Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் ஆதரவுப் படமான செங்கடல் படத்துக்கு சென்சார் தடை!

Featured Replies

இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!" என்ற தைரிய அறிவிப்போடு வெளியாகத் தயாராக உள்ள, ஈழ யுத்தத்தையும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளையும் விளக்க முயற்சிக்கும் படமான செங்கடலுக்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது.

ஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது. லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது.

ஆனாலும் இந்தப் படம் புலிகள் மீதான வழக்கமான விமர்சனமாக இல்லாமல், சிங்களப் பேரினவாதம் மற்றும் அதற்கு துணை நிற்கும் சக்திகளால் தமிழர் பட்ட / படும் துயரங்களின் தொகுப்பாக வந்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு அனுமதி கோரி தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்த குழுவினர், உடனே அனுமதி மறுத்துவிட்டதோடு, படத்தை திரையிடவும் தடைவிதித்துள்ளனர். இந்த படத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரம் லட்சம் என அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து, சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசை விமர்சிப்பது போல வசனங்கள் உள்ளனவாம்.

சிங்கள இனவாதத்துக்கு தமிழக - இந்திய அரசுகள் துணை நின்றதாக வசனங்கள் சித்தரிக்கின்றனவாம். இதனாலேயே அனுமதி மறுப்பதாகக் கூறியுள்ளனர்!

செங்கடல் படத்தின் சூப்பர் படங்கள் காண......

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5954

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Jun 23, 2011 / பகுதி: செய்தி /

செங்கடல் திரைப்படத்துக்கு ஏ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது!

நீண்ட கால இடைவெளியின் பின் ஏ தரச் சான்றிதழுடன் எதுவித காட்சி அழிப்புமின்றி லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்படத்தினை வெளியிட இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையையும், இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படும் மீனவர்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில்பிணக்குகள் ஏற்படக்கூடும் என பிரதேச சென்ஸார் குழு காரணம் வெளியிட்டது.

இதையடுத்து லீனா மணிமேகலை புதுடெல்லியில் உள்ள திரைப்பட சான்றிதழ் தீர்ப்பாயத்தில் தடைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து திரைப்படத்தினை இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் சபையினை பரிசோதிக்குமாறு தீர்பாயம் உத்தரவிட்டது.

திரைப்படத்தை பரிசோதித்த இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் சபை திரைப்படம் ஏ தரச் சான்றிதழின் கீழ் வெளியிடப்படக் கூடியது எனத் தெரிவித்துள்ளது.

கலைஞர்களின் சுதந்திரத்துக்கு இவ்வெற்றி ஒரு எடுத்துக் காட்டு என லீலா மணிமேகலை கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வரின் ஆட்சியிலேயே இப்படம் வெளியில் வருவதற்கு பெரும் இழுபறிநிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/17044/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழர்களை காப்பாற்ற சோனியா தூது குழுவை அனப்பியதையும்.............. தூதுகுழு திரும்பு முன்பே படகொலைகள் நடந்ததையும் அதை கேள்வியுற்று கோனியா பதறி பதறி அழுததையும் ஏன் படமாக்கவில்லை???????????????

உண்மை என்று சொன்னால் உண்மைகளை அல்லவா காட்சியாக்க வேண்டும். அதுவும் ஜனநாயகம் ததும்பும் இந்தியாவில் இந்த படத்திற்கு தடைவிதித்தே ஆகவேண்டும்.

முக்கியமாக தமிழர் போராட்டத்தை கடுமையாக ஆதரிக்கும் சோடா மூடி நடிப்பதாலும் அவரின் ஆருயிர் டோழி பூ... மினி மோகலை இயக்குவதாலுமே இந்தப்படத்திற்கு விளம்பரம் போய்ச்சேரக்கூடாதென்று சென்ஸார் போர்டு தடை விதித்துள்ளதாக அறியவருகிறது.

அடிக்குறிப்பு; மேலுள்ள விடயம் தமிழ் நாட்டு சினிமாப்பத்திரிகை பாணியில் எழுதப்பட்டுள்ளது...எழுத்துக்கூட்டி விடயங்களை அறிந்து கொள்வது உங்கள் சிற்றின்ப அறிவைப்பொறுத்தது...

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 க்கு அனுப்பிப் பார்க்கலாம்!

இதை விடத் தமிழனுக்கு ஒரு வழியையும் இந்தியாவும் சிங்களமும் விட்டு வைக்கவில்லை!!!

''எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை!''

இரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே பேசுகிறது லீனா மணிமேகலையின் 'செங்கடல்’ திரைப்படம். படத்துக்குத் தரச் சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டுடன் போராடி, டிரிப்யூனலுக்குப் போய் ஒரு வெட்டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி இருக்கிறார் லீனா.

'' 'இந்தப் படம் இலங்கை அரசை விமர்சிக்கிறது, அதனால்தான் தணிக்கைச் சான்றிதழ் தர முடியாது’ என்றார்கள். அதை எதிர்த்துத்தான் டிரிப்யூனல் போனேன். தனுஷ்கோடியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று இருக்கிறது. ஏராளமான விதவைகள், தாயை, சகோதரியை, சகோதரனை இழந்தவர்கள் சூழ நிற்கிறது அந்த ஊர். பெண்களை உருட்டுக்கட்டையில் தாக்கி மர்ம உறுப்புக் களைச் சிதைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை வெறும் புள்ளிவிவரங்களாகச் சுருக்கி விட முடியுமா? கறுப்பாக இருப்பதையும் தமிழில் பேசுவதையும் தவிர, மீனவர்கள் செய்த குற்றம்தான் என்ன? 'சென்சார் அதிகாரிகளின் பாராட்டுப் பெற்ற படம்’ என்று சிலர் விளம்பரம் செய்கிறார்களே, அவர்கள் என்ன கலைஉலகின் பிரதிநிதிகளா?'' என்று கோபம் வார்த்தைகளாகக் கொப்பளிக்கிறது லீனாவிடம்.

''சென்சார் போர்டின் மீது கடுமையான கோபமோ?''

இந்தக் கோபம், தனிப்பட்ட வகையில் ஆனது அல்ல. இலங்கை போர்க் குற்றங்கள் பற்றி 'சேனல் 4’தான் உண்மைச் செய்திகளை வெளியிடுகிறது. தணிக்கையே உண்மையை மறைக்கத்தான் பயன்படுகிறது. குஜராத்தில் நடந்த அக்கிரமங்களின் ஒரு சிறிய பங்குகூட இன்னும் நம்முன் வைக்கப்படவில்லை. மணிப்பூரில் ராணுவத்துக்கு எதிராகத் தாய்மார் கள் ஆடைகளைத் துறந்து போராட்டம் நடத்தினார்கள். காஷ்மீரில் ராணுவத்தை மக்களே கற்கள் எறிந்து விரட்டுகிறார்கள். 'சேனல் 4’ வெளியிட்ட போர்க் காட்சிகளில், சித்ரவதைக் காட்சிகளில் இந்திய வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் காட்சிப்படுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் இந்திய இறையாண்மை என்று ஒரு வார்த்தையைத் தயாராக வைத்து இருக்கிறார்கள்!''

''ஏன் இந்தப் படத்துக்கு இவ்வளவு பிரச்னைகள்?''

''கலையா, தொழில்நுட்பமா, உண்மையா என்று வரும்போது, நான் உண்மையைத்தான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு மொழி, தேச, இன அபிமானங்கள் கிடையாது. இந்தப் படத்தில் கொலைகார அரசாங்கங்களின் அசல் முகத்தைக் காட்டி இருக்கிறேன். விடுதலை இயக்கங்களும் என் விமர்சனத்துக்குத் தப்பவில்லை. ஈழப் பிரச்னையை மேடைகளில் பேசி பிழைப்பு நடத்துகிறவர்களையும் சாடி இருக்கிறேன். நான் முழுதாக மக்கள் பக்கம் மட்டுமே நின்று இருக்கிறேன். எது நல்லது, எது கெட்டது எனத் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் மக்களுக்கு உண்டு. நிறைய நாடுகளில் தணிக்கை என்பதே கிடையாது. 'சென்சாருக்கு ஏற்றபடி கருத்துக்களைச் சாமர்த்தியமாகச் சொல்லலாமே’ என்கிறார்கள் சிலர். வியாபாரத்துக்குத்தான் சாமர்த்தியங்கள் தேவை. செங்கடல், இந்திய- இலங்கை அரசுகளையும், பதவிக்காக ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த ஓட்டுக் கட்சிகளையும், விமர்சனம் செய்யும் படம். அடுத்த மாதம் திரைக்கு வருகிற இந்தப் படம், ஈழத்தின் அசலான முகத்தை முன் வைக்கும்!''

Vikatan

பார்க்க ஆசையாக உள்ளது.ஆனால் இயக்கங்கள் மீதும் விமர்சனம் உள்ளதால் வாங்குவார்களோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.