்பந்தப்பட்டவர்கள் விருப்பம் என்றால் செய்யலாம் தானே??? அப்படி என்றால் மஹிந்த சொல்வது போல நாங்கள் இலங்கையின் குடிமக்கள் ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்பதும் சரி தானே? சிங்கள்க்குடியேற்றங்களும் சரி தானே அண்ணா?

அவன் சொல்வது போல இவற்றுக்கெல்லாம் புலிகள் தான் தடையாக இருந்தார்கள் என்று சொல்வதை நாமே நிரூபிக்கிறோம் தானே?

தங்கள் சொந்த வாழ்க்கையை மேம்படுத்த வெளிநாட்டுக்கு வர ஒன்றல்ல‌ பத்து விதவைகள் கூட தயாராக இருப்பினம் என்று வாய்கூசாமல் சொல்பவர்களால் தமது வாழ்வை மேம்படுத்த சிங்களவனை கட்ட(சிங்களவன் கூட படுக்க) தயாராக இருப்பினம் என்று சொன்னாலும் ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லைத்தானே அண்ணா.? ஏனென்றால் எண்பதாயிரம் விதவைகள் இருக்கே?

எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் எம்மினத்தைப் பற்றி??

அப்போ அந்த விதவைகளுக்கு தீர்வு தான் என்ன..

தற்கொலை? 56வயது தாரமிழந்த பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒருவர் மீது கடுப்பு கொண்டு பாக்குவெட்டி பற்றி பேசுகின்ற யாராவது 30 வயது உணர்வு உள்ள இளைஞன் ஊரில் உள்ள விதவைப்பெண் ஒருவரை மணம் முடித்து வாழ்க்கை கொடுக்க முன்வருவாரா? வன்னியில் ஒரு நாளைக்கு நான்கு தற்கொலைகள் இடம்பெறுவதாக தமிழ்நெட் செய்தி கூறுகின்றது.

2ND LEAD (CORRECTION)

4 suicides daily in Vanni: psycho-social consultant

[TamilNet, Sunday, 07 November 2010, 09:41 GMT]

An increase in suicides is reported in the one time war zones in the Northern Province and an average of four people attempt to commit suicide daily, according to the Sunday leader weekly in its November 07 edition quoting a psycho-social consultant from the Vanni, Dr. Thayalini Thiagarajah. “Many people in the North are still highly traumatized. People are suffering from post traumatic stress disorder, depression, acute stress disorder, and other mental diseases,” she said.

“The suicidal rate is high, especially among women. At present, around 500 patients with mental illness have been identified. According to sources from Ki'linochchi hospital, four people commit suicide daily,” Dr. Thiagarajah pointed out.

There are thousands of young widows currently in the Vanni. What is worse, those identified as suffering from mental illness in the Vanni, often find it difficult to get treatment. This is because there is an acute dearth for psychiatrists, counselors and social workers in the Vanni, according to Thiagarajah.

“How long is it going to take for people to have ‘holistic healing’ and lead a normal life? May be a couple of generations,” she said to the Sunday Leader.

http://tamilnet.com/art.html?catid=13&artid=32957

[கரும்பு ,

நான் இங்கு புலி ஆதரவாளரை பற்றி கதைக்கவில்லை. எனக்கு அது தேவையுமில்லை. இந்த திரியில் அந்த விதவை பெண்களின் நிலையை மாத்திரமே கதைக்க விரும்புகிறேன்.

quote name='கரும்பு' timestamp='1290199992' post='622326']

உதவி செய்வதாக கூட்டிச்சென்று ஓர் முப்பது வயது பெண்ணுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட எழுபது வயது மிகவும் பிரபலமான புலி ஆதரவாளர் ஒருவரை எனக்கு தனிப்பட தெரியும். அவருக்கும் பாக்குவெட்டி தூக்கலாமா? :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திச், சுற்றி.... சுப்பற்றை கொல்லையுக்கை நிக்காதேங்கோ.....

தணியை, என்னட்டை தாருங்கோ....

அவருக்கு வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு செய்து போடுவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்கள் உங்களின் 30 வயது பிள்ளைகள் இல்லாத சகோதரியை விதவை எண்ட காரணத்துக்காக ஒரு 56 வயது முதியவருக்கு கல்யாணம் கட்டிக்கொடுக்க முன் வருவீர்களா....???

சரி அதை விடுங்கோ... புருசனை இழந்த பெண்கள் எல்லாம் எங்களுக்கு வாழ்க்கை தாங்கோ எண்டே உங்களிட்டை கையை ஏந்துகினம்....?? உதவி செய்யுங்கோ எண்டு கேட்டால் அதுக்கு அவர்களுக்கு கல்யாணக் கட்டி வைக்கிறதுதான் உங்களின் உதவியா...??

