Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2012 இல் மஹிந்த ஆட்சி கவிழுமா?

Featured Replies

ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010

மஹிந்த அரசாங்கத்தில் பலர் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். இதன் ஒருகட்டமாக பலர் ஆங்காங்கே தம் உள்ளக்கிடக்கையினைகொட்டி தீர்க்கின்றனர். நேற்று முந்தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலரும் மூத்த அமைச்சருமாகிய மைத்திரிபால சிறிசேனா தமது அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களில் கவிழ்ந்துவிடும் எனக்கூறியுள்ளார்.

லேக்கவுஸ் வட்டாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் உளறியமை மஹிந்த குடும்பத்தினை உலுப்பியுள்ளது. ஒருவரும் எமது அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ய தேவை இல்லை அது தன் பாட்டிலேயே கவிழ்ந்துவிடும் என கூறியுள்ளார் மைத்திரிபால சிறிசேனா.

இதே வேளை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய 20 பிரதி அமைச்சர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. மஹிந்த அரசில் இந்த உட்கட்சி பிளவுகளுக்கு பசில் இராஜபக்‌ஷ, கோத்தா, மகன் நாமல் ஆகியோரே காரணமாம். ஆட்சி அதிகாரத்தை மஹிந்த குடும்பம் முழுவதுமாக பகிர்ந்துள்ளதுடன் ஏனைய அரசியல்வாதிகளை இறுக்கிப்பிடிப்பதாக கூறப்படுகின்றது.

அதிர்ச்சியடைந்தவர்களில் முன் நாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்கவும் அடங்குவார். ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையும் 20 முக்கிய புள்ளிகளுடன் ஏ|ற்கனவே ஐக்கிய தேசியகட்சியில் இருந்து கட்சி தாவி சென்றவர்களும் இணைவார்களாம்.

அதிருப்தியாளர்களுடன் பீரிஸ் அவர்களும் இணைய வாய்ப்புண்டு என்கின்றனர். ஏனெனில் அமைச்சர் பீரிஸ் ஓர் துரோகி என சிங்கள கடும் போக்காளர் இப்போதே கூறுகின்றனர். காரணம் இவர் மஹிந்தவை ஏமாற்றி ஐ. நா. விசாரணை குழுவை இலங்கை வரவழைக்க சம்மதம் தெரிவித்து விட்டார் என குற்றம் சாட்டுகின்றனர்.

கோத்தபாய மூத்த அமைச்சர்களை மதிக்காமை, அவர்களின் வியாபார முயற்சிகள், தனிப்பட்ட பிரச்சினகளில் தலையிடுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். வருமானம் தரும் அமைச்சுக்களை குடும்பவசம் வைத்திருப்பது. போன்ற நடவடிக்கைகள் சிறிலங்கா சுதந்திரகட்சியினரை வெகுவாக பாதித்துள்ளது.

அண்மையில் சில மூத்த அமைச்சர்கள், அவர்களின் பிள்ளைகள் சென்றுவரும் விபச்சார விடுதியினை கோத்தா சீல் வைத்தமையும் பின்னர் அந்த அரசியல் வாதிகள்: பொலிஸ் தலைமையகத்திற்கு தொலைபேசியில் பேசியபோது. கோத்தபாயவின் கட்டளை என கூறி தொலபேசியினை வைத்துள்ளனர். இதனால் அந்த அரசியல் வாதிகள் கடும் சினம் அடைந்துள்ளனராம்.

இவ்வாறு மஹிந்தவின் குடும்ப ஆட்சியினால் அரசாங்கமே 2012 இற்குள் கவிழ்க்கப்பட்டுவிடும் என கூறப்படுகின்றது.

மறுவளமாக போர்க்காலத்தினை விட இப்போ பொருட்களின் விலை அதிகமாகிக்கொண்டு போவதும் அரசியல் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு எனலாம். போர் முடிந்தபின்னர் எல்லாம் சரியாகிப்போய்விடும் என மஹிந்த கூட்டணி கூறியது ஆனால் போர் முடிந்த பின்னர்தான் சாதாரண சிங்கள மக்களிற்கு வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது.

