Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநாகரசபைக் கூட்டத்திலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிநடப்பு

Featured Replies

யாழ். மாநாகரசபைக் கூட்டத்திலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிநடப்பு

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ். மாநகர சபை முஸ்லிம் பிரதிநிதிகள் இன்றைய சபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

யாழ். மாநகர சபையின் இன்றைய கூட்டம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் யாழ். முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்து கவனயீர்ப்பு பிரேரணையொன்று யாழ்.மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம். மோகேஸ்ஸினால் கொண்டுவரப்பட்டு சபையில் விவாதிக்கப்பட்டது.

மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கை அமுலாக்கப்பட வேண்டும், யாழ். பிரதேச செயலரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் அல்லது குறித்த பிரதேச செயலரை மாற்ற வேண்டும், முஸ்லிம்களின் விவகாரத்திற்கு என முஸ்லிம் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என மூன்று அம்சக் கோரிக்கைகள் கவனயீர்ப்பு பிரேரணையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் கவனயீர்ப்பு பிரேரணையினை வரவேற்று ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டனர்.

இந்நிலையில், முஸ்லிம் பிரதிநிதிகள், தமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை சபையை பகிஷ்கரிப்பதாக தெரிவித்து, சபையை விட்டு வெளியேறினர்.

அதையடுத்து, சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மாநகர முதல்வர் அறிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/25460-2011-07-28-10-57-24.html

  • தொடங்கியவர்

இவர்கள் இப்படியான வெளிநடப்புக்களை சிங்கள மாநகரசபைகளில் இல்லை கோட்டை பாராளுமன்றத்தில் உங்கள் மக்களுக்காக செய்தால் நீங்கள் உண்மையான ஜனநாயவாதிகள் !

அதற்காக உங்களை சந்தர்ப்பவாதிகள் எனகூறமுடியாது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இப்படியான வெளிநடப்புக்களை சிங்கள மாநகரசபைகளில் இல்லை கோட்டை பாராளுமன்றத்தில் உங்கள் மக்களுக்காக செய்தால் நீங்கள் உண்மையான ஜனநாயவாதிகள் !

அதற்காக உங்களை சந்தர்ப்பவாதிகள் எனகூறமுடியாது.

உள்குத்து பலமாயிருக்கே...... th_laughing-smiley-007.gif:D:lol:

  • தொடங்கியவர்

உள்குத்து பலமாயிருக்கே...... th_laughing-smiley-007.gif:D:lol:

எங்கள் சகோதரர்கள் அல்லவா! கொஞ்சம் அணைத்து மெதுவாக அன்புடன்தான் எதையும் சொல்லமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம நிலை,சம உரிமை எல்லோருக்கும் வேண்டும்! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம் ஓவர்.அவங்கள் ஒரு காலத்தில் செய்தது சரிதான் எனும் மன நிலையை உருவாக்குகின்றீர்கள்.சந்தோசம். கூடியிருந்து கழுத்தறுத்தவர்களில் நீங்களும்.......................?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு எழுதும் இந்தக் கருத்து, சரியோ அல்லது பிழையோ என்று எனக்குத் தெரியாது!

எங்கள் முஸ்லிம் சகோதரர்கள், என்றைக்குமே எனக்குத் தொண்டைக் குழியில் சிக்கிய முள்ளாகவே தெரிகின்றார்கள்.

நாங்கள் இவர்களை அணைக்கும் ஒவ்வொரு தடவையும் எங்கள் கரங்கள், இவர்களாலேயே வெட்டப் படுகின்றன!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

நான் இங்கு எழுதும் இந்தக் கருத்து, சரியோ அல்லது பிழையோ என்று எனக்குத் தெரியாது!

எங்கள் முஸ்லிம் சகோதரர்கள், என்றைக்குமே எனக்குத் தொண்டைக் குழியில் சிக்கிய முள்ளாகவே தெரிகின்றார்கள்.

நாங்கள் இவர்களை அணைக்கும் ஒவ்வொரு தடவையும் எங்கள் கரங்கள், இவர்களாலேயே வெட்டப் படுகின்றன!

நீங்கள் சொல்வது சரி, ஆனால் அரசியல் ரீதியாக பிழையாக இருக்கலாம் (politically incorrect).

