Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை – இலங்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை – இலங்கை!

பிரசுரித்தவர்: NILAA August 9, 2011

அமெரிக்க தாக்குதல் ஜெட் வானூர்திகள் சில இலங்கை வான்பரப்பில் அத்துமீறி பறந்தமை தொடர்பில் உடனடி அறிக்கை சமர்பிக்குமாறு பொது வானூர்தி சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அறிவுறுத்தல் தமக்கு அமைச்சரிடம் இருந்து கிடைத்துள்ளதாக வானூர்தி சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் எச்.எம்.சி.நிமலசிறி தெரிவித்தார்.

இதன்படி தாம் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் விடயங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டத்திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் இருப்பதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்தை அண்டிய வான்பரப்பில் அமெரிக்க தாக்குதல் வானூர்திகள் அத்துமீறிப் பறந்ததாக இலங்கை வான்படை உறுதிப்படுத்தியிருந்தது.

அதன் ஊடகப் பேச்சாளர் குறுப் கப்டன் அன்றூ விஜேசூரியவிடம் வினவியபோது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தென் பசுபிக் வலயத்தில் உள்ள அமெரிக்க மத்திய நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் வானூர்தி தாங்கி கப்பலில் இருந்தே இந்த வானூர்திகள் வெளிவந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் பிதுருதலாகலை மலையில் உள்ள ரேடார் மத்திய நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்படி இலங்கை வான் பரப்பிலிருந்து அகன்று செல்லுமாறு அமெரிக்க வானூர்திகளுக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் அவை இலங்கை வான் பரப்பிலிருந்து வெளியேறியதாக வான்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜதந்திர மட்டத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

http://mykathiravan.com/ta-news/?p=13173

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப்பார்த்தால் அமரிக்கா சிறிலங்காவிடம் மன்னிப்பு கோர வேண்டிவரப்போகின்றது.

''இதைத்தான் சொல்கிறதா வழர்த்த கிடாய் மார்பில் பாய்கின்றதேன்று''

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் நினைச்சன் இலங்கை அமெரிக்கா மீது படையெடுக்க போகுது என்டு..... :( :( :( :(

ம் ம் . எடுக்கும் எடுக்கும்.

உலகில் என்ன நடக்கின்றதென தெரியாத சிங்களவர்களுக்குத்தான் இந்த அறிக்கையெல்லாம்.

போர்குற்றம் தொடர்பாக சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் நாட்டில் ராஜபக்சாவிற்கு நிட்சயம் ஆதரவைக்கூட்டும்.அவர் ஒரு சிங்கள தேசியத்தலைவராக வரப்போகின்றார்.

இதே நிலையில் தான் எம்மவர் பலரும் கடந்த காலங்களில் இருந்தார்கள்,புலியும் அதைத்தான் விரும்பியது.சர்வதேசத்தை பற்றி அலட்டிக்கொள்ளாமல் எம்மவருக்குள் தமது வீரப்பிரதாபத்தை தொடர்ந்து பரப்பிவந்தது.பலர் இப்போதுகூட அதை நினைத்து புல்லரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

உலகில் என்ன நடக்கின்றதென தெரியாத சிங்களவர்களுக்குத்தான் இந்த அறிக்கையெல்லாம்.

போர்குற்றம் தொடர்பாக சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் நாட்டில் ராஜபக்சாவிற்கு நிட்சயம் ஆதரவைக்கூட்டும்.அவர் ஒரு சிங்கள தேசியத்தலைவராக வரப்போகின்றார்.

இதே நிலையில் தான் எம்மவர் பலரும் கடந்த காலங்களில் இருந்தார்கள்,புலியும் அதைத்தான் விரும்பியது.சர்வதேசத்தை பற்றி அலட்டிக்கொள்ளாமல் எம்மவருக்குள் தமது வீரப்பிரதாபத்தை தொடர்ந்து பரப்பிவந்தது.பலர் இப்போதுகூட அதை நினைத்து புல்லரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

புலியும் சிங்கமும் விரும்பியது ஒன்றல்ல.

9/11க்கு பின்னரும் விடுதலைக்கு போராடிய ஒரு அமைப்பையும், சகல அனைத்துலக தொடர்புகளை கொண்ட ஒரு அரசையும் சர்வதேச உறவுகள் மட்டத்தில் ஒரே கோணத்தில் வைத்து பார்க்கமுடியாது.

புலி சிங்கள தேசத்தை ஏற்றது. சிங்கள மக்களின் வாழ்வுரிமையை மதித்து நடந்தது. சர்வதேச போர் சாசனங்களை முடிந்தளவுக்கு, தமது சக்திக்கு ஏற்ப மதித்து நடந்தது.

சர்வதேசத்தை விடுதலைப்புலிகள் சந்தர்ப்பம் கிடைத்தபொழுது எல்லாம் அணுகி தமது பக்க நியாயங்களை விளக்கியே வந்தனர். பலரும் எமது பக்க நியாயத்தை ஏற்றும் சில தனிப்பட்ட சக்திகளை மீறி ஒன்றும் செய்யாமல் போயினர்.

