Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாய்பாபா ஆசிரமத்தில் தங்க, வெள்ளி, பணக் குவியல்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா ஆசிரமத்தில் தங்க, வெள்ளி, பணக் குவியல்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, ஜூலை 19, 2011, 16:32

ஹைதராபாத்: சத்ய சாய்பாபாவின் ஆசிரமத்தில் 3-வது முறையாக சொத்துக்கள் எண்ணப்பட்டதில் ரூ. 59 கோடி மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவை எண்ணப்பட்டு வருகிறது. பாபாவின் தனி அறையான யஜுர் மந்திரில் உள்ள சொத்துக்கள் நேற்று காலை முதல் சுமார் 12 மணி நேரம் கணக்கிடப்பட்டது. அப்போது 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 1.90 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாய் அறக்கட்டளை அதிகாரிகள் முன்பு இன்றும் தொடர்ந்து சொத்துக்கள் கணக்கிடப்படுகிறது.

இது குறித்து அனந்தபூர் மாவட்ட கலெக்டர் துர்காதாஸ் நேற்றிரவு கூறியதாவது,

காலை 10-45 மணிக்கு சொத்துக்கள் எண்ணும் பணி துவங்கியது. இது சுமார் 12 மணி நேரம் நடந்தது. இதற்கு முன்பு திறக்கப்படாத 6 அறைகள் திறக்கப்பட்டன. அதில் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

தங்க வளையள்கள், கம்மல்கள், வெள்ளிக் குவளைகள், வெள்ளிப் பாத்திரங்கள், கரண்டிகள், பூஜை பொருட்கள், விலை உயர்ந்த புடவைகள், சட்டைகள், பேண்ட்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்று விலை உயர்ந்த பொருட்கள் மேலும் பல அறைகளில் இருக்கக்கூடும் என்று நம்புகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 16-ம் தேதி தான் முதன்முதலாக சொத்துக்கள் எண்ணப்பட்டது. அப்போது ரூ. 11.56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் தங்க நகைகள், 307 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தன. இரண்டாவது முறையாக கடந்த 3-ம் தேதி எண்ணப்பட்டபோது ரூ. 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கிடைத்தன.

இன்றும், நாளையும் தொடர்ந்து சொத்துக்கள் எண்ணப்படுகிறது. ஆசிரமத்தில் உள்ள மேலும் பல அறைகளில் இருந்து புதையல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/19/more-gold-cash-tumble-of-sai-baba-cupboards-aid0128.html

வறுமையின் நிறங்களில் ஒன்று ஊழல், மற்றையது ....

  • கருத்துக்கள உறவுகள்

தோண்ட தோண்ட இன்னும் வரும் புதையல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:D:lol::unsure: அதுசரி, தங்கத்தில செய்த "மினி லிங்கம்" ஒண்டும் அம்பிட இல்லையோ?? ஏன் கேக்கிறன் எண்டால் எல்லாத்தையும் பாபா விழுங்கிப்போட்டு மண்டையைப் போட்டாரோ ஆர் கண்டது ??
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான பொன் பொருள் பணம் இப்படித்தான் முடங்கியுள்ளதா .......?

சாய்பாபா ஆசிரமத்தில் தங்க, வெள்ளி, பணக் குவியல்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, ஜூலை 19, 2011, 16:32

ஹைதராபாத்: சத்ய சாய்பாபாவின் ஆசிரமத்தில் 3-வது முறையாக சொத்துக்கள் எண்ணப்பட்டதில் ரூ. 59 கோடி மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

...

http://thatstamil.oneindia.in/news/2011/07/19/more-gold-cash-tumble-of-sai-baba-cupboards-aid0128.html

இவ்வளவு தானா? நல்லாப் பாருங்கோ இன்னும் இருக்கும்... அவரின் பக்கத்தர்கள் உலகளாவிய ரீதியில் அல்லவா இருக்கிறார்கள்... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டபர்த்தி சாய்பாபா அறையில்

34 கிலோ தங்கம் பணம் சிக்கியது

சாய்பாபா தங்கியிருந்த அறைகளில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் குவியல் குவியலாக தங்கமும், பணமும் கிடைத்திருப்பதால் புட்டபர்த்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது.

பாபா தங்கியிருந்த யஜூர்மந்திர் அறை கடந்த ஜூன் 16ம் தேதி திறக்கப்பட்டது.

அப்போது, 98 கிலோ அளவில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நகைகள், 307 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.11.5 கோடி பணம் ஆகியவை அறையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

இந்நிலையில், சாய்பாபா தங்கியிருந்த அறைகளில் அனந்தபூர் கலெக்டர் துர்காதாஸ் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடத்தினர். அறக்கட்டளை உறுப்பினர்களும் அப்போது இருந்தனர்.

முதல் மாடியில் மூடப்பட்டு கிடந்த முக்கிய அறை திறக்கப்பட்டது. அதில் விலை உயர்ந்த நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகள், தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட ஏராளமான வேட்டிகள் இருந்தன. மேலும் ரூ.1.92 கோடி ரொக்கமும், 34.438 கிலோ தங்க நகைகளும், 342 கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தது. மற்றொரு அறையில் தங்க முலாம் பூசப்பட்ட ராமர் சிலை இருந்தது. விலை மதிப்பில்லாத வைரம், வைடூரியம், மரகத கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களும் இருந்தன.

3வது அறையில் வெளிநாட்டு சாக்லெட் பாக்கெட்டுகள், மாணவர்களுக்கு வழங்க பரிசு மற்றும் கேடயங்களும் ஏராளமாக இருந்தன. குவியல், குவியலாக நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் இவற்றை கணக்கிட முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இதையடுத்து 2 மற்றும் 3வது மாடியில் உள்ள அறைகளில் இன்று சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 3 நாட்கள் சோதனை நடக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58023

  • கருத்துக்கள உறவுகள்

தோண்ட தோண்ட இன்னும் வரும் புதையல்கள்.

சாய்பாபா புதையல்களை தோண்டிய கதைகள் எப்போது வெளிவரும்???

இப்பவும் எங்களுடைய சனம் சாய்பாபாவை கடவுள் என்றுதான் நம்புதுகள்.....இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என சிந்திக்கவில்லை....

திருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன. தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன? பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.

அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரிய மிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.

ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள். தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்பு மிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.

திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலைநிறுத்தப்படும்.

_________________________________________________________________

நன்றி வினவு.கொம்

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

சத்திய சாய் பாபா திரும்பப் பிறந்து வாறதுக்கிடையில, தங்கத்தையும், வெள்ளியையும் உருக்கிப் பொது மக்களிற்கு ஏதாவது செய்ய வேண்டியதுகளை இப்பவே செய்து விடுகின்றது நல்லது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.