Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னிடம் உள்ள சொத்து இவ்வளவுதான்; மனம் திறக்கிறார் கே.பி பாகம் இரண்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
:( இப்ப என்ன, தான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறானா?? ஏதோ தமிழருக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டு சாமியே சரணம் என்று ஐய்யப்பன் தேவஸ்த்தானம் தேடி வந்தமாதிரியெல்லோ கதைக்கிறான். அவரது கதையிலேயே ஒன்று தெளிவாகத் தெரிகிறது, "நாடுகடந்த அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத்தான் இங்கு வந்தேன்" என்கிறான். ஆக, எல்லாம் திட்டமிட்டுத்தான் நடந்திருக்கிறது.

Edited by ragunathan

:( இப்ப என்ன, தான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறானா?? ஏதோ தமிழருக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டு சாமியே சரணம் என்று ஐய்யப்பன் தேவஸ்த்தானம் தேடி வந்தமாதிரியெல்லோ கதைக்கிறான். அவரது கதையிலேயே ஒன்று தெளிவாகத் தெரிகிறது, "நாடுகடந்த அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத்தான் இங்கு வந்தேன்" என்கிறான். ஆக, எல்லாம் திட்டமிட்டுத்தான் நடந்திருக்கிறது.

நாடுகடந்த அரசை பலவீனப்படுத்த இப்படி சொல்லாம் தானே? அதை விட உண்மையிக் கேபியும் உருத்திர குமாரும் சேர்ந்து ஆரம்பிக்க பட்டது தான் இந்த ந க அரசு ஆனால் நெடியவன் குழுவின் சதித்திட்டத்தால் கேபீ மாட்டுப்ப்பட்டு இருக்காலம். தற்ப்போது நாடுகடந்த அரசை இல்லாமல் பன்னினால் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போகட்டும் என்று,..

அது போக நெடியவின் சொத்து பற்றி தெரிந்தால் கூறுங்களேன்????????

  • கருத்துக்கள உறவுகள்
:( நெடியவனின் சொத்து எவ்வளவென்று யாருக்குத் தெரியும் ? நானென்ன அவரின் கணக்காளரா?? அவரிட்ட எவ்வளவு இருக்கு அவரிட்டப் போகாம அங்காங்கே எவ்வளவு தொக்கி நிக்குது என்று நான் என்ன கணக்குப் பாத்தா வைத்திருக்கிறன்?? இல்லாட்டி அவர்தான் என்னட்ட ஒரு நூறுகோடியைத் தந்துபோட்டு, இந்தாங்கோ இதை இப்போதைக்கு வைச்சுக்கொள்ளுங்கோ எண்டு தந்துவிட்டுப் போனவரோ ?? ஏனைய்யா வயித்தெரிச்சலைக் கிளப்பிறீங்க?

சினிமா நடிகை குத்து ரம்பாவை கட்டினவரும் உந்த பட்டியலில அடக்கமோ?

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா நடிகை குத்து ரம்பாவை கட்டினவரும் உந்த பட்டியலில அடக்கமோ?

குஞ்சு,

ரம்பா கலியாணம் கட்டீட்டாவா...... :o

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரம்பா கலியாணம் கட்டீட்டாவா...... :o

Interests:இலையான் அடிப்பது.

இலையான் அடிக்க வெளிக்கிடேக்கையே யோசிச்சனான் :lol:

ஐயோ அவவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் இருக்கு, புருஷன் கனடாவில வியாபாரம் செய்யிற இந்திரன். இவர் ரம்பாவுக்கு வாங்கிக்கொடுத்த BMW 1.78 கோடி இந்திய ரூபாய். இது எப்படி இருக்கு???????

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அவவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் இருக்கு, புருஷன் கனடாவில வியாபாரம் செய்யிற இந்திரன். இவர் ரம்பாவுக்கு வாங்கிக்கொடுத்த BMW 1.78 கோடி இந்திய ரூபாய். இது எப்படி இருக்கு???????

யாரும் பவிச்ச காரைதான வங்கி கொடுத்திப்பார், அது பழக்கத்தில் வந்துட்டுது எல்லோ

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியின் இரண்டாம் பாகத்தாலும் நெடியவன் குழு பாதிக்கப்பட்டு விட்டது போல் இருக்கின்றது.

ஏனெனில், நேற்று முன்நாளும் சிட்னியின் சில பாகங்களில் ஒலிபரப்பாளரை துரோகியாக்கி துண்டுப்பிரசுரம் ஒட்டியிருக்கின்றார்கள்.

