Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது பாடசாலைகள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தம்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவை பாடசாலைகள் நாளை மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களே மூட இருந்த நிலையில் முகாம்கள் பாடசாலைகளில் இயங்குவதனால் 5 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லிவிப் பணிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31,112 பேர் 103 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுளிலும் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் வீடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளில் கிராம சேவையாளர்களும் பொது அமைப்புகளும் செய்து வருகின்றன.

Flooding%20in%20Batti.jpg

Flooding%20in%20Batti002.jpg

ஈழ நாதம்

Edited by உமை

.... தற்போது அம்மன் ஆலயம் ஒன்றுக்கு சென்று வந்தேன், அங்கு கிழக்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிக்கிறார்கள், லண்டனிலுள்ள சில ஆலயங்கள் மூலம் ஏறக்குறைய 40000 பவுன்ஸுகள், அங்கு அனுப்பப்பட்டுள்ளதாம், இன்னும் சேகரிக்கிறார்கள், தொடர்ந்து அனுப்பவென ...

... ஆனால் அங்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்களுக்கு, சிங்களம் போதிய உதவிகள் ஏதுவும் செய்யவில்லையாம், மாறாக சிறிய மழைக்கே ஒதுங்கிய பொலநறுவையை அண்டிய சிங்கள பிரதேசங்களுக்கு உதவிகள் திருப்பி விடப்பட்டுள்ளனவாம்!

... இங்கு இப்போது அனுப்பப்படுபவைகளும், அங்கு போய் முழுவதுமாக சேருமா???????

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ரீதியாக செய்யப்படும் உதவி தான் மக்களை சென்றடையும்.அரசிற்கூடாக செய்தால் அமைச்சர்களின் பொக்கட்டுகளுக்குள் தான் போகும்.சுனாமியில் கண்ட உண்மை.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அடாத மழை; விடாத அனர்த்தம்

98 வருடங்களின் பின் பிரளயம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-14 09:14:24| யாழ்ப்பாணம்]

மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழையினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வெள்ளத்தினால் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக 2 இலட்சத்து 87 ஆயிரத்து 871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 36 பேர் காயமடைந்துள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 2 ஆயிரத்து 680 வீடுகள் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளதாகவும் 15 ஆயிரத்து 274 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகச் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5 இலட்சம் ஏக்கர் நெல் வயல்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கையின் வானிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. "லா நினா" என்னும் காலநிலை அனர்த்தம் உலகம் முழுவதையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் தரைப் பகுதியை பெரிதும் பாதிக்கும் நிலைமையே "லா நினா" அனர்த்தம் என அழைக்கப்படுகிறது.

இதனால் இலங்கையின் வானிலையில் பாரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மழைவீழ்ச்சி 100 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1912ஆம் ஆண்டின் பின்னர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தினங்களில் குறித்த பிரதேசங்களில் 295 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. நாட்டின் நிலவி வரும் மோசமான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும். இதேவேளை இலங்கையின் பல பாகங்களிலும் அசாதாரணமான குளிர்காலநிலை நிலவி வருகிறது. நேற்றைய தினம் மாலை வேளையில் நுவரெலியாப் பிரதேசத்தில் 8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=15028

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நண்பர்களுக்கு

மீண்டும் வடகிழக்கில் மழை யாவருக்கும் தெரிந்ததே மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்வு பாடசாலைகளில் தஞ்சம்

அங்கு வட கிழக்கு மக்களுக்கு அறவிடும் பணத்தை தெரிந்த உறவுகளூக்கும் மட்டும் அனுப்புங்கள் நான் நேரில் பார்த்த காட்சிகளை உங்களூக்கு சொல்ல இயலாது யாராவது உங்களுக்கு தெரிந்த அல்லது சொந்தகாரர்களிடம் அனுப்பி உரியவர்களுக்கு சேரும் படி செய்யவும் நாங்களும் சமைத்த உணவுகளை கொண்டு அதாவது வெள்ளம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்களீடம் வீட்டுக்கு ஒவ்வொரு பொதிகளாக வாங்கி கொடுத்தோம் ஆனால் இப்போது அதுவும் முடியாமல் உள்ளது ஆகையால் கிடைக்கும் சகல உதவிகளையும் நன்றாக முடிவெடுத்து செய்யவும்

நாங்கள் கொண்டு போன உணவைக்கூட அரசியல் லாபம் ஈட்டுவதற்க்காக[சிலர்] அதை அவர்கள் பெற்று அவர்கள் வழங்குவது போல் போட்டோவும் பிடித்துக்கொண்டார்கள்

மட்டு அம்பாறையில்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நண்பர்களுக்கு

மீண்டும் வடகிழக்கில் மழை யாவருக்கும் தெரிந்ததே மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்வு பாடசாலைகளில் தஞ்சம்

அங்கு வட கிழக்கு மக்களுக்கு அறவிடும் பணத்தை தெரிந்த உறவுகளூக்கும் மட்டும் அனுப்புங்கள் நான் நேரில் பார்த்த காட்சிகளை உங்களூக்கு சொல்ல இயலாது யாராவது உங்களுக்கு தெரிந்த அல்லது சொந்தகாரர்களிடம் அனுப்பி உரியவர்களுக்கு சேரும் படி செய்யவும் நாங்களும் சமைத்த உணவுகளை கொண்டு அதாவது வெள்ளம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்களீடம் வீட்டுக்கு ஒவ்வொரு பொதிகளாக வாங்கி கொடுத்தோம் ஆனால் இப்போது அதுவும் முடியாமல் உள்ளது ஆகையால் கிடைக்கும் சகல உதவிகளையும் நன்றாக முடிவெடுத்து செய்யவும்

நாங்கள் கொண்டு போன உணவைக்கூட அரசியல் லாபம் ஈட்டுவதற்க்காக[சிலர்] அதை அவர்கள் பெற்று அவர்கள் வழங்குவது போல் போட்டோவும் பிடித்துக்கொண்டார்கள்

மட்டு அம்பாறையில்

தகவலுக்கு நன்றி முனிவர்!

தமிழனுக்கு துன்பம் வருவதுகூட சிங்களவரின் துன்பத்தைப் போக்கத்தான் போலிருக்கின்றது!! :mellow:

Edited by suvy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.