Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் செய்தால் அது பணயம்.. லிபிய போராளிகள் செய்தால்.. அது தொண்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் முன்னரும் பொதுமக்கள் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து சிறீலங்கா சிங்கள அரச படைகளுக்கு பயந்து ஒதுங்கிய போது புலிகளைப் பற்றி மேற்குலக ஊடகங்களும் சிங்கள மற்றும் அதன் சார்ப்பு நாட்டு ஊடகங்களோடு இணைந்து பொய்களை சொல்லி வந்தன. புலிகள் பொதுமக்களை பயணக் கைதிகளாகப் பயன்படுத்துவதாக குறை கூறியும் வந்தனர்.

இப்போ மேற்குலக ஊடகவியலாளர்களின் கண் முன்னாலேயே லிபிய அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி வன்முறையோடு போராடுபவர்கள் ஆயுதப் பயிற்சி அற்ற பல நூறு பொதுமக்களை போர்க்களத்துக்கு அழைத்துச் செல்வதை.. மேற்குலக ஊடகங்கள்.. அரசுக்கு எதிரான தொண்டாற்றல் என்று விபரிக்கின்றன.

அப்பாவி மக்கள் புகலிடம் தேடி ஓடும் போது பயணக் கைதிகள் என்று சொல்லி அவர்களின் சாவுக்கு வித்திட்டவர்கள்.. ஆயுதப் பயிற்சி அற்ற பொதுமக்களை கடாபியின் வலிமை மிக்க படைகளின் முன் படைக்கலங்களின் முன் தமது தேவைக்காகப் பலியிட அதை தொண்டாக மாற்றி இருப்பது மேற்குலகின் அப்பட்டமான இரட்டை அணுகுமுறையை அப்படியே இயம்பி நிற்கிறது.

இதை கேட்க இந்த உலகில் யாருமே இல்லையா..?!

அதுமட்டுமன்றி இன்றைய நிலையில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இருப்பதாக அறிவிக்கப்பட்ட லிபிய அதிபருக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேரடி ஆதரவை மேற்குலக ஊடகங்கள் வெளிப்படையாக வெளியிடவும் முன் வரவில்லை..! இது மகிந்தவை காப்பாற்றி தமிழர்களை தண்டித்து கடாபி எதிர்ப்பாளர்களை காப்பாற்றி கடாபியை தண்டிக்கும் தமது தேவைக்கான மேற்குலகின் நோக்கை அப்படியே இனங்காட்டி நிற்கிறது.

மேற்குலகிடம் இதை சுட்டிக்காட்டி தமிழர்கள் நீதி கோர வேண்டியதும்.. அவர்களை சிந்திக்க செய்ய வேண்டியதும் எம் கடமையாகும். ஆனால் நாமோ..??!

http://www.bbc.co.uk/news/world-africa-12646683

Edited by nedukkalapoovan

மேலே கூறப்பட்ட கூற்றுகள் சரியாக உள்ளன. ஆனால் எம்மிடம் அவர்களுக்கு புரிய வைக்ககூடிய என்ன பலம் உள்ளது என்பதினை வைத்தே மேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறலாம். எமது துருப்புக்களில் முக்கியமான ஒன்றாக சிங்களத்தின் சீன உறவு பார்க்கப்படுகின்றது. இல்லை உலகத்தமிழர் பேரவை போன்று ஒரு உலகத்தமிழர் பொருளாதார பேரவை ஒன்றை புலம்பெயர் சமூகம் அமைத்து தமது பொருளாதார பலத்தை கட்டல் வேண்டும்.

லிபியாவில் மசகு எண்ணெயும், அது "சோமாலியா" மாதிரி வரக்கூடாது என்ற எண்ணமும், அங்கு அல்கைடா காலூன்றகூடாது என்ற எண்ணமும் காரணமாக உள்ளன. அங்குள்ள மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.

எமது பலவீனங்கள் என்ன என்பதை மேற்குலமும் எதிரிகளும் தெரிந்து வைத்துள்ளார்கள். அதேவேளை அவர்களுக்குள் உள்ள பலவீனம் இன்றுள்ள மத்திய கிழக்கு நிலைமை நாளை சிங்களத்துக்குள்ளும் இருந்து வரலாம் ( விலை வாசி, வேலையில்ல திண்டாட்டம்). இல்லை அது ஆசிய நாடுகளுக்கும் பரவினால் நிலைமை என்னாகும் என்பதே.

Gaddafi calls close ally Rajapakse

http://www.deccanchronicle.com/international/gaddafi-calls-close-ally-rajapakse-629

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் செய்தால் அது பணயம்.. லிபிய போராளிகள் செய்தால்.. அது தொண்டு.

மகிந்தன் இரண்டாந்தரமும் கடாபிக்கு சிக்னல் குடுக்கிறானாம்.

ஆரோ பின்னாலையிருந்து சிங்கனுக்கு அந்தமாதிரி வைன் குடுக்கிறாங்கள் போலை கிடக்கு

எல்லாரும் அணிசேரா மாநாட்டு சிங்கங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தன் இரண்டாந்தரமும் கடாபிக்கு சிக்னல் குடுக்கிறானாம்.

ஆரோ பின்னாலையிருந்து சிங்கனுக்கு அந்தமாதிரி வைன் குடுக்கிறாங்கள் போலை கிடக்கு

எல்லாரும் அணிசேரா மாநாட்டு சிங்கங்கள் :D

கு.சா. அண்ணா, சிவப்பு வைனா... வெள்ளை வைனா.... குடுக்கிறாங்க..... :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் அணிசேரா மாநாட்டு சிங்கங்கள் :D

உந்த அணிசேரா மாநாட்டுக்கு(கொழும்பில் நடைபற்றபொழுது) வந்த கடாபி சிங்கன் தான் தங்கி நின்ற கொட்டல் பணியாளர்களுக்குக் தங்க சங்கிலி பரிசாக கொடுத்தவனாம்

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அணிசேரா மாநாட்டுக்கு(கொழும்பில் நடைபற்றபொழுது) வந்த கடாபி சிங்கன் தான் தங்கி நின்ற கொட்டல் பணியாளர்களுக்குக் தங்க சங்கிலி பரிசாக கொடுத்தவனாம்

அணிசேரா (சேர்ந்த) மாநாட்டுக்கு வரும் போது கடாபி எட்டுக் கார் கொண்டு வந்தவர்.

சீனா அப்பவே.. பண்டாரநாயக்கா மண்டபம் கட்டிக் கொடுத்தது.

எல்லாம்... பிளான் பண்ணித்தான், செய்திருக்கிறாங்கள்.

நாங்கள் தான் இன்னும், டெல்லிக்கு தந்தி அடிச்சுக் கொண்டிருக்கிறம். :D:lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமன்றி இன்றைய நிலையில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இருப்பதாக அறிவிக்கப்பட்ட லிபிய அதிபருக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேரடி ஆதரவை மேற்குலக ஊடகங்கள் வெளிப்படையாக வெளியிடவும் முன் வரவில்லை..! இது மகிந்தவை காப்பாற்றி தமிழர்களை தண்டித்து கடாபி எதிர்ப்பாளர்களை காப்பாற்றி கடாபியை தண்டிக்கும் தமது தேவைக்கான மேற்குலகின் நோக்கை அப்படியே இனங்காட்டி நிற்கிறது.

மேற்கு நாடுகளின் இரட்டை வேடம் தொடரும்.நாம் பார்வையளர்களாக மட்டுமே முடிகிறது.இன்னும் சிலர் இவர்களுக்கு பெரும் மதிப்பு கொடுப்பது ஏன் என்று விளங்கவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.