Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நாகரீகமும் அவர்கள் அணிகலன்களும்

Featured Replies

பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளலாம். பொன்னாலும் நவமணிகளால் ஆக்கப்பட்ட ( வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. அந்த மதிப்புகளை பணமதிப்பு, பொருள் மதிப்பு , மனமதிப்பு என மூன்று வகைப்படுத்தலாம்.

முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் இனத்தில் ஆண்களும், பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர் . உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்.

தமிழர்களாகிய நாம் தலைகளில் பின்வரும் அணிகலன்களினால் அந்தக் காலத்தில் அழகு படுத்தினோம்.

1.தாழம்பூ

2.தாமரைப்பூ

3.சொருகுப்பூ

4.சாமந்திப் பூ

5.அடுக்குமல்லிப் பூ

6.இலை

7.அரசிலை

8.பதுமம்

9.சரம்

10.பூரப்பாளை

11.கோதை

12.வலம்புரி.

காதிலே பின்வரும் அணிகலன்களை அணிந்தார்கள்.

1.தோடு

2.கொப்பு

3.ஓலை

4.குழை

5.இலை

6.குவளை

7.கொந்திளவோலை

8.கன்னப்பூ

9.முருகு

10.விசிறி முருகு

11.சின்னப்பூ

12.வல்லிகை

13.செவிப்பூ

14.மடல்.

கழுத்திலே பினவரும் கழுத்தணிகளை அணிந்து அழகு பார்த்தோம்.

1.கொத்து

2.கொடி

3.தாலிக்கொடி

4.கொத்தமல்லிமாலை

5.மிளகு மாலை

6.நெல்லிக்காய் மாலை

7.மருதங்காய் மாலை

8.சுண்டைக்காய் மாலை

9.கடுமணி மாலை

10.மாங்காய் மாலை

11.மாதுளங்காய் மாலை

12.காரைப்பூ அட்டிகை

13.அரும்புச்சரம்

14.மலர்ச்சரம்

15.கண்டசரம்

16.கண்டமாலை

17.கோதை மாலை

18.கோவை.

முழங்கைக்கும் தோழ்மூட்டிற்கும் இடையிலான புஜத்திலே " கொந்திக்காய்"ஐயும் , கையிலே பின்வரும் அணிகலன்களை தமிழர்களாகிய நாம் அணிந்தோம்.

1.காப்பூ

2.கொந்திக்காய்ப்பூ

3.கொலுசு.

கைவிரல்களிலே பின்வரும் அணிகலன்களையும் அணிந்தோம்.

1.சிவந்திப் பூ

2.மோதிரம்

3.அரும்பு

4.வட்டப்பூ.

கால் அணிகலன்களாக,

1.மாம்பிஞ்சு கொலுசு

2.அத்திக்காய் கொலுசு

3.ஆலங்காய் கொலுசு

கால்விரல் அணிகளாக இவற்றை அணிந்தோம்

1.கான் மோதிரம்

2.காலாழி

3.தாழ்

4.செறி

5.நல்லணி

6.பாம்பாழி

7.பில்லணை

8.பீலி

9.முஞ்சி

10.மெட்டி

தமிழ் இனத்தின் ஆண்மக்கள் பின்வரும் அணிகளை அணிந்தனர் .

1.வீரக்கழல்

2.வீரக் கண்டை

3.சதங்கை

4.அரையணி

5.அரைஞாண்

6.பவள வடம்

7.தொடி

8.கங்கணம்

9.வீரவளை

10.கடகம்

11.மோதிரம்

12.கொலுசு

13.காப்பு

14.பதக்கம்

15.வகுவலயம்

16.கழுத்தணி

17.வன்னசரம்

18.முத்து வடம்

19.கடுக்கண்

20.குண்டலம்

தமிழர்களின் பாரம்பரிய தங்கநகைகளாக பின்வருவன காணப்படுகின்றன.

நெற்றிப் பட்டம்

சடைநாகம்

மூக்குத்தி

தோடு

கடுக்கன்

தொங்கட்டான்

சங்கிலி

அட்டியல்

தாலி

பாம்படம்

பதக்கம்

காப்பு, வளையல்

மோதிரம்

ஒட்டியானம்

வளை

சதங்கை

காற் சங்கிலி

சிலம்பு

மெட்டி

ஆனால் இன்று.............................எம்மிடம் எதுவுமே இல்லை நிலத்திலிருந்து பாரம்பரியம்வரை.

உங்களுக்கும் ஏதாவது அணிகலன்கள் தெரிந்தால் சொல்லுங்கள்

படித்ததில் மனதில் பதிந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவிற்கு Komagan, தாலி தமிழர்களின் பாரம்பரியமா?

"ஆனால் இன்று.............................எம்மிடம் எதுவுமே இல்லை நிலத்திலிருந்து பாரம்பரியம்வரை"

ஏன் நம்ம பெடியள் கடுக்கன்களோடு கனடாவில் திரியுதுகளே :wub: கோமகன் இன்னும் காணவில்லைப் போலும் :rolleyes:

"பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள்"

இப்பவும் அந்த அரைகுறை உடுப்புக்கள் எமது வழக்கத்திலே இருக்கின்றதது பாருங்கோ :) (ஊரிலே இதைத்தான் குறுக்குக்கட்டு என்கிறது :lol:)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவிற்கு Komagan, தாலி தமிழர்களின் பாரம்பரியமா?

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும்.

(கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து...... )

  • தொடங்கியவர்

நான் சொல்ல நினைச்சதை சிறியர் எப்பிடி விளப்பமாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். உடையார் இப்ப சந்தோசம் தானே :D :D ............................. :D

  • கருத்துக்கள உறவுகள்

தாலி என்பது [url="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"](இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) (கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து...... )

நன்றி தமிழ் சிறி & கோமகன், இதையே எல்லா ஆண்களும் தொடர்ந்து கட்டியிருந்தால், எங்கட அன்பு சகோதரிகளுக்கு கழுத்து & தலை வலிகள் வந்திருக்காது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.