Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக மகா பொய்யர் ராஜபக்ஸவாம்- சொல்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29 ஜூன் 2011

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது - வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.

இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான். அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி.பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர் ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே.

1985 ஜூலை 7-ந் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி. மேலும் ராஜீவ்காந்தி - இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது.

தமிழர்களுக்கு சுய அதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது. இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார் என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்.

கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர். இன்றைக்கு சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்ஷேவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.

ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபக்ஸ தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்துக்கு உரியவராகிறார். எனவே அவரது இச்செயலை உலகம் ஏற்காது. இதையும் மன்னிக்காது என்று தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63338/language/ta-IN/article.aspx

இவனை போல பல அரசியல்வாதிகள்(வாழப்பாடி, மூப்பனார்) பத்திரிகையில் தன் செய்தி இருக்க வேண்டும் என்று ஏதாவது கதைவிடுவது வாடிக்கை

வீட்டிலை இருந்து யோசிச்சு பார்க்கத்தான் உண்மை தெரியுது. இந்த ஞானம் தேர்தலிக்கு முன் வர நியாயமில்லை.

என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி......................................

- கவிஞர் தங்கபாலு.(பிழையிற்கு மன்னிக்கவும்)

சீமான் தொண்டையில் பிடித்த பிடியில் சில உண்மைகள் வெளி வருகின்றன

http://www.yarl.com/forum3/index.php?showtopic=87902

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களெல்லாம் ஒரு மனுசரென்டு!!!

தமிழினப் படுகொலைக்கு மகிந்தவுடன் இணைந்து முன்னின்று உழைத்த பயங்கரவாதி இன்றைக்கு அவனை மகா பொய்யன் என்பது எதனால்? கிடைக்க வேண்டிய உபசரிப்புக்கள் கிடைக்கவில்லையா?

தமிழகத்து மக்கள் புகட்டிய பாடம்தான் இப்படி எல்லாம் பேச வைக்கிறது

Edited by muruga

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த திடீர் அக்கறை இவங்கட சோனியா மாதாச்சி

ஆட்சியில் இருக்கின்ற போதுதானே வன்னியில் எமது உறவுகள்

துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்கள் அப்போது இவர் ஏன்

அக்கறை காட்டவில்லை ?இப்போது இவருக்கு தமிழ்நாட்டு தொப்பிள்கொடி உறவுகள் நல்ல பாடம் புகட்டிய நிலையிலே இவருக்கு இந்த அக்கறை ஒரு நடிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டிலை இருந்து யோசிச்சு பார்க்கத்தான் உண்மை தெரியுது. இந்த ஞானம் தேர்தலிக்கு முன் வர நியாயமில்லை.

என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி......................................

- கவிஞர் தங்கபாலு.(பிழையிற்கு மன்னிக்கவும்)

சீமான் தொண்டையில் பிடித்த பிடியில் சில உண்மைகள் வெளி வருகின்றன

http://www.yarl.com/forum3/index.php?showtopic=87902

மகிந்தாவை "பொய்யன்" என்ற வசை தங்கபாலு வார்த்தையானதன் காரணம் தமிழ்மக்களின் பால் மகிந்தா கடைப்பிடிக்கும் விரோதப் போக்கே அல்ல. விரோதப் போக்கைக் கொண்ட இந்தாவின் செயலைக் காட்டிக் கொடுத்தமைதான். இந்தவிடயத்தில் மகிந்தாவின் வாய்மையைத்தான் பொய்மை என்று கண்டிக்கின்றது சோனியாத் தாஸர் கூட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது போதும் என்று... இவர் இஞ்சினியரிங்க் காலேஜ் சேர்மன் வேலைக்கு திரும்ப அடிபோடறாங்கோ.. இன்னும் இவரை மேலிடம் கண்டிக்கலியா? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.