அதையும் விடுங்கோ.... புருசன் செத்து போனால் கஸ்ரம் தாங்காமல் அங்கை இருக்கிற பொம்பிளையள் எல்லாம் தற்கொலை செய்ய திரியுதுகள் அதுகளை காப்பாத்த கிழவன் எண்டு பாக்காமல் கட்டி வைக்கிறது தான் சரி எண்டுறார் ஒருத்தர்... நீங்களும் அது சரி எண்டுறீயளோ...??

அதையும் விடுங்கோ.... 30 வயசு பிள்ளை ஒண்டு வந்து உங்களை யாரையும் கேட்டதோ எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு தாங்கோ எண்டு....?? இல்லை 2 பிள்ளையோடை இருக்கும் பெண்கள்...?? அப்படி யாரும் கேட்க்காத போது இங்கை நிண்டு கொண்டு அப்படி பல பேர் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அவர்களுக்கு கட்டிக்குடுத்தால் என்ன எண்டு கதை சொல்லுறது மட்டும் எந்த சட்டத்துக்கை அடங்கும்...

சரி அதையும் விடுங்கோ.... ஒரு பழசு தனக்கு தெரிஞ்ச புறோக்கரிடம் ஒருத்தரிடம் போய் எனக்கு ஒரு 30 வயசிலை ஒருத்தியை கட்டிக்கொண்டு வாழ விரும்புறன் ஒழுங்கு செய்யுங்கோ எண்டு கேக்குது எண்டு நீங்கள் ஆங்கில போறத்திலையோ இல்லை ஆங்கில நண்பர்களிடமோ சொல்லிப்பாருங்கள்...

ஆங்கிலேயரின் கலாச்சாரத்தை முதலிலை விளங்கிக்கொள்ளுங்கள்... ஒரு இளம் பெண் வயதானவரை காதலிப்பதை வேறாகவும், ஒரு வயது முதிர்ந்தவர் இளம் பெண்ணை கல்யாணம் கட்ட அலைவதையும் இந்த சமூகம் வேறு வேறாக பார்க்கிறது... சட்டம் கூட பெண்களுக்கு சார்ப்பாக தான் இருக்கிறது...

தயாண்ணா.. எனது சகோதரியாக இருந்தாலும்... திருமணம்.. மறுமணம் போன்றவை தொடர்பில் அவர் தான் முழுமையாக முடிவைகளை எடுக்க உரிமையுடையவர். அதில் தலையிட எமக்கு உரிமை கிடையாது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத் திராணி இல்லாத வரை.. இது விடயத்தில் என்ன கருத்துச் சொல்ல முடியும்.

ஒரு மனிதனின் அடிப்படை முடிவெடுக்கும் உரிமையைக் கூட நிராகரிக்கும் ஒரு இனத்தின் முன் ஒரு விதவைக்கு வாழ்வு கிடைப்பதென்பது நிகழாத விடயம். அவளை தையல் மிசினோட கோழிக் குஞ்சோடு.. கட்டி வைக்கிறதில திருப்திப்படும்.. புனிதப்படும் கூட்டங்களைக் காட்டிலும்.. 56 வயசு தணிகாசலம் மேல்..!

அது சரி எந்த நாட்டில அண்ணா 20 வயசுப் பெட்டை 60 வயசு ஆணைக் கலியாணம் செய்யக் கூடாது என்று சட்டம் போட்டிருக்கு. இங்கிலாந்தின் இளவரசர் சார்ள்ஸ் கூட மறுமணம் செய்தது 50 வயதிலை ஆக்கும். அதுபோக இங்கிலாந்து அரண்மனை வரலாற்றில்.. அரசர்கள் எத்தனை இளம்பெண்களை திருமணம் செய்திருக்கினம்.

அண்மையில் சுவிஸ்லாந்தில் 18 வயது தமிழ் பெண் பிள்ளை 60 வயதான ஒருவருடன் ஓடிப்போய் வாழ்வதாக இங்கு தானே செய்தி போட்டிக்கப் படிச்சன்.

அதையெல்லாம்.. நாங்க அனுமதிப்பம்.. ஆனால் ஒரு 56 வயசு மனிசன்.. ஒரு கணவனை இழந்து குடும்ப பாரத்தை சுமக்கச் சிரமப்படும் இளம் பெண்ணிற்கு வாழ்வளிக்க முன் வருவதை வக்கிரமாகக் கூட சித்தரித்துப் பேசித் தடுக்க பின்னிற்கமாட்டம்.. என்று சொன்னால் என்ன செய்வது.

