Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி வெற்றி நாம் இனைந்து விட்டோம்.

Featured Replies

பிரான்சில் தமிழ் அமைப்புகளின் மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைவு

[ திங்கட்கிழமை, 02 மே 2011, 11:32.20 AM GMT ]

பிரான்சில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டங்கள் பிரான்சின் லா ரிபப்ளிக் எனுமிடத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கருகில் இருந்து மே தின ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

அதன்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியான ஜே.வி.பி. கட்சியின் பிரான்ஸ் கிளை உறுப்பினர்களும் அதில் இணைந்து கொண்டிருந்தனர். மேலும் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆகி்யோரும் பிரஸ்தாப ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் பிரஸ்தாப ஊர்வலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோசங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்ததுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களும் ஏந்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தமிழ், சிங்கள அரசியல் தளங்களில் வெவ்வேறு திசைகளில் இயங்கும் இரண்டு பிரிவினர் ஒன்றாக இணைந்து புலம்பெயர் தேசமொன்றில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கோசங்களை முழங்கியுள்ளமையானது ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவே கருதப்படுகின்றது

மக்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றார்.

மக்களை, மேய்க்கலாம் என்று நினைப்பவர்கள்தான் பல பிரிகளாக இருக்கின்றார்கள்.

ஆமா ஜேவிபி செய்ததை மறந்து விட்டீர்களா?

பிரான்சில் தமிழ் அமைப்புகளின் மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைவு

[ திங்கட்கிழமை, 02 மே 2011, 11:32.20 AM GMT ]

பிரான்சில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டங்கள் பிரான்சின் லா ரிபப்ளிக் எனுமிடத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கருகில் இருந்து மே தின ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

அதன்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியான ஜே.வி.பி. கட்சியின் பிரான்ஸ் கிளை உறுப்பினர்களும் அதில் இணைந்து கொண்டிருந்தனர். மேலும் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆகி்யோரும் பிரஸ்தாப ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் பிரஸ்தாப ஊர்வலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோசங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்ததுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களும் ஏந்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தமிழ், சிங்கள அரசியல் தளங்களில் வெவ்வேறு திசைகளில் இயங்கும் இரண்டு பிரிவினர் ஒன்றாக இணைந்து புலம்பெயர் தேசமொன்றில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கோசங்களை முழங்கியுள்ளமையானது ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவே கருதப்படுகின்றது

1990 இற்கு முற்பட்ட காலங்களில் ஜேவிபி தமிழர்களோட ஒட்டு. எப்போ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் வெற்றி பெற தொடங்கினார்களோ அன்றில் இர்ந்து இந்த ஜெவிபி எமக்கு எதிராக பேயாக மாறியது.

சுனாமி நிவாரணத்தைக்கூட ஒழுங்காக தமிழர்க்கு போகவிடாமல் செய்தது.

ஆக தமது தேவைக்காக தமிழர்களை பாவிப்பதில் ஜெவிபியும் கில்லாடிகள்.

உலக அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது நண்பனும் இல்லை. நிரந்தர நலன்களே உண்டு. எமது தமிழ்த்தேசிய நலன்களை முன்னிறுத்தி நாமும் அரசியல் செய்யவேண்டும்.

இன்று இன்னொரு நாட்டுக்குள் (பாகிஸ்தான்) போய் அங்கிருந்த அமெரிக்காவால் பத்து வருடத்திற்கும் மேலாக தேடப்பட்டுவந்த சவூதி அரேபியா குடிமகனான பின் லாடனை கொன்று அவரின் வெற்றுடலை கடலில் வீசியதாக அமெரிக்கா கூறி இன்று கொன்றாடுகின்றது. இதே பின் லாடனை ஒரு மிகப்பெரும் விடுதலை வீரனாக அமெரிக்கா அவர் அப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக போராடும்பொழுது அதே அமெரிக்கா கொண்டாடியது. அவர் பின்னர் அமெரிக்காவின் சொல்லை கேளாமல் அதே அமெரிக்காவுக்கு எதிராக போராடியது வேறுகதை.

