Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்படியும் நடந்தது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:இப்படியும் நடந்தது !

இது எனது சொந்த அனுபவம்...

கடந்த வருடம் இங்கு அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பில் நான் ஈடுபட்டிருந்தேன். கடுமையான பிரச்சாரங்கள், கூட்டங்கள், விளக்கவுரைகள் என்று மிகவும் சிரமப்பட்ட காலமது. இன உணர்வுள்ள ஒரு சிலரின் உதவியுடன் கருத்துக்கணிப்புக்குழுவினர் செயற்பட்டு வந்தனர். எமது நோக்கம் முடிந்தளவிற்கு எல்லாத் தமிழரையும் சென்றடைய வேண்டுமென்பதில் நாம் விடாமுயற்சியுடன் ஈடுபட்டிருந்தோம். அதற்காக எமக்குக் கிடைத்த எல்லா வழிகளிலும் பிரச்சாரம் செய்தோம். இந்நிலையில் ஒருநாள் இனம்தெரியாத நபர் ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர். சிட்னியில் மாதாந்தம் வெளிவரும் ஒரு தமிழ் விளம்பரப் பத்திரிக்கையின் ஆசிரியரென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நீங்கள் செய்யவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி எமது பத்திரிக்கையிலும் செய்தி போட ஆவலாயுள்ளோம், ஒரு கட்டுரை வரைந்து தரமுடியுமா என்று கேட்டார். சரி, தானாக வரும் விளம்பரத்தை ஏன் வேண்டாம் என்று சொல்லுவான், எழுதிக்கொடுப்போம் என்று சம்மதித்தேன். ஈழத்தில் தமிழரின் போராட்ட வரலாற்ரையும், அதன் அவசியத்தையும் விளங்கப்படுத்தி வட்டுக்கோட்டைத் தீர்மானம் செய்யப்பட்ட காலத்தில் நடந்தவற்றையும், இன்றைக்கு அது செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் விளங்கப்படுத்தி தமிழில் ஒரு கட்டுரை வரைந்து கொடுத்தேன். ஆனால் அவரை ஒரு தடவை கூட நேரில் சந்திக்கும் வாய்ப்பு அதுவரையில் கிடைக்கவில்லை.

நாம் ஒருவாறு கருத்துக்கணிப்பு நாளும் வந்தது. நான் தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் ஒரு பகுதியில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் பணியிலிருந்தேன். அங்குவந்த அந்த பத்திரிக்கை ஆசிரியர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதுடன், எனது கட்டுரையை தனது புத்தகத்தில் அச்சிட்டிருப்பதாக கூறி புத்தகத்தையும் காண்பித்தார். அத்துடன் நில்லாது நீங்கள் ஒவ்வொரு மாதமும் எனது பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று வேண்டியும் கொண்டார். அப்போதிருந்த அவசரத்தில் சரி பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். அதன்பிறகு அடிக்கடி தொலைபேசியில் கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொண்டிருந்ததால் சரி, எழுதலாம் என்று எண்ணி மாதமொரு கட்டுரை எழுதினேன். எனது கட்டுரைகள் முழுக்க முழுக்க வன்னிப் படுகொலைகளை மைய்யப்படுத்தியே எழுதப்பட்டதுடன், போர்க்குற்றங்களுக்காக சிங்கள இந்திய அரசுகளை குற்றம்சாட்டியும் அமைக்கப்பட்டிருந்தன. இரு கட்டுரைகளுக்குப் பின்னர் ஒரு நாள் எனது வீடு வந் அந்த ஆசிரியர், "ஏன் யாரையும் தாக்கி எழுதுகிறீர்கள்?, எவரையும் நோகாது, பொதுவாக எழுதலாமே?" என்று என்னிடம் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை."ஒரு லட்சம் மக்களைச் சாகக் கொடுத்துப்போட்டு நிற்கிறோம், எதைப் பொதுவாக எழுதச் சொல்லுகிறீர்கள்?" என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு அவர், சரி பரவாயில்லை, நாடுகளின் பெயரையாவது தவிர்த்து எழுதுங்கள் என்றார். முடியாது, என்னால் இப்படி மட்டுமே எழுத முடியும் என்று நான் அடம் பிடித்ததால் அவர் ஒத்துக்கொண்டு போய்விட்டார்.

