Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியான கேணல் பானு கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்போது அவர் புலிகளின் தலைவர் இல்லையா? அல்லது ஒருவேளை முன்னாள் புலிகளின் தலைவர் என்றோ அல்லது புலிகளின் முன்னாள் தலைவர் என்றோ நான் எழுதி இருக்க வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்களா?

நான் தனிப்பட்ட முறையில் தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்புகிறேன். உங்களுக்கு எப்படி அவர் இறந்திட்டார் என்பதை நம்ப முடிகிறதோ அதேபோல் எனக்கும் எனது நிலைப்பாட்டை நம்ப முடிகிறது.

தமிழீழ தேசிய தலைவர் ஒருவர் தான். அங்கு முன்னாள் இன்னாள் என்று யாரும் கிடையாது. இந்தியர்கள் தேச பிதாவாக காந்தியை என்றும் மதிப்பது போல.. எங்கள் தமிழீழ தேசிய தலைவராக பிரபாகரன்.. என்றும் இருப்பார். அவர் இறந்தாலும் வாழ்ந்தாலும் அந்த நிலையை வரலாற்றில் எனி ஒருபோதும் இழக்கப் போவதில்லை.

எனவே உங்கள் போராட்ட விரோத எண்ணங்களை இங்கு கருத்தாக இடுவதற்கு மாவீரர்களின் களப் பலிகளையும் தேசிய தலைவர் பற்றிய செய்திகளையும் பாவிப்பதை நிறுத்தவதே சிறப்பு. மக்களுக்கும் தேசத்துக்கும் நன்மை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

நான் எப்போதோ அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டேன். நான் எனக்குள் செய்வது இருக்கட்டும். இன்னும் அவர் இருக்கிறார் என்று புலி வியாபாரிகளால் தவறாக வழி நடத்தப்படுகின்ற புலம்பெயர் மக்களுக்கும் உண்மையை இல்லை என்று வாதிடுகின்றவர்கள் கூறலாமே.

சுவிசில் தலைவர் வீரச்சாவடைந்த தகவல் அறிந்து நிகழ்வாகக் கொண்டா நினைத்தவர்களுக்கு புலி வியாபாரிகள் என்ன செய்தார்கள் என்பது தெரியுமா? தெரியாவிட்டால் சுவிசில் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரகுநாதா,

புலிகளின் தலைவரும் போராளிகள் செய்த தியாகம்தான் ஐ.நா. வரை கொண்டு வந்திருக்கின்றது. இங்கே நான் கூற வருவது இதுதான். ஒரு பகுதியினரிடம் அவர் இருக்கிறார் என்றும் இன்னொரு பகுதியினரிடம் அவர் இல்லை என்றும் குழப்பங்களை உண்டு பண்ணியிருப்பதால் புலம்பெயர் மக்களில் பெருமளவிலானோர் நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

அவர்கள் பிரபாகரன் பாதுகாப்பாக இருந்துகொண்டு போராளிகளைத் திரட்டிக்கொண்டு ஐந்தாம் கட்ட ஈழப் போரை வீச்சாகக் முன்னெடுப்பார் என்று கூடும் இடங்களில் எல்லாம் உரையாடிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறான கதைகளைக் கட்டி விடுகின்றவர்கள் யார் என்பது உங்களுக்கும் தெரியும்.

தெரியாவிட்டால் அதனையும் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் தமிழ்நெட், ஈழமுரசு, சங்கதி, பதிவு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலி வியாபாரிகள்.

