Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண கடைசி மன்னன் சங்கிலியன் சிலை இடிக்கப்படுகின்றது.

Featured Replies

Sangiliyan.jpg

நேற்றுத்தான் ஈழ நாதத்தில் எழுதி இருந்தோம் 1981 இல் உள்ளூராட்சி தேர்தலின் போது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த முறை அதே தேதி என்ன நடக்கப்போகுதோ தெரியாது என்று. சந்தேகமே இல்லை யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

.

அனால் இந்த முறை தமிழரின் சொத்தான நூலகத்தை தீயிட்டது போல் அல்லாமல் சட்ட ரீதியாக , நாசூக்காக தமிழர்கலைக்கொண்டே சங்கிலிய மன்னன் சிலை இடிக்கப்படுகின்றது. அதாவது இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ கதை விட்டுள்ளார்.புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டதாம்.

.

தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார். சபை நிதி ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆணையாளர். மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் மாறுதல் செய்யப்பட்டு வெள்ளைக்கொடி வைத்திருப்பாராம். சங்கிலிய மன்னன் சொன்னாரா? அல்லது மக்கள்தான் சொன்னார்களா மன்னனுக்கு வாழ் வேண்டாம் என்று.

My link

மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் மாறுதல் செய்யப்பட்டு வெள்ளைக்கொடி வைத்திருப்பாராம்.

முதலில் எல்லா சிங்கள மன்னன் மற்றும் பழைய புத்தர்களின் சிலையையும் அழித்துவிட்டு புதிதாக அமைக்கட்டும்.

இது மொத்த தமிழ் இனத்தையே அவமானப்படுத்தும் செயல். வெள்ளைக்கொடியுடன் அமைக்கப்படும் பட்சத்தில் சிலை தமிழர்களால் அழிக்கப்பட வேண்டும்.

(23ம் புலிகேசி படத்தை மகிந்த பார்த்துவிட்டான் போல.)

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

அனால் இந்த முறை தமிழரின் சொத்தான நூலகத்தை தீயிட்டது போல் அல்லாமல் சட்ட ரீதியாக , நாசூக்காக தமிழர்கலைக்கொண்டே சங்கிலிய மன்னன் சிலை இடிக்கப்படுகின்றது. அதாவது இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ கதை விட்டுள்ளார்.புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டதாம்.

துட்டகெமுனுவின் சிலை வைத்தாலும், அது பின்னாலிருந்து பார்க்கும் போது, சங்கிலியன் மாதிரி இருக்கின்றது என்று, சரவணபவ, அப்போதும் கதை விடுவார்!

இப்போது இருக்கின்ற சிலை, நன்றாகத் தானே இருக்கின்றது!

எதற்காக இந்தியச் சிற்பி வரவேண்டும்?

யாழ்ப்பாணத்தில் சிற்பிகள் இல்லையா?

இவர்கள் முதலில் சிங்கக் கொடியில் உள்ள வாளை நீக்கி வெள்ளைக்கொடி கொடுக்கட்டும்.

பின்னர் சங்கிலிய மன்னனின் வாளை நீக்குவதைப் பற்றி நோக்கலாம்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க வக்கில்லாத சிங்கள, அயல் நாட்டு பயங்கரவாதிகள் தமது கைக்கூலிகள் மூலம் நல்லா இருந்த இந்த சிலையை அவசரப்பட்டு மாற்றுவது தமிழின அழிப்பின் ஓர் அங்கம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Edited by Aasaan

இப்படி நடப்பதை எல்லாம் இங்கு வெளிநாட்டில் இருக்க்கும் அமைப்புக்கள்,

நாடு கடந்த அரசு, உலக தமிழர்பேரவை, ஒருவரிடம் முறை இடுவது இல்லையா?

இவைகளை நிறுத்த முடியாதா?

இந்த அமைப்புக்கள் சிரிலங்கன் அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை கூட விடலாம் தானே.

இபடியான வன்முறைகள் அனைவருக்கும் அனுப்பபட்டு கொண்டு இருகின்றது என்று.

நாங்கள் கத்தாவிட்டால் யார் நிறுத்துவது?

கையில் ஆயுதங்கள் ஏந்திய கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளையும் இடித்து அகற்றுவார்களோ? புதிய சிலையை நிருமானிப்பதற்காக சிலையை அகற்றுவதாயின் பார ஊர்திகள், கனரக வாகனங்களின் உதவியுடன் சிலையை அடியாகத்தூக்கி முழுமையாக பெயர்த்து இன்னோர் இடத்திற்கு மாற்றம் செய்வதற்குகூட முயற்சி செய்யலாம். இடிக்கவேண்டிய அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Jul 14, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

யாழில் உள்ள சங்கிலியன் சிலை முற்றாக இடித்தழிக்கப்பட்டது:மந்திரி மனைக்கும் ஆபத்து!

யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்தழிக்கப்பட்டது.

