Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது உயிருள்ளவரை ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க யாராலும் முடியாது! சிங்கக் குகையிலிருந்து முழங்கும் கே.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது உயிருள்ளவரை ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க யாராலும் முடியாது! சிங்கக் குகையிலிருந்து முழங்கும் கே.பி

செவ்வாய், 24 மே 2011 11:14

"புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்." இவ்வாறு கூறியிருக்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும், உலக நாடுகளால் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவரும், முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பின்னர் புலிகளின் அடுத்த தலைவராக அறிவித்து கொண்டவருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள்.

இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று ஒளிபரப்பப்பட்ட அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:

கே: இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்ததெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன.

இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை. இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை. அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான்.

இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது.

கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான். போரின் முதல் அர்த்தமே சாவுதான். போரில் எது முதலில் சாகிறது? உண்மைதான். எல்லா இடத்திலுமே போருக்கு ஒரே பொருள்தான். நல்ல போர் கெட்ட போர் என்று ஒன்றுமில்லை.

போர் எப்போதும் எங்கேயும் போர்தான். இங்கே வெற்றி பெறுவதற்காக இரு தரப்புகளும் முடிந்தளவுக்கு முயற்சித்தன.

நடக்கிற எல்லாப் போர்கள் தொடர்பிலும் ஐ.நா. அறிக்கை வேண்டும் என்றால் எங்கு போய் முடியும்? போர் முடிந்து விட்டதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் உணர்கிறேன்.

இதுதான் மிக முக்கியமான புள்ளி. இந்தப் போரில் அரசுதான் வெற்றியாளர்; புலிகள் தோல்வியாளர்கள். ஆனால் தோற்றவர்களின் பக்கம் இன்னும் கொஞ்சம் பேர் மிச்சம் இருக்கிறார்கள்.

இப்போதும் அவர்கள் இங்கேதான் வாழ்கிறார்கள், நான் உட்பட. எந்தவொரு போரிலோ தாக்குதலிலோ பங்கெடுக்கவில்லை என்றாலும் நானும்கூட ஒரு விடுதலைப் புலி உறுப்பினன் தான். இந்தப் போரால் யாருக்கு என்ன பயன்? ஒருத்தருக்கும் கிடையாது.

மக்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும்தான். தங்கள் வாழ்வை அவர்கள் மீளக்கடியெழுப்பியாக வேண்டும். ஐ.நா. அறிக்கை ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; அது ஒரு அறிக்கை. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

கே: ஓ...! அப்படியென்றால்... அடிப்படையில் தமிழர்களுக்கு கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம் இவைதான் வேண்டும் என்கிறீர்கள்... இப்போது அவர்கள் வேண்டுவதெல்லாம் இவைதான் என்கிறீர்களா?

ப: அட்சரசுத்தமாக அதுதான். கடந்த 2 வருடங்களாக போர் ஓய்ந்து விட்டது. ஆனால் மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். சரி! எங்களுக்கு பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் இருக்கின்றன தான்.

முன்னர் நடந்த பேச்சுக்கள் தோல்விதான். வரலாற்றில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளன தான். ஆனால் எப்போதுமே முடிந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையில் சில சமயங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாங்கள் அதனை எதிர்கொண்டுதானாகவேண்டும்.

இரு தரப்புக்களும் ஒரு தீர்வை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொண்டுதானாக வேண்டும். சேர்ந்து வாழ்வதற்கான (இரு இனங்களும்) வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் என்ன சொன்னீர்களோ அவற்றைத்தான் உண்மையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு உணவு தேவை, அவர்களுக்கு வேலை தேவை, அவர்களுக்கு உடுப்புகள் தேவை, அவர்களது குழந்தைகளுக்கு பால் தேவை. அவர்கள் அடிப்படைத் தேவைகளைத்தான் கேட்கிறார்கள். எனவே இவற்றைத்தான் அனைத்துலக சமூகத்திடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் நானும் கேட்கிறேன்.

இதன் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றியும் அங்கு யார் எல்லாம் இன்னும் தீவிரத்தனத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விலாவரியாக விளக்குகிறார் கே.பி. தொடர்ந்து...

கே: அப்படியானல், மீண்டும் ஆயுத இயக்கத்தை புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க முயன்றார்கள்! அதனை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்கிறீர்கள்... அப்படித்தானே?

