Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலி ஆதரவு கூட்டமொன்றில் கலந்து கொண்ட இந்திய ஊடகவியலாளர் விரட்டப்பட்டுள்ளார் ‐ சர்வதேச ஊடகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலி ஆதரவு கூட்டமொன்றில் கலந்து கொண்ட இந்திய ஊடகவியலாளர் விரட்டப்பட்டுள்ளார் ‐ சர்வதேச ஊடகங்கள்

21 November 10 12:18 pm (BST)

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்ட அமெரிக்க ‐ இந்திய ஊடகவியலாளர் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூஜேர்சி நகரில் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் முன்னதாக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய ஊடகவியலாளரான டொக்டர் பிரகாஷ் எம். சுவாமி என்பவரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இலங்கை அரசாங்கத்தின் முகவர் என தம்மை அடையாளப்படுத்தி, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தம்மை விரட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நியூஜேர்சி மேயர் மற்றும் மனித உரிமை அமைப்புக்களிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் சங்கம் மற்றும் அமெரிக்காவில் வதியும் இலங்கைத் தமிழர்களினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் குறித்து ஜூனியர் விகடன் போன்ற பிரபல இந்திய ஊடகங்களுக்கு ஊடகவியலாளர் பிரகாஷ் தகவல்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

GTN

உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளருக்கு எதிராக புலம்பெயர் அமைப்புக்கள் அதிரடி நடவடிக்கை!

ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2010 23:45

E-mail அச்சிடுக PDF

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் இந்திய ஊடகவியலாளர் கலாநிதி பிரகாஷ் எம்.சுவாமி இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் உளவாளி என்கிற சந்தேகத்தில் அங்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இரண்டால் நேற்று அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சங்கம், இலங்கைத் தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கூட்டம் ஒன்று New Jersey நகரத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொள்ள இவ்வூடகவியலாளருக்கும் அழைப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தபோது கூட்ட ஏற்பாட்டாளர்கள் இவரை பலவந்தமாக வெளியேற்றினர்.

ஊடக கடமையை செய்ய விடாமல் தடுக்கப்பட்டார் என்று குற்றஞ்சாட்டி இவர் New Jersey நகர முதல்வர், New Jersey நகர மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய உள்ளார்.

நன்றி

tamilcnn

எமக்கு எல்லோருமே உளவாளிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு எல்லோருமே உளவாளிகள் தான்.

"நம்ப நட நம்பி நடவாதே".

உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளருக்கு எதிராக புலம்பெயர் அமைப்புக்கள் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் இந்திய ஊடகவியலாளர் கலாநிதி பிரகாஷ் எம்.சுவாமி இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் உளவாளி என்கிற சந்தேகத்தில் அங்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இரண்டால் நேற்று அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ் வலைத்தளங்கள் தமிழருக்கு ஓர் சாபக்கேடு என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். எங்காவது ஒரு செய்தியை திருடவேண்டியது, பின்னர் மூலத்தை குறிப்பிடாமல் தமது அரைகுறைத் தமிழில் அரைகுறைச்செய்தியை சனத்திற்கு உசுப்பேத்தும் வகையில் பரபரப்பாக பிரசுரிக்கவேண்டியது. அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் இப்படியான லூசுத்தனமான வேலைகளில் ஈடுபட்டு இருக்குமா என்பது சந்தேகமே. அப்படி இங்கு செய்தியில் கூறப்படும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று காணப்பட்டால் தமக்கு தாம் அடிக்கின்ற ஆப்பாகவே அவை காணப்படும். குறிப்பிட்டசம்பவம் பற்றிய ஓர் ஊடக அறிக்கையை மேற்கண்ட அமைப்புக்கள் வெளிவிடுவது நல்லது போல் தெரிகின்றது.

Edited by கரும்பு

"அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் இப்படியான லூசுத்தனமான வேலைகளில் ஈடுபட்டு இருக்குமா என்பது சந்தேகமே. அப்படி இங்கு செய்தியில் கூறப்படும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று காணப்பட்டால் தமக்கு தாம் அடிக்கின்ற ஆப்பாகவே அவை காணப்படும். குறிப்பிட்டசம்பவம் பற்றிய ஓர் ஊடக அறிக்கையை மேற்கண்ட அமைப்புக்கள் வெளிவிடுவது நல்லது போல் தெரிகின்றது."

திரு. பிராகாஷ் சாமியிடம் எச்சரிக்கையாக இருங்கள் – வட அமெரிக்க தமிழ் சங்கம்

நியூயோர்க்கில் தன்னை ஊடகவியலாளர் மற்றும் செய்தியாளர் என்றும் கூறிக்கொள்ளும் திரு. பிரகாஷ் சாமி என்பவர் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் தலைவர் திரு.பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அன்புள்ள தலைவர்களுக்கும் அமெரிக்கத் தமிழ் உணர்வாளர்களுக்கும்,

வணக்கம், FETNA வில் நாம் பின்வரும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை குறித்த முக்கிய அறிக்கையை சங்கத்தின் உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டுவருகிறோம். நியூ யார்க் தமிழ் சங்கத்தின் பொது செயலாளரான திரு பிரகாஷ் சாமி, FETNA வுக்கு எதிரான நடவடிக்கைகளில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருப்பது பல சந்தர்பங்களில் நமது NYTS குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . மேலும் சமீபத்தில் திரு சாமி அவர்கள் இதன் உச்சகட்டமாக FETNA விற்கு எதிரான மினஞ்சல் ஒன்றினை இந்திய அரசாங்க உயர் அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். உங்களில் பலருக்கு திரு சாமி இவ்வாறு FETNA விற்கு எதிராக செய்யப்பட்டு வந்திருப்பது ஏற்கனவே தெரிந்திருக்கும். இன்னும் நமக்கு தெரியாமல் திரு சாமி இவ்வாறு FETN விற்கு எதிராக மேலும் பலவாறாக செய்யல்பட்டிருக்கலாம் என்பதே நம் உறுதியான நம்பிக்கை.

இதன் காரணமாக திரு பிரகாஷ் சாமி அவர்களை FETNA வின் உறுப்பினர் பதவிலிருந்து நீக்குவதாக நம் குழுவின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவித்தல் வரும்வரை அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கையானது FETNA குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு வட அமெரிக்க சங்கங்கள் நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் பல்வேறு வாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு ஒருமனதாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. இது குறித்த உங்களின் கேள்விகளுக்கு என்னை அல்லது FETNA வின் அதிபரை தொடர்பு கொள்ளலாம்.

FETNA விற்கு உங்களின் ஆதரவிற்கு மிகுந்த நன்றிகள்

உண்மையுள்ள

Dr . பழனி சுந்தரம்

செயலாளர் FETNA [2008-10]

http://www.fetna.org/index.php?option=com_content&view=article&id=105:beware-of-prakash&catid=36

http://www.tamilthai.com/?p=5429

இந்திய, சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் பெரும்பாலும் ஊடகவியலாளர்கள், வியாபாரிகள் போலவே சுற்றுவதாக கூறுகிறார்கள்.

அல்லது இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகள் ஊடகவியலாளர்கள், வியாபாரிகள் சிலரை தமது கைகூலிகளாக அமர்த்துவது வழக்கம் என்றும் கூறுகிறார்கள்.

இந்துராம் போன்றவர்கள் இதற்கு உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.