இந்தப் பேட்டிக்கு தர்க்க ரீதியான விளக்கத்தினை துண்டுப்பிரசுரம் ஒட்டியவர்கள் அதே துண்டுப்பிரசுரம் ஊடாக தெரியப்படுத்தியிருந்தால் அதனைவிடுத்து பேட்டி கண்டவரை துரோகியாக்கி ஒட்டியதிலிருந்து இவர்கள் எதனைச் சாதிக்க முயற்சிக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

பேட்டியின் இரண்டாம் பாகத்தாலும் நெடியவன் குழு பாதிக்கப்பட்டு விட்டது போல் இருக்கின்றது.

ஏனெனில், நேற்று முன்நாளும் சிட்னியின் சில பாகங்களில் ஒலிபரப்பாளரை துரோகியாக்கி துண்டுப்பிரசுரம் ஒட்டியிருக்கின்றார்கள்.

இந்தப் பேட்டிக்கு தர்க்க ரீதியான விளக்கத்தினை துண்டுப்பிரசுரம் ஒட்டியவர்கள் அதே துண்டுப்பிரசுரம் ஊடாக தெரியப்படுத்தியிருந்தால் அதனைவிடுத்து பேட்டி கண்டவரை துரோகியாக்கி ஒட்டியதிலிருந்து இவர்கள் எதனைச் சாதிக்க முயற்சிக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

உங்களுக்கு எப்படி நிச்சயம் தெரியும் நெடியவன் குழு பாதிக்கப்பட்டிருக்கினம் ?. பேட்டி சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவரினால் வழங்கப்பட்டது. சிறிலங்கா அரசின் செய்திகளைத் தான் வெளியிட முடியும் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். போஸ்டர்கள் ஒட்டியவர்கள் நெடியவன் குழு என்று நிச்சயமாக எப்படி சொல்கிறீர்கள்??

பேட்டி எடுத்த வானொலியை 5 பேர் நடாத்துகிறார்கள். அந்த வானொலியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர கேபி 5 பேரில் ஒருவரிடம் தொடர்பு கொண்டு தான் பண உதவி செய்கிறேன் என்றார். இதனால் அந்த ஒருவர் மற்றைய 4 பேருக்கும் தெரியாமல் கேபியுடன் ஒப்பந்ததுக்கு இணங்கினார். இதே அறிந்த மற்றைய 4 பேரும் இதனை எதிர்க்க தொடங்கினார்கள். இதனால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. அந்த 4 பேருக்கும் மற்றையவருக்கும் இடையே இதனால் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சென்ற 17ம் திகதி ஒருமுக்கிய கூட்டம் நடைபெற்றது. 15ம், 22ம்திகதிகளிலே தான் கேபியினை பேட்டி வானொலியில் வந்தது.பேட்டி கண்டவருக்கு பேட்டி எடுக்க அந்த ஒருவர் தான் உதவி செய்தார்.

யாழ் சென்ரல் கொலிச்சுக்கு பழைய மாணவர் டக்லஸ் உதவி செய்து பாடசாலையை நன்றாகக் கட்டி உள்ளார். அதே போல மகாஜனா கொலிச்சுக்கு பழைய மாணவர் கேபி உதவி செய்து பாடசாலையை நன்றாகக் கட்டி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: சிவா,

யார் அந்த ஒருவர்?? அவருக்கும் கே.பீ கும் என்ன தொடர்பு ? பேட்டியெடுத்தவரையா துரோகி என்கிறார்கள்?? இது தேவையற்ற வேலை. பேட்டியெடுத்தவர் தொடர்ந்து தேசியத்தை ஆதரித்துவரும் ஒரு இன உணர்வாளர் என்பதுதான் நான் அறிந்தது. ஆகவே இது மற்றைய வானொலியின் திருவிளையாடலாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அவவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் இருக்கு, புருஷன் கனடாவில வியாபாரம் செய்யிற இந்திரன். இவர் ரம்பாவுக்கு வாங்கிக்கொடுத்த BMW 1.78 கோடி இந்திய ரூபாய். இது எப்படி இருக்கு???????

ஆம்பிளப்பிள்ளையா...., பொம்பிளப்பிள்ளையா.....

நாடுகடந்த அரசை பலவீனப்படுத்த இப்படி சொல்லாம் தானே? அதை விட உண்மையிக் கேபியும் உருத்திர குமாரும் சேர்ந்து ஆரம்பிக்க பட்டது தான் இந்த ந க அரசு ஆனால் நெடியவன் குழுவின் சதித்திட்டத்தால் கேபீ மாட்டுப்ப்பட்டு இருக்காலம். தற்ப்போது நாடுகடந்த அரசை இல்லாமல் பன்னினால் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போகட்டும் என்று,..

அது போக நெடியவின் சொத்து பற்றி தெரிந்தால் கூறுங்களேன்????????