இப்படியான சமுதாயச் சிந்தனை உள்ள ஓர் சமூகத்தில் தணிகாசலம்.. பொய்யனாக.. கள்ளம் செய்து கட்டிறதே நல்லம். பிழைக்க உதவும்..! நாளை தணிகாசலம்.. பொய் சொல்லி ஒரு பெண்ணை ஏமாற்றிக்கட்டினால்.. அதற்கு இந்த சமுதாயமே பொறுப்பு. நிச்சயம் தணிகாசலம் அல்ல. இதையே உங்கள் பதில் எனக்குச் சொல்கிறது... தயாண்ணா. :lol::unsure:

Edited by nedukkalapoovan

இதன் பின்பும், இதே பாக்கு வெட்டியை பற்றிக்கொண்டே இருப்பது

கருத்தாடலில் உங்கள் பதிலுக்கு மட்டும் கருத்திடவேண்டும் என்று இல்லை. ஓர் விடயத்தை புரிந்துகொள்ளாமல் உடனடியாகவே கிண்டல் செய்து ஒருவரை மட்டம் தட்டும்போது.. குறிப்பிட்ட விடயம் கருத்தாடலில் பல இடங்களில் காணப்படும்போது... அதுபற்றி மேற்கோள் காட்டவேண்டியுள்ளது.

தற்கொலை? 56வயது தாரமிழந்த பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒருவர் மீது கடுப்பு கொண்டு பாக்குவெட்டி பற்றி பேசுகின்ற யாராவது 30 வயது உணர்வு உள்ள இளைஞன் ஊரில் உள்ள விதவைப்பெண் ஒருவரை மணம் முடித்து வாழ்க்கை கொடுக்க முன்வருவாரா? வன்னியில் ஒரு நாளைக்கு நான்கு தற்கொலைகள் இடம்பெறுவதாக தமிழ்நெட் செய்தி கூறுகின்றது.

உளவியல் பிரச்சினைகளினால் மன அழுத்தத்தால் வரும் தற்கொலைகளுக்கு திருமணம் தீர்வு அல்ல...! அவர்களுக்கு தேவை மன அமைதி.... அதோடு முக்கியமாக தேவை Counseling ...

அதுவும் புலம் பெயர்ந்த தமிழ் பெண்கள் இந்த சூழலுடன் உடனடியாக ஒண்றிப்போக முடியாமல் அதிகமாக மன உழைச்சலுக்கு உள்ளாகிறார்கள்..

அவளை தையல் மிசினோட கோழிக் குஞ்சோடு.. கட்டி வைக்கிறதில திருப்திப்படும்..

விதவைப்பெண் என்றால் இதுதவிர வேறு எதை நமது சமுதாயத்தில் எதிர்பார்க்க முடியும்? ஒருபோதும் திருமணம் செய்யாத பெண்கள் பலர் திருமணப்பேச்சுக்கள் சரிவராமல் ஏற்கனவே திருமணமான, மற்றும் தாரம் இழந்த ஆண்களை வேறு வழியின்றி மணம் முடித்துள்ளார்கள். நிலமை இப்படி காணப்படும்போது.. முப்பது வயது விதவைப்பெண் ஒருவரிற்கு எப்படியான மதிப்பு காணப்படும்?

  • கருத்துக்கள உறவுகள்

உளவியல் பிரச்சினைகளினால் மன அழுத்தத்தால் வரும் தற்கொலைகளுக்கு திருமணம் தீர்வு அல்ல...! அவர்களுக்கு தேவை மன அமைதி.... அதோடு முக்கியமாக தேவை Counseling ...

அதுவும் புலம் பெயர்ந்த தமிழ் பெண்கள் இந்த சூழலுடன் உடனடியாக ஒண்றிப்போக முடியாமல் அதிகமாக மன உழைச்சலுக்கு உள்ளாகிறார்கள்..

குடும்பமாக வாழ்ந்தவை குழந்தைகளோடு தனித்து விடப்படும் போது காசு மட்டும் அவைக்கு மன அமைதியைத் தராது. வன்னியில் சாப்பிடாடில்லாமல் மக்கள் இப்போது இறப்பதாக சொல்வதற்கு இல்லை.

வன்னித் தற்கொலைகளுக்கு அதிக காரணம்.. வாழ்க்கைக்கு உத்தரவாதமற்ற நிலை...! இதை திருமணங்கள் ஓரளவுக்கு குறைக்கலாம்.

தணிகாசலம்... யாரையும் வற்புறுத்தி கட்டி வைக்கச் சொல்லேல்ல. தன்னுடைய நிலையைச் சொல்லி அப்படி செய்ய விருப்பமா இருந்தாச் சொல்லுங்கோ என்று உண்மையைச் சொல்லித்தானே கேட்டிருக்கிறார். அதில என்ன தப்பு...???! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபலைப் பெண்கள் என்பதை உணர்த்தி.. ஊரிடம் உதவி கேட்டது... தணிகாசலமா.. அல்லது அந்த வானொலியா..??!