ப: நிச்சயமாக! அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்.

கே: போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் உயர் தலைமையைக் காப்பாற்றி மீட்கும் நடவடிக்கை ஒன்றுக்கு ஐரோப்பிய நாடுகள் சில முயன்றன என்பது உண்மை இல்லையா?

ப: உண்மையிலேயே அப்படித்தான். 2009 ஜனவரியில் போரை நிறுத்துவதற்கு நாம் கடுமையாக முயன்றுகொண்டிருந்தோம். போரை நிறுத்த இரவு பகலாக நான் கடும் பாடுபட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை; குறிப்பாக எமது தரப்பிடம் இருந்து கடைசிக் கணம் வரை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் நான் எதிர்பார்ப்புக்களை இழந்து விட்டேன்.

கடைசித் தருணத்தில், மே மாதம் 16, 17 ம் திகதிகளில் அல்லது 15 ம் திகதியாகவும் இருக்கலாம்... அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் ஐரோப்பிய நாடு ஒன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள்.

கே: எந்த நாடுகள்?

ப: சரியாகச் சொன்னால் ஐ.நாவும் மற்றொரு நாடும். அந்த நாட்டின் பெயரைக் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் அது ஒரு ஐரோப்பிய நாடு.

கே: மீட்டுச் செல்ல அவர்கள் முயற்சித்தார்களா?

ப: ஆம்! மீட்டுச் செல்லத்தான் அவர்கள் முயன்றார்கள். ஆனால் எல்லாம் காலம் கடந்திருந்தது.

2009 ஜனவரியில் இருந்து எல்லா விடயங்களிலும் எல்லா வழிகளிலும் நாம் ஒவ்வொரு தருணத்திலும் தாமதித்துக் கொண்டிருந்தோம் என்றே நான் நினைக்கிறேன்.

source:tamilenn.

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் சிறீலங்கா சிங்கள அரசு மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் போர்க்குற்ற குற்றச்சாட்டை மக்கள் மறக்கச் செய்ய நடத்தப்படும் பிரச்சாரங்கள். இவற்றை இட்டு மக்கள் குழப்பமடையாமல்.. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி அண்ணா பொய் சொல்கிறார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் எல்லாம் ஒரு மனிதனாக கூட பார்க்க கூடாது, ஏனெனில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள், தமது

இன்னுயிரை ஈகம் செய்த இந்த புனித போராட்டத்தை கொச்சை படுத்தும் இவர் காலத்தால் தண்டிக்கபடவேண்டியவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி அண்ணா பொய் சொல்கிறார்!

கே.பி க்கு தன் ஒவ்வொரு நேர உணவிற்கும் இப்படி விசுவாசத் தொண்டை ஒரு வேலையாகச் செய்ய வேண்டி உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் இருக்கும் வரைதானே இந்த பிரச்சினை, ஆயுதங்கள்ள் இலாமல் தனியாக மக்கள் மத்தியில் நீங்கள் தனியாக போனால் இந்த உயிர் பிரச்சினை முடிந்து விடும்,

அகிம்சை போராட்டத்தை தான் சர்வதேச ஆதரவுடன் முன்னெடுப்போம்.

முன்னர் அகிம்சை போராட்டம் தந்தை செல்வாவால் தொடங்கி நடத்தப்பட்டபோது புலம்பெயர் மக்கள் இல்லை, சர்வதேச அரசியல் தொடர்புகள் இருந்திருக்கவில்லை. இன்று அவை உள்ளன. அதையும் விட சிங்களம் போர்குற்றம் என்ற பலமான குழியுள் வீழ்ந்துள்ளது. மேலும் சர்வதேச, பிராந்திய அரசியல் வல்லரசுகளின் நிலைப்பாடு மாறியுள்ளது.

எமது விடுதலை வென்றெடுக்க ஆயுதம் தேவையில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Firstpost also spoke to MA Sumanthiran, a member of parliament from the Tamil National Alliance (TNA). A prominent Human Rights lawyer, Sumanthiran was appointed to parliament in 2010 on the TNA National list. He is a part of the TNA delegation that is in talks with the government to find a political solution to Lankan Tamil grievances. Firstpost asked him to respond to some of the points made by KP in his interview with Shashikumar. Summarised excerpts:

“In his interview with FirstPost, KP mentioned that the UN Panel report would “disturb reconciliation” and that no one would benefit from it. He also said that in the war both parties tried their maximum to win, and if a UN report was published for every war, there would never be an end. How would you respond to that?

