Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும்: சம்பந்தனின் விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும்: சம்பந்தனின் விருப்பம்

[Friday, 2011-07-29 08:36:33]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி,சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை,சேருவில பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

குச்சவெளிப் பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டது. இதனால் அவர்களின் பிரச்சினையும் தீராது, எமது பிரச்சினையும் தீராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே தெளிவான புரிந்துணர்வு உண்டு. எனினும் எம்மிடையே ஒருமைப்பாடு தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும்.

மக்களின் உரிமைகளைப் பொறுத்தவரை தெளிவான நிலைப்பாடு அவசியம். எமது வாக்குகளைப் பிரித்து பெரும்பான்மையினம் நன்மை பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=47371&category=TamilNews&language=tamil

டக்ளஸ் தேவானந்தாவை மாற்றுவதை TNA ஒரு சவாலக அரசாங்கத்திற்கு செய்து காட்ட வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89689

டக்ள்ஸ் இனி வெல்ல முடியாது.

Edited by மல்லையூரான்

குச்சவெளிப் பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டது. இதனால் அவர்களின் பிரச்சினையும் தீராது, எமது பிரச்சினையும் தீராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே தெளிவான புரிந்துணர்வு உண்டு. எனினும் எம்மிடையே ஒருமைப்பாடு தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும்.

இது மாறாத கேஸ்

இவ்வளவு காலமும் புலிகள் பின்னால் இருந்து செயற்படுகிறார்கள், சரியான பிரச்சாரங்களை செய்ய முடியவில்லை என்று ஒப்பாரி வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிதிவண்டியில் சென்று வாக்குக் கேட்குமளவிற்கு அவருக்கு சுதந்திரம் இருந்தது. ஆனாலும் மக்கள் அவருடைய கட்சியும் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. மக்கள் தீர்ப்பை மதிக்கத் தெரியாது மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் டக்ளஸ்.

http://www.alaikal.com/news/?p=77334

ஆனந்த சங்கரி ஒரு அரசியல் வாதி. அவரை கூட்டமைப்புக்குள் சேர்ப்பது அனுகூலமா பிரதிகூலமா என்பது நியாயமான வாதாட்ட தலைப்பு.

டக்ளஸ் தேவானந்தா ஒரு அரசியல்வாதியல்ல. அரசியல் கொள்கைகள் சம்பந்தமாக அவரால் கூட்டமைப்புக்கு ஒரு கறுப்புள்ளி வரும். அவரை கூட்டமைபுக்குள் எடுப்பதை இந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்த எல்லோரும் எதிர்ப்பார்கள்.

ஆனால் அது நடந்து விட்டால் தமிழ்மக்களுக்கு பெரிய நிவாரணம். அதன் பிறகு வடக்கில் ஆமி மட்டும் தான் கொலை கொள்ளை செய்யலாம்.

அரசாங்கத்திற்கும் பெரிய இழப்பு.

சம்பந்தர் தமிழர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதையே காட்ட முயல்கிறார். இப்படிசெய்து தமிழர்களின் ஒற்றுமையை நிரூபிப்பதை தமிழர்கள் விரும்புவார்களா என்பது ஒரு தேர்தலில் தான் நின்று அறிய வேணும். நேற்றி யாழில் ஒட்டியிருந்த கட்டுரை ஒன்றின் சாரம்: "ஒரு தடியை தன்னும் நட்டு தமிழரசுக்கட்சி என்றால் தமிழர்கள் அந்த தடியிற்கு வாக்கு போடுவார்கள். அதனால் அது கட்சி பிரதிநிதிகள் எல்லோரும் உத்தமர்கள் என்பது தான் என்றாகாது" என்று கூறியிருந்தது.

Edited by மல்லையூரான்

நாய் வாலு நிமிருமே..?

ஈழமக்கள் ஜனநாயகமுன்னனியை கூடியவிரைவில் கலைப்பதற்க்கு இந்தியா முடிவெடுத்துள்ளதாம்...

நான் சொல்லுறது பொய்யெண்டா வெயிட் பன்னிப்பாருங்கோ... கூடியசீக்கிரம் பல உறுப்பிணர்கள் காணாமல் போவர்கள்..

ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும்: சம்பந்தனின் விருப்பம்

நாலு பேரும் சேர்ந்து நாலு மூலைகளில் நாலு மின்கம்பம் நடவோ?

அல்லது பயங்கரவாத அரசுடன் கைகோர்க்க டக்லஸ் தடையாக இருக்கிறானோ?

இந்த வீணாப்போனதுகளை பற்றி கருத்தாடுமளவுக்கு எவ்வளவு கீழே போய்விட்டோம்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை, தமிழ்மக்கள் மாபெரும் வெற்றி பெறச் செய்தமையை.... சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் தவறாக எடை போடுகின்றார்கள் போல் உள்ளது.நெடுக்ஸ்,

உண்மையில் சிங்களக் கட்சிகளோ... ஒட்டுக் குழுக்களோ வரக்கூடாது என்று தான் த.தே.கூட்டமைப்புக்கு அம்பாறையிலிருந்து, பருத்தித்துறை வரை ஒற்றுமையாக வாக்களித்தார்கள். மற்றும் படி மூவின மக்களும் ஏற்கக் கூடிய தீர்வு என்பதன் கொள்கையிலிருந்து இவர்கள் விலகி வரவேண்டும். தமக்கு கிடைத்த பதவியை பயன் படுத்தி சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தி தமிழ்மக்களுக்கு விடிவு ஏற்படுத்தவே இவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள்.

இன்று, காலையில்....

வேறொரு பதிவில் நான் எழுதிய கருத்து, மீண்டும் சம்பந்தனுக்கு பொருந்தும் என நினைக்கின்றேன்.

உங்களுக்கு கிடைத்த வெற்றி என்பது, வேறு ஒரு அமைப்பை தெரிவு செய்ய முடியாமல்.....

தமிழ் தேசிய தலைவர் பிரபாகரானால் ஆரம்பிக்கப் பட்ட த.தே.கூ. என்ற பெயருக்கு கிடைத்த வெற்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.