Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கையை வெளியிட வேண்டாம்” ஐ.நாவிடம் இலங்கை வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையை வெளியிட வேண்டாம்” ஐ.நாவிடம் இலங்கை வேண்டுகோள்

Friday, April 22, 2011, 3:13

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாமென ஐ.நா. சபையிடம் இலங்கை நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ் அறிக்கை இலங்கையில் இனங்க ளுக்கிடையில் மீளக் கட்டியமைக்கப்பட்டு வரும் நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் ஐ.நா. அமைப்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிவிவ கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று கொழும் பில் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை வெளி யிடுவது அடிப்படைத் தவறாகும். நாம் ஐ.நா வுக்கு என்ன கூறுகிறோம் என்றால் எம்மை இணைந்து செயற்பட விடுங்கள் என்பதே. இலங்கை அதன் இருண்ட காலங்களிலிருந்து விடுபட்டு வெளிவரும்போது அதற்கு ஐ.நா. உதவவேண்டும். குறித்த அறிக்கை வெளியிடப்படும் பட்சத் தில் இலங்கையின் நல்லிணக்கத்தை ஏற்ப டுத்துவதற்காக அனைத்து இன மக்களை யும் ஒன்றிணைக்க முடியாது. இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சவாலாக அமையும். அதனால் அவ் அறிக்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைய வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வினால் நிய மிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை வெளியி டப்பட்டமை தவறாகும். நல்லிணக்க ஆணைக்குழு நாட்டின் பல பாகங்களுக்குச் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களையும் பதிவுசெய்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டமை தவறாகும். நியூயோர்கிகலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த ஏப்பிரல் 12ஆம் திகதி இந்த அறிக்கை அனுப்படும்போது அந் நாட்டு நேரப்படி பகல் 12.15 மணியாகவிருந்தது. அறிக்கையைப் பார்க்கதவுடன் இலங்கை அரசு அதனை நிராகரிப்பதாக உடனே அறிவித்தது.

இதேவேளை குறித்த அறிக்கையினை கசியவிடும் நடவடிக்கையிலும் இலங்கை அரசாங்கம் ஈடுபடவில்லை. குறித்த அறிக்கையின் முன்மொழிவுகளைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இல்லாமற் செய்யப்படும். 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கைக்கு ஏழு நாள் மற்றும் ஏழு மணித்தியாலத்திற்குள் பதிலளிக்க முடியாது. அத்துடன் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை மேற்கத்தேய ஆலோசனைக்கிணங்க தயாரிக்கப்பட்டதாகும். குறித்த நிபுணர் குழு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்க அவரால் நியமிக்கப்பட்டதே தவிர ஐ.நாவின் எந்தவொரு சபையிலும் நியமிக்கப்படவில்லை. இலங்கையின் நீதிமன்ற முறைமை, சட்ட மா அதிபர் திணைக்களம், மக்களால் தெரிவுசெய்யப்பட்டோர் தொடர்பில் வெளிநாடுகளுக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது.

குழுவை நியமிக்கவில்லை இலங்கையிலுள்ள பிரச்சினைக்கு முடிபு காண வெளிநாடுகள் நேர அவகாசம் வழங்கவேண்டும். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதிலளிப்பதற்காக எந்தவொரு குழுவையும் அரசு நியமிக்கவில்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது. குறித்த அறிக்கையை வெளியிட்டது பிழை என்று கூறும்போது அது தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் மற்றும் முன்மொழிவுகள் எதனையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. குறித்த நிபுணர் குழு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் ஒரு குழுவே தவிர அது ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவல்ல. நிபுணர் குழு புலனாய்வு நடவடிக்கையில ஈடுபடவில்லை. குற்றமிழைத்தவர்களை விசாரிக்கவுமில்லை. குறித் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டது என்று அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையை வெளியிட்டதே.... ஸ்ரீலங்கா ஐலன்ட் பத்திரிகை.

சொந்த செலவில் , தனக்கே.....சூனியம் வைக்கும் நாடு.

பான் கீ மூனின் அறிக்கை திருத்தம் இன்றி வெளியிடப்படும் - ஐ.நா.சபை

[ வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2011, 06:22.33 AM GMT ]

இலங்கை தொடர்பில் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை, திருத்தங்கள் ஏதும் இன்றி முழுமையாக வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நியூயோர்க் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இந்த கோரிக்கைய நிராகரித்த ஐக்கிய நாடுகள் சபை, எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்படும் எனவும், இந்த அறிக்கை தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்திருப்பதாக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

கசிந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அடிப்படையில், இலங்கையில் யுத்த குற்றம் தொடர்பிலான விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் 2009ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் உயிரிழந்தமையையும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நாடளாவியரீதியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை நிராகரித்து, ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையை செய்யும் என, பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கோரிக்கையை முற்றாக நிராகரித்த ஐ.நா., நிபணர் குழு அறிக்கையை முழுமையாக வெளியிடப் போவதாகச் சூளுரை

[Friday, 2011-04-22 06:47:30]

ஐ.நா.நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், அதனை தாம் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாது முழுமையாக வெளியிட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரது பதில் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாட்டை, குறித்த அறிக்கையில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக இலங்கை அரச அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ-மூனின் நிபுணர் குழு அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதனால் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக தாம் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க போதில்லை என அவர் உறுதியளித்துள்ளார்.

