Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த பிரதமர் - முதலிடத்தில் ராகுல் உள்ளதாக தகவல்!

Featured Replies

இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்களில் ராகுல் காந்தியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது.

சி.என்.என்.- ஐ.பி.என். மற்றும் சின்பிசி-டி.வி.18 ஆகிய தொலைக்காட்சி சானல்கள் ஒருங்கிணைந்து "இந்திய அரசியலில் புகழ் பெற்றவர்கள்" என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 19 மாநிலங்களில் சுமார் 39 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு வெறும் 6 சதவீத ஆதரவையே பெற்றிருந்த ராகுல்காந்தி தற்போது பிரதமர் பதவி தேர்வில் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக மன்மோகன்சிங், சோனியாகாந்தி இருவருக்கும் தலா 10 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரது செல்வாக்கும் மக்களிடம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2008 வரை சோனியா காந்தி தான் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. தற்போது சோனியாவுக்கு அந்த அளவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க. தலைவர்களுக்கு மக்கள் மனதில் அதிக இடம் இல்லை என்பதும் கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு அத்வானிக்கு மக்களிடம் 15 சதவீத ஆதரவு இருந்தது. தற்போது அது 4 சதவீதமாக குறைந்து விட்டது.

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 2009-ல் 2 சதவீதம் பேர்தான் கூறி இருந்தனர். ஆனால் தற்போது நரேந்திர மோடிக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பதவியில் மன்மோகன்சிங்கின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 56 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த 2009ல் மக்களில் 70 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்திருந்தனர். தற்போது அது குறைந்துள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங் மீது அதிருப்தி அதிகமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

மன்மோகன்சிங் செயல்பாடுகளில் அதிருப்தியுடன் உள்ளதாக 2007-ல் 16 சத வீதம் பேரும், 2009ல் 17 சதவீதம் பேரும் கூறி இருந்தனர். அந்த அதிருப்தி தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரதமர் பதவியில் மன்மோகன்சிங் நீடிக்க வேண்டுமா, கூடாதா என்ற கேள்விக்கு 33 சதவீதம் பேர், அவரை உடனே மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர்தான் மன்மோகன்சிங் பிரதமர் பதவியில் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்மோகன்சிங் பிரதமர் பதவியில் இருந்து விட்டு போகட்டும் என்று காங்கிரஸ்காரர்களில் 33 சதவீதம் கூறியுள்ளனர். ஆனால் கூட்டணி கட்சிக்காரர்களில் 25 சதவீதம் பேர் பிரதமர் பதவிக்கு மன்மோகன்சிங் சரியானவர் அல்ல என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மன்மோகன்சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அடுத்து யாரை பிரதமராக்க வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 42 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் அடுத்த பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை பெரும்பாலானவர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது. பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம் இருவருக்கும் தலா 7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றாலும், பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர், ஊழலை கட்டுப்படுத்த அவர் முயற்சி செய்து கொண்டிருப்பதாக 27 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆனால் ஊழலை ஒழிக்க மன்மோகன்சிங் எதுவும் செய்யவில்லை என்று 31 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தலைமை ஏற்க தகுதியானவர் யார்? என்று ஒரு கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு 19 சதவீதம் பேர் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளனர். பா.ஜ.க. தொண்டர்களிலும் 33 சதவீதம் பேர் மோடியைத்தான் விரும்புவது தெரிய வந்துள்ளது. நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் சுஷ்மா சுவராஜ் 15 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராஜ்நாத் சிங்குக்கு 7 சதவீதம், அருண்ஜெட்லிக்கு 4 சதவீத ஆதரவு உள்ளது.

http://www.inneram.com/2011080818315/rahul-is-leading-for-next-pm-post-poll

  • கருத்துக்கள உறவுகள்

pig.jpg

ராகுல் காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அடுத்து யாரை பிரதமராக்க வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 42 சதவீதம் பேர் ராகுல் காந்தி வளர்க்கும் பன்னி குட்டிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

என்ன நாடுடா சாமி.. <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

pig.jpg

என்ன நாடுடா சாமி..!

"பாரத நாடு பணம் பெறும் நாடு

நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர் “

” பாரத நாடு பாரி(Bar)னில் திலகம்

நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர்"

என்று எட்டயாபுரத்தில் ஒரு பித்தர் எழுதியுள்ளார்! :o

சீன நாட்டின் தத்துவ ஞானியான "கன்பூஷியஸ்' என்பவர் அவருடைய நாட்டு மக்களுக்கு உபதேச உரை நிகழ்த்தும்போது "நீங்கள் நெறி தவறாமல், நீதி, நேர்மையுடன், ஆன்மிக உணர்வுடன் உயிர்களுக்கு நன்மை செய்து, பல புண்ணியங்கள் செய்து வாழ்வீர்களானால் அடுத்த பிறவியில் புண்ணிய பூமியான பாரத தேசத்தில் பிறப்பெடுப்பீர்கள்" என்று சொல்வாராம். இதிலிருந்தே நும் நாடு எப்படிப்பட்ட புண்ணிய பூமி(????) யாக தொன்று தொட்டு வந்திருக்கிறது என்பதை அறியலாம் தேசி! :(

“பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல்

இவ்வுண்மை மறவாமை வேண்டும். “

என சாடையாக காரைக்கால் அம்மையார் செப்பிவிட்டு சென்றுள்ளார்கள் புரட்சி! :unsure:

ஆகவே மயக்கமோ, தயக்கமோ, தன்னிரக்கமோ வேண்டாம்... :lol:

உங்கள் ஆறுதலுக்காக இந்தப் பாடல் (இதன் அர்த்தம் புரியாவிட்டாலும், இந்தியில் பிடித்த பாடல் இதுவே)

சல்த்தே... சல்த்தே...மேரே யே கீ....

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டை முன்பு அடிக்கடி கேட்பதுண்டு..! :rolleyes: ஆனால் அர்த்தம் தெரியாது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டை முன்பு அடிக்கடி கேட்பதுண்டு..! :rolleyes: ஆனால் அர்த்தம் தெரியாது..! :D

"போய் வருகிறேன் என்று மட்டும் சொல்லாதே.." சல்தே சல்தே மேரே யே கீத் ........ கபி அல்விதா நா கெஹ நா......

"எங்கு போனாலும் எனது இந்தப் பாடலை நினைவில் வை...அழுகையிலும் சிரிப்பிலும் நீ போதும் எனக்கு காதலில்..காதலித்துக் கொண்டே நாம் எங்காவது காணாமல் போய் விடுவோம்..."

இந்திக்கார நண்பர் ஆங்கிலத்தில் சொன்னது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

சமீபத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரவுல் வின்ஸி என்ற நிஜப்பெயரில் ஒளிந்திருக்கும் ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது ஒரு இளம் பெண் பத்திரிகையாளர் ரவுல் வின்ஸியிடம்(அட! ராகுலோட இத்தாலி பாஸ்போட்டில் இருக்கும் பெயர் இதுதாம்பா!) “நரேந்திர மோடியின் குஜராத் அரசு சமுதாய,பொருளாதார முன்னேற்றங்களை மக்கள் கண்டு உணரும்படி சாதித்துக்காட்டியிருக்கும் போது,எதையுமே சாதிக்காத காங்கிரஸீக்கு மக்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?” என்று கேட்டார்.

இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ரவுல் வின்ஸி,குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கப்படுவதாக பிரச்னையை திசைதிருப்பும் விதமாக பதிலளித்தார்.

அதற்கு அந்த பெண் நிருபர், “இஸ்லாமியர்களின் பிரச்னையை நீங்கள் சுட்டிக்காட்டுவதாக நினைக்கிறேன்.ஆனால்,இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதியில் பா.ஜ.க.உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.எனவே,நீங்கள் பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்” என்று கூறினார்.

மற்றொரு நிருபர் ரவுல் வின்ஸியிடம்(ராகுலிடம்) காங்கிரஸ் அமைச்சரவையில் ஊழல் செய்யாத மூன்று நபர்களை குறிப்பிடுமாறு கேட்டார்.சற்றே தயங்கிய ராகுல்(ரவுல் வின்ஸி) மன்மோகன்,ஏ.கே.ஆண்டனி,ஜெயராம் ரமேஷ் என்று பதிலளித்தார்.உடனடியாக கேள்வியெழுப்பிய நிருபர்,

“மன்னியுங்கள் ராகுல்,இவர்கள் மூவருமே ராஜ்யசபா மூலமாக(மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்காமல்) அரசுக்குள் வந்தவர்கள்” என உண்மையை நினைவூட்டினார்.உடனடியாக பத்திரிகையாளர்களின் சந்திப்பு கலைக்கப்படுகிறது.

இதில் வேதனையான அம்சம் என்னவெனில்,கபில்சிபில்,ஆசாத்,பிரணாப் முகர்ஜி,சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை ராகுலால் ஒப்புக்குக் கூட உத்தமர்கள் என்று நினைக்க முடியவில்லை.

நன்றி:விஜயபாரதம் ,பக்கம் 26,12.8.11

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதில் வேதனையான அம்சம் என்னவெனில்,கபில்சிபில்,ஆசாத்,பிரணாப் முகர்ஜி,சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை ராகுலால் ஒப்புக்குக் கூட உத்தமர்கள் என்று நினைக்க முடியவில்லை.

சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது செல்லாது என்று ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு ஒன்று நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

நண்பர்களுடன் அப்பாவிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் காட்டுமிராண்டிகளின் பிரதமராவதில் வியப்பில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.