( நீங்கள் அரசியல்வாதி இல்லைத்தானே :D )

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி, ஆனால் அரசியல் ரீதியாக பிழையாக இருக்கலாம் (politically incorrect).

( நீங்கள் அரசியல்வாதி இல்லைத்தானே :D )

அரசியலில் தலைவரே அனைத்து செல்லதான் முற்பட்டவர், "அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு"

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி, ஆனால் அரசியல் ரீதியாக பிழையாக இருக்கலாம் (politically incorrect).

( நீங்கள் அரசியல்வாதி இல்லைத்தானே :D )

சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு எல்லாம் வெறும் சொற்கள்தான். தமிழர்கள் முஸ்லிம்களை எப்போதும் சந்தேகத்துடன்தான் அரவணைப்பார்கள். அதுபோல முஸ்லிம்களும் தமிழர்கள்மீது சந்தேகமாகத்தான் இருப்பார்கள். இதற்குள் இருபகுதியினரும் சேர்ந்து தேனைத் தோண்டி எடுக்கலாம் என்று அடிக்கடி பேசிக்கொள்வோம் :lol:

  • தொடங்கியவர்

சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு எல்லாம் வெறும் சொற்கள்தான். தமிழர்கள் முஸ்லிம்களை எப்போதும் சந்தேகத்துடன்தான் அரவணைப்பார்கள். அதுபோல முஸ்லிம்களும் தமிழர்கள்மீது சந்தேகமாகத்தான் இருப்பார்கள். இதற்குள் இருபகுதியினரும் சேர்ந்து தேனைத் தோண்டி எடுக்கலாம் என்று அடிக்கடி பேசிக்கொள்வோம் :lol:

நான் நினைக்கிறேன் தமிழர் தரப்பு தான் பல தடவைகள் பூனைக்கு மணி கட்டும் வேலையை செய்துள்ளது.

ஆனால் கட்டிய மணியை மறுதரப்பி அறுக்க அறுக்க நாம் மீண்டும் மீண்டும் கட்டிய வண்ணம் உள்ளோம். கைதான் உளைகின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு எல்லாம் வெறும் சொற்கள்தான். தமிழர்கள் முஸ்லிம்களை எப்போதும் சந்தேகத்துடன்தான் அரவணைப்பார்கள். அதுபோல முஸ்லிம்களும் தமிழர்கள்மீது சந்தேகமாகத்தான் இருப்பார்கள். இதற்குள் இருபகுதியினரும் சேர்ந்து தேனைத் தோண்டி எடுக்கலாம் என்று அடிக்கடி பேசிக்கொள்வோம் :lol:

நான் நினைக்கிறேன் தமிழர் தரப்பு தான் பல தடவைகள் பூனைக்கு மணி கட்டும் வேலையை செய்துள்ளது.

ஆனால் கட்டிய மணியை மறுதரப்பி அறுக்க அறுக்க நாம் மீண்டும் மீண்டும் கட்டிய வண்ணம் உள்ளோம். கைதான் உளைகின்றது :D

கை உளைஞ்சாலும்... காரியமில்லை, எங்களை லூசுப் பயல்கள் எண்டெல்லோ... நினைக்கிறாங்கள். :rolleyes:

  • தொடங்கியவர்

'உரிமைகள் பறிக்கப்படுவதை முஸ்லிம் அமைச்சர்கள் தடுக்க முன்வராதமை கவலைக்குரியது'

வரலாற்றிலேயே அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், நாம் வரலாற்றுக் காலம் தொடக்கம் அனுபவித்த உரிமையை பறிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்க முன்வராமை முஸ்லிம் சமூகத்தின் கவலைக்குரிய விடயமாகும் என மேல் மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் தொப்பி அணிந்தவாறு புகைப்படம் பிடிப்பதற்கான உரிமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்து தேசிய அடையாள அட்டை பெறுவது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் மௌலவிமாருக்கு மட்டும் தொப்பி அணிந்து புகைப்படம் எடுக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் முஸ்லிம்களின் அடையாளம், மார்க்க கலாசாரம் தொடர்பிலான அறியாமையினால் எடுக்கப்பட்டுள்ளது. மார்க்கத் தலைவர்கள், இஸ்லாமிய அமைப்புக்களோடு கலந்துரையாடாமல் தன்னிச்சையாக இம்முடிவை எடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இத்தீர்மானத்திற்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.