தணிகாசலம்.. உதவி கேட்கிறாங்க.. ஏன் நான் ஒரு பெண்ணை கட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கத் தூண்டியது.. வானொலியா.. வக்கிரமா...???!

சரி.. உண்மையில் அவர் வக்கிர நோக்கோடு தான்.. அதைச் செய்ய வந்தார் என்பதற்கும்.. எந்த அதாரமும் இல்லை.

தனது இறுதிக்காலத்தில் தனக்கும் தனது காலத்தில் அவர்களுக்கு தானும்.. உதவியாக இருக்கலாம் என்ற கோணத்தில் கூட அவர் ஒரு இளம்பெண்னிற்கு அந்த வாய்ப்பை அளிக்க முன்வந்திருக்கலாம்...

நாங்கள் தவறாக அர்த்தப்படுத்திறமா.. அல்லது தணிகாசலம் தவறானவர் என்று காட்ட விரும்பிறமா.. அல்லது தணிகாசலம் கெட்டவர் தானா.. என்பதுதான் இங்குள்ள வினா..??!

இங்கு பதியப்பட்ட தகவலின் படி தணிகாசலம் யாரையும் வற்புறுத்தி அதைச் செய்து வை என்று கட்டாயப்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர் ஒரு சமிக்ஞையை தான்.. அதுவும் அந்த வானொலி.. விதவைப் பெண்களை முன்னுறுத்தி உதவி கேட்டு வந்ததன் பேரில் தான் செய்ய முனைந்துள்ளார். இதில்.. தவறு ஏற்பட்டிருப்பின்.. அதில் அந்த வானொலிக்கும் பங்கிருக்கிறது..! அதைப் பற்றியும் நாம் சிந்திகலாம் இல்லையோ..??! :lol::unsure:

அப்பொழுதுதான் அவர் என்னவகையான உதவி செய்ய விரும்புகிறார் என எனக்கு பட்டென்று புரிந்தது ;அண்ணை .நாங்கள் உதவி அமைப்புத்தான் நடத்திறம் புறோக்கர் வேலை செய்யேல்லை என்றுவிட்டு தொலைபேசியை நிறுத்தலாமா??என ஒரு செக்கன் யோசித்தாலும். சரி யாரோ ஒரு பெண்ணிற்கு ஒரு வழியும் வெளிநாட்டு வாழ்வும் கிடைத்தாலும் கிடைக்கும். எதற்கு குழப்புவான் என இரண்டு மனதில் போராட்டத்துடன் 

நெடுக்ஸ் அண்ணா :blink:

இந்த கருத்து தான் அப்படியான ஒரு மயக்க நிலைக்கு காரணம்.

நீங்கள் சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று தான். ஆனால் எனக்கு தெரிந்து ஒரே ஒரு ஆலோசனை இருக்கின்றது. நேசக்கரம் போன்ற உதவி அமைப்புக்கள் அல்லது தாயகத்திலுள்ள ஏதிலிகளுடன் தொடர்பை பேணும் ஒரு அமைப்புக்கள் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தலாம் தாயகத்திலுள்ள விதவை பெண்களின் மறுவாழ்வு பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம். மாற்றுத்திருமணம் குறித்தும் கருத்துக்கேட்கலாம். இது ஒரு தணிகாசலத்துக்கு மட்டுமல்ல,பல தணிகாசலங்களுக்கும் வாழ்வுகுடுப்பதாய் அமையும்.

அதை விட தாயகத்திலுள்ள விதவைகளில் எத்தனை கணவன்மார் சிறைக்கூடங்களில் இருக்கிறார்களோ தெரியாது அவர்களையும் விடுவிக்க முயற்சி செய்தால் விதவைகளின் எண்ணிக்கையும் குறைவடையக்கூடும். அது வரை எம்மினத்தையே நாங்கள் கேவலப்படுத்துவதை தவிர்த்தலே நன்று.

உளவியல் பிரச்சினைகளினால் மன அழுத்தத்தால் வரும் தற்கொலைகளுக்கு திருமணம் தீர்வு அல்ல...! அவர்களுக்கு தேவை மன அமைதி.... அதோடு முக்கியமாக தேவை Counseling ...

திருமணம் தீர்வாக அமையவேண்டும் என்று இல்லை. ஆனால், வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து வசதியாக வாழமுடியும் என்று ஓர் வாய்ப்பு கிடைக்கும்போது ஒருபெண் தற்கொலையை தவிர்க்கக்கூடும். காலங்காலமாக தொடர்ந்து அடிபட்ட இடத்தில் இல்லாமல் அங்கிருந்து வெளியேறி வெளிநாடு வரும்போது குறிப்பிட்ட நிலமையில் உள்ள ஓர் பெண்ணிற்கு வாழ்க்கையில் ஆர்வமும், பிடிப்பும் ஏற்படலாம்.