நான் தனிப்பட்ட முறையில் தலைவர் உயிரோடு இருக்கிறார் என நம்பிறன் அதற்காக தலைவர் வந்து இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை நடத்தி வைப்பார் என கூற வரவில்லை...நீங்கள் மேலே சொன்ன மாதிரி புலம் பெயர் அமைப்புகள் தலைவரை வைத்து வியாபாரம் செய்கிறார்களோ தெரியாது ஆனால் கடைசி வரை இயக்கத்தில் இருந்து கடைசி வரை முள்ளிவாய்க்காலில் இருந்து போராடின[உண்மை தெரிந்த] போராளிகள் கூட உண்மை சொல்ல மறுக்கிறார்கள் கேட்டால் தங்கள் சார்ந்த அமைப்புக்கு தாங்கள் சத்திய பிரமாணம் எடுத்து உள்ளோம் தங்களது வாயால் உண்மை வெளி வராது என சொன்னார்கள்...எதற்காக அவர்கள் உண்மையை மறைக்கிறார்கள்?...நிட்சயமாக புலம் பெயர் அமைப்புகள் சொல்லி மறைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்போது அவர் புலிகளின் தலைவர் இல்லையா? அல்லது ஒருவேளை முன்னாள் புலிகளின் தலைவர் என்றோ அல்லது புலிகளின் முன்னாள் தலைவர் என்றோ நான் எழுதி இருக்க வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்களா?

நிர்மலன்,

நாங்களும் உங்களைப்போலவே கேபி ஆதரவாளர்கள்தான்..! :rolleyes: என்ன ஒரு சின்ன வித்தியாசம்தான்..!! :unsure:

கேபியின் முதல்நாள் செவ்வியை (தலைவர் இருக்கிறார்!) நாங்கள் நம்புகிறோம். நீங்கள் அவரின் இரண்டாம் நாள் பேட்டியைப் பிடிச்சுக்கொண்டு தொங்கிறியள்..! :D

நிர்மலன்

.... சரி இறந்து விட்டார், இப்ப என்ன செய்யப் போகிறீர்கள்????

.... உங்கள் கவலைகள் எமக்கு புரிகிறது ... மீண்டும் இயமனுக்கே பச்சடி போடும் உங்கள் தலைவர் கேபியை கொண்டு ... புலம்பெயர் தேசத்தில் உள்ள ஊடகங்களில் கதறி அழப்பண்ணி, நான் போராட்டத்தை கொண்டு செல்லப்போகிறேன், ஆதரவளியுங்கள் என கேட்கப் போகிறீர்களா???? இல்லை அந்த வெற்றிடத்தை நிரப்பப் போகிறீர்களா?????

... கேபியின் புட்டுக்கேடுகள் அவிழ்ந்து விட்டது ... அதற்கு மேல் உங்களைப்போல் புலத்தில் சுருட்ட கேபியுடன் சேர்ந்ததுகளினதும் அவிழ்ந்து போச்சு!!! ... மீண்டும் விக்கிரமாதித்தன் போல் முயற்சியா????? ... சனத்தை நெடுக ஏமாற்ற இயலாது????

மகிந்தவின் "London Waterloo"வோடு உங்கள்(கேபிக்களின்) புரட்டுகளுக்கும் ஓரளவு முற்றுபுள்ளி வைத்தாயிற்று!!! ... இங்கிருந்து சாய்த்துச் சாய்த்து அங்கழைத்துப் போனதுகளும், அங்குள்ள மக்களுக்கான உங்கள் ஓநாய் அழுகைகளும் ஓரளவேனும் நிறுத்தப்பட்டு விட்டது!!! ... இப்போ .... ஐநாவின் அறிக்கை வந்தவுடன் ... மீண்டும் .... விசுவாசத்தை காட்ட வந்து விட்டீர்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்கு வித்தான எமது மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.

கொடுமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதன் மூலம் தாயகத்தில் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கும் எனது உறவுகளுக்கு சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். அதற்கா அஎன்னால் முடிந்தவரை இங்கிருந்து போராடுவேன். தலைவர் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அது நடக்கும்.

அதுவே எம் ஆதங்கமும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்களின் எழுத்துக்களை பார்க்கும்போது.......

வேதனைதான் மிஞ்சுகிறது. ஒருவருடைய எழுத்துக்களில் பாவிக்கப்படும் சொற்களிலேயே அவரது நோக்கத்தையும் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இங்கே ஒருத்தர் சொல்கிறார். தலைவரில் தான் மரியாதை வைத்துள்ளாராம். அதனால் அவருக்கு அஞ்சலி செய்ய துடிக்கின்றாராம். ஆனாலும் தலைவர் அவர்கள் புலிகளின் தலைவராம்.