இன்று அவர்கள் உட்பட எல்லோரையும் ஏமாற்றி நிற்கிறது சிங்களம்.

இது இறுதியில் எமக்கு ஒரு அரசியல் தீர்வை ஏன் ஐ.நா. ஊடாக தனிநாடாக பிரிந்து செல்லும் வாக்கெடுப்பு சந்தர்ப்பத்தை கூட உருவாக்கலாம். அதற்கும் எமக்கு வழி சமைத்தவர்கள் புலிகள்.

உலகில் என்ன நடக்கின்றதென தெரியாத சிங்களவர்களுக்குத்தான் இந்த அறிக்கையெல்லாம்.

போர்குற்றம் தொடர்பாக சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் நாட்டில் ராஜபக்சாவிற்கு நிட்சயம் ஆதரவைக்கூட்டும்.அவர் ஒரு சிங்கள தேசியத்தலைவராக வரப்போகின்றார்.

இதே நிலையில் தான் எம்மவர் பலரும் கடந்த காலங்களில் இருந்தார்கள்,புலியும் அதைத்தான் விரும்பியது.சர்வதேசத்தை பற்றி அலட்டிக்கொள்ளாமல் எம்மவருக்குள் தமது வீரப்பிரதாபத்தை தொடர்ந்து பரப்பிவந்தது.பலர் இப்போதுகூட அதை நினைத்து புல்லரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நோர்வே, அமெரிக்கா, யப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்காக புலிகளுடன் ஒப்பந்தங்கள் செய்ய அனுப்பபட்டிருந்த பிரதிநிதிகள், கபடம் நிறைந்தவர்கள். இதனால்த்தான். புலிகளுக்கு அவர்களுடன் இணக்கி போகமுடியவில்லை.

புலிகள் ரகசிய இயக்கம். "எம்மவருக்குள் தமது வீரப்பிரதாபத்தை தொடர்ந்து பரப்பிவந்தது" என்று சொல்வது அரத்தமற்றது. ராசபக்சா மட்டும்தான் தன்னை துட்டகைமுனு என்கிறார். நியூஸ் வீக்கில் முதல் இடம் பிடிக்க காசு கொடுத்தார்.

பயங்கரவாததிற்கு எதிராய் போர்புரிந்த புஸ் அமெரிக்காவை சரித்திரம் காணாத கடனில் விட்டுவிட்டு மிகவும் இழிவான அதிபர் என்று பெயர் எடுத்தார்.

மிகத்திறமையான லேபர் கட்சி பிரதமர் டோனி பிளேயர் கட்சியால் பதவி இறக்க பட்டார். ஸ்பேயின், இத்தாலி, ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர்கள் பயங்கரவாத சண்டையால் பதவி இழந்தார்கள்.

கருணாநிதி எதிர்கட்சிக்கும் வர தகமை இல்லாமல் போனார். சோனியா தப்பியிருக்கிறர் எனெனில் தான் எடுக்கும் முடிவுகளுக்கு வேறு யாரோ தான் பதில் சொல்கிறார்கள். ராகுலிற்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. காங்கிரசை கட்டி அவிட்கும் கஸ்டத்தை நிச்சயம் உணருவார்.

இவர்களின் தப்பு கணக்கு எப்படி இருக்கிறது? ஒருவர் முகில் மூட்டம் என்றும் இன்னொருவர் வெளிப்பான வெய்யில் என்றும் கூறினால் ஒருவர் கட்டாயமாக பிழையாகத்தான் இருக்க முடியும்.

அமெரிக்கவும்- ரூசியாவும் இலங்கை தங்களுடன் ஒத்து போகிறது என்றார்கள்.

சீனாவும் இந்தியாவும் இலங்கை தங்களுடன் ஒத்து போகிறதென்றார்கள்.

ஈரானும் இஸ்ரவேலும் இலங்கை தம்முடன் ஒத்து போகிறதென்றார்கள்.

என்வே குறைஞ்சப்ட்சம் 50% சர்வதேசங்கள் தவ்றான கொள்கையில் தங்களை இட்டு சென்றிருக்கின்றன.

புஸ் அமெரிக்க பாரிய ராணுவ கட்டமைப்பை தனது தந்தையை குறை கூறியவனை பிடிக்க பாவித்து அழித்து முடித்தார்.

சோனியா, தனது கணவன் முழுதாக பிடித்து இந்தியாவுடன் இணைத்துவிட்டதாக நினைத்த இலங்கையை, தனது பழிவாங்கல் அரசியலால், மத்திய அரசின் கொள்கைகளை மாற்றி முற்று முழுதாக சீனாவிற்கு கொடுத்திருக்கிறா.

சர்வதேச அரசியல் என்பது, யோன் கப்பின்ஸ், காவாட்டு போன்ற பள்ளிகளில் எட்டு, பத்து வருடங்கள் படித்தாலும் சரியாக கையாள்வது முடியாத அலுவல். அதை யாரும் இரண்டு மூன்று வரிகள் யாழில் எழுதி முடித்துவிட்டதாக கருதி நிம்மதியடைய முடியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை – இலங்கை!

டமாஸ் செய்வதற்கு ஒரு அளவில்லையா .. ஒரே காமெடிதான்... :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.