தயாண்ணா.. எனது சகோதரியாக இருந்தாலும்... திருமணம்.. மறுமணம் போன்றவை தொடர்பில் அவர் தான் முழுமையாக முடிவைகளை எடுக்க உரிமையுடையவர். அதில் தலையிட எமக்கு உரிமை கிடையாது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத் திராணி இல்லாத வரை.. இது விடயத்தில் என்ன கருத்துச் சொல்ல முடியும்.

ஒரு மனிதனின் அடிப்படை முடிவெடுக்கும் உரிமையைக் கூட நிராகரிக்கும் ஒரு இனத்தின் முன் ஒரு விதவைக்கு வாழ்வு கிடைப்பதென்பது நிகழாத விடயம். அவளை தையல் மிசினோட கோழிக் குஞ்சோடு.. கட்டி வைக்கிறதில திருப்திப்படும்.. புனிதப்படும் கூட்டங்களைக் காட்டிலும்.. 56 வயசு தணிகாசலம் மேல்..!

அது சரி எந்த நாட்டில அண்ணா 20 வயசுப் பெட்டை 60 வயசு ஆணைக் கலியாணம் செய்யக் கூடாது என்று சட்டம் போட்டிருக்கு. இங்கிலாந்தின் இளவரசர் சார்ள்ஸ் கூட மறுமணம் செய்தது 50 வயதிலை ஆக்கும். அதுபோக இங்கிலாந்து அரண்மை வரலாற்றில்.. அரசர்கள் எத்தனை இளம்பெண்களை திருமணம் செய்திருக்கினம்.

அண்மையில் சுவிஸ்லாந்தில் 18 வயது தமிழ் பெண் பிள்ளை 60 வயதான ஒருவருடன் ஓடிப்போய் வாழ்வதாக இங்கு தானே செய்தி போட்டிக்கப் படிச்சன்.

அதையெல்லாம்.. நாங்க அனுமதிப்பம்.. ஆனால் ஒரு 56 வயசு மனிசன்.. ஒரு கணவனை இழந்து குடும்ப பாரத்தை சுமக்கச் சிரமப்படும் இளம் பெண்ணிற்கு வாழ்வளிக்க முன் வருவதை வக்கிரமாகக் கூட சித்தரித்துப் பேசித் தடுக்க பின்னிற்கமாட்டம்.. என்று சொன்னால் என்ன செய்வது.

இப்படியான சமுதாயச் சிந்தனை உள்ள ஓர் சமூகத்தில் தணிகாசலம்.. பொய்யனாக.. கள்ளம் செய்து கட்டிறதே நல்லம். பிழைக்க உதவும்..! நாளை தணிகாசலம்.. பொய் சொல்லி ஒரு பெண்ணை ஏமாற்றிக்கட்டினால்.. அதற்கு இந்த சமுதாயமே பொறுப்பு. நிச்சயம் தணிகாசலம் அல்ல. இதையே உங்கள் பதில் எனக்குச் சொல்கிறது... தயாண்ணா. :lol::unsure:

இங்கிலாந்து இளவரசர் இரண்டாவது திருமணம் செய்தது தன்னை விட வயது மூத்த ஒரு பெண்மணியை... அதுவும் அவர் ஒரு புறோக்கர் மூலமாக தூது விட்டு அந்த பெண்ணை பிடிக்க இல்லை... தானாக விரும்பி போய் அந்த பெண்ணின் விருப்பை கேட்டு அவரின் விருப்பத்தோடை கல்யாணம் கட்டினவர்... இந்த குறைந்த பட்ச்ச வித்தியாசம் கூட உங்களுக்கு புரியவில்லை... வேறை என்ன அதிகமாக என்னால் எதிர்பார்க்க முடியும்...

தணிகாசலம் தனக்கு கல்யாணம் கட்ட வேணும் எண்டு ஆசைப்பட்டால் தான் போய் ஒரு பெண்ணிடன் விருப்பம் கேட்டு அவரின் விருப்பத்தோடை திருமணம் செய்ய வேணும்... (அது சரி இங்கிலாந்து கலாச்சாரதுக்கை திருமணத்தரகர் எண்ட ஒண்டு இருக்கே...??)

அங்கை பெண்கள் யாரும் வந்து எங்களுக்கு திருமணம் செய்து தாங்கோ எண்டு யாரையும் கேக்க வில்லை... உதவி தான் கேட்டதுகள்... ஆனால் அதிலை ஒண்டை தனக்கு பிடிச்சு தரச்சொல்லி தணிகாசலத்தார் கேக்கிறார்... அவர் என்ன எதிர் பாக்கிறார்... ???