இந்தத் தீர்;மானத்தால் முஸ்லிம்களின் வரலாற்றுக்கால இலங்கை நாட்டின் அவர்களது அடையாள உரிமை பறிக்கப்பட்டுள்ளது. பொலிஸுக்கு சென்றாலும் நீதிமன்றத்திற்கு சென்றாலும் தொப்பி அணியும் உரிமை உள்ளதுடன்; தேசிய அடையாள அட்டை புகைப்படத்திற்கு தொப்பி அணிவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் 1903ஆம் ஆண்டு அப்துல் காதர் என்ற சட்டத்தரணி தொப்பி அணிந்து நீதிமன்றத்திற்கு சென்றபோது அப்போதைய நீதிபதி தொப்பியை கழற்றுமாறு உத்தரவிட்டார். இதை மறுத்த அச்சட்டத்தரணி தொப்பி அணிவது முஸ்லிம்களின் உரிமை. எனவே நான் தொப்பியை கழற்றமாட்டேன் எனத் தெரிவித்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

தன் பின்னர் இவர் தலைமையில் மாக்கான் மாக்கார், அப்துல் கபூர், சித்திலெப்பை, அப்துல் அஸீஸ் ஆகியோர் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இத்தடைக்கு எதிராக போராடினர். போராட்டத்துக்கு பின்னர் பிரிட்டிஷ் மகாராணி விக்டேரியா முஸ்லிம்கள் தொப்பி அணிவதற்கான தடையை நீக்கி, சுதந்திரமாக தொப்பி அணிந்து செல்ல அனுமதித்தார். அதுபோல் அடையாள அட்டைக்கும் தொப்பி அணிந்து புகைப்படம் பிடிக்க அனுமதிக்கப்பட்டுவந்தது. அன்று முதல் அனுபவித்து வந்த உரிமையை மஹிந்த ராஜபவின் அரசாங்கம் பறித்துள்ளது.

ஹிஜாப் அணிந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் தம்முடைய மானத்தை காத்துக் கொண்டு தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் உரிமையும் அன்று வழங்கப்பட்டு வந்தது. இன்று அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்து இனங்களுக்கிடையே இன நல்லுறவை ஏற்படுத்தும் சூழல் தோன்றியுள்ளது. ஆனால் இவ்வரசாங்கம் அதனை மேற்கொள்ளாது இனங்களின் உரிமைகளை பறிக்க ஆரம்பித்துள்ளது. முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து, வக்பு சட்டம் போன்ற பல இஸ்லாமிய சட்டங்கள் எமது நாட்டு சட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இனவாத ரீதியாக செயற்படுவதால் எதிர்காலத்தில் மேற்குறிப்பிட்ட சட்டங்களும் நீக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

எனவே, முஸ்லிம்கள் தமது அடையாளமான தொப்பி அணிவது தொடர்பான உரிமையை வென்றெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எமக்குள்ள வேரு பல உரிகைளும் பறிக்கப்படும் நிலை உருவாகும்.

வரலாற்றிலேயே முஸ்லிம் அமைச்சர்கள் அதிகமாக இவ்வரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், நாம் வரலாற்றுக் காலம் தொடக்கம் அனுபவித்த உரிமையை  பறிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்க முன்வராமை கவலைக்குரிய விடயமாகும்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25516-2011-07-29-10-28-43.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் அணிந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் தம்முடைய மானத்தை காத்துக் கொண்டு தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் உரிமையும் அன்று வழங்கப்பட்டு வந்தது. இன்று அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை என்பது, ஒருவரை அடையாளம் காட்டுவதற்குத்தான்.

அதுக்கு கறுப்புத் துணியால்... முகத்தை மூடி படத்தை எடுத்தால்... என்ன அர்த்தம்?

ஓட்டைக்குள்ளாலை, தெரியிற கண்ணை மட்டும் வைச்சு ஆரெண்டு... அடையாளம் காணுறது. :blink:

தீவிர வாதம் என்பது அவர்கள் வாழும் இடங்களின் இயல்பு என்று நினைகிறேன். கிரிஸ்த்தவர்களும் அதே இடங்களில் இருந்த போது தீவிரவாதத்தை ஆதரித்திருந்திருக்கிறார்கள்.

