Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான சர்வதேச விருது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on May 30, 2011-10:37 am

வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவிகளை வழங்கிமைக்காக வைத்தி கலாநிதி த.சத்தியமூர்த்திக்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான உள்ளக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டப்போரின்போது இவர் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது பேரவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு சேவையாற்றிய பொது நிறுவனங்கள் அல்லது ஆளுமைமிக்க தனிமனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது போதியளவு மருத்துவ வசதிகள் இல்லாத போதும் பல தடைகளுக்கு மத்தியில் தனது உயிரையும் பொருட்படுத்தாது பொறுப்புணர்வோடு இவர்பணியாற்றியமைக்காக 2011 ஆம் ஆண்டுக்கான விருதை வழங்குவதில் தாங்கள் பெருமை அடைவதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டுக்கும் 2002 ஆம் ஆண்டுக்கும் இடையில் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிய இவர் 2003 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக் கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களுக்கான சுகாதார சேவைகளுக்கான பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

அதேவேளை, கிளிநொச்சி மருத்துவமனைக்கான வைத்திய மேலதிகாரி யாகவும், வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்புக்கான இயக்கத்தின் தலைவராகவும், செட்டிக்குளம் மெனிக் தடுப்பு முகாமின் சுகாதார இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

வன்னிப்போர் உக்கிரமமாக இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தனது உயிரைத் துச்சமாக மதித்து இவர் ஏனைய மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களுடன் ஆற்றிய பணிகளை சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனமும், ஐ.நா. தொண்டு நிறுவனங்களும் பாராட்டியுள்ளதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

source:thinakkathir.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே அவருக்கு கொடுக்க படவேண்டிய விருது தான்.....கடைசிகளத்தில் எதுவிதமான வசதிகளும் இன்றி இவரும் இவருடைய மருத்துவ குழுவினரும் செய்த அந்த சேவையை யாராலும் மறக்கமுடியாது..

வாழ்த்துக்கள்......

மதிப்பு மிக்க மாண்புள்ள கலா நிதி சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்ட கவுரவம் காலத்தின் கட்டளையாகும்.

உண்மைக்குத்தலை வணங்கும் நிலமை உலகில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கி வருவது ஓர் ஆரோக்கியமான நிலமை உலகில் மீண்டும் உதயமாகிறதையே காட்டுகிறதுபோல்.................................

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அதேநேரம் அவருக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரவேண்டுமாயின் அவர் வெளியில் வரவேண்டும்

அதையும் காலம் செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்
:o வெறும் 300 பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர், 30,000 அல்ல. அந்த 300 பேரையும் கொன்றதுகூடப் புலிகள்தான் என்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு வைத்துக் கூறியவரா இந்த வைத்தியர்?? விருது கொடுக்கப்படவேண்டியதுதான் !!

:o வெறும் 300 பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர், 30,000 அல்ல. அந்த 300 பேரையும் கொன்றதுகூடப் புலிகள்தான் என்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு வைத்துக் கூறியவரா இந்த வைத்தியர்?? விருது கொடுக்கப்படவேண்டியதுதான் !!

ரகுநாதா, நாங்களும் அவரின் நிலையில் இருந்திருந்தால், அதைத்தான் செய்திருப்போம்!! ... அவரின் அந்த செய்தியாளர் மாநாட்டை யார் நம்பினார்கள்????

உண்மைதான்

அதேநேரம் அவருக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரவேண்டுமாயின் அவர் வெளியில் வரவேண்டும்

அதையும் காலம் செய்யும்

அவர் மட்டுமல்ல ... அவரின் குடும்பமும் வெளிவர வேண்டும்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சத்தியமூர்த்தி எல்லா விதத்திலும் இந்த விருதுக்குப் பொருத்தமானர்!

ஒரு வைத்தியர் ஆக மட்டுமல்ல, அதற்கும் மேல் ஒரு மனிதராக நடந்து கொண்ட இவருக்கு நல்வாழ்த்துக்கள்!!!

சாதாரணமாக எமது தமிழ் சமுதாயத்தில் வைத்தியர் என்றால் இரண்டு கொம்பு முளைத்து விட்டதாக நினைப்பவர்கள் மத்தியில் இவர் மக்களுக்குள் மக்களாகக் கடைசிவரையில் சேவை செய்தவர்!!!

வெறும் 300 பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர், 30,000 அல்ல. அந்த 300 பேரையும் கொன்றதுகூடப் புலிகள்தான் என்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு வைத்துக் கூறியவரா இந்த வைத்தியர்?? விருது கொடுக்கப்படவேண்டியதுதான் !!

"எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்

அன்புச்சகோதரன் ரகு நாதனுக்கு உங்கள் உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன். ஆனால் இன்று இவ்வளவு காலமும் சிங்கத்தின் கோட்டைக்குள் தமிழினத்தின் சாட்சியாக இவர் உயிரோடிருக்க வேண்டுமானால்......................... [இவர் உயிர் வாழ்வது காலத்தின், உண்மையின் கட்டளை]உண்மையுள்ள அந்த மனிதரின் சிந்தனையின் தெரிவை நாம் தவறாக எடை போடக்கூடாதென்ற ஓர் கொள்கை கூட உளவியலில் உள்ளதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் நண்பரே.

:o வெறும் 300 பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர், 30,000 அல்ல. அந்த 300 பேரையும் கொன்றதுகூடப் புலிகள்தான் என்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு வைத்துக் கூறியவரா இந்த வைத்தியர்?? விருது கொடுக்கப்படவேண்டியதுதான் !!

ரகு உங்களை போல எல்லாருக்கும் துனிவு வராது.

இப்ப நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு சொல்வதைப் போல கொழும்பில் இருந்து சொல்ல முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 05/06/2011 in செய்தி

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் போரின் போது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் வன்னியில் போரில் காயமடைந்த மக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்கியதற்காக வைத்தியக் கலாநிதி ரி சத்தியமூர்த்திக்கு உலக சுகாதர நிறுவனம் 2011 ஆம் ஆண்டுக்குரிய மனிதாபிமானத்திற்கான அனைத்துலக விருதை வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரசின் தடைகளால் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தபோதும், தாக்குதல்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவையை வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவரின் சேவையை பாராட்டி பல ஐ.நா அமைப்புக்களும் அவருக்கு கௌரவங்களை அளித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு சத்தியமூர்த்தி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான வைத்தியப் பணிப்பாளராக பணியாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.

source;Eelam press.

வாழ்த்துக்கள் வைத்தியக் கலாநிதி ரி சத்தியமூர்த்தி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் நன்றிகளும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.