Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை - அதிகார பகிர்விற்கு தயாராம்

Featured Replies

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன.

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச் சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார்.

அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட சந்திப்பு நேற்று மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது. அரச குழுவில் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நிமால் சிறி பால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் குழுவின் செயலாளர் சஜின்வாஸ் குணவர்த்தனவும் கலந்துகொண்டனர். அரச குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்குப் பதிலாக ரஜீவவிஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் தரப்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகி யோர் பங்குபற்றி னர். குழுவினரான நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராசா பேச்சில் கலந்துகொள்ளவில்லை. இந்தப் பேச்சுக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தமை வருமாறு:

நேற்றைய பேச்சில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரப் பகிர்வு குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. அதிகாரப் பகிர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்ற அடிப்படை வரைவு ஒன்று பற்றிப் பேசப்பட்டது. (Frame Work) பேச்சுக்களின் போது தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை அரச தரப்புப் பிரதி நிதிகள் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டனர். அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய அரசுக்கான அதிகாரப் பட்டியல் மற்றும் மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியல் என்ற இரண்டு மட்டுமே இருந்தால் போதுமானது என்று நாம் வலியுறுத்தினோம். இரண்டு அரசுகளுக்கும் பொதுவான அதிகாரங்களைக் கொண்ட பட்டியல் ஒன்று தேவையில்லை என்ற எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினோம்.ஆனால் மத்திய, மாகாண அல்லது மாநில அரசுக்களுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப் பட்டியலை அடியோடு நிராகரிக்க முடியாது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் அந்தப் பட்டி யலில் அதிக அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒரு சில வற்றை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதுமானது என்று தெரிவித்துள்ளோம். அதற்கும் அரசு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்தது. அடுத்த கட்டப் பேச்சுக்களில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பது என நேற்றைய பேச்சில் இணக்கம் எட்டப்பட்டது.

தடுப்பில் உள்ளோர் விவரப் பட்டியல்

சரண் அடைந்து கைது செய்யப் பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களின் விவரங்களை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் வவுனியாவில் பார்வையிட ஏற்பாடு செய்வதாக அரச தரப்பு மீண்டும் தெரிவித்தது. அதற்கு முன்னதாக பத்திரிகைகள் மூலம் எப்போது பட்டியலைப் பார்வையிடலாம் என அறிவிப்பதாகவும் அரசதரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

*சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 850 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும் அரச தரப்பிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சம்பூர், வலி.வடக்கு பகுதிகளில் அந்தப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். என்று கோரினோம் என்றார்.

அடுத்த கட்டப் பேச்சு எதிர்வரும் 12ஆம் திகதி இடம் பெறும்.

http://eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன.....

-------

----

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும்

அடுத்த கட்டப் பேச்சு எதிர்வரும் 12ஆம் திகதி இடம் பெறும்.

smiley-sleep004.gifsmiley-talk002.gifsmiley-sleep019.gif

Edited by தமிழ் சிறி

இப்படிதான் ஒவ்வொருமுறையும் தமிழருக்கு சாதகமான சந்தர்ப்பங்கள் வரும் போது சிங்களம் எங்களை அணைத்து அதை இல்லாமல் செய்தது.

இம்முறையும் உதுதான் நடக்க போகிறது.

(தமிழ்தேசிய கூட்ட்மைப்பு)மிதவாதிகள் இப்படிதான் செய்வார்கள். எல்லா தமிழ் மக்களும் அறிய கூடிய வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும் எனபதை புலம் பெயர் தமிழர் நாம் வலியுறுத்த வேண்டும்.

சிங்களம் உலக பொறியில் இருந்து தப்பு வதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை பாவிக்க முற்படுகிறது.

  • தொடங்கியவர்

இப்படிதான் ஒவ்வொருமுறையும் தமிழருக்கு சாதகமான சந்தர்ப்பங்கள் வரும் போது சிங்களம் எங்களை அணைத்து அதை இல்லாமல் செய்தது.

இம்முறையும் உதுதான் நடக்க போகிறது.

(தமிழ்தேசிய கூட்ட்மைப்பு)மிதவாதிகள் இப்படிதான் செய்வார்கள். எல்லா தமிழ் மக்களும் அறிய கூடிய வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும் எனபதை புலம் பெயர் தமிழர் நாம் வலியுறுத்த வேண்டும்.

சிங்களம் உலக பொறியில் இருந்து தப்பு வதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை பாவிக்க முற்படுகிறது.

அப்படித்தான் நானும் பார்க்கின்றேன். கூட்டமைப்பு உடனடியாக இந்தியாவிடம் போய் கதைப்பதுதான் நல்லது. ஏனென்றால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிலேயே இதெல்லாம் நடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் நானும் பார்க்கின்றேன். கூட்டமைப்பு உடனடியாக இந்தியாவிடம் போய் கதைப்பதுதான் நல்லது. ஏனென்றால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிலேயே இதெல்லாம் நடக்கின்றது.

இந்தியாவுக்கு, இனிமேல்.... காவடி எடுக்க வேண்டாம் எண்டு கருணாநிதி எப்பவோ... சொல்லிப்போட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன.

கூட்டணியை நினைக்கப் பின்வரும் பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது!!!

அடி வாங்கிறது மத்தளம்! பேர் வாங்கிறது வித்துவான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியை நினைக்கப் பின்வரும் பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது!!!

அடி வாங்கிறது மத்தளம்! பேர் வாங்கிறது வித்துவான்!!!

இப்ப... மாறி எல்லோ... நடக்குது...

மெயின் வித்துவான் சம்பந்தனை காணவில்லை.....

சின்ன மேளம் தான்....தவில் அடிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய பேச்சுவார்ததையும் வெற்றி! என்று தலைப்பை போட்டிருக்கலாம் மிகுதியை நாமே விளங்கியிருப்போமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.