சில கட்டுரைகளுக்குப் பின்னர், என்னுடன் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்ட அவர் பின்னர் நான் அனுப்பிய கட்டுரைகளை வெளியிடவில்லை.

இவருடன் ஆரம்பத்தில் ஒன்றாகப் பணிபுரிந்து பின்னர் பிரிந்து சென்று இன்னொரு பத்திரிக்கை ஆரம்பித்த இன்னொரு தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு எனது கட்டுரையை வெளியிட முடியுமா என்று மின்னஞ்சலில் கேட்டிருந்தேன். சரி, அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தார். நான் அவருக்கு அனுப்பிய கட்டுரை, "கிரவுண்ட் ரிப்போட்டில்" வெளிவந்திருந்த வன்னிப்படுகொலையில் இந்திய ஆளும் காங்கிரஸின் பங்கு பற்றியது. அவரும் அக்கட்டுரையை வெளியிடாததுடன் தொடர்பையும் துண்டித்துக்கொண்டார்.

கிளர்ச்சியூட்டக்கூடிய தமிழ்ச் சினிமா நடிகைகளின் வர்ண அட்டைப்படத்துடன் வெளிவரும் இவ்விரு பத்திரிக்கைகளும் மிகவும் சிறந்த தாள்களில் அச்சிடப்பட்டவை. இங்கிருக்கும் அனைத்துத் தமிழ்க் கடைகளிலும் இவை நூற்றுக்கணக்கில் கிடக்கும். இலவசமாகக் கிடைப்பவை.

அதிலுள்ள விலம்பரங்களின் வருமானத்துடன் ஒப்பிடும்போது ஆயிரக்கணக்கில் இவ்வாறான பத்திரிக்கைகளை ஒரு தனிநபர் அச்சிடுவது இயலாத காரியம். அப்படியிருக்க இதை ஒரு பகுதிநேரத் தொழிலாகச் செய்யும் ஒருவரால் இந்தளவு செலவை எப்படிச் சமாளிக்க முடிகிறது? இவர்களின் பின்னாலிருப்பவர்கள் யார்??

தேசியத்துடன் ஈடுபாடு கொண்டவர்களைச் சுற்றிவந்து செய்தி சேகரிக்கும் இந்தக் கனவான்கள், இந்தியா செய்த அட்டூழியங்களையும், துரோகங்களையும் வெளியிட மறுப்பதேன்??

தமிழகத்திலேயே சீமான் போன்ற இன உணர்வாளர்கள் இந்தியத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும்போது, இவர்கள் அவுஸ்த்திரேலியா வந்தும் அதைச் செய்யத் தயங்குவது ஏன்?? ஈழத்தமிழரின் பணத்தின்மூலம் தமது வியாபாரம் நடக்கவேண்டும், ஆனால் அதே ஈழத்தமிழருக்குத் தமது அரசு செய்த அநியாயங்களை வெளியிடவும் விருப்பமில்லை. ஆனால் புலத்தில் செயல்ப்படுபவர்களுடன் தொடர்பும் வேண்டும். யாரிவர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரையும் தாக்கி எழுதப் போக அவர்கள் தங்கள் பத்திரிகையை மேலும் கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு தாங்கள் மேலும் பணம் உழைக்க முடியாது என யோசித்து உங்கள் கட்டுரைகளை வெளியிட மறுத்திருக்கலாம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானையும் சீனாவையும் தாக்கி எழுதினால் வெளியிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிலுள்ள விலம்பரங்களின் வருமானத்துடன் ஒப்பிடும்போது ஆயிரக்கணக்கில் இவ்வாறான பத்திரிக்கைகளை ஒரு தனிநபர் அச்சிடுவது இயலாத காரியம். அப்படியிருக்க இதை ஒரு பகுதிநேரத் தொழிலாகச் செய்யும் ஒருவரால் இந்தளவு செலவை எப்படிச் சமாளிக்க முடிகிறது? இவர்களின் பின்னாலிருப்பவர்கள் யார்?? தேசியத்துடன் ஈடுபாடு கொண்டவர்களைச் சுற்றிவந்து செய்தி சேகரிக்கும் இந்தக் கனவான்கள்இ இந்தியா செய்த அட்டூழியங்களையும்இ துரோகங்களையும் வெளியிட மறுப்பதேன்??

"உங்கள் கேள்விக்கு பதில் மேற்குறித்த பந்தியிலேயே இருக்கிறதே ........ !!!! "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.