முன்பு ஒரு பதிவில் விசுகு அண்ணை அவர்கள் கிட்டத்தட்ட இவ்வாறு பொருள்பட எழுதியிருந்தார் : 'நாம் ஒரு வேலிச்சண்டை க்காக பரம்பரை பரம்பரையாக அடிபடுவோம், கதைக்க மறுப்போம். ஆனால், சிங்களம் செய்த இலட்சக்கணக்கான உயிர் இழப்புக்கள், கோடான கோடி சொத்தழிப்புக்கள் - இவற்றில் அத்தனை ஓர்மம் காட்டுவதில்லை' .

அது எனது மனதில் பதிந்துவிட்ட ஒரு பதிவு

Edited by akootha

தமிழனை, தமிழனின் சொத்துக்களை அழிக்கும், கொள்ளையடிக்கும் சிங்களக் காட்டுமிராண்டிகளின் பிடியில் இருந்துகொண்டு செவ்வி கொடுக்கும் அளவுக்கு சுதந்திரமுடைய இந்த மிருகம், அவனிடம் அவற்றை நிறுத்தவேண்டும், தமிழனிடம் கொள்ளையடித்தவற்றை திரும்பிக் கொடுக்கவேண்டும் என்று சொல்லத் தெரியாமல் சிங்களப் பயங்கரவாதிகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் தன்னை நம்பி யாரும் பணம் தரவில்லை என்ற ஏக்கத்தில் உளறுகிறான் KP.

மேலும் சிங்களவன் தமிழனிடம் தொடர்ந்து கொள்ளையடிக்க, புலம் பெயர்ந்த தமிழன் தொடர்ந்து உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது KP யின் மிருகக் குணம்.

பல புலம் பெயர்ந்த தமிழன் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் உதவியை அறியாமல், உதவவில்லை என்று அப்பட்டமான பொய்யைக் கூறும் KP யின் நோக்கம் புலம்பெயர் தமிழனின் சொத்துக்களையும் சிங்களப் பயங்கரவாதிகளுக்கு எடுத்துக் கொடுக்கத் தான்.

தமிழனுக்கு சம உரிமை என்று கூறிக்கொண்டு ஆட்சி செய்துகொண்டிருக்கும் சிங்களக் காட்டுமிராண்டிகளின் பிடியில் இருந்து கொண்டு அவன் தமிழனை பாரபட்சமாக நடத்துகிறான் என்று சொல்ல வக்கில்லாத KP யின் இன்னொரு நோக்கம், பல உதவிகளைச் செய்துவரும் புலம்பெயர் மக்கள் மீது அபாண்டமான பழியைக் கூறி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே.

பதிவு செய்த ஒரு பெயரில் பலர் இல்லம் தொடங்க முடியாது என்பது அடிப்படை அறிவுள்ளவர்களுக்கு தெரியும். ஏற்கனவே திருகோணமலையிலும், மன்னாரிலும் அன்பு இல்லங்கள் நீண்டகாலமாக இயங்கி வரும் நிலையில், தானும் "அன்பு இல்லம்" ஆரம்பிக்க இருப்பதாக கூறும் KP யின் நயவஞ்சக நோக்கம், விபரம் அறியாத புலம்பெயர் மக்களிடம் "அன்பு இல்லம்" என்ற குழப்பத்தை ஏற்படுத்தி காசு பறிப்பதே என்பது விளங்குகிறது.

எனவே KP யின் நயவஞ்சக நோக்கம் உண்மையில் தமிழர் புனர்வாழ்வல்ல, கஷ்டப்படும் ஈழத்தமிழரைக் காட்டி புலம்பெயர் மக்களை ஏமாற்றி பெருந்தொகை காசைப் பறித்து சிங்களப் பயங்கரவாதிகளுக்கு உதவுவதே என்பது வெளிப்படுகிறது.

எனவே புலம்பெயர் மக்கள் KP யின் இந்தப் படுபாதகச் செயல்களுக்கு உதவ மாட்டார்கள் என்று நம்பலாம்.

இதுவரை ஏமாந்து போனவர்களும் விழித்துக்கொண்டு, உண்மையில் பாரபட்சம் இல்லாமல் தொண்டு செய்யும் அகில இலங்கை இந்து மாமன்றம், மட்டக்களப்பு இந்து இளைஞர் சங்கம், திருகோணமலை இந்து இளைஞர் சங்கம், வவுனியா சிவன் கோவில், மன்னார் ஆலயங்களின் ஒன்றியம், திருக்கேதீஸ்வரம் தேவஸ்தானம், மகாதேவா ஆச்சிரமம், யாழில் சிவபூமி, தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானம், பருத்தித்துறை சாரதா சேவாச்சிரமம் போன்ற பல ஈழத்தமிழ் அமைப்புக்கள் ஊடாக உதவிகளிச் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.