தம்பி அவர்களின் இலக்கத்தை தா நான் பேசிப்பாக்கிறன் எண்டு தணிகாசலத்தார் சொல்லி இருந்தால் சட்ட பூர்வமாக சரி... எனக்கு ஒண்டை பிடிச்சு தா... எண்டு இன்னும் ஒருவரிடம் சொல்வது...??? திட்டம் போடுதல்...! ஆங்கிலேயரின் கலாச்சாரத்திலும் இல்லை சட்டத்திலும் இல்லை.... !

அந்த பெண்ணை வற்புறுத்துவதோ அல்லது சம்மதிக்க வைக்கை திட்டம் போடுவதோ சட்டப்படி குற்றம்...

திருமணம் தீர்வாக அமையவேண்டும் என்று இல்லை. ஆனால், வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து வசதியாக வாழமுடியும் என்று ஓர் வாய்ப்பு கிடைக்கும்போது ஒருபெண் தற்கொலையை தவிர்க்கக்கூடும். காலங்காலமாக தொடர்ந்து அடிபட்ட இடத்தில் இல்லாமல் அங்கிருந்து வெளியேறி வெளிநாடு வரும்போது குறிப்பிட்ட நிலமையில் உள்ள ஓர் பெண்ணிற்கு வாழ்க்கையில் ஆர்வமும், பிடிப்பும் ஏற்படலாம்.

மேலை ஒரு குறும்படம் இணைச்சு இருக்கிறன் பாருங்கள்... இதுதான் தமிழ் பெண்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கை....

Edited by தயா

அபலைப் பெண்கள் என்பதை உணர்த்தி.. ஊரிடம் உதவி கேட்டது... தணிகாசலமா.. அல்லது அந்த வானொலியா..??!

சரி வானொலி தான்! தனிய அபலைப் பெண்களுக்கு என்று மட்டும் தான் உதவி கேட்டார்கள் என்று இல்லையே...கேட்ட உதவியில் அதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம்.

தணிகாசலம்.. உதவி கேட்கிறாங்க.. ஏன் நான் ஒரு பெண்ணை கட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கத் தூண்டியது.. வானொலியா.. வக்கிரமா...???!

சரி.. உண்மையில் அவர் வக்கிர நோக்கோடு தான்.. அதைச் செய்ய வந்தார் என்பதற்கும்.. எந்த அதாரமும் இல்லை.

தனது இறுதிக்காலத்தில் தனக்கும் தனது காலத்தில் அவர்களுக்கு தானும்.. உதவியாக இருக்கலாம் என்ற கோணத்தில் கூட அவர் ஒரு இளம்பெண்னிற்கு அந்த வாய்ப்பை அளிக்க முன்வந்திருக்கலாம்...

நாங்கள் தவறாக அர்த்தப்படுத்திறமா.. அல்லது தணிகாசலம் தவறானவர் என்று காட்ட விரும்பிறமா.. அல்லது தணிகாசலம் கெட்டவர் தானா.. என்பதுதான் இங்குள்ள வினா..??!

இங்கு பதியப்பட்ட தகவலின் படி தணிகாசலம் யாரையும் வற்புறுத்தி அதைச் செய்து வை என்று கட்டாயப்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர் ஒரு சமிக்ஞையை தான்.. அதுவும் அந்த வானொலி.. விதவைப் பெண்களை முன்னுறுத்தி உதவி கேட்டு வந்ததன் பேரில் தான் செய்ய முனைந்துள்ளார். இதில்.. தவறு ஏற்பட்டிருப்பின்.. அதில் அந்த வானொலிக்கும் பங்கிருக்கிறது..! அதைப் பற்றியும் நாம் சிந்திகலாம் இல்லையோ..??! :lol::unsure:

அது ஏன் முப்பது வயதுக்குள்ள எண்டால் இன்னும் நல்லது? அட கடைசிக் காலத்தில ஆளுக்காள் உதவியா இருக்க முப்பது வயது, பிள்ளை இல்லாதவர்களால் தான் ஏலுமாக்கும்???

ஏன் பிள்ளையளோட இருக்கிற விதவைக்கு வாழ்க்கை குடுக்க ஏலாதா?

Edited by குட்டி

தணிகாசலத்தார் இன்னும் 10 வருசத்திலை மண்டையை போட்டால் அந்த 40 வயது பெண்ணுக்கு மூண்றாவது திருமணம் செய்து வைப்பியளோ....??

தணிகாசலத்தார் இன்னும் 10 வருசத்திலை மண்டையை போட்டால் அந்த 40 வயது பெண்ணுக்கு மூண்றாவது திருமணம் செய்து வைப்பியளோ....??