This is not the official position of the government, I would be very interested if the government said this in so many words. As a responsible government they cannot say that both sides fought without any compunction, so they’re getting him to say it. No government can say “Once it’s over that’s it”. They have made some intimations to this effect in the past, where they have said that victors can never be charged. But the way to reconciliation is not by denying what happened. People know what happened to them. You can’t tell a man who lost his leg or his child that he never lost his leg or child. Reconciliation can only by achieved by acknowledging what happened to the people.

“What is your take on KP? Do you think he has a role to play in the reconciliation of Tamil grievances?”

He has absolutely no role to play. He is obviously a puppet in the hands of the government. The UN Panel report held the LTTE and the government equally culpable for what happened to civilians. KP took over the leadership of the LTTE from Prabhakaran. So now we see that the LTTE is with the Sri Lankan government.

“KP had also made an appeal to India and Tamil Nadu in particular to aid the rehabilitation of the Tamil people in the North. Do you think he can influence this to happen since he is still associated with the LTTE internationally?

No. In fact India has come forward to help with rehabilitation but the Sri Lankan government has been repeatedly blocking it.

http://www.firstpost.com/politics/kp-is-just-a-puppet-of-the-sri-lankan-government-14264.html?utm_source=ibnlive.com&utm_medium=RHS-Widget

  • கருத்துக்கள உறவுகள்

எனது உயிருள்ளவரை ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க யாராலும் முடியாது! சிங்கக் குகையிலிருந்து முழங்கும் கே.பி

padmanabhan-NEWS.jpg

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/7976688379787183/Soorya%20Gandhi%20-%20Paramasivan%20Kaluthil%20Irunthu.mp3 :rolleyes::rolleyes:

அவங்களும் நற்றாகக் கேட்கின்றார்கள் இவரும் நல்லாய்த்தான் சொல்லுறார் கோபீ.... என்றால் சும்மாவே. தாய்லாந்தில எப்படியெல்லாம் தமிழரின் பணத்தில் அனுபவித்திருப்பார். அந்த அனுபவங்களை இனி இழக்க முடியாதுதானே. எப்படியாவது சொல்லட்டும். கிடைப்பதை அனுபவிக்கட்டும். தனியே சமைத்துச் சாப்பிடுகிறாராமோ? அல்லது எல்லோருக்கும் கிடைப்பது போல தட்டு ஏந்திக் கொண்டுதான் வரிசையில நிக்கிறாரோ?

அவங்களும் நற்றாகக் கேட்கின்றார்கள் இவரும் நல்லாய்த்தான் சொல்லுறார் கோபீ.... என்றால் சும்மாவே. தாய்லாந்தில எப்படியெல்லாம் தமிழரின் பணத்தில் அனுபவித்திருப்பார். அந்த அனுபவங்களை இனி இழக்க முடியாதுதானே. எப்படியாவது சொல்லட்டும். கிடைப்பதை அனுபவிக்கட்டும். தனியே சமைத்துச் சாப்பிடுகிறாராமோ? அல்லது எல்லோருக்கும் கிடைப்பது போல தட்டு ஏந்திக் கொண்டுதான் வரிசையில நிக்கிறாரோ?

அப்போ என்ன சொல்ல வாறீங்கள்?

கேபி புலத்து தமிழரின் காசில் அந்த மாதிரி பப்ளிக்கா குட்டிகளுடனும் உல்லசமாக வாழ்த்துவிட்டு இலங்கையில் போய் வலிய சிங்கள அரசிடம் முடங்கி அவர்களைன் காலை நக்கிக் கொண்டு அறிக்கை விடுகிறாரோ? :lol: :lol: :lol: :lol:

அப்போ என்ன சொல்ல வாறீங்கள்?

கேபி புலத்து தமிழரின் காசில் அந்த மாதிரி பப்ளிக்கா குட்டிகளுடனும் உல்லசமாக வாழ்த்துவிட்டு இலங்கையில் போய் வலிய சிங்கள அரசிடம் முடங்கி அவர்களைன் காலை நக்கிக் கொண்டு அறிக்கை விடுகிறாரோ? :lol: :lol: :lol: :lol:

வேறென்னவாகவிருக்கும், ஒரு கைதிக்கு கிடைத்திருக்கும் சார்புச் சுதந்திரம் எதையெல்லாம் செய்ய வைக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.