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை வெளி யிடுவது அடிப்படைத் தவறாகும். நாம் ஐ.நா வுக்கு என்ன கூறுகிறோம் என்றால் எம்மை இணைந்து செயற்பட விடுங்கள் என்பதே. இலங்கை அதன் இருண்ட காலங்களிலிருந்து விடுபட்டு வெளிவரும்போது அதற்கு ஐ.நா. உதவவேண்டும். குறித்த அறிக்கை வெளியிடப்படும் பட்சத் தில் இலங்கையின் நல்லிணக்கத்தை ஏற்ப டுத்துவதற்காக அனைத்து இன மக்களை யும் ஒன்றிணைக்க முடியாது. இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சவாலாக அமையும். அதனால் அவ் அறிக்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைய வேண்டும்.

இதை இலங்கைக்கு விளங்கப் படுத்தியதே பெருங்காரியம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தியை அமைதியாக உள்வாங்குவோம்.

கறுப்பி இணைத்த தலைப்பில் ...... சூழுரை என்று... ஏதோ... ஒரு இணையத்தளம் வெளியிட்டிருக்குது.

உப்பிடியான விசுக்கோத்து வேலைகளை நிற்பாட்டின்னாலே... பாதிக் கிணறு தாண்டிய மாதிரி இருக்கும்.

அதிரடி , பதிலடி என்று என்னும் அட்டகாசமாக வரும்,

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி , பதிலடி என்று என்னும் அட்டகாசமாக வரும்,

ஓம்,,,, ஹரி, இவன்களின்ரை அட்டகாசம் இரண்டுகிழமைக்கு அரியண்டமாக... இருக்கும். :D

இலங்கையின் இந்த வேண்டுகோளை ஏற்க முடியாது, அந்த அறிக்கையின் முழு வடிவமும் வெளியிடப்படும் என ஐ.நா. உதவி பேச்சாளர் Fahran Haq குறிப்பிட்டுள்ளதாக பிரெஞ்சுச் செய்தியில் உள்ளது.

http://fr-ca.actualites.yahoo.com/sri-lanka-le-rapport-lonu-sur-les-crimes-174510581.html

இவர்கள் ஏன் இவ்வளவு நாளும் இப்படி பூச்சாண்டி காட்டுகிறார்களோ தெரியவில்லை. அறிக்கை தயாரித்தாயிற்று, இலங்கைக்கும் பிரதி அனுப்பியாகி விட்டது. வெளியிட என்ன தாமதம் ?

இவர்கள் ஏன் இவ்வளவு நாளும் இப்படி பூச்சாண்டி காட்டுகிறார்களோ தெரியவில்லை. அறிக்கை தயாரித்தாயிற்று, இலங்கைக்கும் பிரதி அனுப்பியாகி விட்டது. வெளியிட என்ன தாமதம் ?

எமக்கு சொல்லப்பட்டது இந்த அறிக்கை. ஆனால் "அடுத்து என்ன" என்பதுபற்றி சிங்களமும் ஐ.நா.வும் முரண்டுபிடிப்பதாகவே தெரிகின்றது. மகிந்த கூட்டம் சூடான் வழியில் ஐ.நா.வுடன் இணைந்து செல்லுமா? இல்லை செரபிரிநிர்சா ( யூகோசிலாவியா ) வழியில் செல்லுமா? என்பது கூட விவாதிக்கப்படலாம்.

பிளேக்கின் பிரயாணமும், இந்தியாவின் மௌனமும் கூட கவனிக்கப்பட வேண்டியன.

இதையும் பாருங்கள் : போர்க்குற்றம் : சிறீலங்காவிற்கு சீனா – ரஸ்யா – இந்தியா உதவி செய்ய இனி வாய்ப்புக்கள் இல்லை.

http://www.alaikal.com/news/?p=66135

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இந்த வேண்டுகோளை ஏற்க முடியாது, அந்த அறிக்கையின் முழு வடிவமும் வெளியிடப்படும் என ஐ.நா. உதவி பேச்சாளர் Fahran Haq குறிப்பிட்டுள்ளதாக பிரெஞ்சுச் செய்தியில் உள்ளது.

http://fr-ca.actualites.yahoo.com/sri-lanka-le-rapport-lonu-sur-les-crimes-174510581.html

இவர்கள் ஏன் இவ்வளவு நாளும் இப்படி பூச்சாண்டி காட்டுகிறார்களோ தெரியவில்லை. அறிக்கை தயாரித்தாயிற்று, இலங்கைக்கும் பிரதி அனுப்பியாகி விட்டது. வெளியிட என்ன தாமதம் ?

தமிழர் தரப்பிற்கு இரண்டு பகுதியும் இணைந்துதான் படம் காட்டகிறார்களோ தெரியவில்லை!

சில படங்களை பார்க்கும்போது நாம் ஆகா ஒகோ என்று பாhத்துகொண்டிருப்போம் ஆனால் முடிவு சப்பென்று இருக்கும்.............

அதுபோலதான் இதுவுமோ தெரியவில்லை!

ஏனெனில் இதுஒன்றும் புதியதொன்று அல்ல............. ஏற்கனவே பல அறிக்கைகள் சமர்பித்து பின்பு ஐ.நா வில் வாக்கெடுப்பு என்றும் ஏதோ செய்தர்கள் கடைசியில் ஒன்றும் இல்லை என்பது கூட சகிக்க கூடியது. எதிர்த்து வாக்கு போட்ட கூட்டமும் தனி தனியாக சென்று ஸ்ரீலங்காவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்ததுதான் உச்சகட்ட ஜனநாயகமாக இருந்தது!

தமிழர் தரப்பு கண் மூடித்தனமாக மகிழ்வதை விட்டுவிட்டு ஏமாறாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.