40 வயதில் விதவையானால் 70,80 வயதில் ஒருவர் வாழ்வு குடுக்க முன்வருவார்.... அதுவும் பிள்ளைகள் இல்லாமல் இருப்பின்... அது சரி என்றால் இதுவும் சரிதானே... வயதிலையா இருக்கு முதிர்ச்சி??

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இளவரசர் இரண்டாவது திருமணம் செய்தது தன்னை விட வயது மூத்த ஒரு பெண்மணியை... அதுவும் அவர் ஒரு புறோக்கர் மூலமாக தூது விட்டு அந்த பெண்ணை பிடிக்க இல்லை... தானாக விரும்பி போய் அந்த பெண்ணின் விருப்பை கேட்டு அவரின் விருப்பத்தோடை கல்யாணம் கட்டினவர்... இந்த குறைந்த பட்ச்ச வித்தியாசம் கூட உங்களுக்கு புரியவில்லை... வேறை என்ன அதிகமாக என்னால் எதிர்பார்க்க முடியும்...

தணிகாசலம் தனக்கு கல்யாணம் கட்ட வேணும் எண்டு ஆசைப்பட்டால் தான் போய் ஒரு பெண்ணிடன் விருப்பம் கேட்டு அவரின் விருப்பத்தோடை திருமணம் செய்ய வேணும்... (அது சரி இங்கிலாந்து கலாச்சாரதுக்கை திருமணத்தரகர் எண்ட ஒண்டு இருக்கே...??)

அங்கை பெண்கள் யாரும் வந்து எங்களுக்கு திருமணம் செய்து தாங்கோ எண்டு யாரையும் கேக்க வில்லை... உதவி தான் கேட்டதுகள்... ஆனால் அதிலை ஒண்டை தனக்கு பிடிச்சு தரச்சொல்லி தணிகாசலத்தார் கேக்கிறார்... அவர் என்ன எதிர் பாக்கிறார்... ???

தம்பி அவர்களின் இலக்கத்தை தா நான் பேசிப்பாக்கிறன் எண்டு தணிகாசலத்தார் சொல்லி இருந்தால் சட்ட பூர்வமாக சரி... எனக்கு ஒண்டை பிடிச்சு தா... எண்டு இன்னும் ஒருவரிடம் சொல்வது...??? ஆங்கிலேயரின் கலாச்சாரத்திலும் இல்லை சட்டத்திலும் இல்லை.... !

அந்த பெண்ணை வற்புறுத்துவதோ அல்லது சம்மதிக்க வைக்கை திட்டம் போடுவதோ சட்டப்படி குற்றம்...

சார்ள்ஸ்.. தற்போது கட்டியுள்ள மனைவியை காதலிச்சு விட்டுப்போட்டுத்தான் டயானாவைக் கட்டினவர். அப்போ சார்ள்ஸுக்கும் டயானாவுக்கும் வயசு வித்தியாசம் 13 வருடங்கள். அப்போது இங்கிலாந்து மக்கள்.. அந்தத் தம்பதியை சிறந்த தம்பதியாக வாழ்த்தி வரவேற்றனர். இப்போ அதே சார்ள்ஸ் 50 கடந்த பின்னும் ஒரு கலியாணம் கட்ட முடியும் என்றால் ஏன் தணிகாசலம் மட்டும் கலியாணம் கட்டக் கூடாத கிழடு என்று இங்கு காட்டப்பட நீங்களும் அதற்கு ஆமாம் போடுறீங்க..??! அதற்காகத்தான் சார்ள்ஸை இங்கு முன்னுறித்தினேன்.

விதவைகளுக்கு உதவி என்று கேட்டு பிரச்சாரம் செய்யும் போது.. இப்படியும் செய்ய முடியும் என்ற ரீதியில்.. இவர்களுக்கு அவர்களோடு தொடர்புகள் இருக்கும் என்ற ரீதியில்.. அப்படி வெளிநாட்டில் உள்ளவையை திருமணம் செய்ய விரும்பிற விதவைகள் இருந்தாச் சொல்லுங்கோ என்று கேட்டதில் என்ன தப்பிருக்கு.

அதை இங்க.. அந்த வானொலிக்காரர் எழுதிய விதம் தான்... தப்பான அர்த்தப்படுத்தலை தணிகாசலத்துக்கு அவை கொடுத்திட்டினமோ என்று எண்ணத் தோன்றுகிறது..??!

இங்கிலாந்தில்.. பேச்சுத் திருமணத்துக்கு தடை கிடையாது. வற்புறுத்தி ஒரு தரப்பின் சம்மதம் இன்றி செய்யும் திருமணங்களுக்குத்தான் தடை.