இலங்கை முகமதியர்கள் மிகவும் வேறுபட்டவர்கள். இவர்கள் தமிழர்கள் அல்ல. பாகிஸ்தானியர் மாதிரியே இவர்களிடம் குரோத மனப்பான்மை உண்டு. அதேநேரம் நம்மை மாதிரி தங்களையே காட்டிக்குடுக்கும் பாண்மை இவர்களிடம் மட்டும் தான் உண்டு. உலகின் எந்த முகமதியரிடமும் இந்த பழக்கம் இல்லை. பணத்திற்கு விலை போகும் பண்பு இவைகளுக்கு தனி. அஸ்வரின் அண்மைய பேச்சு நல்ல உதாரணம். நாம்தான் தொப்பி பிரட்டி என்று சொல்கிறோம். இலங்கை முகமதியர் தவிர்ந்தோருக்கு இந்த சொல் தெரியவும் மாட்டாது. அப்படி ஒரு தேவையுமில்லை.

இதில் தமிழ்நாடு வேறு

அண்மையில் தமிழ்நாட்டு முல்லாவிடம் பி.பி.சி. நிரூபர் பரிசில்வைத்து, புதிய சட்டம் சம்பந்தமாக கேட்டபோது அவர், நமது பெண்கள் இந்த உடை உடுப்பவர்கள் அல்ல எனக்கூறி உடனேயே பேச மறுத்துவிடார். உலகிலேயே பெண்கள் பள்ளிவாசல் உள்ள இடம் தமிழ்நாடு. கருணையுள்ள திராவிடர்களின் முகமது கூட சற்று விதியாசமான தோற்றம் கொண்டவர். ஊமறுப்புலவர் பார்த்த முகமது இவர்தான்:

அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும் வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப் பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

'உரிமைகள் பறிக்கப்படுவதை முஸ்லிம் அமைச்சர்கள் தடுக்க முன்வராதமை கவலைக்குரியது'

யாழ். மாநாகரசபைக் கூட்டத்திலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிநடப்பு

இடம் கண்ட இடத்தில் மடமா?

யாழில் வெளிநடப்பு? -கொழும்பில் உள்நடப்பு? (இது சரியான தமிழ்ச்சொல்லோ தெரியவில்லை)

ஆளும் கட்சியில் அதிகளவு முஸ்லீம் பிரதிநிகள் உள்ளனர், இவர்களால் சாதாரண தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், உரிமைகள் என ஏதாவது பெற்றுத்தர ஆர்வம் உண்டா? இல்லையா? எப்போதாவது நடக்கும் மனித உரிமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து உண்டா? இல்லையே, ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

-----

இலங்கை முகமதியர்கள் மிகவும் வேறுபட்டவர்கள். இவர்கள் தமிழர்கள் அல்ல. பாகிஸ்தானியர் மாதிரியே இவர்களிடம் குரோத மனப்பான்மை உண்டு. அதேநேரம் நம்மை மாதிரி தங்களையே காட்டிக்குடுக்கும் பாண்மை இவர்களிடம் மட்டும் தான் உண்டு. உலகின் எந்த முகமதியரிடமும் இந்த பழக்கம் இல்லை. பணத்திற்கு விலை போகும் பண்பு இவைகளுக்கு தனி. அஸ்வரின் அண்மைய பேச்சு நல்ல உதாரணம். நாம்தான் தொப்பி பிரட்டி என்று சொல்கிறோம். இலங்கை முகமதியர் தவிர்ந்தோருக்கு இந்த சொல் தெரியவும் மாட்டாது. அப்படி ஒரு தேவையுமில்லை.

------

நீங்கள் சொல்வது மெத்தச் சரி மல்லையூரான்.

இலங்கை தொப்பிபிரட்டிகளுக்கும், தமிழ் நாட்டு இஸ்லாமியர்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் இவர்கள் நிறையப் பாடம் படித்து.... அவர்களைப் போல் பெரிய மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டும்.

சும்மா... ஈழத்தமிழனிலை நெடுகவும்... தவிச்ச முயல் அடிக்க நினைக்கப் படாது. கேவலம் கெட்ட வாழ்க்கை அது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

உலகிலேயே பெண்கள் பள்ளிவாசல் உள்ள இடம் தமிழ்நாடு

தமிழனின் நல்ல குணத்திற்கு அவனே அவனுக்கு சிலைவைத்து வணங்கவேண்டியது தான் ^_^

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.