Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்களது 5வது ஆண்டு நினைவு நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்களது 5வது ஆண்டு நினைவு நிகழ்வு

மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நினைவு நிகழ்வு கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை(1-1-2011) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இல 43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார்.

Thirulogamorthi_lighting_small.jpg

இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வைத்தியர் திருலோகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரசாரச் செயலாளர் திரு.இளங்கோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் இருவர் மாமனிதர் சிவநேசன் அவர்களது மைத்துனர் கண்ணன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

மாமனிதரது திருவுருவப்படத்திற்கு அ.இ.த.காங்கிரஸ் கட்சியின் பிரசாரச் செயலாளர் திரு.இளங்கோ அவர்களும், மாமனிதர் சிவநேசன் அவர்களது மைத்துனர் திரு.கண்ணன்அவர்களும் மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினருமான திரு.செல்வராசா கஜேந்திரன் தலைமை உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் நினைவாக போரால் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்குள் தள்ளப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஐயாயிரம்(5000)ரூபா வீதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது நினைவாக போரால் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்குள் தள்ளப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஐயாயிரம்(5000)ரூபா வீதம் வழங்கப்பட்டது.

மொத்தம் 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் மொத்தம் ஒரு இலட்சம் பெறுமதியான உதவுதொகை வழங்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளின் உதவியுடன் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.

உதவு தொகையினை மாமனிதர் சிவநேசன் அவர்களது மைத்துனர் கண்ணன் அவர்களும் வைததியர் திருலோகமூர்த்தி அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களும் வழங்கி கெளரவித்தனர்.

இந்நிகழ்வில் பெருமளவு மாணவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களும் கலந்து கொண்டு மாமனிதருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

http://meenakam.com/

Edited by விடியல்

இந்த மாமனிதர்களின் அர்ப்பணிப்பு ஆக்கபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.

இவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

தமிழö தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்காக உழைத்த மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் மாமனிதர் சிவராம் ஆகியோரின் ஆத்மா தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைக்க முற்பட்டவர்களை மன்னிக்காது.

கொலைகாரர்கள் இன்று ... சிங்களத்தின் அமைச்சராகவும், சிங்கள ஜனாதிபதியின் பிராந்திய இணைப்பாளராகவும் .... நமோ நமோ மாதா!!!!!!!!!

karubarathy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு அருகிலிருப்பவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்..!

இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் கிழக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன் கருணா குழுவின் படுகொலைகளில் ஒன்று ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை.

இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் வடக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன் டக்லஸ் குழுவின் படுகொலைகளில் ஒன்று மகேஸ்வரனின் படுகொலை.

இனப்படுகொலை அரசில் இன்று இருவரும் அமைச்சர்கள்.

கருணாவுக்கு அருகிலிருப்பவர் யார்?

அந்த மிருகம்தான் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த இனியபாரதி!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தண்டிக்கப்படுவது எப்போது ?

மாமனிதர் பரராஜசிங்கத்தின் ஆத்மா தமிழ்க்கூட்டமைப்பை பிரித்தவர்களை மன்னிக்காததிருக்கட்டும், ஆனால் சரணாகதி அரசியலையும், இந்தியாவுக்கு அடிமைச் சேவகம் செய்யும் விருப்பையும் தனது தலையாய கடமையாகக் கொண்ட இன்றைய தலமையையும் மன்னிக்கப்போவதில்லை. அதிலும் முக்கியமாக அவசரகாலச் சட்டத்துக்கு ஆதராவக வாக்களித்ததன் மூலம் யாழ்ப்பாணத்திலும், இன்னும் தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளிலும் இப்போது ஆரம்பித்திருக்கும் படுகொலைகளுக்கு சம்மதம் தெரிவித்திருப்பதன்மூலமும் தமிழினவழிப்பிற்கு வழிமொழிந்திருக்கும் தமிழ்க் கூட்டமைப்பையும் மன்னிக்கப்போவதில்லை.

தமிழ்க் கூட்டமைப்பை உடைத்தவர்கள் இருக்கட்டும், ஆனால் அந்தக் கூத்தமைப்பு கூட்டணி என்றும், தமிழரசுக்கட்சி என்றும் பிரிந்து கூத்தாடுவதை யார் மன்னிக்கப்போகிறார்கள்?