சில நாட்களுக்குதான்................

ஏதோ ஈழ தமிழனுக்கு பெரிதாக செய்து முடிப்பதே தலையாய கடமை என்றுதான் பினாத்துவார்கள். கடமை என்று நினைபவனுக்கு கடந்தகாலாம் வெறும் அனுபவமே ( எதிர்காலமோ நிகழ்காலமோ கடந்தகாலம்போல் எங்கேணும் அமையாது). அதைபற்றி அவன் அதிகம் அலட்டமாட்டான். இவர்களுக்கு எதும் செய்கிறார்களோ இல்லையோ முன்பு நடந்தவைகளை மட்டும் பிச்சுபுடுங்கிகொண்டிருக்க வேண்டும் புத்திசாலிதனமாக எழுதுவதும் ஒரிரு நாளுக்குதான் பின்பு மறைமுகமாகவே தாம் யார் என்பதை நாம் கேட்காமலேயே எழுதியிருப்பார்கள். விளங்காதவர்கள் பதில் எழுதிகொண்டிரப்பார்கள் பாரிதாபநிலை.

அர்ஜீன் என்பவர் வந்த புதுதில் தான் புலிகளின் முக்கிய தளபதி என்றுதான் பினாத்தினார்.............. நாங்கள் ஆப்பிரிக்காவில் பிறந்து வளந்திருப்போம் என்று ஒரு நப்பாசை. இந்தியாவில் பிச்சு புடுங்கினேன் என்று கக்கினார் நான் கூடியிருந்த மூவரின் பெயர்களை கேட்டேன் தானாகவே பிதற்றதொடங்கினார்..............

இப்போது அவரது கொள்கையைபற்றி நாம் கேட்க தேவையில்லை தானாகவே எழுதி தள்ளுறார்.............. இன்னமும் விளங்காத ஜென்மங்கள் சிலது உள்ளது அது உண்மையிலேயே பரிதாப நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தனிப்பட்ட முறையில் தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்புகிறேன். உங்களுக்கு எப்படி அவர் இறந்திட்டார் என்பதை நம்ப முடிகிறதோ அதேபோல் எனக்கும் எனது நிலைப்பாட்டை நம்ப முடிகிறது.

தமிழீழ தேசிய தலைவர் ஒருவர் தான். அங்கு முன்னாள் இன்னாள் என்று யாரும் கிடையாது. இந்தியர்கள் தேச பிதாவாக காந்தியை என்றும் மதிப்பது போல.. எங்கள் தமிழீழ தேசிய தலைவராக பிரபாகரன்.. என்றும் இருப்பார். அவர் இறந்தாலும் வாழ்ந்தாலும் அந்த நிலையை வரலாற்றில் எனி ஒருபோதும் இழக்கப் போவதில்லை.

எனவே உங்கள் போராட்ட விரோத எண்ணங்களை இங்கு கருத்தாக இடுவதற்கு மாவீரர்களின் களப் பலிகளையும் தேசிய தலைவர் பற்றிய செய்திகளையும் பாவிப்பதை நிறுத்தவதே சிறப்பு. மக்களுக்கும் தேசத்துக்கும் நன்மை.

இதுவே எனது நிலைப்பாடும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்துறைப் போராளிகள்தான் சரண் அடைந்தபோது சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது சரி.

படைத்துறைப் போராளிகளான பாணு, குட்டிமணி, ஜெயம் உள்ளிட்ட போராளிகளை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்துவிட்டனர் எனவும் அது போர்க்குற்றம் எனவும் தமிழ் இணையத்தளங்களும் இங்கே யாழில் கருத்துக்களைப் பதிவிடுகின்றவர்களும் எழுதுகின்றீர்களே அப்படியானால் படைத்துறைப் போராளிகள் எவரும் சண்டையிடாமலா வீரச்சாவடைந்தனர்? சிலரின் கழுத்தில் சயனைட் இருக்கின்றது பாருங்கள்.

தயவுசெய்து போராடி வீரச்சாவடைந்த போராளிகளை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்துவிட்டனர் என எழுதி அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.