வெளி நாட்டு கொள்கையை பொறுத்தவரையும் மஹிந்த தோல்வியினயே சந்தித்து வருகின்றார். அதாவது சிங்களமக்களுக்கு சொல்வதொன்று செய்வது இன்னொன்று அண்மைய எடுத்துக்காட்டாக ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழுவை இலங்கைக்கு வர சம்மதித்தமையானது படைத்தரப்பிற்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்தவுடன் ஒட்டியுள்ள கடும் போக்காளர்களான விமல், சம்பிக்க ரணவக்க, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், தேசிய போராட்ட குழு உட்பட சில அமைச்சர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆகவே ஒட்டுமொத்தத்தில் மஹிந்த தனது சரிவை நிவர்த்தி செய்ய எதனை கையில் எடுப்பார் என்பது புரியாத புதிர். முன்பெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஓர் இராணுவ நடவடிகையினை எடுத்து சமாளித்து விடலாம். போர் என்ற மாயைக்குள் எல்லாவற்றையும் அடக்கி விடலாம் . இப்போ என்ன செய்வது? எதனையுமே செய்ய முடியாது. அபிவிருத்தி என்று கூறி வெளினாடுகளில் கடன், கடனாக வாங்கி குவித்தாலும் சாதாரணமக்களின் வாழ்க்கை சுமையினை குறைக்க முடியவில்லை என்பது அடுத்த தலையிடி.

ஆகவே மஹிந்த ஆட்சி தன்னை நிலைத்து நிற்க செய்வதற்கான நடவடிக்கை என்னவாக இருக்கும். அதற்கிடையில் மஹிந்தவுடன் இருப்போர் செக் சொல்லிவிடுவார்களா என்பதே மஹிந்த குடும்பத்தின் பீதி.

Eelanatham

அண்மையில் சில மூத்த அமைச்சர்கள், அவர்களின் பிள்ளைகள் சென்றுவரும் விபச்சார விடுதியினை கோத்தா சீல் வைத்தமையும் பின்னர் அந்த அரசியல் வாதிகள்: பொலிஸ் தலைமையகத்திற்கு தொலைபேசியில் பேசியபோது. கோத்தபாயவின் கட்டளை என கூறி தொலபேசியினை வைத்துள்ளனர். இதனால் அந்த அரசியல் வாதிகள் கடும் சினம் அடைந்துள்ளனராம்.

இலங்கையில் சுமார் 200,000பேர் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக தகவல்

நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது சுமார் 200,000 பேர் பாலியல் தொழிலாளிகளைத் தேடிச் செல்கின்றனர் என்றும் சுமார் 40,000பேர் அத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரியான டாக்டர் சுஜாத சமரகோன் தெரிவித்தார்.

இலங்கை ஒரு சிறிய நாடாக இருப்பினும் இந்த ஆய்வு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எயிட்ஸை தடுப்பதற்காக குறைந்தளவான நடவடிக்கையே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எச்.ஐ.வி கிருமியால் 3,000 பேர் தாக்கப்பட்டுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளது. இன்னும் பலர் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளனர். அத்துடன் 50 தாய்மார்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்களினூடாக 46 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி கிருமி தொற்றியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங்காணப்பட்டதிலிருந்து 20 தொடக்கம் 49 வரையான வயதுக்ககுட்பட்ட 212 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13697--200000-.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல் மஹிந்த ஆட்சி கவிழுமா?

அதுசரி மிகிந்தன்ரை ஆட்சி கவுண்டாப்பிறகு?????????????????????? :lol:

மறுவளமாக போர்க்காலத்தினை விட இப்போ பொருட்களின் விலை அதிகமாகிக்கொண்டு போவதும் அரசியல் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு எனலாம். போர் முடிந்தபின்னர் எல்லாம் சரியாகிப்போய்விடும் என மஹிந்த கூட்டணி கூறியது ஆனால் போர் முடிந்த பின்னர்தான் சாதாரண சிங்கள மக்களிற்கு வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது.

இதற்கு மகிந்த சிந்தனையின் இன்னொரு தீர்வு வழி

இலங்கையில் போர்மியூலா Formula Motor Race மோட்டார் பந்தயக் களங்கள்

இலங்கையில் இரு போர்மியூலா மோட்டார் பந்தயக் களங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்க வானொலியொன்று தெரிவித்துள்ளது.

கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் இத்தகைய பந்தயக் களங்களை அமைப்பதன் சாத்தியம் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக மோட்டார் கார் பந்தய சங்கத்தின் தலைவர் ஜோன் டொட் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/13623-2010-12-24-17-38-07.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி மிகிந்தன்ரை ஆட்சி கவுண்டாப்பிறகு?????????????????????? :lol:

ஏன் அண்ணை இப்பிடி சலிச்சுப் போறியள்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அண்ணை இப்பிடி சலிச்சுப் போறியள்.. :)

பண்டாரநாயக்கா,சிறிமா தொடக்கம் உதுதானே நடக்குது?

அவர் கவுழுவார்.அடுத்தது தமிழனுக்கு நல்லது நடக்கும்.

இவர் கவுழுவார்.அதுக்குப்பிறகு தமிழனுக்கு நல்லது நடக்கும்.

இல்லாட்டி..

அவனுக்கு வோட் பண்ணுவம் அப்பதான் எங்களுக்கு நல்லது

இப்பிடியேபோய்ப்போய்.........

ஆக மொத்தத்திலை அழிஞ்சது எங்கடை எங்கடை சனந்தான் :(

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்கா,சிறிமா தொடக்கம் உதுதானே நடக்குது?

அவர் கவுழுவார்.அடுத்தது தமிழனுக்கு நல்லது நடக்கும்.

இவர் கவுழுவார்.அதுக்குப்பிறகு தமிழனுக்கு நல்லது நடக்கும்.

இல்லாட்டி..

அவனுக்கு வோட் பண்ணுவம் அப்பதான் எங்களுக்கு நல்லது

இப்பிடியேபோய்ப்போய்.........

ஆக மொத்தத்திலை அழிஞ்சது எங்கடை எங்கடை சனந்தான் :)

உண்மைதான். மாற்றங்கள வந்தால் நல்லது நடக்கும் என்று நம்புவதற்கு முன்னால், தமிழர்களுக்கு நல்லது செய்ய எந்தச் சிங்கள அரசுகளும் தயாராக இருந்ததில்லை என்ற படிப்பினையை தமிழர்கள் உணராமல் இருப்பது வேதனையானாது.

உண்மைதான். மாற்றங்கள வந்தால் நல்லது நடக்கும் என்று நம்புவதற்கு முன்னால், தமிழர்களுக்கு நல்லது செய்ய எந்தச் சிங்கள அரசுகளும் தயாராக இருந்ததில்லை என்ற படிப்பினையை தமிழர்கள் உணராமல் இருப்பது வேதனையானாது.

இப்பவும் பென்சேகா ஆட்ச்சிக்கு வந்தால் எல்லாம் நல்லதாய் முடியும் எண்டு சொல்லுற ஆக்களை சந்திக்கிறனான்...

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஆட்சியாளர் எல்N;லாரும் யார் தமிழனுக்கு அதிக அழிவை ஏற்படுத்துவது என்று போட்டி போடுகிறார்கள்.தமிழர்களுக்கு கூட அழிவைக் கொடுக்கக் கூடியவர்களைத்தான் சிங்களவர்களும் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் பென்சேகா ஆட்ச்சிக்கு வந்தால் எல்லாம் நல்லதாய் முடியும் எண்டு சொல்லுற ஆக்களை சந்திக்கிறனான்...

நல்லது என்றால் என்னவென்று தெரியாத ஆட்களாய் இருக்கும். பொன்சேகா வந்தாலும், இனப்பிரச்சினை ஒன்றில்லை என்றுதான் சொல்லியிருப்பார்..

  • தொடங்கியவர்

இப்பவும் பென்சேகா ஆட்ச்சிக்கு வந்தால் எல்லாம் நல்லதாய் முடியும் எண்டு சொல்லுற ஆக்களை சந்திக்கிறனான்...

அவங்களும் சலிக்காமல் ஓடுறாங்கள் நாங்களும் ஓடுவம் இதுதான் எங்கட ஃபோர்முலா வன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்களும் சலிக்காமல் ஓடுறாங்கள் நாங்களும் ஓடுவம் இதுதான் எங்கட ஃபோர்முலா வன்

எத்தினை நாளுக்கு போஸ் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.