மாற்றுக்கருத்தென்பது ஒருவர் கொண்டிருக்கும் கொள்கையில் சம்மதமின்றி, ஆனால் அவர் எந்த நோக்கத்திற்காக அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாரோ, அதே நோக்கத்தை அடைவதற்காக இன்னொரு வழியில் தாம் பயணிப்பது. கருத்துக்கள் மாறுபட்டிருப்பினும், இறுதியில் அடைய வேண்டிய இலக்கு ஒன்றாக இருத்தல் அவசியம்.

ஆனால் நாம் இங்கு பார்ப்பதோ, ஒருவர் தனது கொள்கையில் விடாப்பிடியுடன் பயணிக்கும்போது, அதன் இறுதி இலக்கு ஒரு ஒட்டுமொத்த சமூகத்தினதும் விடிவாக இருந்த பொழுதிலும், மாற்றுக்கருத்து என்கிற போர்வையில் கொள்கைப்பிடிப்புடன் பயணம் செய்பவரை விமர்சித்தல், அதன் மூலம் இலட்சியத்துக்கு தடைபோடுதல். இவர்கள் தெரிந்தே இதைச் செய்வதால் மாற்றுக்கருத்தாளர்கள் என்போர் உண்மையிலேயே போராட்டத்தின் தடைக்கற்களாக, இனவழிப்புக் கோடரியின் கம்புகளாக இருந்து வருவதுடன், எதிரிக்கும் அளப்பரிய சேவை ஆற்றிவருகிறார்கள்.

புலிகளின் பாதையைப் பிழை என்று மாற்றுக்கருத்தாடுவோர் இதுவரையிலும் அந்தக் கொள்கைக்கு மாற்றான ஆனால் தமிழீழ விடுதலையை நோக்கியதான ஒரு வழியைக் காட்டியிருக்கிறார்களா என்றால் அப்படி ஒன்றும் இல்லையென்பதே உண்மை. இதுவரை காலமும் செய்ததுபோல புலிகள் பிழை, ஆகவே அழிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

புலிகளும் அழிந்தாயிற்று, ஆனாலும் உங்கள் காழ்ப்புனர்வுகள் அடங்கவில்லை. எப்போதுதான் நிறுத்துவதாக உத்தேசம்? எப்போதுதான் உங்கள் மாற்றுவழியை எங்களுக்குக் காட்டப்போகிறீர்கள்??

உங்களைப் பொறுத்தவரையிலும், மாற்றுக்கருத்தென்பதோ அல்லது புலியெதிர்ப்பென்பதோ, உங்கள் இயலாமையை மறைக்கும் போர்வைகள். இந்தப் புலியெதிர்ப்புக்குள்ளும், மாற்றுக்கருத்துக்குள்ளும் ஒளிந்துகொண்டு நீங்கள் செய்வதெல்லாம் உங்கள் கைய்யாலாகத்தனத்தையும், வெறுமையையும் ஒளிப்பதுதான்.

ஏனென்றால் புலியெதிர்ப்பை நீங்கள் கைவிட்டால் அதற்குப்பிறகு என்ன செய்வதென்றே உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அதைத்தவிர உங்களுக்கு அதற்கான தேவையும் கிடையாது. தமிழினப் போராட்டத்தைப் பொறுத்தவரையிலும் நீங்கள் வெறும் வெற்று வேட்டுக்கள், செல்லாக்காசுகள், கோடரிக் காம்புகள், தடைக்கற்கள், நந்திகள், சகுணிகள்....!!!!!!

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்..

கொலைகாரர்கள் இன்று ... சிங்களத்தின் அமைச்சராகவும், சிங்கள ஜனாதிபதியின் பிராந்திய இணைப்பாளராகவும் .... நமோ நமோ மாதா!!!!!!!!!

karubarathy.jpg

ஐயா..இணைப்பாலரே....உங்கள் மொழிபெயர்ப்பு அதிகாரி..பாமினி எங்கே....??? ----ராஜகோபுரம் கட்டவந்த நிதியில் பஸ் வாங்கி சம்பாதிக்கும் எழியவனே.......தமிபுலிவில் மாக்கெட்டுக்கு பக்கத்தி பெரிய பங்களா....ஐயோ எல்லாம் என் உழைப்புத்தான் என்றாராம்....பீடோ நிறுவனர்.... நாங்கள் கட்டாரி இருந்தாலும் உன் தோலை உரிப்போம்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.