சிலையைச் சுற்றி நேற்று பாரிய மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டபின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் -யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை ஆரம்பத்தில் இருந்தது போல மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் - தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார் எனவும் -

மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாகவும் - மாநகர சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தமிழ் மன்னான சங்கிலியன் வாள் ஏந்திய நிலையில் இருப்பதாகவும்இ இது தென்னிலங்கையில் இருந்து வரும் அமைச்சர்களுக்கும்இ சிங்கள மக்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த மாநகர ஆணையாளர் வாள் ஏந்தாத சாதாரண சங்கிலி மன்னனின் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.

யாழ். இராணுவ கட்டளைத்தளபதி ஹத்துருசிங்காவின் உத்தரவின் பேரில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் வாள் ஏந்தும் சங்கிலி மன்னனின் சிலையை இடிக்குமாறு உத்தரவிட்டதாக யாழ் மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ் நகரில் இருக்கும் மந்திரி மனை என அழைக்கப்படும் வரலாற்று நினைவுச்சின்னத்தையும் இடிப்பதற்கு யாழ் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சங்கிலி மன்னனின் மந்திரி வாழ்ந்ததாக கூறப்படும் சிற்ப வேலைப்பாடு கொண்ட இந்த இல்லத்திற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளதாக யாழ். மக்கள் கருதுகின்றனர்.

கடந்தவாரம் நெல்லியடியில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, தமிழர்களின் யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பகிரங்கமாகத் தகவல் வெளியிட்டபின்னர், இந்த நடவடிக்கை இடம்பெறுவதால் பொதுமக்கள் இது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://www.pathivu.com/news/17382/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனின் சரித்திரம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனை, எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ...... அவ்வளவு அவமானப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு... ஒட்டுக் குழுக்களும், ஆதரவு கொடுப்பது தான் வேதனை. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொன்றும் மாற்றம் செய்து மீளமைக்கப்படுதலில் மீள்வருகை என்பதும் சாத்தியமே மீள்வருகை என்பது புதிதான தோற்றத்தில் வரும்.

யாரால் தடுக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தமிழ் மன்னான சங்கிலியன் வாள் ஏந்திய நிலையில் இருப்பதாகவும்இ இது தென்னிலங்கையில் இருந்து வரும் அமைச்சர்களுக்கும்இ சிங்கள மக்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த மாநகர ஆணையாளர் வாள் ஏந்தாத சாதாரண சங்கிலி மன்னனின் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.

ஒவ்வொன்றும் மாற்றம் செய்து மீளமைக்கப்படுதலில் மீள்வருகை என்பதும் சாத்தியமே மீள்வருகை என்பது புதிதான தோற்றத்தில் வரும்.

யாரால் தடுக்க முடியும்?

சங்கிலிய மன்னனின் வாள், வீரமகா காளி அம்மனின் கோவிலில் இருந்ததாக எனது பாட்டி ஒருவர் சொன்னவர். ஆகவே.... சங்கிலிய மன்னன் வாளுடன் இருப்பதே... பொருத்தமானது. சரித்திரத்தை சிங்களவனுக்கு சங்கடமாக இருக்கின்றது என்று மாற்றம் செய்வது சகிக்க முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ அங்கு நடக்கும் எந்த விடயமுமே சகிக்க முடியாததுதான் மண்ணின் மைந்தர்களின் நினைவுத் திடல்களையே அழித்தவர்கள் தமிழனின் அனைத்து விழுமியங்களையும் அழிப்பார்கள். வரலாறுகளையும் மிகவும் தேர்ந்த திட்டமிடப்பட்ட வகையில் அழிப்பார்கள். ஒரு புராதனச்சின்னத்தை அழிக்கும்போது மீள அமைப்போம் என்ற வாக்குறுதிகள் தருவதும் பண்டைய தோற்றப்பாட்டை மாற்றி புதிய வடிவத்தில் நிறுவுவதும் ஒரு வகையில் நூதனமான அழிப்பு முறையே... இப்போது நகராட்சி மன்றத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையின் பின்னால் ஒளிந்திருக்கும் சூத்திரதாரிகள் யார்?

புனரமைபிப்பின் பெயரால் தமிழரின் வரலாறுகள் மறைக்கபடுகின்ற அல்லது அழிக்கப்படுகின்ற ஒரு கைங்கரியமே அங்கு நிகழ்கிறது.

புனரமைப்பின் பெயரால் இவையெல்லாம் சாத்தியமென்றால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு நீதி வழங்க உலகத்தால் முடியாத கட்டத்தில் மீளெழுதல் சாத்தியமாகத்தான் போகிறது.

இவர்கள் முதலில் சிங்கக் கொடியில் உள்ள வாளை நீக்கி வெள்ளைக்கொடி கொடுக்கட்டும்.

பின்னர் சங்கிலிய மன்னனின் வாளை நீக்குவதைப் பற்றி நோக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.