தணிகாசலம் யாரையும் வற்புறுத்தி கட்டி வை என்று கேட்கவில்லை. இப்படி இருக்கிற என்னை கட்டிக்கொள்ள ஆக்கள் இருக்கினமோ என்ற முறையில் தான் அவர் கேட்டிருக்கிறார் போல் தெரிகிறது. அதில் மறு தரப்பின் சம்மதம் இன்றி வற்புறுத்தி கட்டி வை என்ற நிலை இருப்பதாகத் தெரியவில்லை.

ஏன் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்ட முனையுறீங்க தயாண்ணா. அது தப்பு. உங்கள் வாதத்திற்காக அந்த மனிசனை கெட்டவனாக்கிக் காட்ட இது.. தேவையா..??!

இதனால் உங்கள் சமூகத்துக்கு என்ன நன்மை..???! :lol::unsure:

40 வயதில் விதவையானால் 70,80 வயதில் ஒருவர் வாழ்வு குடுக்க முன்வருவார்.... அதுவும் பிள்ளைகள் இல்லாமல் இருப்பின்... அது சரி என்றால் இதுவும் சரிதானே... வயதிலையா இருக்கு முதிர்ச்சி??

ஆனால் விசயத்தை பாருங்கோ எங்கட ஆம்பிளைகளில் அனேகர் விதவைகளுக்கு வாழ்வு குடுக்க முன் வருகினம் இல்லை.... ஆனால் விதைவைகள் இன்னும் ஒரு திருமணத்துக்காக அலைகிறார்கள் , கேட்ட உடனை ஓம் எண்டுவார்க்கள் போல கிடக்கு.. அதுவும் வயசானவர் எண்டாலும் பறவாய் இல்லை எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

தணிகாசலத்தார் இன்னும் 10 வருசத்திலை மண்டையை போட்டால் அந்த 40 வயது பெண்ணுக்கு மூண்றாவது திருமணம் செய்து வைப்பியளோ....??

ஏன் உங்க வெளிநாட்டில.. கட்டினவை எல்லாம் என்ன குடும்பமாவே வாழினம். அதிகம் பேர் விவாகரத்து எடுத்து பெனிவிட்டில தான வாழினம்.

ஊரில இருந்து.. தையல் மினினோட வாழிறதிலும்.. தணிகாசலத்தைக் கட்டி.. 50 வயசு வரை வாழ்ந்து போட்டு.. பிறகு பிரன்சு பிரஜா உரிமையோட.. பெனிவிட்டில வாழட்டன். அதைத்தானே உங்க பல பேர் செய்யினம்.. அகதிகள் என்று ஓடி வந்து..! ஆக தணிகாசலம் மட்டும் அதைச் செய்யப்படாது. ஆனால் நாங்க செய்யலாம்..! :unsure::lol:

கருத்தாடலில் உங்கள் பதிலுக்கு மட்டும் கருத்திடவேண்டும் என்று இல்லை. ஓர் விடயத்தை புரிந்துகொள்ளாமல் உடனடியாகவே கிண்டல் செய்து ஒருவரை மட்டம் தட்டும்போது.. குறிப்பிட்ட விடயம் கருத்தாடலில் பல இடங்களில் காணப்படும்போது... அதுபற்றி மேற்கோள் காட்டவேண்டியுள்ளது.

மன்னிக்க வேண்டும் அன்பரே, யாரையும் மட்டம் தட்டும் நோக்கம் என்னிடம் இல்லை. நீங்களாகவே புரிந்து கொள்ளாமல் யூகித்துக்கொண்டு அதையே காவிக் கொண்டு திரிய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தணிகாசலத்தார் இன்னும் 10 வருசத்திலை மண்டையை போட்டால் அந்த 40 வயது பெண்ணுக்கு மூண்றாவது திருமணம் செய்து வைப்பியளோ....??

தணிகாசலத்தார் 66 வயசிலதான் மண்டையப் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேபோல் 30 வயசுப் பொம்பிளை 80 வயசிலதான் மண்டையைப் போட வேண்டும் என்ற நியதியும் இல்லை. அதற்கு முன்னாகவே அவை நடக்கலாம்.

28 வயதுப் பெண்ணை 64 வயசு யசீர் அரபாத் திருமணம் செய்தபோது உலகம் அவரை வாழ்த்தாது விட்டதில்லை. வாழ்த்தினது..இறுதியில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

அந்த நிலைக்குக் கூட தணிகாசலம் போகல்ல..

இங்க பிரச்சனை என்ன என்றால் அந்தப் பெண்ணின் நலன் அல்ல.. வானொலிக்காரர் இந்த விடயத்தை இங்கு கொண்டு வந்ததுக்கும் காரணம்.. வயசும்.. அவன் ஒரு இளம் விதவையை கலியாணம் கட்டிறதோ எண்ட எங்களின் வக்கிர சிந்தனை தான்..! :lol::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.