Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தூர் இளைஞர் கொலை: இராணுவத்தினர் தொடர்பு; தந்தை தெரிவிப்பு

Featured Replies

புத்தூரில், கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கை கூறியுள்ளது. இதே வேளை தனது மகனுக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் இறந்த இளைஞரின் தந்தை.

.

எனது மகன் சற்குணநாதன் காதலித்த முஸ்லிம் பெண்ணின் உறவினர் ஒருவர் சி.ஐ.டியில் இருக்கிறார். எனது மகனுக்கும் எனக்கும் தொலைபேசி மூலம் அவர் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.சம்பவம் நடப்பதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் யாழ். நகரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று விசாரித்தனர் என்று எனது மகன் என்னிடம் தெரிவித்திருந்தார்.அன்று முதல் சில நாள்கள் அவர் மனச் சோர்வுடனேயே இருந்தார் என்று சி.பாலச்சந்திரன் தெரிவித்தார்.மயிலிட்டியைச் சேர்ந்த இவரும் மகனான சற்குணநாதன் (வயது30) என்பவரும் இடம் பெயர்ந்து அச்சுவேலி தோப்புக் காட்டில் வசித்து வருகின்றனர்.

.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை, புத்தூர் கிழக்கு, எவரெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் கால்கள் நிலத்தில் முட்ட, கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் சற்குணநாதன் சடலமாக மீட்கப்பட்டார்.இறந்த இளைஞனின் உடற் கூற்று மருத்துவப் பரிசோதனை நேற்று நடந்தது. பிரஸ்தாப இளை ஞன் கொலை செய்யப்பட்ட மைக்கான சாத்தியங்களே அதிகம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்த சி.பாலச்சந்திரன் தனது மகன் கொலைசெய்யப் பட்டிருப்பார் என்றேதான் சந்தேகிக்கிறார் என்று தெரிவித்தார்.

.

அவர் மேலும் தெரிவித்த தாவது:

எனது மகன் கடந்த நான்கு வருடங்களாக கொழும்பில் தொழில் செய்து வந்தார். இந்த வருடம் ஜனவரியில் இருந்து யாழ்ப்பாணத்தில் என்னுடன் தான் வேலையில்லாமல் தங்கியிருந்தார்.கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் முஸ்லிம் பெண் ஒரு வரைக் காதலித்திருந்தார். ஆனால் யாழ்ப்பாணம் வந்த பின்னர் அவருக்கு வேறு பெண்ணை நான் பதிவுத் திருமணம் செய்து வைத்தேன்.

.

இதன் பின்னர் எனது மகனுக்கும் எனக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரியும் குறித்த பெண்ணின் உறவினரான அதிகாரி ஒருவரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன. எனது மகனையும் மருமகளையும் கொன்று விடுவேன் என்று சி.ஐ.டி. ஆள் மிரட்டினார்.

.

இந்த மிரட்டல்கள் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாரிடம் முறையிடச் சென்றபோது, அவர்கள் எனது முறைப்பாட்டை எற்க மறுத்துவிட்டார்கள். இந்த மிரட்டல்களால் எனது மகனைப் பதிவுத் திருமணத் செய்திருந்த பெண்ணும் விவாகரத்துப் பெற்று விட்டார்.கொழும்பில் இருந்த போது எனது மகன் அந்த முஸ்லிம் பெண்ணுடன் இணைந்து (Joint Account) வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் மகனைக் கொழும்புக்கு அழைத்த குறித்த முஸ்லிம் குடும்பத்தினர் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காகக் கையொப்பம் வாங்கினர்.

.

அந்தக் கணக்கிலிருந்த எனது மகனின் பங்குப் பணத்தை தருவதாகத் தவணை சொல்லி வந்தனர். கடைசியாகக் கடந்த மே, 31 ஆம் திகதி எனது மகன் கொழும்பு சென்று வந்தார். அப்போது அவர்கள், பணம் பெற இந்த மாதம் 13ஆம் திகதி வருமாறு சொல்லியிருந்தார்கள். ஆனால் அவனைப் போகவேண்டாம் என்று நான் தடுத்து விட்டேன்.சம்பவம் நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கு முன்னர் எனது மகன் தன்னுடைய சிங்கள நண்பர்கள் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்து நிலாவரை இராணுவ முகாம் பகுதியில் நிற்கின்றனர் என்று கூறிவிட்டு சென்றார். இரவு 9.30 மணிவரை அவர் வீடு திரும்பவில்லை. கைத்தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தபோது அது நிறுத்திவைக்கப்பட்டிருந தது. சற்று நேரத்தின் பின்னர் மகன் வீடு வந்து சேர்ந்தான். தாமதம் குறித்துக் கேட்டபோது யாழ்.நகரில் உள்ள இராணுவ முகாமுக்குத் தன்னை அழைத்துச் சென்றிருந்தனர் என்று சொன்னார். இதன் பின்னர் மூன்று நாள்களாக மனச்சோர்வுடன் காணப்பட்டார்.இவ்வாறானதொரு நிலையிலையே, கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கின்றார். அவர் வீட்டை விட்டு புறப்படும்போது நான் இல்லை. மறுநாள் காலையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடக்கிறார் என்று அயலவர்கள் வந்து சொன்னார்கள். தற்கொலை செய்வதானால் வீட்டி லேயே செய்திருக்க முடியும். இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்து தற்கொலை செய்யத் தேவையில்லை என்றார் பாலச்சந்திரன்

------------

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை, பெண்கள் இல்லாமலா.... முஸ்லிம் பெண்ணை காதலித்தவர்?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயன் வள்ளுவன் சொன்னது..! :D

830 - பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்

டகநட் பொரீஇ விடல்.

‌விள‌க்க‌ம் : பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும். :rolleyes:

நன்றி: வெப்துனியா

  • கருத்துக்கள உறவுகள்

மன்னியுங்கள் பெரியவர்

நீங்கள் தந்தை என்றமுறையில் உங்கள் துயரில் பங்குகொள்கின்றேன்.

கண்ட இடத்தில் காலை விட்டால் இப்படித்தான் நடக்கும்

‌விள‌க்க‌ம் : பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும். :rolleyes:

முஸ்லிம்கள் பகைவர்களா?

சற்குணநாதன் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையின் துணிவு பாராட்டப்பட வேண்டியது.

தற்கொலைகளாக மாறிவரும் கொலைகளில் இதுவும் ஒன்று. இவற்றை மனித உரிமை அமைப்புக்கள் கண்டுகொள்ள செய்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம்கள் பகைவர்களா?

நிச்சயமாக இல்லை.

இலங்கையில் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ஈழவிடுதலைக்கு எதிராக செய்யும் அல்லது செய்து கொண்டிருக்கும் ஒருசில கேடுகெட்ட அரசியல் விளையாட்டுக்களால் வரும் விரக்தியின் வினைதான் இது.சைவசமய பாடல்களுக்கு சமமாக இஸ்லாமிய பாடல்களும் என் வீட்டில் இருக்கின்றன.அதுக்காக வேதக்காரர் கோவிக்கக்கூடாதுஅதுவும் எக்கச்சக்கம்.நோமலாய் நான் வந்து எம்மதமும் சம்மதம் எண்ட கொள்கை கொண்டவன். :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.