Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனி ஈழமே திமுகவின் குறிக்கோள்: கருணாநிதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஈழமே திமுகவின் குறிக்கோள் என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பின்னர் திமுக தீர்மானம் திமுக உயர்நிலைக்கூட்ட தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய கலைஞர், தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப்போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52576

விடிய நல்ல ஒரு நகைச்சுவையை வாசித்து ரசித்தன்...! :rolleyes::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பதவிகளுக்காக எந்த ஈழத்தமிழரை சாகடிச்சாரோ.. இப்ப அந்தச் சாவுகளை வைச்சு தனது மகளை காக்கவும் துணிகிறார். இப்படியான ஈன அரசியலை இந்த உலகில் சங்கரி.. கருணா.. டக்கிளஸ்.. கருணாநிதி போன்றவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

அமைச்சர் பதவிகளுக்காக எந்த ஈழத்தமிழரை சாகடிச்சாரோ.. இப்ப அந்தச் சாவுகளை வைச்சு தனது மகளை காக்கவும் துணிகிறார். இப்படியான ஈன அரசியலை இந்த உலகில் சங்கரி.. கருணா.. டக்கிளஸ்.. கருணாநிதி போன்றவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

ஈழம் என்ற சொல்லே எடுக்கப்பட்டு இலங்கை என்று தான் பாவிக்கும்ப்டி உத்தரவு போட்டவர்.

பிறகு என்ன திரும்பிட்டார்.

அவருக்கு தெரியும் பிரபாகரன் அல்லாத யார் ஒருவராலும் சிங்களத்துடன் மோத முடியாது. இனி என்ன மீண்டும் முருங்கை மரம் தான்.

நாங்கள் தான் பாவம் ஏமாளிகள். வாழ்க தமிழகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்ற சொல்லே எடுக்கப்பட்டு இலங்கை என்று தான் பாவிக்கும்ப்டி உத்தரவு போட்டவர்.

பிறகு என்ன திரும்பிட்டார்.

அவருக்கு தெரியும் பிரபாகரன் அல்லாத யார் ஒருவராலும் சிங்களத்துடன் மோத முடியாது. இனி என்ன மீண்டும் முருங்கை மரம் தான்.

நாங்கள் தான் பாவம் ஏமாளிகள். வாழ்க தமிழகம்

இன்று கருணாநிதிக்கு எங்களைப் பயன்படுத்தி தான் தன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார். எமக்கோ இவரின் இந்த நிலையையாவது பயன்படுத்தி எமது இலக்கை அடைய வேண்டும் என்ற நிலை.

பாவ புண்ணியம் பார்த்தால் இந்த உலகில் வாழ முடியாது. அவர் எங்களைப் பாவிப்பது போல.. நாமும் பாவிக்க வேண்டியதுதான்..! அதுதான் புத்திசாலித்தனமும் கூட..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஈழமே திமுகவின் குறிக்கோள் என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார்.

-----

அப்போது பேசிய கலைஞர், தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப்போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

இப்படியான கோரிக்கைகளை, ஒரு முதலமைச்சராக இருந்து சட்ட மன்றத்தில் நிறைவேற்ற சந்தர்ப்பம் இருந்தும், அதனைச் செய்யாது....

சட்டமன்றம் கலைக்கப் பட்ட நிலையில்..... வெளியிட்டு, (F)ஃபிலிம் காட்டுவது கலைஞருக்கே உரிய தனிக் குணம்.

தமிழீழம் ஒரு கட்டத்தில் நிழலரசாக இருந்தபோது இதைத் தெரிவித்திருந்தால் நிலை வேறு. இப்போது ஏதோ சங்கடத்தில் இருக்குதுகள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ஈழத்தமிழரை ஆதரித்து அறிக்கை விட்டால்...... கருணாநிதியும் ஆதரித்து அறிக்கை விடுவார்,

அவ எதிர்த்தால்..... இவரும் எதிர்ப்பார்.

இது தான்.... இவர்களின் தமிழீழம் சம்பந்தமான நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: போடா...போடா ...புண்ணாக்கு, போடாதே தப்புக்கணக்கு !!!!! கி...கி... கி.........
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு அறிக்கையை நான் எதிர்பார்த்தேன்.இது கனிமொழி மீதான விசாரணையின் செய்திகளை மூடீ மறைப்பதற்கான செய்தியதாக இருந்தாலும் இதனை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.ஜெயலலிதா கருணாநிதி மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் தமிழ்ஈழக் கோட்பாட்டை ஆதரித்துக்குரல் கொடுக்கும் இன்றைய நிலையில் இந்திய மத்திய அரசுக்கும் சிறிலங்கா மீதான சில அழுத்தங்களைப் பாவிக்க வேண்டிய புறக்காரணிகள்(சீனா பாகிஸ்தானுடனான சிறிலங்காவின் நெருக்கம்)எல்லாம் ஒரு புள்ளியில் சந்திப்பது தமிழருக்குச் சாதகமான விடயங்களே. அத்துடன் ஐநாவால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட சிறிலங்காவை இந்தியா ஆதரித்தால் ஐநா வின் நிரந்தர உறுப்பினர் என்ற கனவு பலிக்காது.ஆகவே இந்தியா இந்த விடயத்தில் மௌனம் காத்தாலோ அல்லது சிறிலங்காவிற்குச் சார்பாக நடந்தாலோ அதன் முகமூடி சர்வதேசத்தின் முன் கிழியும்.ஐநாவின் இந்த அறிக்கை சிறிலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.நம்பினவர்களைக் கைவிடுவது அரசியலில் சகஜம்.இந்தியா நல்ல பெயர் எடுக்கப் போகுதா? அல்லது தொடர்ந்து மலையாளிகளின் பேச்சுக்கு ஆடப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் ஐநாவால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட சிறிலங்காவை இந்தியா ஆதரித்தால் ஐநா வின் நிரந்தர உறுப்பினர் என்ற கனவு பலிக்காது.ஆகவே இந்தியா இந்த விடயத்தில் மௌனம் காத்தாலோ அல்லது சிறிலங்காவிற்குச் சார்பாக நடந்தாலோ அதன் முகமூடி சர்வதேசத்தின் முன் கிழியும்.ஐநாவின் இந்த அறிக்கை சிறிலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.நம்பினவர்களைக் கைவிடுவது அரசியலில் சகஜம்.இந்தியா நல்ல பெயர் எடுக்கப் போகுதா? அல்லது தொடர்ந்து மலையாளிகளின் பேச்சுக்கு ஆடப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் இந்தியா ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கும் என்கிற ஒபாமாவின் முந்தைய செய்தி ஞாபகத்துக்கு வருகிறது. :rolleyes: இந்தியாவுக்கு எந்தப்பக்கமும் போகமுடியாத நிலைபோல தெரியுது.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ஈழத்தமிழரை ஆதரித்து அறிக்கை விட்டால்...... கருணாநிதியும் ஆதரித்து அறிக்கை விடுவார்,

அவ எதிர்த்தால்..... இவரும் எதிர்ப்பார்.

இது தான்.... இவர்களின் தமிழீழம் சம்பந்தமான நிலைப்பாடு.

இண்டைக்கென்ன எல்லோரும் தப்பு தப்பா பேசறேள்.

இவாளெல்லாம் மத்திய அரசின் நாடி பிடித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாதிரி பேசுவாள்.

இவாள் கருத்துப்படி மத்திய அரசு ஒரு முடிவெடுத்து விட்டது.

இவாள் அதற்கு ஏற்ற மாதிரி தாளம் போடறா போல கிடக்கு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.