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது நண்பனும் இல்லை. நிரந்தர நலன்களே உண்டு. எமது தமிழ்த்தேசிய நலன்களை முன்னிறுத்தி நாமும் அரசியல் செய்யவேண்டும்.

இன்று இன்னொரு நாட்டுக்குள் (பாகிஸ்தான்) போய் அங்கிருந்த அமெரிக்காவால் பத்து வருடத்திற்கும் மேலாக தேடப்பட்டுவந்த சவூதி அரேபியா குடிமகனான பின் லாடனை கொன்று அவரின் வெற்றுடலை கடலில் வீசியதாக அமெரிக்கா கூறி இன்று கொன்றாடுகின்றது. இதே பின் லாடனை ஒரு மிகப்பெரும் விடுதலை வீரனாக அமெரிக்கா அவர் அப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக போராடும்பொழுது அதே அமெரிக்கா கொண்டாடியது. அவர் பின்னர் அமெரிக்காவின் சொல்லை கேளாமல் அதே அமெரிக்காவுக்கு எதிராக போராடியது வேறுகதை.

ஓசாமா பின்லாடனுடைய கொள்கை அன்றும் இன்றும் என்றும் ஒன்றேதான்.............

அதாவது இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் தமது புனிதபூமிக்குள் கால்வைத்தால் அவர்களை முஸ்லிம் சகோதரர்கள் ஒன்று கூடி அடித்து விரட்டுவது.

சோவியத் யூனினை விரட்டடியபோது அமெரிக்காவற்கு அது போராட்டமாக தெரிந்தது.

தங்களை விரட்டும்போது அது பயங்கரவாதமாக தெரிகிறது.

ஒரே கண்கள் இரு பார்வைகள்.

சதாம்உசைன் குவைத்தை நோக்கி படையெடுத்தபோது................ அது சவூதியரேபியாவரை நீளும் என்று அமெரிக்காவே திட்டமிட்டு செய்திபரப்பியது. அப்படி சதாம் வந்தால் அவரை எதிர்த்து நாம் போராடலாம்................ ஆனால் இஸ்லாமியரல்லாத அமெரிக்கா இங்கே வரவேண்டாம் என்பது லாடனின் கொள்கையாக இருந்தது. ஆனால் அதற்கு சவுதி மன்னர்கள் மறுத்துவிட்டார்களா............ அல்லது அமெரிக்கா மிரட்டியதா என்பது உள்ளரங்க அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

:( உமை,

1990 இற்கு முன்னர் ஜே.வீ.பீ தமிழருடன் ஒட்டு என்று எழுதியிருந்தீர்கள். அது சரியான தகவலா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

அவர்கள் 1987 இலிருந்து 1990 வரை தென்னிலங்கையில் கலகம் செய்ததன் காரணமே தமிழருக்குச் சார்பாக இந்திய ராணுவம் வந்திறங்கியிருக்கிறது என்பதை முன்வைத்துத்தான். தென்னிலங்கையில் தமிழர்கள் ஜே.வீ.பியினரால் அக்காலப்பகுதியில் இலக்குவைக்கப்படவில்லை என்றாலும் கூட அவர்கள் தமிழர்களுக்கு எதிரிகளாகவே இருந்துள்ளனர்.

சிலவேளை 1971 ஆம் ஆண்டுக் கிளர்சியாளர்கள் எமக்கு மேல் அனுதாபத்தைக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் பலர் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்ப் போயோ விட்டார்கள். ஒருசிலர் பத்திரிக்கையாளர்களாகி விட்டனர். மிஞ்சிய சிலரான சோமவன்ச அமரசிங்க போன்றவர்கள் முற்றான இனவாதத்தைக் கைய்யில் ஏந்தியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும் முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.